Jump to content

மீண்டும்........எப்போ......?


Recommended Posts

மீண்டும்....எப்போ...?

******************************

x1pxzz39wvdmoda7ywardzdfeezcnl.jpg

அன்பே...

தேடுகிறேன் உன்னை-இன்று

நீ தந்த பொருழதனை

திருப்பி நான் தருவதற்கு...

என்னவென்று கேட்கிறியா...?

அன்றொருனாள்....

நாமணைத்துக் கொள்கையிலே

உன் தலையின் பேனொன்று...

எந்தலையே தஞ்சமென்று..

என் தலையில் புகுந்ததுவே...

அதை நீ அறியாயோ...?

ஓ........

நீ அறிய நியாயமில்லை

அன்றோ.......

நாமறியும் நிலையிலில்லை..

இன்றதனை உணருகின்றேன்..

கடிக்கையிலே.. கதறுகின்றேன்...

கொன்றிடவே எண்ணுகின்றேன்

உன் தலையின் பேனதால்

மனமேனோ வரவில்லை....

so

அன்பே...

நீ வந்திடுவாய்...

அதை நீயே பெற்றிடுவாய்...... :D

x1pcjqddvowrkci0ybsdycm4kbop8g.jpg

Link to comment
Share on other sites

ஆகா உங்கள் காதலியின் பேன் இன்னும் உங்கள் தலையில் இருக்கின்றதா? எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்கள்?

வித்தியாசமாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நல்ல கற்பனை கொவுரி பாலன்,

ஆனால் அந்த ஸ்சோவை தவிர்த்துவிட்டு இப்படி எழுதி இருக்கலாம்,

ஆதலால்,

அன்பே மீண்டும் வந்து,

அணைத்து,

அதை நீயே ஏற்றிடுவாய்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரி பாலன் உங்கள் கவிதையும்

படமும் நன்றாய் ரசிக்கக்கூடிய்தாய்

இருக்கிறது.

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேன் கவிதை வித்தியாசமானதுதான், பாராட்டுக்கள்!

அதுசரி, அந்த ஒரு பேன் கடிக்காக இப்படியா தலையை ஆட்டுவது? பார்க்கப் பாவமாக இருக்கிறது.

எனக்கு அப்படிக் கடித்ததாக நினைவில்லை.

நாரதர் குறிப்பிட்டதுபோல ஆங்கிலத்தை அழகு தமிழ்க் கவிதைகளில் கலக்காது எழுதுங்கள்.

"பொருஎன்றும் மாற்றிவிடுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

aaaa5zr.gif

அனைவரது பாராட்டுக்கும் நன்றி.....

மேலும் தங்களது அறிவுரைகள் பிடித்துள்ளது..

இனி வரும் ஆக்கங்களில் கவனத்தில் கொள்கின்றேன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.