Jump to content

நீங்க கன்னத்தப் பொத்தி.. பளார் விட்டிருக்கீங்களா..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

punch_in_face.jpg

இது வன்முறையை தூண்டும் பதிவல்ல. மாறாக.. நீங்கள் கோபத்தை அடக்க முடியாது.. உங்கள் பிள்ளைகளுக்கோ.. கணவனுக்கோ.. மனைவிக்கோ.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. இல்ல காதல் சொன்னப் போன இடத்தில.. இல்ல ஆசிரியரிடம் அல்லது வேறு யாரிடமும்... பளார் என்று அறைஞ்சிருக்கீங்களா..??! அல்லது வாங்கி இருக்கீங்களா..??!

அப்படி அறைஞ்சிட்டு.. நீங்க என்னத்தை உணர்ந்தீர்கள்... செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருக்கீங்களா.. இல்ல அதை மீளச் செய்யனுமுன்னு நினைச்சீங்களா..??!

அல்லது வாங்கிய பளாருக்கு.. என்னத்தை உணர்ந்தீர்கள்.. திருப்பிக் கொடுக்கனுன்னு உணர்ந்தீர்களா.. அல்லது இயலாமையில்.. தவித்தீர்களா.. அல்லது தவறை உணர்ந்து திருத்தினீர்களா..??!

நீங்கள் கன்னத்தைப் பொத்தி பளார் விட்ட பின் எத்தனை தடவைகள்.. வருந்தி.. அதைச் செய்ய மாட்டன் என்று நினைச்சிட்டு.. மீளவும் செய்திருக்கீங்க..??!

ஏன் உங்களால அப்படி பளார் விடுவதை கட்டுப்படுத்த முடியல்ல..???!

நீங்கள் பளார் விட்டதன் மூலம் நீங்கள் எண்ணியத்தை நிறைவேற்றினீங்களா..??! அந்த நிறைவேற்றத்தில் உங்களுக்கு மனத் திருப்தி ஏற்பட்டதா..??!

நீங்கள் இதுநாள் வரை பளாரே விடல்ல.. அல்லது வாங்கல்ல என்றால்.. ஏன் என்று சொல்லுவீங்களா..???!

தமிழ் சினிமாவில அடிக்கடி பளார் விடுறாங்க. இப்ப எல்லாம் பொண்ணுங்களும் தாராளமா விடுறாங்க..! இது பற்றி என்ன நினைக்கிறீங்க..??! இப்படி சமூகத்திற்கு காட்டிறது.. தப்பா.. தப்பில்லையா..???!

இது தொடர்பா சொந்த அனுபவங்களைப்.. கண்ட கேட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் நல்லது.

(நான் யாருக்கும் இன்னும் அப்படி பளார் விடல்ல. ஆனால் சும்மா பகிடிக்கு ஒரு பளார் விட்டுப் பார்க்க ஆசை. வசதியான ஆள் தான் இன்னும் வாய்க்கல்ல..! ) :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா படுத்திருக்கிற நாய், எதிர்பாராமல் கடிக்கிற மாதிரித் தான் இந்தப் பளார்!

இது இயலாமையின் வெளிப்பாடு!

'பளார்களினால்' ஏதும் பயன்கள் விளைந்தது கிடையாது! மாறாக 'பழி வாங்கல்' தான் தொடரும்!

இது தானே தமிழ்ப் படங்களின், மூலக் கரு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை... சன நடமாட்டம் உள்ள கடை ஒன்றுக்கு பொருட்கள் வாங்க,

மடிக்கும் படி ஊடாக மேல் மாடிக்கு ஏறிக் கொண்டிருந்த போது...smiley_rolltreppe.gif

பின்னுக்கு நின்ற பாடசாலை மாணவர் கூட்டம் ஒன்று, எனது பின் பக்கத்தில் நடு விரலால் குத்தி விட்டு, சிரித்த மாதிரி இருந்தது.

முன்னுக்கு நின்ற பையனுக்கு, விட்டேன் ஒரு பளார். அவனுக்கு என்ன.. நடந்தது என்று தெரியவில்லை.

பின்பு, அந்த மாணவர் கூட்டத்தின் பின் என்னுடன் வேலை செய்யும்... தெரிந்தவர் குத்தி விட்டு மறைந்து நின்றிருக்கிறார்.

பிறகு அந்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு, கவலையை தெரிவிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் "பளார்" என்று வாங்கிய அனுபவம் இருக்கின்றது. விஞ்ஞானம் படிப்பித்த ஆசிரியர் வட்டவாரியை ஒழுங்காகப் பிடிக்கவில்லை என்பதற்கு ஒருமுறை அறைந்தார். பஸ்ஸுக்கு யாரோ கல்லெறிந்ததற்கு கொண்டக்டர் ஓடாமல் நின்ற என்னைப் பிடித்துப் பஸ்ஸுக்குள் ஏற்றி இன்னொருமுறை அறைந்தார்.

தமிழன் என்றபடியால் கையோங்கும் பழக்கம் இருக்கும் என்பதற்கு நான் விதிவிலக்கல்ல. எனினும் கன்னத்தில் அறைந்தது எதுவும் (சுய)நினைவில் இல்லை!

Link to comment
Share on other sites

நினைவில் உள்ளது ஒரே ஒரு தடவை மட்டும். ஏழாம் வகுப்பில் (கலவன் பாடசாலை) சக மாணவியுடன் முசுப்பாத்தியாக தொடர்புபடுத்தி கதைத்த எனது நண்பனுக்கு ஓர் அதிரடியான பளார் கொடுத்தேன், அவன் அழத்தொடங்கிவிட்டான். 

அதிகப்படியாக வீட்டில் எனது அண்ணரிடம் அநீதியான முறையில் பல வாங்கியுள்ளேன் (சேர்ந்து விளையாடும்போது அவர் தோற்க போகின்றார் என்றால் அலாப்பும்போது எனக்கு பளார் இடுவார்).

வெளியாரிடம் பளார்வாங்கி நினைவில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாற்ற அனுபவமும் சுவாரசியமா இருக்குது. பெரும்பாலும் பளார் வாங்கின ஆக்களாகவே யாழ் கள உறவுகள் உள்ளார்கள். ஆனால் இந்த பளார்.. அவசியம் தானா.. என்பது பற்றி ஒருத்தரும் வடிவாச் சொல்லேல்லையே..??! ஏன்...??!

நான் எப்பவாவது இருந்திட்டு.. கம்பால.. பிரம்பால. அடி வாங்கி இருக்கிறன்.. கையால குட்டும் வாங்கி இருக்கிறன்.. ஆனால் பளார் வாங்கல்ல...! :):icon_idea:

Link to comment
Share on other sites

ஒருவருக்கும் கொடுக்கவில்லை கன்னத்தில் ,வாங்கியிருக்கின்றேன் ஒருமுறை அதை என்னால் இன்னமும் மறக்கமுடியவில்லை .

O/L படிக்கும் போது வகுப்பிற்கு வந்த சின்னத்துரை வாத்தி படிப்பிக்காமல் கதைத்துக்கொண்டு இருந்து விட்டு, பாடம் முடிந்து மணி அடிக்கும் நேரம் அடுத்த பாட வாத்தியை கொறிடோரில் கண்டுவிட்டு அப்பத்தான் ஒருகலத்தின் படத்தை பிளாக்போட்டில் வரைந்துவிட்டு மணி அடித்ததும் கேட்காததுபோல் பத்து நிமிடங்கள் பிரித்தேறிந்தார்,பின் வெளியில் போகும் போது மற்ற வாத்திக்கு சொறி சொல்லிவிட்டு போனார் .

நானும் இருக்கேலாமல் வாத்தி மணி அடித்தபின் தான் படிப்பிக்க தொடங்குது என்று அருகில் இருந்த பெடியனுக்கு மெதுவாகத்தான் சொன்னேன் ,

அடுத்த ஜன்னலால் வெளியில் போகும் போது வகுப்பை எட்டி பார்த்த வாத்தி என்ன நினைத்தோ தெரியாது வகுப்பிற்குள் வந்து அடுத்த பாட வாத்தியிடம் எக்சியூஸ் சொல்லி விட்டு விட்டுது ஒரு அறை ஒன்று எனது கன்னத்தில்.

மற்ற வாத்தி உட்பட எவருக்கும் தெரியாது ஏன் சின்னதுரை வாத்தி எனக்கு அடித்ததேன்று,எனக்கும் தான் .

Link to comment
Share on other sites

நான் வாங்கிய அறையை மறக்க முடியாது. யாழ் இந்து பிரேயர் ஹோலில், ஒரு நாள், பிரேயர் எல்லாம் முடிந்த பின், வகுப்புக்கு போவதற்காக வரிசையில் நின்ற போது, நானும் என் நண்பனும் கதைக்க அங்கு வந்த சந்தியாப்பிள்ளை விட்டார் இருவருக்கும் ஒவ்வொரு அறை. நாங்கள் அப்போது ஆறாம் வகுப்பு. சிறியவர்கள் என்ற ஈவு இரக்கம் கூட இல்லை. :unsure:

அறைவது என்பது தேவையற்ற ஒன்று!

தவமணிதாசனும் மாணவர்களுக்கு அறைவதில் சூரன். ஆனால் அவருக்கு நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் இருட்டடி கொடுத்ததாகவும் கேள்வி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த பளார்.. அவசியம் தானா.. என்பது பற்றி ஒருத்தரும் வடிவாச் சொல்லேல்லையே..??! ஏன்...??!

"பளார்" என்று கன்னத்தில் அறையும் வன்முறை தவிர்க்கப்படவேண்டும். தங்களைவிட மெலியாருக்கு அறைபவர்கள் உண்மையிலேயே ஏதோ நோயினால் பீடிக்கப்பட்டவர்கள்!

Link to comment
Share on other sites

பளார் .. இந்த திரி சில எனது ஞாபகங்களையும் மீட்டுகின்றன.

நான் இரண்டு பேருக்கு பளார் விட்டு இருக்கிறேன். துரதிஸ்டவசமாக இரண்டுமே பெண்கள். ஒருவர் என் காதலியும் கூட. நான் அடித்தபோது எனக்குள் இருந்த காரணமும் கோபமும், அவளை அடித்த அந்த கணமே மறந்து போச்சு.

அவள் கண்களில் அழுகையும், கையினால் அவள் கன்னத்தை தடவியபடியும் இருந்தாள். அவள் சொன்ன வார்த்தைகளுக்கு அவள் அந்த பளாரை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் தான் சொன்னது தவறுதான் என்று இன்னொரு நாள் சொன்னாள். இருந்தாலும் அவளை அன்று அடித்தமைக்காக இன்றும் என் மனசில் ஒரு வருத்தம் இருந்து கொண்டுதான் இருக்கு.

அடுத்து என் நண்பிக்கு விட்ட பளார். அந்த பலாருக்கு ஒரு கணம் முன்பு வரை எனக்கு அவளை அட்டிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு கணமும் இருந்ததில்லை. அவளின் ஒரு தவாறான வார்த்தை பிரயோகம், ஒரு கணத்தில் என்னை கையோங்க வைத்துவிட்டது. அது தான் எனது கடைசி பளாராகவும் இருந்தது. அது அந்தி மாலை நேரம், அஒரு அணைக்கட்டின் விளிம்பில் அவளை அடித்தேன்.

அடுத்த நாள் தான் என் கூட பேசினாள். கன்னத்தில் விரல்கள் பதிந்த அடையாளம் காட்டினாள். வீடுக்கு பொய் சொன்னதாக சொன்னாள். முன்பை விட எங்கள் நட்பு நாராக இருந்தது.

அடிக்கும் போது இருந்த நியாயம் இப்போது இல்லை. இப்போதும் அவற்றை நினைத்து கவலைப்படுவது தான் அதிகம். இருந்தாலும் நாங்கள் எங்களுக்குள் அடிக்கடி ஞாபகபடுத்தும் சொல்லாக, இடமாக, சம்பவமாக அந்த பளார்கள் அமைந்துவிட்டது என்னமோ உண்மைதான். என் நண்பி கூட சொல்லுவாள் அதை மறக்க முடியுமா என்று. அனால் அவற்றை நினைக்கும் போது இனிமையாக இருபதாகவும் சொல்லுவாள்.

இன்றும் கூட என்னவளிடம் , அன்றைக்கு வாங்கின அடி பத்தாதா என்று கேட்டு விட்டு தான் இந்த பதிவை பதிகிறேன் என்றால் நீங்கள் நம்பவா போகிறீகள்.? :lol: :lol:

அனேகமாக இன்று எனக்கு இரவுச்சாப்பாடு கிடைக்காது என்று தான் நினைக்கிறேன் :lol::icon_idea:

அறைவது உண்மையில் எங்களின் பலவீனத்தின் வெளிப்பாடே .

Link to comment
Share on other sites

வீட்டில், பள்ளியில் கையால் பிரம்பால் அடிவாங்கியதுண்டு, சிறுவயதில் அண்ணன், தம்பி, தங்கைக்குக் கையோங்கியதும் உண்டு. ஆனால் யாரிடமும் கன்னத்தைப் பொத்தி பளார் இதுவரை வாங்கியதும் இல்லை கொடுத்ததும் இல்லை.

ஒருவர் அறிந்தே தனது செயல்களாலும், வார்த்தைகளாலும் மற்றவரை கோபத்துக்குள் தள்ளுவது (பல தரம் எச்சரிக்கை கொடுத்தபின்னும்) தொடர்ந்தால் அவர் கன்னத்தைப் பொத்தி இல்லை காதைப் பொத்தி வாங்க அருகதையுடையவர் என்பது எனது கருத்து. ^_^

Link to comment
Share on other sites

இது நான் கண்ட ஓர் நகைச்சுவை அனுபவம்.இது இந்த தலைப்பிற்கு எவ்வளவு பொருந்தம் என்று எனக்கு தெரியாது. அனாலும் கன்னத்தில் பளார் என்று வாசித்தது உடனே இந்த நினைப்பு என் கண் முன்னே வந்து என்னை அறியாமலேயே சிரித்து விட்டேன் ...................

ஆம் நான் விடுதிச்சாலையில் தங்கியிருந்து படிக்கும்போது இடைக்கிடை ரகசியமாக அரியாலை என்னும் இடத்திற்கு என் நண்பர்களுடன் செல்வதுண்டு.[கள்ளு கொப்பிரேசன் பக்கம் ]

ஒருநாள் எமக்குப்போறுப்பான பாதிரியார் விடுமுறை சென்றுவிட்டார்.வழமை போல் ஆரம்பித்தது எம் பயணம் அரியாலை சொர்க்கபுரம் நோக்கி...அங்கே வழமைக்கும் அதிகமான கூட்டம். நாமும் ஒரு கரையில் ஒதுங்கினோம்.எமக்கு பக்கத்தில் ஒரு கூட்டம் மிக மகிழ்ச்சியாக ரசித்து குடித்துக்கொண்டு மிகவும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.திடீர் என அந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் பக்கத்தில் உள்ள தனது சகாவிற்கு குடுத்தார் கன்னத்தில் பளார் என்று....தனது முழு பலத்தையும் சேர்த்து கொடுத்த அந்த பளார் உண்மையில் கடினமானதாகவும்,கோபத்தை உடன் வரவைக்க கூடியதுமானது.நான் நினைத்தேன் அங்கே பெரிய சண்டை வரப்போகிறது என்று நானும் எனது நண்பர்களும் எஸ்கேப் ஆவதற்கு தயாரானோம்........அடி வாங்கியவர் தனது கன்னத்தை ஒரு தடவை தடவி சீ......... எனக்கு நோகேலை என்றார். அதைப்பார்த்து நானும் என் நண்பர்களும் சிரித்த சிரிப்பையும்,அந்த ஆனந்தத்தையும் இந்த தலைப்பு எனக்கு நினைவூட்டியதால் இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

இது நான் கண்ட ஓர் நகைச்சுவை அனுபவம்.இது இந்த தலைப்பிற்கு எவ்வளவு பொருந்தம் என்று எனக்கு தெரியாது. அனாலும் கன்னத்தில் பளார் என்று வாசித்தது உடனே இந்த நினைப்பு என் கண் முன்னே வந்து என்னை அறியாமலேயே சிரித்து விட்டேன் ...................

ஆம் நான் விடுதிச்சாலையில் தங்கியிருந்து படிக்கும்போது இடைக்கிடை ரகசியமாக அரியாலை என்னும் இடத்திற்கு என் நண்பர்களுடன் செல்வதுண்டு.[கள்ளு கொப்பிரேசன் பக்கம் ]

ஒருநாள் எமக்குப்போறுப்பான பாதிரியார் விடுமுறை சென்றுவிட்டார்.வழமை போல் ஆரம்பித்தது எம் பயணம் அரியாலை சொர்க்கபுரம் நோக்கி...அங்கே வழமைக்கும் அதிகமான கூட்டம். நாமும் ஒரு கரையில் ஒதுங்கினோம்.எமக்கு பக்கத்தில் ஒரு கூட்டம் மிக மகிழ்ச்சியாக ரசித்து குடித்துக்கொண்டு மிகவும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.திடீர் என அந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் பக்கத்தில் உள்ள தனது சகாவிற்கு குடுத்தார் கன்னத்தில் பளார் என்று....தனது முழு பலத்தையும் சேர்த்து கொடுத்த அந்த பளார் உண்மையில் கடினமானதாகவும்,கோபத்தை உடன் வரவைக்க கூடியதுமானது.நான் நினைத்தேன் அங்கே பெரிய சண்டை வரப்போகிறது என்று நானும் எனது நண்பர்களும் எஸ்கேப் ஆவதற்கு தயாரானோம்........அடி வாங்கியவர் தனது கன்னத்தை ஒரு தடவை தடவி சீ......... எனக்கு நோகேலை என்றார். அதைப்பார்த்து நானும் என் நண்பர்களும் சிரித்த சிரிப்பையும்,அந்த ஆனந்தத்தையும் இந்த தலைப்பு எனக்கு நினைவூட்டியதால் இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும்.. உங்கள் அனுபவங்களை தெளிவாச் சொல்லி இருக்கீங்க.... அதிகம் அனுபவங்கள் பள்ளி ஆசிரியர்களிடம் பளார் வாங்கினது பற்றித்தான் இருக்குது. இந்த காணொளிகளில் தோன்றுவது போல.... தேவையில்லாமல் வாயைத் திறந்து.. பளார் வாங்கியது உண்டா..??! இப்படி பளார் வாங்க நேரிட்டால்.. உங்கள் மனநிலை எப்படி இருக்கும்...???! :):icon_idea:

http://youtu.be/13yvCHyUEn4

http://youtu.be/hWu6qj8AoqE

Link to comment
Share on other sites

வெள்ளைக் கொழும்பான் மாவின் கீழ் செங்கற்களை கவனமாக அடுக்கி வை மகன் என்று அப்பா சொன்னதும், விளையாடப்போகும் அவசரத்தில் வேண்டுமென்றே அவ்வளவையும் போட்டுடைத்தற்கு அப்பா தந்த முதலும் கடைசியுமான 'பளார்'

'நன்று, எழுத்தைத் தெளிவாக எழுதவும்' என்று கணித ஆசிரியர் போட்ட குறிப்பை அவரிடம் காட்டி, 'சேர் நீங்கள் எழுதியது விளங்கவில்லை' என்று கிண்டலாக அவரிடம் கேட்ட பொழுது விழுந்த இரண்டாவது 'பளார்'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பளார் தேவையற்ற ஒன்று, கோப உணர்ச்சியின் ஒரு வெளிப்பாடே.

வேண்டியுள்ளேன் குண்டு சங்கீத ஆசிரியையிடம்.

நாங்கள் நண்பர்களா நின்று கதைத்துக்கொண்டிருக்கும் போது, ஒருவன் மற்றவனுக்கு சொன்னான், "மச்சான் வேண்டாம் அதைப்பற்றி கதைக்காதே என்று அடிவாங்குவாய்" என்றான்,

மற்றவன் கேட்கவில்லை அடிடா பார்ப்பம் என்றான், இவன் பளார் என்று போட, அவன் "ஆ" என்று திறந்த வாய்மூடாமல், "அட அடிச்சு போட்டானடா" என்றான்.

எல்லோருக்கும் சிரிப்பு அடக்க முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை அனுபவங்கள்.. எத்தனை சூழ்நிலைகள்.. "பளார்" களை வைச்சே ஒரு தொடர் கதை எழுதலாம் போல இருக்கே. இன்னும் சொல்லுங்க.. அறிவம்.. அறிஞ்சதை வைச்சு.. . நீங்க சொல்லுற அனுபவ அறிவுரைகளை வைச்சு.. மற்றவங்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கவும்.... திருந்தத் தூண்டவும் செய்யுமில்ல..! :):icon_idea:

Link to comment
Share on other sites

எத்தனை அனுபவங்கள்.. எத்தனை சூழ்நிலைகள்.. "பளார்" களை வைச்சே ஒரு தொடர் கதை எழுதலாம் போல இருக்கே. இன்னும் சொல்லுங்க.. அறிவம்.. அறிஞ்சதை வைச்சு.. . நீங்க சொல்லுற அனுபவ அறிவுரைகளை வைச்சு.. மற்றவங்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கவும்.... திருந்தத் தூண்டவும் செய்யுமில்ல..! :):icon_idea:

சந்தியாப்பிள்ளை போன்ற மனிதர்கள் திருந்துவதில்லை.

எங்களுக்குப் பின்னும், நிறைய பேர் அடி வாங்கியதுண்டு !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தாராளமாக வாங்கியிருகிறேன்.கொடுக்கதான் ஒருத்தரும் மாட்டீனம் இல்லை :lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல முறை வாங்கியிருக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது.

 நாலாம் வகுப்பில் எனது தத்துவ நண்பன் இதையெல்லாம் கணக்கில் வைத்திருக்க கூடாது என்று கூறினான்.  

எனது துணைவியார் பிள்ளைதாச்சியாக இருக்கும்போது குண்டு ஜோக் சொல்லி ஒருக்கால் வாங்கி இருக்கிறேன். 

இப்போது யார் குண்டு ஜோக் சொன்னாலும் கண்ணில் பயம். 

பெண்ணின் கை பூ போன்றது,  இட்லி போன்றது என்று பொய் எழுதும் கவிகளை பிடிக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைபிள் - ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு?

இரண்டு கன்னத்திலும் அறைந்தவனுக்கு எதை காட்டுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் முதல் கன்னத்தை பொத்தி வாங்கின அனுபவம். பாடசாலையில வெள்ளிக்கிழமை பிரேயர் நடக்கும்போது கீழ செருப்பை போட்டுட்டு இருந்தனான் அதை ஒரு முரட்டு வாத்தி கண்டிட்டுது வந்து விட்டிச்சே ஒண்டு கன்னத்தை பொத்தி, ஒருகிழமைக்கு காதில சிவபுராணம் கேட்டுக்கொண்டே இருந்திச்சுது :( . அதுக்குபிறகு ஒருக்கா ஆமி கன்னத்தை பொத்தி அடிச்சவன். வாங்கினது நிறைய ஆனால் குடுத்ததுதான் இல்லை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சந்தியாப்பிள்ளை போன்ற மனிதர்கள் திருந்துவதில்லை.

எங்களுக்குப் பின்னும், நிறைய பேர் அடி வாங்கியதுண்டு !

405090_10150805895740376_620340375_11684052_1208040876_n.jpg

இவர் தான்(நடுவில் ) ஈஸ் கன்னத்தில் அறைந்த சந்தியாப்பிள்ளை ஆசிரியர்.இடதில் ராதாவின் (ஹரிசந்திரா )தம்பி,வலது பக்கம் சாரங்கன் எனது நண்பர் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.