Jump to content

தமிழன், சிங்களவன், முஸ்லிம் - இன்னொரு பக்கம் (கொலன்னாவை எண்ணெய் குதங்களும் நானும்...). )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டன் தமிழர்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள் மணிவாசகன். நானும் இலண்டனில் இருந்திருக்கிறேன். பெரும்பாலான தமிழர்கள்(ஆண்கள்) திருமணம் செய்யமுன்பு விழுந்து விழுந்து உதவி செய்வார்கள். திருமணத்தின் பின்பு சிலர் மாறிவிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 205
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

<p>

மணி அந்த மலிபன் பிஸ்கற் வான் நீங்கள் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்திலையோ நிண்டது.?? இந் தாக்குதல் பற்றியும் விரிவான பதிவொன்று எழுதியிருக்கிறன். விரைவில் இங்கும் இணைக்கிறன்.

வாசிக்க ஆவலாக இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(நீண்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.)

ஆனாலும் ஓக்டோபர் 20ம் திகதி ஒரு முக்கியமான கிறிக்கெற் போட்டி நடைபெற இருந்ததால் ( இந்திய இலங்கை ஆட்டமாகவோ அல்லது இந்திய பாகிஸ்தான் ஆட்டமாகவோ இருக்க வேண்டும் சரியாக நினைவில்லை) வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு திரும்பி விட்டேன்.

இலங்கை, பாகிஸ்தான் ,இந்தியா ,மேற்கிந்தியா தீவுகளுடன் நடைபெற்ற போட்டிகளின் இறுதிப் போட்டி மேற்கிந்தியா தீவுக்கு எதிரான போட்டி http://www.espncricinfo.com/ci/engine/match/65865.html

Link to comment
Share on other sites

  • 7 months later...

இலண்டன் தமிழர்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள் மணிவாசகன். நானும் இலண்டனில் இருந்திருக்கிறேன். பெரும்பாலான தமிழர்கள்(ஆண்கள்) திருமணம் செய்யமுன்பு விழுந்து விழுந்து உதவி செய்வார்கள். திருமணத்தின் பின்பு சிலர் மாறிவிடுகிறார்கள்.

ஐயையோ நான் அப்படி அல்ல கந்தப்பு அண்ணா! :D

Link to comment
Share on other sites

இந்தத் தொடர் குறித்து திண்ணையில் வைத்து நிழலி நேற்றைய தினம் ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தார். அத்துடன் ஒரு தொடரை இடைநடுவில் எதுவித விளக்கமும் இன்றி நிறுத்தியது தவறு என நானும் எண்ணுவதால் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

 

என்னுடைய வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்கள் தாயகத்தில் கழிந்தது. இந்தக் காலப்பகுதியின் பெரும்பகுதி தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் கழிந்திருக்கிறது.

 

மட்டக்களப்பு அம்பாறை தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிற்கும் பயணித்திருக்கிறேன். தொழில் காரணமாக பல்வேறு பட்ட மக்களுடன் சந்தித்து பல விடயங்களை அறிந்திருக்கிறேன். அந்த வகையில் எனது பார்வையில் இனவாதம் என்பது ஒரு இனக்குழுமம் சார்ந்தது அல்ல என்பதும் எல்லா இனங்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனது எண்ணமாக இருக்கிறது.

 

ஆனாலும் இன மத உணர்வுகள் இலகுவில் மக்களிடம் விதைக்கப்படக் கூடியது என்பதுடன் உணர்வுபூர்வமான ஒரு விடயமாகவும் இருப்பதால் அரசியல் வாதிகள் தமது நலன் கருதி மக்களிடம்இனவாத நஞ்சினை விதைக்கிறார்கள் என்பதும்எனது கருத்து. இது இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பல நாடுகளில்இடம்பெற்று வருகிறது. தேர்தல் நாட்கள் நெருங்கியதும் பார்பர் மசு+தி பிரச்சினையை பாரதீய ஜனதாக் கட்சி கிளறுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

 

இந்த நிலையில் என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் கண்ட சந்தித்த பல இன மக்கள் தொடர்பிலான சம்பவங்களை பதிவாக்குவதே இந்தத் தொடரின் எண்ணாயிருந்தது.

 

இது குறித்து சில உறவுகள் காரசாரமான எதிர்க்கருத்தையும் முன்வைத்திருந்தது உண்மை. ஆனாலும் அந்த வாதப் பிரதிவாதங்களால் இந்தத் தொடரை நான் நிறுத்தியிருப்பேன் என என்னை அறிந்தவர்கள் நம்பமாட்டார்கள்.

 

காரணம் நான் இதை விட பெருமளவான விமர்சனங்களைச் சந்தித்த 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற தொடரை  பத்திரிகையில்  ஒரு தொடராக பலகாலமாக தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். 

 

இந்தத் தொடரில் நான் எழுதிய சில விடயங்கள் குறித்து என்னுடைய உறவினர்களே முகம் சுழித்திருந்த் போதிலும் ஐம்பதிற்கு மேற்பட்ட பத்திகளை நான் இந்தத் தொடரில் எழுதியிருக்கிறேன்.

 

குறிப்பாக 'மதங்கொத்திகளிடம் அவதானமாயிருங்கள்' என்ற விடயம் சம்பந்தமாகவும் சந்திரனில் பாபா தோன்றுவது குறித்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் பெரும் விமர்சனங்களைச் சந்தித்திருந்தேன்.

 

எனவே யாழில் எனது நண்பர்கள் ஒருசிலர் கண்ணியமாக முன்வைத்த எதிர்வாதங்களால் இந்தத் தொடரை நிறுத்தினேன் என யாராவது நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனம்..

 

சரி இந்தத் தொடரை  ஏன் தொடரவில்லை.

 

என்மனதில் பதிந்திருந்த தற்போது பதிவிடக் கூடிய பல விடயங்களை நான் ஏற்கனவே இதில் உள்ளடக்கி விட்டிருந்தது ஒரு காரணம்.

 

அப்படியாயின் மறைத்து எழுத வேண்டிய விடயங்கள் உள்ளதா என்றதொரு கேள்வி எழலாம். எனது சொந்தப் பெயரை விட புனைபெயரே பலரும் அறிந்த ஒன்றாக இருக்கின்ற நிலையிலும் தாயகத்தில் எனதுறவுகள் பலர் இன்னமும் இருக்கின்ற நிலையிலும் சில விடயங்களை தற்போதைய நிலையில் பதிவிட முடியாது. அவை என் கடந்த காலம் தொடர்பான சில முடிச்சுக்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன.

 

இரண்டாவதாக  புலம்பெயர் தேசங்களில் தாயகம்  தொடர்பில் இயங்கிக் கொண்டிருப்பவர்களில் இன்னமும் என் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும் ஒரு பிரமுகரைச் சந்தித்த போது அவர் குறிப்பிட்ட ஒரு விடயம்:

 

அவர் கூறிய கருத்து இதுதான்!

 

தொடரென்று வருகின்ற போது வைக்கப்படும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்படும். அப்போது கடந்த காலத் தவறுகள் தொடர்பில் பதிவுகளை வைக்க வேண்டியிருக்கும்.தவறுகள் விமர்சிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும்இல்லை. மாறாக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலியெதிர்பொன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு செயற்படுபவர்கள் பயனடைந்து விடக் கூடாது.

 

தவறுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு முன்னதாக எமது தாயகத்தின் இன்றைய நிலையில் அல்லலுறும் மக்களின் நிலை, சிங்கள அரச பயங்கரவாதத்தினாலும் இராணுவத்தினாலும்அந்த மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், முன்னாள் போராளிகள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சினைகள்,மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வர புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டிய உதவிகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை சர்வதேசத்தின் துணையுடன் மீட்டெடுத்தல் என ஏராளமான அவசியமான பணிகள் எம்முன்னே இருக்கின்றன. அவை முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

 

எனக்கு மிகவும் சரியாகப் பட்ட இந்த ஆலோசனையும் இந்தத் தொடரை தொடராமல்  விட்டதற்கான மற்றொரு காரணியாகும்.

 

எனவே காலங்கனிந்து வரும்போது மற்றும் சில பதிவுகள் இந்தப் பகுதியில் இணைக்கப்படும். (நாளை நடப்பதை யாரறிவார்)

 

அதுவரை தற்காலிகமாக இந்தத் தொடரை  நிறுத்திக் கொள்கிறேன்.

.

 

கள உறவுகளின் எதிர்ப்பைக் கண்டு ஓடி விட்டானா  அல்லது எதற்காக சொல்லாமல் கொள்ளாமல் ஓடினான் என்ற சந்தேகம் அல்லது கோபம் கொண்ட உறவுகளுக்கு என்நிலை புரியும் என எண்ணுகிறேன்.....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனவே காலங்கனிந்து வரும்போது மற்றும் சில பதிவுகள் இந்தப் பகுதியில் இணைக்கப்படும். (நாளை நடப்பதை யாரறிவார்)
இப்பதான் பிஞ்சு பிடிச்சிருக்கோ இனி காயாகி கனியாகும் .....நல்ல கனியான பின்பு இணையுங்கோ வாசிக்க நாங்கள் இருக்கிறோம்...:D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.