Jump to content

மறந்து விட்டாயா.........?


Recommended Posts

மறந்து விட்டாயா.........?

கண்களால் கைது செய்து

காதல் விதை விதைத்தவளே...

ஏழேழு ஜென்மமும்

உன்னோடுதான் என்றாயே....

இன்பத்திலும் துன்பத்திலும்

என்னோடு உறவாடியவளே....

காலம் மாறினாலும் - என்றும்

மாறாதது நம் - காதல்

என்றாயே......!

மொத்தத்தில் நீ இன்றி

நான் இல்லை என்றாயே

இது அத்தனையும்

பொய்யாக்கிவிட்டு - நீ மட்டும்

ஏன் என்னை மறந்து

பிரிந்து சென்றாய் - இதுதான்

உன் முதல் ஜென்ம

பந்தமா.........!

முகவரி தெரியாத காதலனாய்

உன் முகம் காணாத

ஏக்கத்தில் - ஊன் இன்றி

உறக்கம் இன்றி - உயிரற்ற

நிலையில் உருகிப் போய்

கிடக்கின்றேன்......!

கடைசியாக என்றாவது -என்

மரணச் செய்தியை கேட்டால்

ஒரு துளி கண்ணீராவது

விடு - அதுவே

நம் காதலுக்கு - இறுதி

அஞ்சலியாக இருக்கட்டும்...............!

imissu3yw.gif

Link to comment
Share on other sites

உங்கள் கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

ஏன் இப்படி சோகமா எழுதுறியள். :cry:

மேலும் உங்கள் காதல் கை கூட வாழ்த்துக்க:ள்.

Link to comment
Share on other sites

கடைசியாக என்றாவது -என்

மரணச் செய்தியை கேட்டால்

ஒரு துளி கண்ணீராவது

விடு - அதுவே

நம் காதலுக்கு - இறுதி

அஞ்சலியாக இருக்கட்டும்...............!

ம்ம் கவி அருமை ஆனால் ரசியக்கா கேட்டமாதிரி ஏன் உங்கள் கவியெல்லாம் சோகமயமாய் இருக்கு? :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :):):lol::lol::lol:

Link to comment
Share on other sites

கடைசியாக என்றாவது -என்

மரணச் செய்தியை கேட்டால்

ஒரு துளி கண்ணீராவது

விடு - அதுவே

நம் காதலுக்கு - இறுதி

அஞ்சலியாக இருக்கட்டும்...............!

ம்ம் கவி அருமை ஆனால் ரசியக்கா கேட்டமாதிரி ஏன் உங்கள் கவியெல்லாம் சோகமயமாய் இருக்கு?   :cry:  :cry:  :cry:  :cry:  :cry:  :cry:  :cry:  :cry:  :cry:  :lol:  :lol:  :(  :(  :(

காதலில் எனக்கு சோகம் மட்டுமே கிடைத்தது......ஆனால் அவளை எண்ணும் போதெல்லாம் அவளால் ஏற்பட்ட காயம் கூட சுகமாகத்தான் இருக்கிற.து

அதனால் தான் எனக்கு அவை சோகமாக தெரியவில்லை அது கூட சுகமாகத்தான் தெரிகிறது...... :):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலின் சோகத்திலே சுகத்தைக் காணும் தினேஸ்

உங்கள் கவிதைக்கு நன்றி.

இப்படியெல்லாம் பேசி பழகிவிட்டு, முகவரி தெரியாமல் பிரிந்து சென்றவள் உங்கள் பிரிவு கேட்டால் கண்ணீர் விடுவாள் என்று எண்ணுகிறீர்களா?

பிரிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் கண்ணீர் விடுவாள்.

Link to comment
Share on other sites

காதலின் சோகத்திலே சுகத்தைக் காணும் தினேஸ்

உங்கள் கவிதைக்கு நன்றி.

இப்படியெல்லாம் பேசி பழகிவிட்டு, முகவரி தெரியாமல் பிரிந்து சென்றவள் உங்கள் பிரிவு கேட்டால் கண்ணீர் விடுவாள் என்று எண்ணுகிறீர்களா?

பிரிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் கண்ணீர் விடுவாள்.

நன்றி நன்பரே ...............

ஆனால் அவள் என் முன்னால் கண்ணீர் விடாமல் இருந்தால் அதுவே போதும்....... :):lol::lol::lol:

Link to comment
Share on other sites

உன்னை

விட்டுப் போனவள்

ஏன்....?

நினைவுகளை -மட்டும்

உன் நெஞ்சில்...

ஒட்டிப் போனாள்....

????

கனவுகழோடு-வாழும்

நண்பா...

நினைவினை- மாற்றி

நிஜத்துக்கு வா...

உந்தன்...

நேசத்துக்காக....

எத்தனை-உயிர்கள்...

இன்னும்

காத்துக் கிடக்கு...

:D

so

beehappy3mn9uc.gif

Link to comment
Share on other sites

ஆகா டீனேஸ் எழுதிய காதல் கவிதை நல்லாயிருக்கு. அதற்கு பதில் எழுதிய பாலனின் கவிதையும் நல்லாயிருக்கு. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

quote="gowrybalan"]உன்னை

விட்டுப் போனவள்

ஏன்....?

நினைவுகளை -மட்டும்

உன் நெஞ்சில்...

ஒட்டிப் போனாள்....

????

கனவுகழோடு-வாழும்

நண்பா...

நினைவினை- மாற்றி

நிஜத்துக்கு வா...

உந்தன்...

நேசத்துக்காக....

எத்தனை-உயிர்கள்...

இன்னும்

காத்துக் கிடக்கு...

ஆம் நன்பரே

எத்தனை உறவுகள் காத்துக் கிடந்தாலம் ...

அவள் உறவுக்கு ஈடாகுமா.....?

முடியாது......மறக்கத்தான் நினைக்கின்றேன்

முடியவில்லை...........

ஆனால் சில விசையங்களை

மறந்தாகத்தாண் வேண்டும்....

முயற்சி செய்தால் முடியும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.