Jump to content

தமிழீழப் போராட்டமும், தமிழ் தேசியமும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thanks

http://potteakadai.blogspot.com/

ஈழம் பற்றிய இன்றைய தமிழக இளைஞர்களின் புரிதல் பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்று. இதில் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. தமிழைப் பற்றி என்னுடைய புரிதல் என்று நான் ஏதாவது எழுத முடியுமா? நான் பேசத் தொடங்கிய பொழுது தமிழில் தான் அம்மா, அப்பா என்று கூறினேன் அல்ல்து கூற வைக்கப்பெற்றேன். அதே போல் தான் ஈழத்தின் புரிதலும். எனக்கு கருத்து தெரியாத வயதிலிருந்தே எனது வீட்டில் எங்கு நோக்கினாலும் போராளிகளின் படம் தான் இருக்கும். ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த பொழுது ஈழத்துப் போராளிகள் சுதந்திரப் போராட்ட மாவீரர்களாவேத் தெரிந்தார்கள்.

கருவறையிலிருந்து வெளியே வரத் துடிக்கும் குழந்தையின் போராட்டத்திற்கு தாய் தன் வலியை பொருட்படுத்தாமல் குழந்தை வெளியே வர வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான் இருக்குமேயொழிய, வலியாறப் பொறுக்காது கொல்ல நினைப்பாளோ?

தமிழீழமும், ஆயுதப் போராட்டமும் எழுந்ததற்கான நிகழ்வுகளை உற்று நோக்கினால் புரியும் ரணமும் அதனுடைய வேதனையும்!

1983ல் நடந்த ஒட்டுமொத்த இனப்படுகொலை இன்னமும் நெஞ்சினில் இருந்து அகல மறுக்கின்றது.ஒரே நாளில் 1000 பேர் கழுத்தறுபட்டும், உயிரோடும் எரிக்கப்பட்டார்கள். ஆண்களூம் பெண்களும் பொதுவில் நிர்வாணப்படுத்தப் பட்டார்கள். இவையனைத்தும் சிங்கள இனவெறியர்கள் மற்றும் அவர்களின் பேரினவாத ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு நடைபெற்றன. இவ்வளவு அவமானங்களையும் தாண்டி அமைதியான முறையிலா போராட முடியும்?

1987ல் இராஜிவ் அரசிற்கும் & பேரினவாதி ஜெயவர்த்தனே அரசிற்கும் உடன்பாடு கையெழுத்தாகிறது. அதாவது இந்திய இராணுவப் படையினர் இலங்கையில் அமைதி காப்பார்களென்று. பிரபாகரன் எவ்வளவோ முயன்றும் சிங்கள - இந்திய அரசின் பிரகடனம் கையெழுத்தாவதை தடுக்க இயலவில்லை. அதற்கு மாறாக இராஜீவ், இந்தியப் படை புலிகளுக்கு உதவவே இலங்கை வருகிறது என்றும் தமிழ் மக்களின் மானம் காக்கப் படும் என்றும் உறுதியளிக்கின்றார். இதை பிரபாகரனின் யாழ்ப்பானத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் காத்த அமைதி திலீபன் என்ற மாவீரனின் மரணவாக்குமூலத்தினால் உடைந்து இன்றும் ஆயுதப் போராட்டமாகத் தெறிக்கிறது.

பதின்ம வயதில் நான் கண்ட ஆவணப்படங்களும், நேரிடையாய் சந்தித்த இரு போராளிகளின் வாக்குமூலமும் என்னுள்ளே அவ்வயதில் வெறியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. இன்னமும் கூட ஈழத்தில் பிறந்திருக்கக் கூடாதாவென்ற ஏக்கம் அவ்வப்போது எழுவதும் உண்டு. எந்திரத் துப்பாக்கி ஏந்திப் போராடும் எம் சகோதரர்க்கு துணையாய் இருந்திருக்கலாமே என்ற எண்ணமும் எழுந்ததுண்டு. அது ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கு எழும் "பிணப்பெட்டியின் மேல் தேசியக் கொடி" போன்ற எண்ணம். ஆனால் அதற்கு முரணான வாழ்க்கையைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய தமிழக இளைஞர்கள் இதைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதினாலும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும் நம்முடைய அவலத்தை வணிகப்படுத்துவதன் மூலம் எளிதில் சென்றடையச்செய்ய கடமைப்பட்டுள்ளோம். இதற்கான வழிகளை தமிழ்சசியும், நந்தனும் அலசி இருக்கிறார்கள்.

ஆனால் இங்கே நாம் முன்வைப்பது, தற்போதைய புலம் பெயர்ந்தவர்களின் மன நிலையையும், வாழ்க்கைப் போராட்டத்தையும் தான். பெரும்பாலான ஆண்கள் ஈழப் போராட்டத்தையும், போராளிகளின் போரையும் ஆதரிக்கின்ற வேலையிலே பெண்களின் மன நிலையையும் நாம் அறிந்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. இங்கே நான் எனது தோழிகளொடு கதைத்ததை மட்டுமே உதாரணமாக வைக்கிறேன். போராளிகளின் பற்றிய அவர்களின் புரிதல் மிகவும் வித்தியாசமானதாகவே இருந்தது. புலிகளின் ஆய்தப் போராட்டத்திற்கு முன்னர் அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்ததாகவும், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரெ மின்சாரம் முதற்கொண்டு அனைத்து அத்தியாவசியத் தேவைகள் தடைபட்டதாகவும் தெரிவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் அவர்களுடைய பதின்ம வயதின் ஆசைகள் நிராசையாகி நாடோடியாகச் சுற்றுவ(றிய)தற்கு காரணம் ஆயுதப் போராட்டமே என்றும் எண்ணியுள்ளனர். நான் அதை மறுதலித்துப் பேச முற்படும் பொழுது மூக்குடைபட்டே இருக்கிறேன்.(நீ படித்தும், வீடியோவில் பார்த்தும் இருப்பாய், நான் அனுபவித்திருக்கிறேன் என்று)

ஆக இப்பொழுதிருக்கும் இரண்டாம் தலைமுறையினரே இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மூன்றாம் தலைமுறையினருக்கு இது பற்றி தெரிய படுத்த வாய்ப்பு இருக்கிறதா?

செருமனியில் நாஜிப் படையினரால் யூதர்கள் பட்டத் துன்பங்களை (திரைப்படங்களில்) காணும் பொழுது ஏற்படும் பரிதாப உணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே ஈழத்து அவலங்கள் வெளியே தெரிய வாய்ப்புள்ளது. மேலும் இது பற்றியான குறும்படங்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்க வழி செய்ய வேண்டும்.

சமீபத்தில் "பேட்டல் ஆஃப் அல்ஜீர்ஸ்" என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் அல்கீரிய மக்களின் ஃபிரெஞ்சுக் காலணி ஆதிக்கத்திற்கெதிரான சுதந்திர போராட்டத்தைப் பற்றியது. அதில் போராளிக்குழுவின் தலைவனை சிறைபிடித்து நாடு கடத்தி விடுவார்கள். ஆனாலும் இரண்டு அமைதியான ஆண்டுகள் கழித்து நாடே ஸ்தம்ப்பிக்கும் வகையில் மக்களின் போராட்டம் வெடிக்கும். அதுவே 1960 களில் அல்ஜீரிய சுதந்திரத்திற்கு வழி வகுத்தது.ஈழப் போராட்டத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் ஈழத்து மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதில் உள்ள ஆர்வமே இதை உதாரணமாக எடுத்தாள வேண்டியதாயிற்று.

தமிழிழ தேவையும் தமிழ் தேசியமும்

இன்றைய மக்கட்தொகையில் ஏறக்குறைய 81/2 கோடி தமிழ் மக்களைக் கொண்டுள்ள இவ்வுலகில் நமக்கென்று ஒரு அங்கீகாரம் இல்லை...2 மில்லியன் மக்கட்தொகை கொண்ட சுலுவேனிய நாடு உருவானது மொழி, இனத்தின் அடிப்படையிலேயே. ஈராஇய, ஈராக்கிய, சிரிய, துருக்கிய தேசங்களும் இன்று வரை சுயமாக இயங்கிக் கொண்டிருக்கும் சதாமின் அடக்குமுறையில் ஒடுக்கப்பட்ட குர்தீய தேசக் கோரிக்கைகளும் மொழி இனத்தின் அடிப்படையிலேயே. வெரும் 2 மில்லியன் மக்கட்தொகை கொண்ட சுலுவேனிய மக்களின் சார்பாக அவர்களது மொழியில் பேசுவதற்கு அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து ஐநா சபையில் குரலெழுப்பிக் கொண்டிருக்கும் வேலையிலே நமக்கென்று ஒரு தேசமும் அங்கிகாரமும் தேவை என்று குரல் எழுப்புவது தவறா? தமிழ்நாட்டில் இதற்கான குரல் எழும்பொழுது தமிழக உணர்வாளர்களின் குரல்வலை நெறிபடும் வேளையிலே நம் ஈழத்து சகோதரர்கள் சுயமரியாதையோடு வாழ நாம் துணை நிற்க வேண்டாமோ? தமிழன் தலை நிமிர, தனக்கென்று ஒரு கலாச்சாரம், பண்பாடு மற்றும் உலக அளவில் தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தோடு வலம் வர முதல் படியாக தமிழீழம் அவசியமாகிறது.

பின்குறிப்பு: இராஜிவ் கொலையில் புலிகளுக்கெதிரான நிலையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எனக்குப் பட்டதை சொல்ல எனக்கு முழு உரிமையுண்டு.

Dear friends please read

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.