Jump to content

யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?


Recommended Posts

தமிழ் நாதம் மூலம் எனக்கு யாழ் இணையம் அறிமுகமானது 3 வருடங்களாக வாசகராய் உள்ளேன் ஆனால் இப்போது தான் இணைந்து உள்ளேன்

3 வருசத்துக்கு முன்னம் வந்த பேரையும் சொல்லலாமே...

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

நான் கோபிக்கவில்லை :D:D:lol::lol: ஜமுனா என்ன கங்காரு குரங்காய் மாதிரது போல தெரியுது சின்னப்புவுக்கு சப்போட்டோ

Link to comment
Share on other sites

நான் கோபிக்கவில்லை  :(  :(  :)  :( ஜமுனா என்ன கங்காரு குரங்காய் மாதிரது போல தெரியுது சின்னப்புவுக்கு சப்போட்டோ

:P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்....

இணையத் தளங்கள தேடி தேடி நாளந்தம் பயணிப்பது வழக்கம்

அப்படி தொடந்து பல இணையத் தளங்கில் ஆக்கம் எழுதி வந்தேன்

அவ்வாறான காலப் பகுதியில் ஒரு நாள் ஒரு ஈ-மெயில் வந்திருந்தது

ஒரு கனடா சோதரியிடமிருந்து அதில் குறிப்பிடப்பட்ட இணையங்களில் யாழ்

களமும் ஒன்றாக இருந்தது அப்போது உள்ளே வந்து பார்த்தேன் எப்படி பதிவு

செய்வதென தெரியாது இருந்தேன்.

பின்னாடி ஒரு மாhதிரி பதிவு செய்து தலைப்பை மட்டும் பார்த்து விட்டு

போயிடுவேன்..பின்;னாளில் ஒரு நாள் கருத்துகளம் பகுதிக்குள் நுழைந்த போதுதான்

நிறய விடயங்கள் உள்ளதை அறிந்து கொண்டேன்.

பல கட்டுரைகள். கவிதைகள் .கதைகள் என எனக்கு தெரிந்த சிலர் தொடராய்

எழுதி கொண்டு இருந்தார்கள் .

என்னையும் அவர்கள் அறிந்திருந்தார்கள் நானும் அவர்களை அறிந்திருந்தேன்

அதன் பின்னாடி எனது கருத்துக்களையும் வைத்தேன் .

அதற்கு பரிபுரணமான ஒத்துழைப்பை தந்தார் மோகன் அண்ணா அவர்கள்

ஆயுத கப்பல் என்ற கவிதையை தடைசெய்து முடக்கி வைத்தபோது மனம் உடைந்தது

பின்னர் எனது கேள்விகனைகளிற்கு தனி மடலில் சில அறிவுரைகளும்

எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சில விபரங்கள் தரப்பட்டன

அதன் பின் எனது படைப்புக்களையும் வைக்க முடிந்தது.

ஆனால் இவ் தளமானது உண்மையில் தமிழ் தேசயித்திற்காக மாபெரும்

பணியை செய்து வருகிறது .

பல நேயர்களை தன்னகத்தே நாளுக்கு நாள் கூட்டியவாறு செல்கிறது .

இப்போது வருந்துகிறேன் இதை முன்னரே அறியாமலே விட்டேன் என்று.

ஏன் எனில் அவளவு சிறப்பு அம்சமும் அதே வேளை பல சிறந்த படைப்பாளிகளையும்

தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு முதன்மை வாய்ந்த இணையமாக இது விளங்ககிறது .

எனவே மேலும் மேலும் யாழ் வளர என்னால் ஆன பணிகளையும்

தமிழ் தேசியத்த்தின் கொள்கையுடன் இணைந்து செய்வேன் என

கூறிக் கொண்டு விடை பெறுகிறேன்

நன்றி

அன்புடன்

- வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது வருந்துகிறேன் இதை முன்னரே அறியாமலே விட்டேன் என்று.

ஏன் எனில் அவளவு சிறப்பு அம்சமும் அதே வேளை பல சிறந்த படைப்பாளிகளையும்

தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு முதன்மை வாய்ந்த இணையமாக இது விளங்ககிறது .

உங்கள் படைப்புக்களையும் அள்ளித்தாங்க வன்னி மைந்தனே

Link to comment
Share on other sites

நான் கோபிக்கவில்லை :lol::D:lol::lol: ஜமுனா என்ன கங்காரு குரங்காய் மாதிரது போல தெரியுது சின்னப்புவுக்கு சப்போட்டோ

கங்காரு எப்பவும் கங்காரு தான் சும்மா சும்மா டென்சன் ஆகாதையுங்கோ

:P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையத்தில் உலா வந்த போது தற்செயலாகவே யாழ் களத்தின் அறிமுகம் கிட்டியது, பார்வையாளனாக, வாசகனாக நீண்ட காலமாக யாழ் இணையத்தைக் கண்ணுற்றேன்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெப்-ஈழம் ஊடாக

Link to comment
Share on other sites

  • 1 year later...

இண்டைக்குத்தான் இப்பிடி ஒரு தலைப்பு இருக்கிறத கண்டன். எல்லாரும் உங்கட அனுபவங்கள் பிளந்துகட்டி இருக்கிறீங்கள்.

எனக்கு சரியா எத்தனையாம் ஆண்டு முதன்முதலா யாழ் இணையத்தை பார்க்கத் துவங்கினனான் எண்டு நினைவு இல்ல. ஆனா பெரும்பாலும் 2000 இல்லாட்டி 2001 சொச்சம் இருந்து பார்க்கிறன் எண்டு நினைக்கிறன். சரியா தெரியேல.

எண்ட அண்ணாதான் யாழ் டொட் கொம் எண்டு ஒரு வெப் சைட் இருக்கிது. அதுக்கு போனா நீயூஸுகள் பார்க்கலாம் எண்டு சொன்னார். பின்ன நானும் யாழ் டொட் கொம் எண்டு அடிச்சு வந்து நியூஸுகள வாசிச்சு வந்தன்.

2006 காலம் அளவிலதான் நான் கொஞ்சம் கூட நேரம் யாழுக்கு வாறது. அப்ப அந்த நேரத்தில குறுக்காலபோவான், நெடுக்காலபோவான் எண்டு ரெண்டு பேர் மாறி, மாறி எழுதிறதுகள வாசிக்க சரியான சிரிப்பா இருக்கும். ரெண்டுபேரும் ஊர்ப்புதினம் பகுதியில பந்தி, பந்தியா எழுதுவீனம்.

எனக்கும் கருத்தாடல் தளம் இருக்கிறது ஆரம்பத்தில தெரியாயாது. முகப்பு மட்டும்தான் பார்க்கிறது. யாழ் டொட் கொம் எண்டதும் நான் இது யாழ்ப்பாணத்தில இருந்து இயங்குகின்ற வெப் சைட்டாக்கும் எண்டு நினைச்சன்.

போனவருசம் வாசிக்கிற காலத்தில குறுக்கு, நெடுக்கு தவிர கு.சா அண்ணா, மோகன், சாணக்கியன், ஜெயதேவன் இந்தப்பெயருகளும் பெண்களில அனிதா, ரசிகை, தூயா இந்தப்பெயருகளும் நினைவில இருக்கிது. நான் முக்கியமா கு.சா அண்ணா எழுதுறதிகள விரும்பி வாசிப்பன். சிரிப்பா இருக்கும்.

இப்ப நான் எழுதுறதுகள யார் யார் வாசிச்சு சிரிக்கிறீனமோ கடவுளுக்குத்தான் தெரியும்.

நியூசுகள் வாசிக்கேக்க நான் விரும்பி வாசிக்கிற ஆக்கள் எழுதியுள்ள பதில் கருத்துக்கள மட்டும் தான் வாசிப்பது. ஒவ்வொருவரினுடைய தனிப்பட்ட புரபைலுகளுக்கு போய் அவர்கள் எழுதிய எல்லாவற்றையும் வாசிக்கலாம் எண்ட விசயம் அப்ப எனக்கு தெரியாது.

அந்தநேரம் ஆக்களிண்ட பெயருகள பார்க்கவும் சிரிப்பா இருக்கும். ஜெயதேவன் எண்டு ஒருவர் கொஞ்சம் பகிடியா எழுதி வந்தார். இப்ப ஆளக் காண இல்லை. இப்ப வருவதில்ல போல இருக்கு. என்ன பிரச்சனையோ யார் அறிவார்.

இங்கு இருக்கிற உறுப்பினர்களிண்ட பெயர் எல்லாம் கொஞ்சம் பகிடியா இருந்தபடியால்தான் நானும் சேரேக்க எண்ட பெயர மாப்பிளை எண்டு போட்டன். பிறகு மாத்திப்போட்டன்.

நான் இந்தவருசம் துவக்கம்தான் யாழுக்கு பிரதானமா வாறது. அதுக்கு முன்னுக்கு நிதர்சனம், தமிழ்நெட், புதினத்திலதான் எல்லாம் பார்ப்பது. நிதர்சனத்துக்கு அடிக்கடி போய் வாசிப்பன். இப்ப நிதர்சனப் பக்கமே போவதில்லை. இதமாதிரி யாழில நான் எழுதத் துவங்கினாப் பிறகு சிறீ லங்கா நியூசுகள காவி வருகிற மற்றைய ஆங்கிலத் தளங்களுக்கு போறத முழுவதுமா நிப்பாட்டிப் போட்டன். இஞ்ச ஊர்ப்புதினம் பகுதியில எல்லா நியூசுகளையும் ஒட்டுவதால நான் எங்கட நியூசுகள அறிய யாழ் தவிர வேறு ஒரு இடமும் போவதில்லை. புதினம், பதிவுக்கு கூட நான் இப்போது போவது குறைவு.

எங்கள் கனடா நாட்டு நியூஸ், உலகச் செய்திகள நான் கூகிள் நியூசுக்குபோய் வாசிப்பது.

நான் யாழில இணையுறதுக்கு கு.சா அண்ணா முக்கிய காரணம் எண்டு சொல்லலாம். அவர் சும்மா பகிடியா எழுதுறதுகள வாசிச்சுப் போட்டுத்தான் நானும் இப்படி எழுதலாம் எண்டு சும்மா பகிடியா யாழுக்க வந்தன். ஹிஹி..

நான் எழுதுறதுகள பார்த்துப்போட்டு எனக்கு பின்னால தாமும் வந்ததாகவும் சிலர் சொல்லிச்சீனம்.

எல்லாரும் வாங்கோ. இதுக்கையே படுத்து எழும்பி ஒண்டடியா எல்லாரும் நாசமாப் போவம்.

Link to comment
Share on other sites

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி நான் இங்கு இணைவதற்கு சில நாட்கள் முன்னர் திறக்கப்பட்டது. அப்போது புதியவராக இருந்ததால் இதில் கருத்துப்பதிவது என்பது பெரிய அச்சமானதாக இருந்தது. இப்போது மீள ஏதோ ஒன்றைத் தேட இந்தத் தலைப்பு வந்து அகப்பட்டுள்ளது சரி.... இப்போதுதானே நிறையப் புதியவர்கள் இணைந்துள்ளார்கள் அவர்களும் தொடரட்டும்....

 

ஆரம்பத்தில் யாழ் இணையம் அறிமுகமானது தமிழ்நாதத்தின் ஊடாக... பின்னர் தாயகத்தில் நின்ற நாட்களில் யாழ் இணையம் பற்றி மேலதிகமாக அறிய முடிந்தது. அதன் பின்னர் இதனைக் கருத்துக்களமாக தெரியாத நிலையில் சில கவிதைகளை நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தபோது முகப்பில் இணைத்துக்கொண்டார்கள் அதிலிருந்தே யாழினூடன என்னுடைய பயணம் ஆரம்பித்தது. மெல்ல படிப்படியாக உள் நுழைந்து கருத்துக்களத்தைப்பார்வையிடும்போது அட நம்மாளும் கருத்துக்கள் வைக்கலாம்தானே என்ற எண்ணங்கள் தோன்ற உறுப்பினர் பட்டியலில் நுழைய வெவ்வேறு பெயர்களில் நான் நினைக்கிறேன் 3 பெயர்களில் வெவ்வேறு ஈமெயில் முகவரியில் உள் நுழைந்தேன்...காரணம் மறதி அதிகம் புதிய ஈமெயில் முகவரி புதிய பெயர்கள் நுழைவுச் சொற்கள் என்று ஏதாவது ஒன்று மறந்து விட மூன்று பெயரும் உள் நுழைய முடியாதபடி அமைந்துவிட்டது... பின்னர் சரி இங்கு வழமையாகப்பாவிக்கும் பெயரிலேயே பயணிப்போம் என்று முடிவெடுத்து இன்று வரை தொடர்ந்திருக்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

தமிழை பற்றி தமிழில் தட்டிட கிடைத்த வரப்பிரசாதம் நண்பர்கள் வாய்வழியே கிடைத்து யாழின் அறிமுகம்

இணையத்திலும் தமிழ் இனி மெல்ல சிரிக்கும்

 

 

யாழில் இணைய காரணமானவர் இவர் தான். தேனியில் எழுதிய சாணக்கியன் என நினைத்து இவருடன் முக்கியமாக கதைக்க வேண்டும் என இணைந்தேன்.இருவரும் ஒருவரல்ல என தெரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

நானும் யாழ் இணையம் ஐரோப்பா வந்தகாலத்தில் இருந்து பார்த்து வருபவன் ஒரு முன்று வருடம் முன் அஞ்சரன் என்னும் பெயரில் உள் வந்தேன் ஆனால் எங்கு எப்படி எழுதுவது என்று தெரியாது ஒவ்வருநாளும் நாளந்த அறிக்கை என் மெயிலுக்கு வரும் பின்னர் பேஸ்புக் வழிய இணைத்த நண்பர் இதன் ஊடாக நீங்கள் இணைவது சுகம் என கூறி விளக்கம் தந்தார் எங்கு முதல் எழுதவேணும் என்றும் சொன்னார் அதன்படி இப்பொழுது இணைத்து உள்ளேன் உண்மையை சொன்னா என்ன மெயில் ஐடியில் இணைத்து உள்ளேன் என்றுகூட எனக்கு தெரியாது :D:icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் காலத்துக்கு வந்தது ஒரு சுவையான நிகழ்வு. நான் பொதுவேலைகள் செய்வதால் ஒவ்வொருநாளும் குறைந்தது இருபது முப்பது மெயில்கள் என்று வந்துகொண்டிருக்கும். அதைவிட விளம்பரங்கள் என்று அவற்றைப் பார்த்துவிட்டு அழிக்கவே நேரம் போய்விடும். 2012 தை  மாதத்திலிருந்து யாழ் இணையத்தின் மெயில் வரத்தொடங்கியது. சாதாரணமாகவே நான் இணையத் தளங்கள் செல்வது குறைவு. அதனால் தொடர்ந்து ஆறு மாதங்கள் மெயிலைத் திறந்தே பார்க்காது அழித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் சரி திறந்துதான் பார்ப்போம் என்று திறந்து முதலில் சென்றது கதைப் பகுதிக்குள் தான்.

 

அப்போது கவிதையின் விற்றுத் தீர்த்த காதல்க் கதை போய்க்கொண்டிருந்தது. வாசிக்க தொடர்ந்து வாசிக்கும் ஆவலைத் தந்தது. சிறிது நாளில் அவர் எழுதுவதை நிறுத்தினாரா அல்லது என்ன நடந்ததோ தெரியவில்லை. கதையைக் காணவில்லை. தேடிக் களைத்து என்ன செய்வது என்று கிளறிப் பார்த்ததில் கருத்துக்களம் கண்ணில் பட சரி நானும் எழில் இணைவோம் என முடிவெடுத்து, சில்லேடுப்புக்களின் பின்னர் இணைந்துகொண்டேன். அதுகும் அரிச்சுவடியில் எழுதத் தெரியாது யாரோ ஒருவரின் அரிச்சுவடியில் நானும் என்னை அறிமுகப் படுத்தியது இன்று நினைத்தாலும் சிரிப்பாக இருக்கு. அதன் பின்னரும் என்னால் எல்லாவற்றுள்ளும் நுழைய முடியவில்லை. எதுவுமே தெரியாதவளாகவே தத்தி நடைபயின்று தேறினேன்.

 

அதன் பின்னரும் வேறு ஒருவர் எழுதிய கதை வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. இதுவரை அது யார் என்று நினிவு வருதே இல்லை. வாத்தியாரின் பெண்களை சைட் அடித்து இருட்டடி வேறு யாரோ வாங்குவதாக. அதை வாசித்துச் சிரித்த நான், நானும் ஏதும்  எழுதிப் பார்த்தால் என்ன என்று எழுதத் தொடங்கியதுதான் ....

Link to comment
Share on other sites

வணக்கம். இணைய இணைப்பது எடுத்ததும் சில நாட்கள் செய்திப் பக்கங்களுடன் பொழுதுபோய்.. அடுத்த கட்டமாக 'சற் ரூம்" அறிமுகமானது. அங்கே ஒரு சகோதரி அறிமுகமானார். அவரது அறிமுகம் மெசன்சருக்கு வளர, அவரது வாழ்த்து அட்டைகள் சில யாழ் முற்றத்தில் உள்ளன என்று காண்பிக்க, யாழ் அறிமுகமானது. 2002 என நினைக்கிறேன். கருத்துக்களத்துள் புகுந்தபோது, சந்திரவதனா, நளாயினி, சாந்தி போன்ற எழுத்துக்களால் அறிமுகமானவர்களின் கருத்துகளைக் கண்டு, நானும் அங்கத்துவனானேன். அதன் பிறகு நாளொருவண்ணம் யாழ் அங்கத்தினர்களில் பல இளைஞர்கள் எனது மெசன்சருக்கு வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் கணனிப்பித்தன்.

அவரிடம் யாகூவில் ஒரு கோம்பேஜ் 'வணக்கம்' என தமிழில் எழுதி ஆரம்பித்து தந்தார். பின்னர் எப்படி புரொன்ட் பேஜ் மனேசரில் எழுதுவது.. எப்படி லோட் பண்ணுறது.. இப்படி தினமும் அவரது சலிப்படையா விளக்கங்களை குறித்துக்கொண்டே எனது 'கோம்பேஜ்' அறிவு ஓரளவு சுயமாக இயங்கும் நிலையை அடைந்தது.பின்பு அவரே தானியங்கி எழுத்துருவையும் உருவாக்கித் தந்தார்.. அவரின் துணையுடனும் சுரதாவின் இணையத் தள உதவியுடனும் தானியங்கி எழுத்தில் பக்கங்கள் உருவாகின.

இந்த நிலையில், இளைஞன் எனது மெசன்சருள் புகுந்துகொண்டார். பின் அவர் என்னை யாகூல பிறைவேற் சற் ரூம் அமைத்து குழுவாக பேசுவது போன்ற முறையை அறிமுகப்படுத்தி.. நான் வேலையால் வந்து கணனியில் அமர்ந்தவுடன்.. என்னை இழுத்து அங்கே விட்டுவிடுவார்.. இப்படியான அறிமுகங்களால் யாழில் 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?" எனும் தொடர் கதையை எழுத முடிந்தது. அதற்கு இந்த அனுபவங்களும், மெசன்சரிலே ஒரு அத்தியாயம் முடிந்த பிறகு சில யாழ் உறவுகள் கூறும் சில தகவல்களும் புதினங்களும் உதவி செய்தன.

ஆக, யாழில் என் இயக்கத்துக்கு திரு மோகன் அவர்கள் சுதந்திரம் அளித்ததால்.. எனது ஆர்வமும் அறிவும் புதுப்புதுத் தேடல்களை நோக்கி விரிந்தது. அதேநேரம் யாழ் மூலம் அறிமுகமான இளைஞனின் உதவியுடன் எனது ஆர்வம் 'தமிழமுதம்' இணையத்தளமாகவும் இன்னொரு படியை எட்டியுள்ளது.

அதிலே உள்ள பல புகலிடப் பாடல்களை யாழ் கள உறவுகள் மெசன்சர் ஊடாகவே அனுப்புவார்கள். அனுப்புகிறார்கள். ஆக, யாழ் இணையத் தளமானது எனக்குப் பல வகையிலும் உபயோகப்பட்டுள்ளது. உபயோகப்படுகிறது. கோம்பேஜ், குடில்கள், இணையத்தளம் என பலவற்றுக்கு யாழ்களம்தான் எனக்கு உதவும் உள்ளங்களை அளித்திருக்கிறது.

அதேபோல குருவிகள்.. அவருடனும் மெசன்சரில் இடைக்கிடை கதைப்பேன். இடைக்கிடை கதைத்தாலும் கதைக்கும்போது அவரது விளக்கங்கள கேட்கும்போது மணிகள் அழிவது தெரியவே தெரியாது. அவளவு சுவையாக அதேநேரம் விடயத்தோடு கதைப்பார். ஆனால் அவர் தற்போது 'எஸ்கேப்'பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

யாழ் கள உறவுகள் யாபேரும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்!

 

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே நண்பரே!!  :o

Link to comment
Share on other sites

எனக்கு இந்த இணையத்தளம் என் அத்தானின் மூலம் அறிமுகமானது. நல்ல செய்திகளை வாசிக்கக்கூடியதாகவும் நல்ல கருத்துகள் அலசி ஆராயப்படுவதாகவும் கூறினார். நன்றி அத்தான். அன்புடன் லைக் ராசம்மா

Link to comment
Share on other sites

 

மெல்ல படிப்படியாக உள் நுழைந்து கருத்துக்களத்தைப்பார்வையிடும்போது அட நம்மாளும் கருத்துக்கள் வைக்கலாம்தானே என்ற எண்ணங்கள் தோன்ற உறுப்பினர் பட்டியலில் நுழைய வெவ்வேறு பெயர்களில் நான் நினைக்கிறேன் 3 பெயர்களில் வெவ்வேறு ஈமெயில் முகவரியில் உள் நுழைந்தேன்...காரணம் மறதி அதிகம் புதிய ஈமெயில் முகவரி புதிய பெயர்கள் நுழைவுச் சொற்கள் என்று ஏதாவது ஒன்று மறந்து விட மூன்று பெயரும் உள் நுழைய முடியாதபடி அமைந்துவிட்டது... பின்னர் சரி இங்கு வழமையாகப்பாவிக்கும் பெயரிலேயே பயணிப்போம் என்று முடிவெடுத்து இன்று வரை தொடர்ந்திருக்கிறேன்.

நானும்தான் ......................எனது அதே அனுபவம் ........... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.