Jump to content

“சேஎய் குன்றம்;…. குலைக் காந்தட்டே”


Recommended Posts

“சேஎய் குன்றம்;…. குலைக் காந்தட்டே”

“சேஎய் குன்றம்;…. குலைக் காந்தட்டே” என்பது குறுந்தொகை முதற்பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் துறைக் குறிப்புகள் துறையாசிரியர்களாலும் உரையாசிரியர்களாலும் இரண்டு விதமாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவையாவன, 1. தோழி கையுறை மறுத்தது 2. தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது என்பனவாகும்.

ஒருபாடலுக்கு ஒரு துறைக் குறிப்பு மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதில்லை. ஒரு பாடல் ஒன்றிற்கு மேற்பட்ட துறைக்குறிப்புகளைப் பெறும் போது அப்பாடல் பன்முக நோக்கில் பொருள் தரும் சிறப்புடையதாகிறது. எனினும், இப்பாடலுக்கு கூறப்படும் வேறுபட்ட இரு துறைகளுள் பெரிதும் ஏற்புடையது எது? என்பதை ஆராய்தல்; இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குறுந்தொகை முதற்பாடல்

“செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த

செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்

கழறொடிச் சேஎய் குன்றம்

குருதிப் ப+வின் குலைக் காந்தட்டே (குறுந். 1)

இப்பாடல் குறுந்தொகையில் முதற்பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பாடல் அகப்பாடலாகவும் பாடலின் துறைக்குறிப்புகளின்படி தோழி கூற்றுப் பாடலாகவும் கொள்ளப்படுகிறது.

தோழி கையுறை மறுத்தது

இப்பாடலைத் தோழி கையுறை மறுத்தது எனும் கூற்றில் விளக்கும் உ.வே. சாமிநாதய்யர், “போர்க்களம் இரத்தத்தால் செந்நிறத்தை உடைய களமாகும்படி, அசுரர்களைக் கொன்று இல்லை ஆக்கிய, இரத்தத்தால் சிவந்த திரண்ட அம்பையும் சிவந்த கொம்பினை உடைய யானையையும் உழல இட்ட வீர வளையையும் உடைய முருகக் கடவுளுக்குரிய இம் மலையானது, சிவப்பாகிய ப+ங்கொத்துள்ள காந்தளை உடையது. (முடிவு) சேயினது குன்றம் காந்தட்டு (கருத்து) காந்தள் ப+வால் குறைவிலே மாதலின் நின் கையுறையை ஏலேமென்றபடி” என விளக்குவர்.

தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது

. எனும் துறையில் விளக்குவோர், “தலைமகனது வரவினை உணர்ந்து தோழி தலைமகளைக் குறியிடத்துக் கொண்டு சென்று யான் செங்காந்தட் ப+க் கொய்து கொடு வருவல் அவ்விடம் தெய்வமுடைத்து நின்னால் வரப்படாது நீ அவ்வளவும் இப் பொழிலிடத்தே நில் என்று நிறீஇ நீங்குவதற்குச் செய்யுள் (இறை.18, நம்பி.149)”

என்று விளக்குவர்.

கூற்றெச்சமும் குறிப்பெச்சமும்

தோழி கையுறை மறுத்தது எனும் நோக்கையும் தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது எனும் நோக்கையும் ஏற்கும் பேராசிரியர், “இக் காந்தளால் யாம் குறையுடையம் அல்லம் எனத் தலைவற்குக் கூறிற் கூற்றெச்சமாம் அக்கூற்றும் செய்யுட்குச் சிதைவின்மையின் அது காண்பாயாகிற் காணெனத் தலைவியை நோக்கி இடத்துய்த்துக் கூறிற் குறிப்பெச்சமாம் அவனைக் கூடுக வெனத் தான் கூறாளாகலின்(தொல். செய்.206, ந. இ.வி. 851)” எனக் குறிப்பர்.

பாடலின் நேரிய பொருள்

பாடல் கூறும் நேரிய பொருளை அறிதற்கு இப்பாடலைத் தொடரியல் நிலையில்; நோக்கும் போது இப்பாடல் “சேஎய் குன்றம் குலைக் காந்தட்டே” என்று எழுவாய் பயனிலை எனும் இரு பகுதிகளின் இணைவாக உள்ளதை உணரமுடிகிறது. இதன் பொருள் (முருகனுக்குரிய) இக்குன்றம் (குலைகளாக உள்ள) காந்தட் ப+க்களையுடையது என்று அமைகின்றது. மாற்றிலக்கண முறையில் சேஎய் குன்றம் குலைக் காந்தட்டே என்பதனுள் சேஎய் என்பதையும் குலை என்பதனையும் நீக்கினாலும் இதன் பொருளில் மாற்றம் பெரிதுமின்றி “குன்றம் காந்தட் ப+க்களையுடையது” என்று அமைகின்றது. எனவே பாடலின் முதன்மைப் பொருள் “குன்றம் காந்தட்டே” என்பதாகிறது. இந்த எழுவாய்; பயனிலைப் பகுதிகள் அடைகளைப் பெற்று விரிகின்றன.

விரிவை உளப்படுத்தி நோக்க பெறப்பட்ட முதன்மைப் பொருளிலும் விரிவு ஏற்படுகிறது. எழுவாய்ப் பகுதிக்கானது: காந்தள் மலர்ந்துள்ள குன்றம் முருகனுக்குரியது, அம்முருகன் போர்க்களம் இரத்தத்தால் சிவப்பாகும் படி அசுரர்களைக் கொன்றவன், சிவந்த திரண்ட அம்பை உடையவன், இரத்தத்தால் சிவந்த கொம்மையுடைய யானையை உடையவன், உழல இடப்பட்ட வீர வளையத்தை அணிந்தவன் பயனிலைப் பகுதிக்கானது: குலைகளாக உள்ள காந்தள், சிவந்த நிறத்தை உடைய செங்காந்தள்

இவ்விரிவின் அடிப்படையில் குன்றம் முருகனுக்குரியதாகவும் தெய்வத்தன்மை பொருந்திய இடமாகவும் அமைகிறது. அக்குன்றத்துக் காந்தளும் கடவுளுக்குரியதாகிறது. அக்காந்தளும் வெண்காந்தளாக இல்லாமல் செங்காந்தளாகிறது. காந்தட்ப+ குன்றத்துள் ப+த்துள்ளதென்பதால் ப+க்களின் மிகுதியும் உணரப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் பொருள்களுக்கேற்ப துறைப்; பொருள் விளக்கமும் கூறப்படுகிறது. தோழி கையுறை மறுத்த கூற்றிற்கேற்ப விளக்குவோர் தரும் கூடுதல் விளக்கங்களாவன,

1 கடவுள் காந்தள் ஆதலின் தெய்வம் சூடுவது எனக் கூறி தோழி தலைவன் தந்த கையுறையை ஏற்கவில்லை.

2 கடவுட்கு உரிய குருதி நிறமுடைய இக்காந்தள் ப+வினை நினக்குத் தந்தவர் யார் எனத் தாயர் முதலியோர் ஐயற்று வினவுவர் எனத் தோழி மறுத்தாள்.

3 வேலனும் வெறியாடும் காலத்தன்றிப் பறியாத ப+வினைப் பறித்து நினக்குத் தந்தவர் யார் என வினவப்படும் எனக் காட்டி மறுத்தாள்.

4 இம்மலைப் பகுதியில் மிகுதியாக வளர்ந்துள்ள இம்மலரினை ஒருவரும் சூடாத போது இவள் சூடினால், சூடியது ப+ப்பற்றியன்று சிறந்தான் ஒருவன் தந்தமையால் என அயலாரால் உய்த்துணரப்படும் எனக்காட்டி மறுத்தாள்.

5 குன்றத்துக் காந்தள் செந்நிறம் உடையது எனக் கூறி நீ கையுறையாகத் தந்த இப் ப+ நின் உடல் வெப்பத்;தால் கரிந்து காட்டுகின்றது என்றும் இதனைத் தலைவி காணின் ஆற்றாமையால் வருந்துவாள் என்றும் மறுத்தாள்.

6 தலைவ! நீ தந்த இச் செங்காந்தண்மலர் எங்கட்கு அரும் பொருள் அன்று எமது மலையின்கண் இது நிரம்ப வுளது காண்! ஆகலின் இவ்வொண்பொருள் எமக்கு வேண்டா எனத் தோழி கையுறை மறுத்துக் கூறுகின்றாள்

இவ்விளக்கங்கள் பாடலின் விரிவுப் பகுதிகளின் வழி பெறப்படும் செய்திகளையும் உள்ளடக்கியதாக அமைவது விளங்கும். தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது எனும் துறையில் விளக்குவோர், தரும் கூடுதல் விளக்கங்களாவன,

1 நான் செங்காந்தட் ப+க் கொய்து வருவேன் அச் செங்காந்தள் மலர்ந்துள்ள இடத்துள் தெய்வம் உள்ளது. எனவே நீ அவ்விடம் வருதல் கூடாது நான் ப+ப் பறித்து வரும் வரை நீ இவ்விடத்திலே இரு எனத் தோழி கூறியதாகக் கூறுவர்.

சேஎய் - சேயன்னாய்

இதனுள் விளிச்சொல் வெளிப்படையாக இல்லாமல் இருப்பதால் முதல் துறையில் கேட்போராகத் தலைவன் கூறப்;பெறுகிறான் இரண்டாவது துறையில் தலைவி குறிக்கப் பெறுகிறாள். “‘வெற்ப’ எனும் விளி முன்னத்தால் வருவிக்கப்பட்டது” என்பர்.உ.வே.சாமிநாதய்யர். விளிச்சொல்

இல்லாத போதும், ‘சேஎய்’ என்பதைச் சேயன்னாய் எனும் விளியாகக் கொள்வோரும் உண்டு. இதனை, “சேயன்னாய் என்னாது ‘சேஎய்’ என விளித்தால் வள்ளியைக் கள்ளத்திற் கலக்க உள்ளங் கொண்ட முருகனது முயற்சி போன்றதே நினது இம் முயற்சியுமென உய்த்துணருமாறு ஓர் பொருளையும் தந்து நிற்றலுணர்ததியது. அளபெடை விளியின் கண் வந்தது” எனும் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் உரைவரிகள்

உணர்த்தும். சேஎய் என்பதை சேயன்னாய் எனும் விளிச்சொல்லாகக் கொண்ட போதும் இப்பாடலின் பொருள், “ ….முருகனை நிகர்த்தாய் (இவ்வெங்கள்) குன்றம் குருதியைப் போன்று ப+க்கும் ப+வின் குலைகளைக் கொண்ட (செங்) காந்தளையுடையது. (ஆதலின் எங்கட் கெளிய இதனை ஏலேம்)” என்று கையுறை மறுத்த கூற்றிற்கு ஏற்பவே கூறப்படுகிறது.

பாடல் முதன்மையும் பொருளும்

கையுறை மறுத்த கூற்றில் எழுவாய்ப்பகுதி தோழி தலைவனுக்கு தனது நாட்டில் உள்ள மலை பற்றியும் அம்மலையில் உள்ள கடவுளின் போர் வெற்றி பற்றியும் எடுத்துக் கூறுவதாக அமைகிறது. புயனிலைப்பகுதி கையுறை வேண்டாம் என மறுத்துக் கூறுதற்குரிய காரணத்தை உடையதாகிறது.

சேஎய் என்பதை சேய்யன்னாய் எனும் விளியாகக் கொண்டபோதும் தலைவனை விளித்து எங்கள் குன்றம் எனும் எழுவாய் அமைந்து பயனிலைப் பகுதி கையுறை மறுத்தற்குரிய காரணத்தையுடையதாகவே அமைகிறது.

தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது எனும் கூற்றில் விளக்கும் போது எழுவாய்ப்பகுதி தலைவிக்குத் தோழி தங்களது நாட்டில் உள்ள மiலைபற்றியும் அம்மலையில் உள்ள கடவுள் பற்றியும் விளக்கிக் கூறி அவ்விடம் நீ வருதற்குரியதன்று என தலைவியை அவ்விடத்தே விட்டுச் செல்வதற்குரிய காரணத்தையுடையதாகிறது. பயனிலைப் பகுதி தோழி செல்வதற்கான நோக்கமாகக் (ப+ப் பறித்து வருதல்) கூறப்படுகிறது. இதனால் முதல் துறை பயனிலைப் பகுதியை முதன்மையாகக் கொண்டு விளக்கப்பட இரண்டாவது துறை எழுவாய்ப் பகுதியை முதன்மையாகக் கொண்டு விளக்குகிறது என்பதை உணரமுடியும்.

வாக்கிய அமைப்பில் எழுவாய்ப் பகுதியை விட பயனிலைப் பகுதியே அவ்வாக்கியத்தின் பொருள் பொதிந்துள்ள பகுதியாகும். அதன் அடிப்படையில் முரகனது குன்றம் காந்தளையுடையது. எனும் வாக்கியத்தில் முருகன் குன்றம் என்பதைவிட காந்தளையுடையது என்பதே பொருட்சிறப்புடைய பகுதியாகும்.. இவ்வாக்கியமே காந்தளையுடைய குன்றம் முருகனது. என்றிருப்பின் அப்போது காந்தளையுடைய குன்றம் எனும் பகுதிகளைவிட முருகனது என்பதே பொருட்சிறப்புடையதாகிறது. இப்பாடல் தொடரியல் நிலையில்p நோக்க “சேஎய் குன்றம் குலைக் காந்தட்டே” என்றே அமைந்துள்ளது. இப்பாடற்பகுதியில் பொருட் சிறப்புடைய பகுதியாக "காந்தளையுடையது". என்பதே அமைகிறது. தோழி காந்தளையுடையது எனக் கூறி தலைவியை இடத்துய்த்து நீங்கினாள் என்பதைவிட தலைவன் கொண்டுவந்த கையுறையை மறுத்துக்கூறினாள் என்று கூறுதற்கே சிறப்புடையதாகிறது.

தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது எனும் துறையில் விளக்குமிடத்து கூறப்படும் விளக்கங்களில் பல ஐயத்திற்குரியனவாகின்றன. அவையாவன.

• இப்பாடற்குக் கூறப்பெறும் இரண்டு துறைகளுமே குறிஞ்சித் திணைக்குரிய பாடுபொருளாகவே அமைகின்றன. இடம் பெற்றுள்ள கருப்பொருட்களும் குறிஞ்சித் திணைக்குரியனவாகவே அமைந்துள்ளன. எனவே இதனுள் விளிக்கப்படுவது தலைவியாயின் அவளும் குறிஞ்சி நிலப்பெண்ணாவாள் என்பது வெளிப்படை. அவ்வாறு இருக்க குறிஞ்சி நிலத்தலைவிக்கு குறிஞ்சி நிலத்து மலையைப் பற்றியும் அதில் உறையும் தெய்வம் பற்றியும் நான்கு அடிப்பாடலில் மூன்று அடிகளில் குறிப்பிட்டு அதன் காரணமாக நீ அவ்விடம் வருதற்குரியதன்று எனவே நீ இங்கே இருப்பாய் எனத் தோழி கூறினாள் என்பது ஐயத்திற்குள்ளாகிறது.

• குறிஞ்சித் தெய்வமுடைய ஒரு இடத்திற்கு குறிஞ்சி நிலத்து தலைவி செல்லுதல் கூடாதெனில் அவ்விடத்திற்கு தலைவியின் ஒத்த வயதுடைய தோழி மட்டும் செல்ல முடியுமோ எனும் ஐயமும் தோன்றுகிறது.

முடிவுரை

குறுந்தொகை முதற்பாடல் தோழி கையுறை மறுத்தது என்றும் தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது என்றும் இரு வேறுபட்ட துறைவிளக்கங்களுக்கு உள்ளாகியுள்ளது. இவற்றுள் எத்துறை மிகுதியும் பொருட்சிறப்புடையது என்பதை ஆராயும்பொருட்டு தொடரியல் முறையில் நோக்க இப்பாடல் எழுவாய் பயனிலை எனும் இருபகுதிகளின் இணைவாக இருப்பது புலப்படுகிறது. இவ்விரு பகுதிகளுள் முதல் துறை பயனிலைப்பகுதியை முதன்மையாகக் கொண்டு விளக்கப்பட இரண்டாவது துறை எழுவாய்ப் பகுதியை முதன்மையாகக் கொண்டு விளக்குகிறது.

ஒரு வாக்கியத்தின் பொருள் பெரும்பான்மையாக பயனிலைப் பகுதியிலே புதைதல் தமிழ் வாக்கிய அமைப்பு. தோழி தலைவியை இடத்துய்த்து நீய்கியது எனும் துறைவிளக்கப்பகுதிகளில் பல ஐயத்திற்குரியனவாக உள்ளன. எனவே குறுந்தொகை முதற்பாடலுக்கான இரு துறைகளுள் தோழி கையுறை மறுத்தது எனும் துறையே மிகுதியும் பொருத்தமுடையது என்பது தெளிவாகிறது.

Posted by முனைவர் த. கண்ணன்

Links to this post

Link to comment
Share on other sites

பயனுள்ள பகிர்வுக்கும் , இணைப்பிற்கும் நன்றிகள் நுணாவிலான் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.