Jump to content

மெல்ல மெல்ல புலிக்கொடி இனி..??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன்.

08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார்.

நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஊருக்கு போவதற்காக பலரும் ஒழிந்து செய்யும் ஒரு விடயத்தை ஐநூறு பேரைக்கூட்டி அதிலும் பரிசில் கடை வைத்திருக்கும் ஒருவர் பகிரங்கமாக செய்வதென்பது ஆஆச்சசரியமான விடயம்.

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

ஆம் இது கூட எமக்கு பாரிய ஓர் வெற்றியென்றே நாம் கருதலாம், புலிக்கொடியை தவிருங்கள் ,திரும்பிப்பார்க்கமாட்டார்கள் ,\

என்றெல்லாம் யார் யார் எல்லாம் கூறினாலும், அல்லது,எழுதினாலும் மக்கள் என்ன நினைக்கிறார்களோ ,என்ன செய்கிறார்களோ

அதுதான் நிஜம் ,இது நமக்கு நல்ல ஒரு ஆரம்பமே என்று கருதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்ல மெல்ல புலிக்கொடி மேலே பறக்கிறது.  விசுகு அந்த தமிழீழ ஆதரவாளர்களுக்கு எனது நன்றியை தெரிவியுங்கள். 

Situation Song? Why not?

Link to comment
Share on other sites

இந்த பழக்கம், வழக்கம் வளரட்டும், பரவட்டும்.

அத்துடன் மக்களுக்கும், மாவீரர்களுக்கும் அகவணக்கமும் செலுத்தலாம்.

இதை யாரும் பயங்கரவாதம் என்றோ இல்லை அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாகும் என்றோ தடை போட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் அடம் பிடித்தாலும்

தமிழர்கள் புலிகள்

புலிகள் தமிழர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு தான் அடம் பிடித்தாலும்

தமிழர்கள் புலிகள்

புலிகள் தமிழர்கள்.

ஒன்றும் செய்ய முடியாது.  மரபணுவில் ஊறிவிட்டது. 

Link to comment
Share on other sites

தனிப்பட்ட நிகழ்ச்சியின் போது மாவீரருக்கு அஞ்சலி செலுத்தி புலிகொடியேற்றி நிகழ்ச்சியை நடாத்தினால் இளம் தலைமுறை மனதில் அது பதிவதுடன் அவர்கள் அதனைப் பின்பற்றவும் வாய்ப்பேற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எம் மண்ணுக்காகவும் எமக்காகவும் மரணித்த மாவீரர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டு உங்கள் நிகழ்வுகளைத் தொடருங்கள்.

அதுவே எமக்குள் ஒரு ஆழமான உணர்வுகளைத் தூண்டிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன்.

08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார்.

நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஊருக்கு போவதற்காக பலரும் ஒழிந்து செய்யும் ஒரு விடயத்தை ஐநூறு பேரைக்கூட்டி அதிலும் பரிசில் கடை வைத்திருக்கும் ஒருவர் பகிரங்கமாக செய்வதென்பது ஆஆச்சசரியமான விடயம்.

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

விசுகர்!மன்னிக்கோணும் எனக்கென்னமோ உதுலை பெரிய டவுட்? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் அடம் பிடித்தாலும்

தமிழர்கள் புலிகள்

புலிகள் தமிழர்கள்.

இதுதான் இனி உலகில் தமிழினம் இருக்கும் வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன்.

08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார்.

நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஊருக்கு போவதற்காக பலரும் ஒழிந்து செய்யும் ஒரு விடயத்தை ஐநூறு பேரைக்கூட்டி அதிலும் பரிசில் கடை வைத்திருக்கும் ஒருவர் பகிரங்கமாக செய்வதென்பது ஆஆச்சசரியமான விடயம்.

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

இதை நான் மிகவும் கண்டிக்கிறேன்.

சாமத்தியவீடு என்பது பெண்ணை அலங்கரித்து அழகுபதுமையாக ஊர் உலகத்தின் முன்னால் உட்கார வைத்து எங்களுடைய பிள்ளை திருமண உறவுக்கு ஆயத்தமாகி விட்டாள் என்று அறிவிக்கும் ஒரு நிகழ்வு...நீங்கள் எல்லோரும் என்னதான் சடைந்து கதைத்தாலும் இந்த சடங்கை பெண்விடுதலையை ஊக்குவிக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அப்படி இருக்கும்போது முழுமையாக பெண்களுக்கு விடுதலையை ஊக்குவித்த, பெண்களின் திறமைகளை பிரகாசிக்கவைத்த ஒரு விடுதலை இயக்கத்தின் கொடி ஒரு பெண்ணை ஒரு போகப் பொருளாக வெளிக்காட்டும் இடத்தில் ஏற்றப்பட்டதை பெண்ணாக அதே நேரம் இந்த தேசியத்தை நேசிக்கும் விடுதலை விரும்பியான என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

பெண்களின் திறமைகளை பிரகாசிக்கவைத்த ஒரு விடுதலை இயக்கத்தின் கொடி ஒரு பெண்ணை ஒரு போகப் பொருளாக வெளிக்காட்டும் இடத்தில் ஏற்றப்பட்டதை பெண்ணாக அதே நேரம் இந்த தேசியத்தை நேசிக்கும் விடுதலை விரும்பியான என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழர் அல்லாதோர்தான் புலிக்கொடியை எமது தேசியக் கொடியாகப் பார்க்காது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் உங்களைப் போன்றவர்களிற்கே இன்னும் சரியான தெளிவு வரவில்லைப் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அல்லாதோர்தான் புலிக்கொடியை எமது தேசியக் கொடியாகப் பார்க்காது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் உங்களைப் போன்றவர்களிற்கே இன்னும் சரியான தெளிவு வரவில்லைப் போலுள்ளது.

புலிக்கொடி தமிழர் கொடி அதில் எந்த மாற்றமும் இல்லை ஒவ்வொரு இடத்திலும் அதன் வடிவம் என்பது சின்னச் சின்ன மாறுபாடுடன் இருப்பது நீங்கள் அறியாத ஒன்றா? அங்கு ஏற்றப்பட்டது புலிக்கொடிதான் ஆனால் அங்கு ஏற்றப்பட்ட அந்தக் கொடிக்கென்று ஒரு தனித்துவம் உள்ளது. அந்தக் கொடியில் உள்ள புலியின் உருவம் எது,?காலங்காலமாக சோழர் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த புலியா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியினில் பொறிக்கப்பட்டிருந்த புலியா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு என்று தமிழர் வரலாற்றில் ஒரு தனித்துவம் இருக்கிறது.

ஒருவேளை நீங்கள் சோழமன்னனின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் புலியை ஏற்றிவிட்டு சாமத்தியச்சபையைச் செய்திருந்தால் அதற்கு நான் ஒரு வார்த்தை பேசியிருக்கமாட்டேன்.... ஆனால் ஏற்றப்பட்டது தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக் கொடியாக இருந்தால் அதனை என் உயிருள்ளவரை எதிர்ப்பேன்.

பெண்விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய ஒரு கொடி மீண்டும் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இடத்தில் ஏற்றப்பட்டதை ஒருகாலமும் மன்னிக்கமுடியாது...

மதியுங்கள், தயவு செய்து மலினப்படுத்தாதீர்கள்

Link to comment
Share on other sites

பல பத்தாண்டுகளிற்கு முன்பு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியல்ல. இந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகள் சென்ற பின்பே அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது.

தமிழர்கள் தேவையற்ற ஒரு நிகழ்வை தமது பண்பாடகவே நினைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தச் சடங்கை நடாத்துகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இதனைச் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை போகப்பொருளாக உலகிற்கு காட்டமாட்டார்கள்.

இந்த நிகழ்வு அறியாமையாலேயே தொடர்கிறது.

உங்களைப் போன்றவர்கள் முயற்சித்தால் காலப்போக்கில் இது கைவிடப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல பத்தாண்டுகளிற்கு முன்பு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியல்ல. இந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகள் சென்ற பின்பே அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது.

தமிழர்கள் தேவையற்ற ஒரு நிகழ்வை தமது பண்பாடகவே நினைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தச் சடங்கை நடாத்துகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இதனைச் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை போகப்பொருளாக உலகிற்கு காட்டமாட்டார்கள்.

இந்த நிகழ்வு அறியாமையாலேயே தொடர்கிறது.

உங்களைப் போன்றவர்கள் முயற்சித்தால் காலப்போக்கில் இது கைவிடப்படலாம்.

மின்னல்,

நான் இங்கு யாரோ சாமத்தியச்சபை நடாத்துகிறார்கள் அது பிழை என்று சொல்வதற்காக கருத்துப்பதிவிடவில்லை. எங்களுடைய உன்னதமான கொடி இத்தகைய இடத்தில் பயன்படுத்தப்பட்டதனால்தான்....

ஏனோ மற்றவர்களால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் என்னால் எந்தவித காரணங்கள் கற்பித்தும் இதனை ஏற்க முடியாது.

என்னவென்று நினைத்துவிட்டார்கள்?

எத்தனை விடுதலை வேணாவாக்களின் சத்தியச் சாட்சி

ஒரு பிள்ளை மிகப்பெரும் சாதனை படைத்து அதற்கு ஒரு பாராட்டுவிழா நடாத்தும் இடத்தில் இதனை பறக்கவிடுதலே இந்தக் கொடிக்கான மதிப்பு.

ஒரு பெண்ணின் உடல் வளர்ச்சியான உதிரப்போக்கைக் கொண்டு நடாத்தப்படும் சடங்கிற்கு....

சீ....தூ...வெட்கங்கெட்ட மனிதர்களே

இனி பச்சையாக எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை

Link to comment
Share on other sites

பெண்விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய ஒரு கொடி மீண்டும் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இடத்தில் ஏற்றப்பட்டதை ஒருகாலமும் மன்னிக்கமுடியாது...

பெண் விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய அந்தக் கொடி கம்பீரமாக பறந்த அதன் தேசத்தில் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இந்த நிகழ்வு அவரவர் வசதிக்கேற்ப சிறப்பாகவே நடைபெற்றது.

கோவில்களில் வேள்வி செய்வது போன்ற சில நிகழ்வுகள் அங்கு தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனா இந்த நிகழ்வு தடைசெய்யப்படவில்லை.

வீட்டு விழாக்களில் தேசியக் கொடியேற்றும் பழக்கம் இருக்காமையால்தான் எமது தேசியக் கொடி அங்கே நடைபெற்ற நிகழ்வுகளில் ஏற்றப்படவில்லை. அப்படிப் பழக்கம் இருந்திருந்தால் நிச்சயம் அங்கும் அது நடந்திருக்கும்.

எமது வீட்டு நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் எமது தேசியக் கொடியை வணங்கி தொடங்க வேண்டும் என்ற முறை ஏற்பட வேண்டும். இதன் தொடக்கமாக அந்த நிகழ்வில் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறார்களென நினைக்கிறேன். அவர்களிற்கு சாமத்திய வீடு என்பது திருமண நிகழ்வு போன்ற ஒரு சடங்காகவே தெரியும். தமது வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்விலேயெ தாம் புலிக்கொடியை ஏற்றுகிறோம் என எண்ணியே அதனைச் செய்திருப்பார்கள்.

அவர்களின் நோக்கு தேசியக் கொடியை இழிவு படுத்துவதோ அல்லது தமது மகளை போகப் பொருளாகக் காட்டுவதோ இல்லை.

Link to comment
Share on other sites

சோழர் :cholan-copy-200x300.jpg

சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது.

சோழர்களின் கொடி புலிக்கொடி.

www.Swisstamilsangam.blogspot.com/

Link to comment
Share on other sites

நான் இருக்கும் ஊரில் அதிகம் கலர் உள்ளவர்கள் இல்லை.. :D சில மாதங்களுக்கு முன் இலங்கையைச் சேர்ந்த ஒரு தம்பதியைச் சந்தித்தேன்.. :unsure:

கணவர் இந்திய வம்சாவழி.. கொழும்பில் பிறந்து சிங்களப் பள்ளியில் படித்தவர். மனைவி யாழில் ஏதோ ஒரு ஊர்.. அவருக்கே தெரியவில்லை.. நான்கு வயதில் இங்கே வந்துவிட்டாராம்.

சிங்களப் பள்ளியில் படித்தவருடன் பேசியபோது அரசியலும் வந்துவிட்டது.. கொழும்பில் தற்கொலைக் குண்டுகள் வெடித்ததால் பேஜாராகி விட்டது என்றார்.. சிங்களவரும், தமிழரும் இணைந்துவாழ சிங்கள இளைய தலைமுறையினர் முயற்சிப்பதாக புகழ்ந்து தள்ளினார்.. :D புலிகளையும் சாடையாக ஒரு பிடி பிடித்தார்.. நான் அமத்தி வாசித்ததால் அவருக்கு என்னில் குழப்பம்.. :D

வீட்டைப் பார்க்க வேண்டும் என்று அறைக்குள் எல்லாம் சென்று பார்த்தார்கள்.. அறைக்குள் ஒரு தமிழீழக்கொடி இருக்கு.. :rolleyes: அதற்குப்பிறகு அரசியல் பேசவில்லை.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாட்களில், சாமத்திய சடங்கு நடத்த வேண்டிய தேவை ஒன்று இருந்தது! பெண்கள் வீட்டிற்குள், வளர்ந்ததால், தங்கள் வீட்டில் ஒரு பெண் திருமண வயதிற்கு வந்துவிட்டாள் என்று விளம்பரப் படுத்துவதற்காக அது நடத்தப் பட்டது! இப்போது பெண்கள் வெளியில் போவதால்,இதற்கான தேவை அற்றுப் போய் விட்டது எனினும், சிலர் தங்கள் அந்தஸ்தைக் காட்டுவதற்காக, இப்படியான சடங்குகளைச் செய்கின்றார்கள்! இது இவர்களது தனிப்பட்ட விருப்பம் எனினும், வசதியில்லாதவர்களும் தங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்குவது கவலைக்குரியதே!

தேசியக் கொடிக்கு, ஒரு தனி மரியாதையுண்டு. அதன் பின் பல தியாகங்களும், இலட்சியங்களும் மறைந்துள்ளன!

சாமத்திய வீட்டிலோ, அல்லது தனிப்பட்ட சடங்குகளிலோ, இதை ஏற்றுவது இதனை அவமதிக்கும் செயல் என்றே கருதுகின்றேன்!

இதையும் சிலர், என்ன காரணங்களுக்காகச்,சாமத்தியச் சடங்கைச் செய்கின்றார்களோ, அதே காரணங்களுக்காகவே, கொடியையும் காட்டுகின்றார்கள்!

ஒரு சிங்களவன், தனது கலியாண வீட்டில் சிங்கக் கொடியை, வாசலில் கட்டியதை நான் கண்டதில்லை!

Link to comment
Share on other sites

இனிமேல் சாமத்தியவீடு எல்லாம் தேவையில்லை.. :unsure: பையன்களே டேட்டா பேஸ் வச்சு பிள்ளை சாமத்தியப்பட்ட உடனே லவட்டிக்கொண்டு போறாங்கள்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய அந்தக் கொடி கம்பீரமாக பறந்த அதன் தேசத்தில் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இந்த நிகழ்வு அவரவர் வசதிக்கேற்ப சிறப்பாகவே நடைபெற்றது.

கோவில்களில் வேள்வி செய்வது போன்ற சில நிகழ்வுகள் அங்கு தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனா இந்த நிகழ்வு தடைசெய்யப்படவில்லை.

வீட்டு விழாக்களில் தேசியக் கொடியேற்றும் பழக்கம் இருக்காமையால்தான் எமது தேசியக் கொடி அங்கே நடைபெற்ற நிகழ்வுகளில் ஏற்றப்படவில்லை. அப்படிப் பழக்கம் இருந்திருந்தால் நிச்சயம் அங்கும் அது நடந்திருக்கும்.

எமது வீட்டு நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் எமது தேசியக் கொடியை வணங்கி தொடங்க வேண்டும் என்ற முறை ஏற்பட வேண்டும். இதன் தொடக்கமாக அந்த நிகழ்வில் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறார்களென நினைக்கிறேன். அவர்களிற்கு சாமத்திய வீடு என்பது திருமண நிகழ்வு போன்ற ஒரு சடங்காகவே தெரியும். தமது வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்விலேயெ தாம் புலிக்கொடியை ஏற்றுகிறோம் என எண்ணியே அதனைச் செய்திருப்பார்கள்.

அவர்களின் நோக்கு தேசியக் கொடியை இழிவு படுத்துவதோ அல்லது தமது மகளை போகப் பொருளாகக் காட்டுவதோ இல்லை.

எல்லோர் வீட்டிலும் அவர்கள் வீட்டு அலமாரியின் மேல் இந்தத் தேசியக் கொடி இருக்கிறது. அவரவர் வீட்டு விழாவில் அக்கொடியும் பங்குபற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு நான் மற்றவர்களை இழிவுபடுத்த வரவில்லை தேசியக் கொடியை அதன் மதிப்புடன் பாவனைப்படுத்துங்கள் என்றுதான் கூற முனைகின்றேன்.

பெண்விடுதலையை செயல்படுத்திய அந்த நாட்டில் இந்த நிகழ்வு காலகாலமாக நடந்துவரும் ஒரு நிகழ்வு அதற்கு முழுமையான ஆதரவை வழங்கியதாக சரித்திரம் இல்லை அதற்கு நல்ல உதாரணமாக ஒரு பாடல் 'நிலவில் புதிய கவிதை எழுத" என்ற பாடல் இடம்பெற்ற அதே இறுவட்டில் "நிறைகுடத்தை ஏந்திக் கொண்டு" என்ற பாடலும் கலைபண்பாட்டுக்கழகத்தால் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. தற்சமயம் என்னால் அப்பாடலை இங்கு இணைக்க முடியவில்லை யாராவது அப்பாடலை இணைத்து விடுங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல பத்தாண்டுகளிற்கு முன்பு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியல்ல. இந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகள் சென்ற பின்பே அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது.

தமிழர்கள் தேவையற்ற ஒரு நிகழ்வை தமது பண்பாடகவே நினைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தச் சடங்கை நடாத்துகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இதனைச் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை போகப்பொருளாக உலகிற்கு காட்டமாட்டார்கள்.

இந்த நிகழ்வு அறியாமையாலேயே தொடர்கிறது.

உங்களைப் போன்றவர்கள் முயற்சித்தால் காலப்போக்கில் இது கைவிடப்படலாம்.

உண்மை.  தமிழ் நாடு சினிமாவை கொப்பி அடித்து திருமண சடங்கு, பிள்ளைதாச்சி சடங்கெல்லாம் செய்து காப்பெல்லாம் நொறுக்கி தள்ளுகிறார்கள்.  வரனின் தட்சிணை கூட பெண்ணின் அப்பனின் தலையில் கட்டபட்டது. 

நானும் சாமத்திய வீட்டுக்கு எதிர் தான் ஆனால் இந்த கொடி டிரென்ட் வளரவேண்டும் என்று தான் ஆதரிக்கிறேன் இங்கு.

அறுபது வயது ஹீரோ பதினாறில் சமைந்த பிஞ்சை பற்றி காமத்துடன் பாடுவதற்கு ஏன் சென்சார் குழு அனுமதிக்கிறது?

குழுவில் பெண்களும் இருப்பார்களே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இந்தக் கொடி டிரென்ட் வளரவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன் , நம் இப்போதைய தேவை சமூக சீர்திருத்தம் அல்ல, ஒற்றுமையும், நாட்டுப்பற்றும், முதலில் புலிக்கொடி எல்லா இடங்களிலும் பறக்கட்டும், கொடியை பறக்கவிட்டால் பிரச்சினை வரும் என்ற பயம் போய்விட்டால் மக்களுக்கு அதன் மீது மதிப்பு தானாகவே வந்து விடும், புலிக்கொடி பறக்க விடுவதை ஊக்குவித்து நம்முடைய நிகழ்சிகள் அனைத்திலும் பயன்படுத்த வேண்டும், அதை விடுத்து இப்படி ஆரம்பத்திலேயே குறை சொன்னால் மக்களுக்கு ஆர்வம் குறைந்து விடும்,

இப்படி சொல்வதால் நான் அந்த சடங்கை நம்புகிறேன் என்று பொருளல்ல, நானும் இது போன்ற நிகழ்வுகளை கடுமையாக எதிர்ப்பவன் தான் , என்ன செய்வது ஒன்றை இழந்தால்தானே மற்றொன்றை பெற முடியும், பரவலாக அனைவரும் பயன் படுத்த ஆரம்பித்த பின் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம், கொடி பறக்க ஆரம்பித்தால் நம் மீது உள்ள பிம்பம் மற்ற இனத்தவர் மத்தியில் மாறும், நமக்குள்ளும் ஒற்றுமையும் வளரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து, இதில் இணைக்கப் பட்டிருக்கும் பாட்டை ஒரு முறை கேட்ட பின்பு, கொடி பற்றிய உங்கள் கருத்தைப் மீள் பரிசீலனை செய்யுங்கள்!

ஒரு மாவீரர் விழாவில், இந்தக் கொடி ஏற்றப் பட்ட போது, எமக்குப் பாதுகாப்புக்காக நின்றிருந்த, அவுஸ் போலீஸ்காரர்கள், 'அட்டேன்ஷன்' நிலைக்கு உடனே மாறியதை அவதானித்தேன்! ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என, எனக்குத் தெரியாது! ஆனால் அதை அவதானித்த எம்மவரும், உடனே அந்த நிலைக்கு மாறினார்கள்! மிகவும் பெருமையாக இருந்தது!

குறிப்பு: சகோதரி சகாறாவும் இதை இணைத்துள்ளார்! பின்பு தான் அவதானித்தேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பற்றிய சர்ச்சைக்காக இதை இங்கு பதியவில்லை. கொடி மறக்கப்பட்டு விடுமோ என்ற ஆதங்கத்தில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தத்தையே இங்கு எழுதினேன். இந்த சாமத்திய வீட்டுக்கு நான் போகவில்லை. இருப்பினும் என்ன நிகழ்வாயினும் நாம் யார் எமது அடையாளம் எது ? என்பன சம்பந்தமான இந்த முயற்சிகளை எப்படி பார்க்கின்றீர்கள் என்பதே எனது கேள்வி?

கொடியையே மறந்துவிட்டு கொடி பற்றிய கோட்டைகளை வைத்திருப்பதனால் என்ன பலன்???

எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் இது போன்ற நிகழ்வுகளை தாயகத்தில் இராணுவ அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் இன்றி அனுமதிப்பின் அங்கும் இதையே செய்வர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.