Jump to content

இந்தியா, அமெரிக்காவிற்கு பயணமாகிறது கூட்டமைப்பு!


Recommended Posts

இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சர்வ தேசத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள் வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயணங் களை மேற்கொள்ளவுள்ளது.

அரசியல் தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் ஆதரவைத் தேடும் பயணங்களாக இந்தப் பயணங்கள் அமையும் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.கூட்டமைப்பின் குழுவினர் தலைவர் சம்பந்தன் தலைமையில் மே மாத இறுதி யில் இந்தியாவுக்கு பயணமாகின்றனர். அங்கு அவர்கள் இந்திய அரசியல் தலைமைகளைச் சந்தித்து இலங்கை இனப்பிரச் சினைத் தீர்வு தொடர்பான பேச்சுகளில் ஈடுபடவுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சி னைக்கான தீர்வை விரைவுபடுத்துவது தொடர்பில் இந்தப் பேச்சுகளில் ஆராயப் படவுள்ளதாகத் தெரிய வருகிறது.

இலங்கை அரசின் இழுத்தடிப்புகளால் சின மடைந்துள்ள கூட்ட மைப்பு இந்தியத் தலை மைகளுட னான சந்திப் பின்போது இலங்கை அரசு மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு இந்தியாவிடம் கோரும் எனவும் கூறப்படுகிறது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய அரசியல் தலைமைகளைச் சந்திப்பதாக உள்ளபோதும் அவர்கள் அங்கு யார் யாரைச் சந்திப்பர் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கூட்டமைப்பினர் இந்தியா சென்று திரும்பியதும் தமிழரசுக் கட்சியின் மாநாடு மட்டக்களப்பில் நடைபெற இருக்கிறது. அதன்பின்னர் கூட்டமைப்பின் குழு மீண்டும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவுக்குப் பயணமாகிறது. அங்கு அமெரிக்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் உட்படப் பலரை இவர்கள் அங்கு சந்தித்துப் பேசுவர் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளபோதும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. இனப்பிரச்சினை விடயத்தில் அது தொடர்ந்தும் ஒரு இழுத்தடிப்புப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. இதுகுறித்துக் கூட்டமைப்பின் தலைமை அரசிடம் பல தடவைகள் வற்புறுத்தியபோதும் அரசு அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. இதனை அடுத்தே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் பங்களிப்பைப் பெறுவதற்கு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது. இதன் முதற் கட்டமாக கூட்டமைப்பின் குழு மே மாத இறுதியில் இந்தியாவுக்கும் ஜூன் மாத நடுப்பகுதியில் அமெரிக்காவுக்கும் பயணமாக உள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் கூறின.

http://thaaitamil.com/?p=15739

Link to comment
Share on other sites

ஜுன் ஜூலையில் ஒரு பயணம் பினர் அக்டோபர் நவம்பரில் ஒரு பயணம், அத்தோடு இன்னொரு ஆண்டு பூர்த்த்யாகிடும்.

இப்பிடியே இழுத்துக்கொண்டு போனால் சம்பந்த்ரையாவும் போச்செர்ந்திடுவார்... தமிழருக்கு தீர்வு கிடைக்காமலே போய்விடும்.

**********செய்வதை இன்றே செய் அதை நான்கே செய்*********

Link to comment
Share on other sites

சிங்களத்துடன் பேசுவதை விட இவ்வாறான நகர்வுகள் கூடுதல் பலனை தமிழர் தரப்பிற்கு தரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.