Jump to content

ரொரன்டோவில் நடைபெற்ற சட்ட வல்லுனரான லால் பெனான்டோவினது சந்திப்பு


Recommended Posts

நட்புடன்....

நேற்று ரொரன்டோவில் நடைபெற்ற சட்ட வல்லுனரான லால் பெனான்டோவினது சந்திப்பு மேற்கு நாடுகளின் ஆதிக்கம் தொடர்பாகவே மையங் கொண்டிருந்தது....மேற்குல ஆதிக்க நாடுகளின் கையாள்தள்கடும் காய் நகர்த்தள்களும் எந்தளவு நமது போராட்டத்தை சிதைத்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்களை அவர் முன்வைத்தார்....அந்தவகையில் கில்லரியினதும் ஓபாமாவினதும் புதுவருட வாழ்த்துக்கள் முக்கியமாக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இது தொடர்பான சிங்களம் பேசுகின்ற மனிதர்கள் குறிப்பாக இடது சாரிகள் முன்வைக்கின்ற கருத்துக்களுடன் எனக்கு சிறிது விமர்சங';கள் இருந்தாலு:ம்.....பெனான்டோவின் பேச்சு பல வகைகளில ;முக்கியமானது....குறிப்பாக புலம் பெயர் தேசியவாதிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்ற தமிழக உணர்ச்சிகர தேசிய வாதிகளும் இவ்வாறானவர்களின் நிலைப்பாடுகளை புரிந்து: கொள்வது அவசியமானது என்றே கருதுகின்றேன்...

இதுவே நாம எழுந்தமானமாகவும ;தன்னியல்பாகவும ;செயற்படாது சரியான திசைவழி நோக்கி செயற்படுவதற்கான பாதையை உருவாக்கும்...

இந்தவகையில் அண்மையில் சேரன் அவர்கள் ஐ.நா வும ;புலம் பெயர்ந்த தமிழ ;பேசும் மனித்ரகளின ;போராட்டம் தொடர்பாகவும ;எழுதிய கட்டுரை முக்கியமானது என்றே ;நினைக்கின்றேன்....

இதற்கு ஜெயபாலன் முன்வைத்த விமர்சனம் மதிக்கப்படலாம் ஆனால் வெறுமனே தேசியவாத அடிப்படையிலான ;தர்க்கம் மட்டுமே;....

நேற்றைய கலந்துரையாடல் தொடர்பாக குறிப்பு எழுத ;விருப்பம் ஆனால் நேரம் போதாமையும் மற்றது தவறாக எழுதக் கூடாது எ;னபதால் ஒரு தயக்கம்....

நன்றி

நட்புடன் மீராபாரதி

Link to comment
Share on other sites

மேற்குல ஆதிக்க நாடுகளின் கையாள்தள்கடும் காய் நகர்த்தள்களும் எந்தளவு நமது போராட்டத்தை சிதைத்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்களை அவர் முன்வைத்தார்....அந்தவகையில் கில்லரியினதும் ஓபாமாவினதும் புதுவருட வாழ்த்துக்கள் முக்கியமாக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

சீனாவோ இல்லை உருசியாவோ இல்லை கியூபாவோ கூட தமிழர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கலாம். ஆனால், எமது மக்கள் அமெரிக்காவின் செய்திக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கின்றனர். காரணம் எம்மைப்பொறுத்தவரையில் கடந்த மூன்று வருடங்களில் அவர்கள் அழித்தவர்களுக்குள் மேலானவர்களாக தெரிகின்றார்கள்.

மேற்குலகம் மீது ஒரு சேற்றை பூசினால் சோசலிச நாடுகள் மீது நூறு சேற்றை பூசலாம்.

Link to comment
Share on other sites

இது தொடர்பான சிங்களம் பேசுகின்ற மனிதர்கள் குறிப்பாக இடது சாரிகள் முன்வைக்கின்ற கருத்துக்களுடன் எனக்கு சிறிது விமர்சங';கள் இருந்தாலு:ம்.....பெனான்டோவின் பேச்சு பல வகைகளில ;முக்கியமானது....குறிப்பாக புலம் பெயர் தேசியவாதிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்ற தமிழக உணர்ச்சிகர தேசிய வாதிகளும் இவ்வாறானவர்களின் நிலைப்பாடுகளை புரிந்து: கொள்வது அவசியமானது என்றே கருதுகின்றேன்...

இதுவே நாம எழுந்தமானமாகவும ;தன்னியல்பாகவும ;செயற்படாது சரியான திசைவழி நோக்கி செயற்படுவதற்கான பாதையை உருவாக்கும்...

அயர்லாந்தில் இருந்து பல நல்ல கருத்துக்களை முன்வைக்கும் லால் பெர்னாண்டோவை விட இலங்கையில் இருந்து நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுக்கும் விக்கிரமபாகு கருணாரத்னா போன்றவர்கள் உயர்வாக தெரிகின்றனர். புலம்பெயர் தமிழர்களில் பலரும் இவ்வாறானவர்களுடன் இணைந்து சில செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவின் மாமன் Dr Brain Seneviratna இளையோர் அமைப்பை உருவாக்கி பல அலுவல்கள் செய்து கொண்டிருக்கிறார்,

Link to comment
Share on other sites

தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்தமையால் சிறிலங்காவுக்கு செல்ல முடியாமல் இந்தியாவில் தங்கி இருக்கும் நிமல்கா பெர்னாண்டோ

Link to comment
Share on other sites

சில குறிப்புகள்.

முதலாவது "நீங்கள் சிறிலங்கனா" என யாராவது கேட்டால்" ...

" சிறிலங்கள் பாஸ்போட் வைத்திருப்பவர்?"

என்ற பதிலையே கூறுவேன். ஏனனில் என்னை சிறிலங்கனாக அடையாளம் காணுவது என்பது....

இந்த அடையாளத்தினால் அடக்கப்பட்டுப் பாதிக்கப்படுகின்ற தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கு எதிரானதாகவே இருக்கும்....

ஏனெனில் "சிறி" என்ற சிங்கள சொல் லங்கா அல்லது இலங்கை என்ற நாட்டை சிங்கள நாடாக அடையாளப்படுத்துகின்ற ஒரு சொல்.

இப்பொழுது புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்கள் தாம் வாழும் நாடுகளின் பிரஜைகளா....அல்லது அதன் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்களா எவ்வாறு எம்மை நாம் அடையாளப்படுத்துவோம்?)

இரண்டவாது

(ஒரு நண்பர் குறிப்பிட்டதுபோல் இது இலங்கையில் நடைபெற்றது இனக் கலவரம் அல்ல...தமிழினத்தின் மீதான தாக்குதல்கள்...தமிழின அழிப்பு ....என்பதே சரியானதாகும்) இவ்வாறு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடைபெற்ற தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கு எதிரான கலவரங்களின் போதெல்லாம் இலங்கையின் வடக்கு கிழக்கு தவிர்ந்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் பேசும் மனிதர்களை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்குத்தான் கப்பல்களிலும் புகையிரதங்களிலும் அனுப்பினார்கள்....அப்படி எனின் வடக்கு கிழக்கு தமிழர்களது தாயகம் தானே.....இவ்வாறான உணர்வை வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்த ;தமிழர்களுக்கும் ஊட்டியது சிங்கள இனவாத அரசுகள் தனே.....இவ்வாறு ஒரு தமிழர் தன்னிடம் கூறியதிலிருக்கின்ற உண்மைத்தன்மையை எடுத்துக் கூறினார்.

மூன்றவாது....

திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைப ;பார்வையிட வந்த அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற இத் துறைமுகத்ததை அவர்களை; அழிப்பதன் மூலமே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற முன்மொழிவை ;வைத்ததாக குறிப்பிட்டார்.

நான்காவது

முள்ளிவாய்க்காளின் இறுதிநேரத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானத்தை எடுப்பதற்குப ;பதிலாக தாம் கேடயங்களாக தடுத்து வைத்திருக்கும் தமிழ் பேசும் மனிதர்களை விடுவிக்க கோருகின்ற தீர்மானத்தையே ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்ததாக குறிப்பிட்டார்...

மக்கள் படுகொலை செய்யப்படுவதை மேற்கு நாடுகள் அறிந்திருந்தும் அமைதியாக இருந்தன....

சிரியா அல்லது எகிப்து அல்லது லிபிய புலம் பெயரந்த வாழும் மனிதர்கள் புலம ;பெயர்ந்து வாழுகின்ற தமிழ ;பேசும் மனிதர்களைப் போல ;வீதிகளை மறித் து:போராட்டங்கள் நடாத்தவில்லை.....ஆனாலும் அவர்களது நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஐ.நா வும் அதன் பிரதிநிதிகளும் ஓடி ஓடி உழைக்கின்றார்கள்.

அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஐரிஸ் மக்களை சந்திப்பதற்காக சின்பெயின் தலைவருக்கு விசா வழங்கி அனுமதி வழங்கியிருந்தனர்.....ஆனால் புலிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்ததைகயில் கலந்து கொள்ளவதற்காக அமெரிக்கா வருவதற்கு விசா வழங்க மறுத்தனர். இதுவும் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடையக் காரணமாகியது......

இக் குறிப்புகளை எனது மதிய இடைவேளiயின் பொழுதே எழுதுகின்றேன்.....

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றிகள்.

சிரியா அல்லது எகிப்து அல்லது லிபிய புலம் பெயரந்த வாழும் மனிதர்கள் புலம ;பெயர்ந்து வாழுகின்ற தமிழ ;பேசும் மனிதர்களைப் போல ;வீதிகளை மறித் து:போராட்டங்கள் நடாத்தவில்லை.....ஆனாலும் அவர்களது நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஐ.நா வும் அதன் பிரதிநிதிகளும் ஓடி ஓடி உழைக்கின்றார்கள்.

அரபுநாடுகளில் நடந்த/நடக்கும் படுகொலைகள் ஒரு இனமே தனது இனத்தை அழிப்பது. சிங்கள இனமோ அழித்தது தமிழினத்தை.

அரபுநாட்டு மக்களுக்காக பேச பல அரபுநாடுகள், அரபு லீக் உள்ளன. அதனால் அரபு மக்கள் வீதியில் இறங்கி போராடும் தேவை இல்லை. எமக்காக ஒரு நாடும் இல்லை.

அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஐரிஸ் மக்களை சந்திப்பதற்காக சின்பெயின் தலைவருக்கு விசா வழங்கி அனுமதி வழங்கியிருந்தனர்.....ஆனால் புலிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்ததைகயில் கலந்து கொள்ளவதற்காக அமெரிக்கா வருவதற்கு விசா வழங்க மறுத்தனர். இதுவும் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடையக் காரணமாகியது......

சின் பெய்ன் அமைப்பு அமெரிக்காவில் தடை செய்யப்படவில்லை. மேலும், பல அமெரிக்க அரசியல்வாதிகள், சானாதிபதிகள் (கிளிண்டன், ரீகன்) என பலம் கொண்ட வலையமைப்பை ஐரிஸ் மக்கள் கொண்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

மேலும்...

தாம் எவ்வாறு சிங்கள தேசிய வாதிகளாக வளர்க்கப்பட்டார் என்பதையும் எவ்வாறு தம் ஆழ்மனங்களிலில் பதியவைத்த கருத்துக்களை கொண்டு அப்பபப்ப தமது இனவாத செயற்பாடுகளை சிறிலங்கா அரசு முன்னெடுத்தார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.

இறுதியாக இன்னுமொன்றையும ;குறிப்பிட்டார் தமிழ் மக்களின சுயநிர்ணையத் திற்கான விடுதலைப் போராட்டத்தில் வெற்றியினல் தான் சிங்கள மக்களின ;ஜனநாயக சமூக விடுதலையும ;தங்கியிருக்கின்றது என்பதையும் குறிப்பிட்டார்.

இறுதியாக மிகவும் தாழ்மையாக ஆனால் உறுதியாக புலம பெயர்ந்த தமிழ் பேசும ;மக்களின் ஜெனிவா பிரகடனம் தொடர்பான ஆதரவு செயற்பாட்டை விமர்சித்தார்.

ஜெனிவா பிரகடனம் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.

மாறாக ;சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாதமான ஒரு செயற்பாடே என்றார்.

இந்த இடத்தில்தான் புலம் பெயர்ந்த அமைப்புகளின் உணர்ச்சிகரமான போரடங்கள் தொடர்பான விமர்சனம் எனக்கும ;தனிப்பட உண்டு. இது இப்பொழுது நடந்த ஐ.நா ;ஆதரவுப் போராட்டங்களாயினும் சரி 2009 களில ;மேற்கொள்ளப்பட்ட புலிக் கொடியுடனான போராட்டங்களாயினனும் சரி அவை அரசியல்; அடிப்படையற்ற போராட்டங்களே.

நாம் மீண்டும் மீண்டும் நமது அரசியல ;கோரிக்கைகளை முன்னிநறுத்தாது மேலெழுந்தமானமாக போராட்டங்களை முன்னெடுப்பது நமது எதிர்மறையான விளைவுகளையெ கொண்டுவருகின்றன என்பதை நாம் புரிவதில்லை.

இந்தடிப்படையில்தான் ஆபிரிக்க தலைவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அவர்கள் புலம் பெயர் தேசங்களில் புலிக்கொடி மற்றும் புலிகள் சார்பு போராட்டங்களுக்கு மாறாக மக்களினதும் மற்றும் அரசியல ;கோரிக்கைகளையும ;முதன்மைப் படுத்தி போராடும் படி கேட்டுள்ளார்கள். ஆனால் ஈழததில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையில ;அக்கறையற்ற புலம ;பெயர்ந்த தமிழ தலைவர்கள் அதற்கு உடன்படவில்லை. அவ்வாறான நிலையில ;தமக்கு ஒன்றும ;செய்ய முடியாது என ஆபிரிக்க ;தலைவர்கள் கூறியதாக நம்பத் தகுந்தவர்கள் கூறுகின்றார்கள்.

ஆகவே புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாம் இயக்க கட்சி சார்பு அரசிலை கொஞ:சம் புறம் தள்ளிவதை;து விட்டு தமிழ ;மக்களின் அரசியல ;அபிலாசைகளை பிரதான கோரிக்கைகளாக முன்வைத்தே புலம பெயர் தேசங்களில் முன்னெடுக்க வேண்டும ;என்பது எனது அபிப்பிராம்.

2008/09 களில் புலம் பெயர் தேசம் சரியான அரசியல ;கோரிக்கைகளையும் இலங்கை அரசை மட்டும்ல்ல புலிகளையும் போரை ;நிறுத்தக ;கூறி மட்டுமல்ல ஆயுதப ;போர்hட்டத்தை நிறுத்துப் படி வேண்டுகோள் விடுத்திருந்தோம என்றால் சிலவேளைகளில் பல ;நன்மைகள் கிடைத்திருக்கலாம். ஆனால ;நாம் தொடர்ந்தும ;பாடம் படிக்காது அரசியல ;தவறுகள் செய்து கொண்டே இருக்கின்றோம் என்பது நமது விடுதலைப் போராட்டத்தில் துர்ப்பாக்கிய நிலையாகும்.

Link to comment
Share on other sites

இறுதியாக மிகவும் தாழ்மையாக ஆனால் உறுதியாக புலம பெயர்ந்த தமிழ் பேசும ;மக்களின் ஜெனிவா பிரகடனம் தொடர்பான ஆதரவு செயற்பாட்டை விமர்சித்தார்.

ஜெனிவா பிரகடனம் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.

மாறாக ;சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாதமான ஒரு செயற்பாடே என்றார்.

அப்படியானால்,

ஏன் அமெரிக்கா தீர்மானத்தை முன்மொழிந்தது? ஏன் இராஜாங்க செயலாளர் உட்பட பல அமெரிக்க பிரதிநிதிகள் தீர்மானத்திற்கு ஆதரவு சேர்க்க ஜெனீவா வந்தனர்?

ஏன் இந்தியா ஆதரவாக வாக்களித்தது?

ஏன் சிங்களம் தீர்மானத்தை தொடர்ந்து கடும்போக்குடன் நடக்கின்றது?

Link to comment
Share on other sites

ஆனால் ஈழததில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையில ;அக்கறையற்ற புலம ;பெயர்ந்த தமிழ தலைவர்கள் அதற்கு உடன்படவில்லை. அவ்வாறான நிலையில ;தமக்கு ஒன்றும ;செய்ய முடியாது என ஆபிரிக்க ;தலைவர்கள் கூறியதாக நம்பத் தகுந்தவர்கள் கூறுகின்றார்கள்.

அந்த நம்பத்தகுந்தவர்கள் ஆபிரிக்க தலைவர்களுக்கு அங்குள்ள உண்மை நிலைமையை எடுத்துக்கூறவேண்டும். அங்கே பெரும்பான்மை இனமே அரச ஒடுக்குமுறை உள்ளது எனக்கூறுகின்றது. இதுவரை இந்த ஆண்டில் 60 - 2 = 58 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பினர் தென்னாபிரிக்க காங்கிரஸ் நூற்றாண்டு விழாவுக்கு சென்றதால் சிங்கள அரசு அதை புறக்கணித்தது.கூட்டமைப்பினர் புலிகள் போல நடப்பதாக அரசு கூறுகின்றது. ஒரு வருடத்திகு மேலாபேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் ஒன்றும் ஆகவில்லை.

தமிழர் பிரதேசத்தில் எந்த விதமான தொழில்சார் நடவடிக்கையும் இராணுவ தலையீடு இல்லாமல் சாத்தியமில்லை என்ற நிலைமையே உள்ளது. அதையும் மீறி தாயக உறவுகள் செய்தால், புலி இல்லை பயங்கரவாத முத்திரை. அத்துடன் பசிலுக்கு பத்துவீத கப்பம் மேலும் ஒட்டுக்குழுக்கள் தொல்லை.

யாரால் எப்படி உதவ முடியும் சிங்கள ஆட்சியில் மாற்றம் இல்லாமல்??

அந்த நம்பத்தகுந்தவர்கள் ஆபிரிக்க தலைவர்களுக்கு அங்குள்ள உண்மை நிலைமையை எடுத்துக்கூறவேண்டும்.

Link to comment
Share on other sites

ஆகவே புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாம் இயக்க கட்சி சார்பு அரசிலை கொஞ:சம் புறம் தள்ளிவதை;து விட்டு தமிழ ;மக்களின் அரசியல ;அபிலாசைகளை பிரதான கோரிக்கைகளாக முன்வைத்தே புலம பெயர் தேசங்களில் முன்னெடுக்க வேண்டும ;என்பது எனது அபிப்பிராம்.

இங்கே சிக்கல் என்னவென்றால் உங்கள் கருத்துப்படி நீங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதான கோரிக்கைகளாக முன்வைத்து எடுக்கும் முயற்சிகளை இன்னொருவர் அது இயக்க கட்சி சார்பு அரசியல் என்பார்.

Link to comment
Share on other sites

akootha "இலங்கையில் இருந்து நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுக்கும் விக்கிரமபாகு கருணாரத்னா போன்றவர்கள் உயர்வாக தெரிகின்றனர்"

தங்களின் இக் கூற்று மிக முக்கியமானது....உடன்படுகின்றேன்....இதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு பொன்சேக்காவிற்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக விக்கரமபாகுவிற்கு ஆதரவளித்திருக்க வேண்டும் என எழுதியிருந்தேன். இதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ளும் சிங்கள தலைவர்களுடன் நாம் இணைந்து செயற்படுவோம் என்பது மட்டுமல்ல நமது அரசியல் கோரிக்கைக்கான அடிப்படையை மேலும் உறுதியாக்கி இருக்ககலாம்...

ஆனால் பொன்சேக்காவிற்கு ஆதரவளித்ததன் மூலம் தமிழ; தேசிய அரசியலின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி விட்டனர்.

Link to comment
Share on other sites

akootha "இலங்கையில் இருந்து நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுக்கும் விக்கிரமபாகு கருணாரத்னா போன்றவர்கள் உயர்வாக தெரிகின்றனர்"

தங்களின் இக் கூற்று மிக முக்கியமானது....உடன்படுகின்றேன்....இதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு பொன்சேக்காவிற்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக விக்கரமபாகுவிற்கு ஆதரவளித்திருக்க வேண்டும் என எழுதியிருந்தேன். இதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ளும் சிங்கள தலைவர்களுடன் நாம் இணைந்து செயற்படுவோம் என்பது மட்டுமல்ல நமது அரசியல் கோரிக்கைக்கான அடிப்படையை மேலும் உறுதியாக்கி இருக்ககலாம்...

ஆனால் பொன்சேக்காவிற்கு ஆதரவளித்ததன் மூலம் தமிழ; தேசிய அரசியலின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி விட்டனர்.

நான் விக்கிரமபாகு அவர்களை ஒப்பிட்டது பெர்னாண்டோவுடன் மட்டுமே. கூட்டமைப்பின் முடிவானது, அதாவது பொன்சேகாவை ஆதரித்தமை மூலம் மகிந்தாவை தோற்கடிக்க விரும்பினர். விக்கிரமபாகு அவர்களை ஆதரிப்பது மூலம் அரசியல் மாற்றத்தை கொண்டுவரும் காலம் கனியவில்லை, காரணம் சிங்களவர்களே அங்கே பெரும்பான்மை மக்கள்.

Link to comment
Share on other sites

Fr_Jude_Lal_ca_03.jpg

Fr_Jude_Lal_ca_06.jpg

Link to comment
Share on other sites

Sinhala academic blames US-UK axis for genocide in Tamil homeland

Dr. Fernando reminded the audience that the conflict in the island is a “modern human made product of colonialism and imperialism and therefore if it is human made it can also be unmade” and that “the struggle for justice amongst the Tamils will determine the outcome of democracy amongst the Sinhalese.

Dr. Fernando declared that it is the helplessness of the Tamil nation in the North-East today that gives the Diaspora moral and political power. Instead of trying to align itself with international powers, the Diaspora must stand on its own two feet and say that the aspirations of the Tamils uncompromisingly remain the same based on the principles of nation, homeland, and self-determination.

http://tamilnet.com/art.html?catid=13&artid=35097

Link to comment
Share on other sites

Since the Sri Lanka's State was founded, the Tamil people's fight for their rights has been incessant. Jude Lal Fernando, althought he's sinhalese (the biggest etnia in the island and the only one who has been always in power), he defends the Tamil people's rights. He has been forced to leave Sri Lanka and move to Ireland because of his political activism. Nowadays he's a professor in the University of Dublin.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.