Jump to content

ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல்


Recommended Posts

ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல் எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறத விக்ரம் விஜய் முதல் நாளே பார்த்துவிட, படம்

பத்திரிகை, டிவி அனைத்திலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாரிக்கொள்ளும் ஆக்ஷன் ஹீரோக்கள். அனல் பறக்கும் அவர்களது பேட்டிகள். அதற்கு மேல் ஆவேசம் ததும்பும் ரசிகர்களின் வெறி எல்லை மீறும். இப்படிப்பட்ட கூண்டுக்கிளித்தனமான தமிழ் சினிமா சூழலில் 2 ஆக்ஷன் ஹீரோக்களைப் போட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளர், இயக்குநர் கதி அதோகதிதான்.

ஆனால், ஒரே படத்தில் 2 ஆக்ஷன் ஹீரோக்கள் என மற்றவர்கள் செய்யத் தயங்கிய விஷயத்தை கதையில் எடுத்துக் கொண்டு கலக்கியிருக்கிறார் பட்டியல் இயக்குநர் விஸ்வநாதன். வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இப்போது விஸ்வநாதனும்.

வெளியான வெள்ளிக்கிழமையில் இருந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட். தொடர்ந்து வசூலை அள்ளிக் குவிக்கிறது பட்டியல்.

இளைய நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ள ஆர்யாவும், பரத்தும் தனித்தனியே நடித்து வெற்றிப் படம் கொடுத்தவர்கள். பாய்ஸில் அறிமுகமான பரத் காதல் படத்தில் அப்பாவிக் காதலனாக வாழ்ந்து சிறந்த நடிகராக பரிணமித்துள்ளவர். பட்டியல் படத்தின் கடைசி நிமிடங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார் பரத்.

கையில் பாட்டிலுடன் அனல் பறக்கும் ஆக்ஷன் நாயகனாக கலக்கியிருக்கிறார் ஆர்யா. திரையரங்கம் முழுவதும் படம் முடியும் வரை காதைக் கிழிக்கிறது ஆர்யா...ஆர்யா...என்ற ரசிகர்களின் ஆவேசக் கூச்சல். வெள்ளித் திரைக்கு வெளியிலும் நண்பர்களாக இருக்கும் இந்த 2 இளம் ஹீரோக்களுக்கும் பட்டியல் படத்தின் வெற்றி போனஸ்.

விருதுநகரில் படப்பிடிப்பில் இருக்கும் பரத், 2 ஹீரோக்கள் கதை என்றதும் முதலில் தயங்கினேன். என் நண்பர்கள் வேறு வேண்டாம் என்று எச்சரித்தனர். ஆனால் விஸ்வநாதன் சொல்லக் கேட்டவுடனே தயக்கமெல்லாம் பறந்தோடி விட்டது என்றார்.

ரசிகர்(கை)களின் செல்பேசி சிணுங்கல்களுக்கு மத்தியில் முத்துக் குளிக்கும் ஆர்யா, 2 ஹீரோ படங்கள் சினிமாத் துறைக்கும் நல்லது. நல்ல கதை, திரைக்கதையின் மூலம் கூட்டாகவும் வெற்றியைச் சாதிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் என்கிறார். அதிரடி நாயகனாகவும் நிரூபித்த திருப்தி ஆர்யாவுக்கு. அனைத்து முன்னணி தமிழ் நாயகர்களையும் கவர்ந்திருக்கிறது பட்டியல். விக்ரம் முதல் நாளே பார்த்துவிட, படம் பார்த்த விஜய் இருவரையும் அழைத்து வானளாவ புகழ்ந்திருக்கிறார். ஆக பட்டியலின் புகழ் எங்கும் வாசிக்கப்படுகிறது.

எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறது பட்டியல். விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் முகமெல்லாம் புன்னகை. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.300 கொடுக்கக் கூட தயாராக ரசிகர்கள்.

புதுவையை பொறுத்த வரையில் ரஜினி படம் என்றால் மட்டுமே 2 தியேட்டர்களில் திரையிடப்படும். ஆனால் அலைமோதும் கூட்டத்துக்கிடையில் பட்டியல் 2 திரையரங்குகளில் ஓடுகிறது. ஆண்கள் கூட்டம் அலைமோதும் ரோஹினி தியேட்டரில் கல்லூரிப் பெண்கள் டிக்கெட் வாங்க முண்டியடிக்கின்றனர்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளுக்கான அனைத்துக் காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்து விட்டது என்கிறார் திருவண்ணாமலை பாலசுப்ரமணியா தியேட்டர் உரிமையாளர் அம்பிகாபதி. இந்த போக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடர்ந்தால் படம் சூப்பர்-டூப்பர் ஹிட் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி....

dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.