Jump to content

உடலுக்கு.... எந்த சோப் போட்டு, குளிக்கலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

actress-0112.jpgbad1.jpg

சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது?

சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய் சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் இன்றைக்கு எண்ணிலடங்காத பிராண்டு சோப்புகள் வந்து விட்டன. அவற்றில் வாசனையான சோப் என்று பார்த்து வாங்குவதை விட நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

சருமத்தின் தன்மை

பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அவர்களுக்கு பேபி சோப்தான் பெஸ்ட். வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அவர்கள் பேபி சோப் உபயோகிப்பது உகந்ததல்ல.

சருமம் ரொம்பவே வறண்டிருந்தால், மாயிச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்கள் மாயிச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு அதை உபயோகித்தால் சருமத்தில் வட்ட வட்டமாக மச்சம் மாதிரி வரும். சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த சோப்புகளையும் உபயோகிக்க வேண்டாம். அத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டாலும், சருமத்தை கருப்பாக்கி விடலாம்.

ஃபேஸ் வாஷ்

சோப்புகளில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ள சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் நல்லது. நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ் வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால் சருமத்துக்கு நல்லது.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'லைப் போய்' என்ன மாதிரி தமிழ் சிறி?

இதை வெளிநாட்டில் வாங்க முடியுமா?

போர்டிங்கில் வசித்த காலங்களில், வாசனை சோப், வாங்கிக் கொண்டுபோனால், பெரிய பெடியங்கள் சவக்காரத்தைத் தூக்கிப் போட்டு, ஒரு சின்னக் கல்லை வைச்சுப் போடுவாங்கள்!

அதுக்காக, சொறி சோப்பு என அன்புடன் அழைக்கப் படும், லைப் போய் தான் வாங்கிறது வழக்கம்!

பழகிப் போச்சு!

நீங்க, டேய் ஸ்கொலர்ஸ்!

உங்களுக்கு எங்கட பிரச்னையை, விளங்கப் படுத்துறது, கடினம்!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'லைப் போய்' என்ன மாதிரி தமிழ் சிறி?

இதை வெளிநாட்டில் வாங்க முடியுமா?

போர்டிங்கில் வசித்த காலங்களில், வாசனை சோப், வாங்கிக் கொண்டுபோனால், பெரிய பெடியங்கள் சவக்காரத்தைத் தூக்கிப் போட்டு, ஒரு சின்னக் கல்லை வைச்சுப் போடுவாங்கள்!

அதுக்காக, சொறி சோப்பு என அன்புடன் அழைக்கப் படும், லைப் போய் தான் வாங்கிறது வழக்கம்!

பழகிப் போச்சு!

நீங்க, டேய் ஸ்கொலர்ஸ்!

உங்களுக்கு எங்கட பிரச்னையை, விளங்கப் படுத்துறது, கடினம்!!! :D

original-lifebuoy-soap-1.jpg

"லைப் போய்" சவர்க்காரத்தின் வாசம் எனக்கு, பிடிக்கும் புங்கையூரான்.

நான்... இங்கு ஒரு இடமும், அந்த சவர்க்காரத்தை காணவில்லை.

சிலவேளை இங்கிலாந்தில் இருக்கலாம்.

போர்டிங்கில்... சின்னப் பையன்களிடம் சவர்க்காரத்தையும், களவெடுப்பவர்களை நினைக்க... அதிர்ச்சியாக உள்ளது.

"லைப் போய்" சோப்புக்கு, சொறி சோப் என்று... பெயர் வைத்த உங்களின் குறும்பை, மிக ரசித்தேன். :D:lol:

Link to comment
Share on other sites

வெண்ணை இல்லா தயிர் அல்லது எலுமிச்சை ரசத்தோடு கலந்த கடலை மாவும் பயத்த மாவும் மிக சிறந்த அழுக்கு நீக்கிகளாகவும் மெருகூட்டிகளாகவும் அறியப்படுகிறது . ஒரு மாதம் முயற்சி செய்து பார்க்கவும் . அழகோ அழகு ஆகி விடுவீர்கள் .

எச்சரிக்கை ஆண்களுக்கு பட்டும்

ஆண்கள் உபயோக படுத்தி விட்டு பிறகு வெளிநாட்டு வெள்ளை காரன் உங்கள் பின்னாடி திரிஞ்சா நான் பொறுப்பு இல்லைங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SoapLather.jpg

இலங்கை.. இந்தியா வாழ் மக்களுக்கு இது சரியான ஆக்கம். ஆனால் மேற்கு நாடுகளில் குழாய்களில் வரும் தண்ணீர் மென்னீராகும்... (soft water). அதாவது சுத்திரிகரிப்பின் போது.. ஒப்பீட்டளவில் பெருமளவு கல்சியம், மக்னீசியம் அயன்கள் அகற்றப்பட்டு குழாய்களில் அதிகம் படிவுகள் ஏற்படாதிருக்கும் வண்ணம்.. நீர் மென்மையாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.

குளோரின் ஏற்றப்பட்ட மென்னீரில் சோப் (சவர்க்காரம்) நுரையை எழுப்புவது கடினம். ஆனால் இலங்கை.. இந்தியா போன்ற நிலத்தடி நீர்.. அல்லது சேமிப்பு நீர் பாவிக்கப்படும் நாடுகளில் தண்ணீர் வன்னீராக இருப்பதால் அதில் சோப்பில் கரையக் கூடிய போதிய அளவு அயன்கள் (சோடியம் உட்பட்டவை) இருப்பதால்.. அவை நன்கு நுரையை எழுப்பி.. உடலை சுத்தம் செய்ய உதவுகின்றன.

தமிழ் கடை சோப்பும் நம்மவரும்:

புலம்பெயர் நாடுகளில் நம்ம தமிழ் கடைகள் ஒரு பொது அறிவு கூட இன்றி.. இப்படியான சோப்புக்களை இறக்குமதி செய்து விற்க.. நம்மவர்களும் ஊர் வழக்கத்தில் வாங்கிக் குவிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் கூட இந்த சோப் - தண்ணீர் பற்றிய அடிப்படை அறிவின்றி செயற்படுவதை காண்கிறோம். இவர்கள் என்னதான் சோப்பை மாத்தி மாத்தி வாங்கிப் போட்டாலும் அது நுரையை கிளப்பாது.. உடலை சரியா சுத்தம் செய்யாது. காரணம்.. குழாயில் வரும் தண்ணீர் அப்படி.

மேலும் சோப்.. சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் ஈரத்தன்மையை அகற்றி.. சருமத்தை உலர்த்தி விடுவதால்.. சருமம் அதன் பொலிவிழந்து போய்விடுவதோடு.. விரைந்து கெட்டும் விடும். வெண் படலங்கள் தோன்றும். ஊரில் அதிகம் வியர்வை வெளியேறுவதுடன்.. தோல் அதிகம் எண்ணொய் உற்பத்தி செய்வதால்.. இழக்கப்படும்.. எண்ணெய் தன்மை கூடிய விரைவில் சரியாகிவிடும். ஆனால் மேற்கு நாடுகளில் (குளிர் நாடுகளில்) அப்படியல்ல..!

இதற்காகத்தான் மேற்கு நாடுகளில் Bath cream அல்லது bath lotion என்று வெவ்வேறு பெயர்களில் அவற்றிற்கே உரித்தான இரசாயன உள்ளீடுகைகளோடு திரவ சோப் விற்கிறார்கள். அவை மென்னீரிலும் நுரையை உருவாக்கி உடலை நன்கு சுத்தம் செய்வதோடு சரமத்தை மென்மையாகவும் ஈரலிப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

இன்றும் பார்க்கிறோம்.... ஊர் வழக்கத்தில் புலம்பெயர் நாடுகளில் கூட சோப் போடும் ஒரு கூட்டம் மக்கள் இருப்பதை. அவர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள குழாய் வழங்கல் நீரின் தன்மையை விளக்கி... ஊரோடு கூடி வாழ கற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

அந்த வகையில் இப்படியான ஆக்கங்களை பிரசுரிக்கும் போது மக்களுக்கு சரியான அறிவுறுத்தலை வழங்கிப் பிரசுரிப்பது நன்று. :):icon_idea:

[கருத்துத் தெளிவிற்காக சில சொற் சேர்க்கைகள் இடப்பட்டுள்ளன.]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணை இல்லா தயிர் அல்லது எலுமிச்சை ரசத்தோடு கலந்த கடலை மாவும் பயத்த மாவும் மிக சிறந்த அழுக்கு நீக்கிகளாகவும் மெருகூட்டிகளாகவும் அறியப்படுகிறது . ஒரு மாதம் முயற்சி செய்து பார்க்கவும் . அழகோ அழகு ஆகி விடுவீர்கள் .

எச்சரிக்கை ஆண்களுக்கு பட்டும்

ஆண்கள் உபயோக படுத்தி விட்டு பிறகு வெளிநாட்டு வெள்ளை காரன் உங்கள் பின்னாடி திரிஞ்சா நான் பொறுப்பு இல்லைங்க

தமிழ்ப் பைத்தியம்,

கடலை மாவும், பயத்தம் மாவும்... தேய்த்துக் குளித்தால்...animierte-smilies-badwc-025.gif

வெள்ளைக்காரன் பின்னாலை வாறானோ, இல்லையோ....

பாத் ரூம் குழாய் அடைத்ததுக்கு,smileys-badewanne-973362.gif வீட்டுக்காரன் பின்னாலை... திரத்திக் கொண்டு வருவான். :D:lol:

Link to comment
Share on other sites

ஊரில் உள்ள தண்ணீருக்கு சவர்க்காரம் நுரைக்கும், ஆனால் கொழும்புத் தண்ணீரில் ஒரு முழு சவர்க்காரக் கட்டியை கரைத்தாலும் நுரைக்காது... <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

தமிழ் கடை சோப்பும் நம்மவரும்:

புலம்பெயர் நாடுகளில் நம்ம தமிழ் கடைகள் ஒரு பொது அறிவு கூட இன்றி.. இப்படியான சோப்புக்களை இறக்குமதி செய்து விற்க.. நம்மவர்களும் ஊர் வழக்கத்தில் வாங்கிக் குவிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் கூட இந்த சோப் - தண்ணீர் பற்றிய அடிப்படை அறிவின்றி செயற்படுவதை காண்கிறோம். இவர்கள் என்னதான் சோப்பை மாத்தி மாத்தி வாங்கிப் போட்டாலும் அது நுரையை கிளப்பாது.. உடலை சரியா சுத்தம் செய்யாது. காரணம்.. குழாயில் வரும் தண்ணீர் அப்படி.

------

இதற்காகத்தான் மேற்கு நாடுகளில் Bath cream அல்லது bath lotion என்று வெவ்வேறு பெயர்களில் அவற்றிற்கே உரித்தான இரசாயன உள்ளீடுகைகளோடு திரவ சோப் விற்கிறார்கள். அவை மென்னீரிலும் நுரையை உருவாக்கி உடலை நன்கு சுத்தம் செய்வதோடு சரமத்தை மென்மையாகவும் ஈரலிப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

இன்றும் பார்க்கிறோம்.... ஊர் வழக்கத்தில் புலம்பெயர் நாடுகளில் கூட சோப் போடும் ஒரு கூட்டம் மக்கள் இருப்பதை. அவர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள குழாய் வழங்கல் நீரின் தன்மையை விளக்கி... ஊரோடு கூடி வாழ கற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

அந்த வகையில் இப்படியான ஆக்கங்களை பிரசுரிக்கும் போது மக்களுக்கு சரியான அறிவுறுத்தலை வழங்கிப் பிரசுரிப்பது நன்று. :):icon_idea:

நெடுக்ஸ் சொல்வது சரியாக, இருந்தாலும்....

குளிக்கும் போது.... தலைக்கு ஷம்புவும், உடம்புக்கு சவர்க்காரமும் போட்டுக் குளிக்காவிட்டால், குளித்த திருப்தி இருக்காது.

அத்துடன், சவர்க்காரம் போடும் நேரம்... கண் எரிவது, இன்பமான ஒரு உணர்வு. அதை எப்படி தியாகம் செய்வது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/ksTy1BI3400

த்ரிஷாவே இந்த சோப்பு போட்டு குளித்துத்தான் இவ்வளவு அழகாக இருக்கின்றார் :D :lol:

Link to comment
Share on other sites

புலம் பெயர் வாழ் அனைவருக்கும் .எனக்கும் மிகவும்,மிகவும் தேவையான சோப் டெற்றோல் சோப்பு ..........

ஆகா எவ்வளவு சுகம் ............நினைக்கவே கடி பறக்குது................ :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/n8HwdH-b9a8

பெண்களுக்கு சிறந்த மஞ்சள் சோப்பு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த்ரிஷாவே இந்த சோப்பு போட்டு குளித்துத்தான் இவ்வளவு அழகாக இருக்கின்றார் :D :lol:

திரிஷாவைப் போல், ஒரு குளியலில்... நமது தோல் மினு, மினுக்க... விவெல் சோப்புத்தான் இனி பாவிக்கணும். :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் வாழ் அனைவருக்கும் .எனக்கும் மிகவும்,மிகவும் தேவையான சோப் டெற்றோல் சோப்பு ..........

ஆகா எவ்வளவு சுகம் ............நினைக்கவே கடி பறக்குது................ :D :D :icon_idea:

[media=]http://www.youtube.com/watch?v=myB7osx-jZE

அரிப்பு, எரிச்சல், கடி, சொறி போன்றவற்றுக்கு....ஹமாம் சோப்பு வாங்கி பாவியுங்கள். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்தப் பக்கம் ஒரே கடி, சொறி, எரிச்சலா இருக்கு... :blink::o:rolleyes:

குளிக்காமலிருந்தால். அப்படித்தான்... இருக்கும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'லைப் போய்' என்ன மாதிரி தமிழ் சிறி?

இதை வெளிநாட்டில் வாங்க முடியுமா?

இதுக்கு போய் யோசிக்கலாமா??????? இருக்கே தமிழ் கடைகள்?

என்னுடைய கடை விலாசத்தை தரவா? :rolleyes:

லக்ஸ்,ராணி,பேபிசோப்,ஹமாம்,டெற்றோல்,லைவ்போய்(சிவப்பு,நீலம்,மஞ்சள்,)

மெடிமிக்ஸ் எல்லாம் இருக்கு வாங்கோ :D:lol:

தபாலில் வேணும் என்றாலும் அனுப்பிவிடலாம் தபால் செலவையும் தந்திங்கள் என்றால்.. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் அதிகம் 'பேபி சோப்' அல்லது 'Dove சோப்' தான் பாவிக்கிறேன். இனி 'பேபி சோப்' ஐக் கைய விட வேண்டியதுதான்.

தமிழ்ப் பையித்தியத்தின் முறையை இங்குள்ள சில தென் கிழக்காசியப் பெண்கள் முகத்தில் பூசியிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் தோல் மெருதுவாக இருக்கிறதா என்பதை அறியச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு போய் யோசிக்கலாமா??????? இருக்கே தமிழ் கடைகள்?

என்னுடைய கடை விலாசத்தை தரவா? :rolleyes:

லக்ஸ்,ராணி,பேபிசோப்,ஹமாம்,டெற்றோல்,லைவ்போய்(சிவப்பு,நீலம்,மஞ்சள்,)

மெடிமிக்ஸ் எல்லாம் இருக்கு வாங்கோ :D:lol:

தபாலில் வேணும் என்றாலும் அனுப்பிவிடலாம் தபால் செலவையும் தந்திங்கள் என்றால்.. :rolleyes::icon_idea:

ஜீவா உங்கள் கடையில்.... சன்லைற், மில்க வைற், சவரின் பார் சோப் எல்லாம் இருக்கா?

அதில்... சாரம் தோய்க்க... ஆசையாக உள்ளது. :D

இவ்வளவு காலமும் அதிகம் 'பேபி சோப்' அல்லது 'Dove சோப்' தான் பாவிக்கிறேன். இனி 'பேபி சோப்' ஐக் கைய விட வேண்டியதுதான்.

தமிழ்ப் பையித்தியத்தின் முறையை இங்குள்ள சில தென் கிழக்காசியப் பெண்கள் முகத்தில் பூசியிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் தோல் மெருதுவாக இருக்கிறதா என்பதை அறியச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

தப்பிலி, கடலைமா பூசிய பெண்களை ஒருக்கா... தொட்டுப் பார்த்து விட்டு, சொறி சொல்லுங்கள்.

அவர்கள் தப்பாக நினைக்க மாட்டார்கள். :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் அதிகம் 'பேபி சோப்' அல்லது 'Dove சோப்' தான் பாவிக்கிறேன். இனி 'பேபி சோப்' ஐக் கைய விட வேண்டியதுதான்.

தமிழ்ப் பையித்தியத்தின் முறையை இங்குள்ள சில தென் கிழக்காசியப் பெண்கள் முகத்தில் பூசியிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் தோல் மெருதுவாக இருக்கிறதா என்பதை அறியச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

உங்கட கன்னத்தில என்ன கறுப்பா ஒரு கோடு கிடக்கு, எண்டு சொல்லிப் பாருங்கோ தப்பிலி!

உங்கள் முகத்தை, ஒரு 'அப்பாவி' தோற்றத்திற்கு மாற்றி கொள்ள மறக்க வேண்டாம்!

சந்தர்ப்பம் கிடைத்தால் பதியுங்கள்! :D

Link to comment
Share on other sites

இதுக்கு போய் யோசிக்கலாமா??????? இருக்கே தமிழ் கடைகள்?

என்னுடைய கடை விலாசத்தை தரவா? :rolleyes:

லக்ஸ்,ராணி,பேபிசோப்,ஹமாம்,டெற்றோல்,லைவ்போய்(சிவப்பு,நீலம்,மஞ்சள்,)

மெடிமிக்ஸ் எல்லாம் இருக்கு வாங்கோ :D:lol:

தபாலில் வேணும் என்றாலும் அனுப்பிவிடலாம் தபால் செலவையும் தந்திங்கள் என்றால்.. :rolleyes::icon_idea:

:lol: :lol: :lol:

நான் இதை பெட்றோல் என்று அவசரத்தில வாசிச்சிட்டேன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கடினமான நீரில் சவர்க்காரம் கரையும் போது அதிலுள்ள இரசாயனப் பொருட்கள், நீரில் உள்ள கல்சியம், மக்னீசியம் அயன்களோடு சேர்ந்து உருவாக்கும் scum என்பது சவர்க்காரத்தின் உபயோகத்தை குறைக்கும்.

கல்சியம் மற்றும் மக்னீசியம் போன்றன உருவாக்கும் இரசாயனப்பொருட்கள் நீரில் இலகுவில் கரையாது.

மென் நீரில் சவர்க்காரம் இலகுவாக சேர்ந்து பயனை கொடுக்கும். மென் நீரில் தான் நுரை அதிகம் இருப்பதோடு, சவர்க்காரத்தை இலகுவாக உடலில் இருந்து கழுவமுடியாமல் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா உங்கள் கடையில்.... சன்லைற், மில்க வைற், சவரின் பார் சோப் எல்லாம் இருக்கா?

அதில்... சாரம் தோய்க்க... ஆசையாக உள்ளது. :D

சாரம் வேறை கட்டுவிங்களோ???? :unsure: :unsure:

:lol: :lol: :lol:

நான் இதை பெட்றோல் என்று அவசரத்தில வாசிச்சிட்டேன் :icon_mrgreen:

:D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா உங்கள் கடையில்.... சன்லைற், மில்க வைற், சவரின் பார் சோப் எல்லாம் இருக்கா?

அதில்... சாரம் தோய்க்க... ஆசையாக உள்ளது. :D

தப்பிலி, கடலைமா பூசிய பெண்களை ஒருக்கா... தொட்டுப் பார்த்து விட்டு, சொறி சொல்லுங்கள்.

அவர்கள் தப்பாக நினைக்க மாட்டார்கள். :lol::icon_mrgreen:

தப்பிலி மேலே ஏன் இந்த கொலை வெறி ......அவர் என்ன செய்தார் உங்களுக்கு தமிழ்சிறி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.