Jump to content

முருகா தி ஸ் டு மச்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் கோயில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேர்,தீர்த்தம், பூங்காவனம் என இனிதே நடந்தேறி முடிவடைந்தது .ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடை பெறும் இத்திருவிழா இம்முறையும் மிகவும்நன்றாகவே நடை பெற்றது.

.நானும் இடைகிடையே சென்று முருகனின் அருள் என்பக்கமும் கிடைக்க ஆவனசெய்தேன்.பேன்ஸ் கார் வாங்குவதற்கு என்பெருமான் முருகனின் கடைகண் பார்வை என் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவ்வருட திருவிழாவில் கூடிய கவனம் செலுத்தினேன்.

திருவிழா தொடங்க முதல், தாயையும் மகளையும் தற்செயலாக சந்திக்க வேண்டி ஏற்பட்டது.மகள் என்னொடு சினேக பூர்வமாக பழகுவாள்.எங்கே கண்டாலும் அங்கிள் எப்படியிருக்கிறீங்கள் என்று சுகம் விசாரித்துவிட்டுத்தான் செல்வாள் இங்கு பிறந்து வாழ்ந்து வருபவள்.தாயார் ஒரு சின்ன சிரிப்புமட்டும்தான். கதைக்க மாட்டார்,என்னைவிட ஒருஇரு வயது குறைவாக இருக்கும் எனநினைக்கிறேன்.

"ஹய் அங்கிள் எப்படி இருக்கிறீங்கள்"

"நல்லாய்யிருக்கிறேன் என்ன இந்த பக்கம்"

"கோயில் கொடியேறுது தானே அதற்கு பலகாரம் சுட வேணும் என்று அம்மா கூட்டிக்கொண்டு வந்தவ ,பூங்காவனம் சிட்னி யூத்ஸ்தானே செய்யிறவையள் ,பூங்காவனத்திற்கு கட்டாயம் வாங்கோ"

"ஒம் ஒமொம் கட்டாயம் வாரன்" என்று போட்டு நான் என்ட வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டேன்.

பூங்காவனத்திருவிழா சிட்னி இளைஞர்களால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றது.சிட்னி முருகனுக்கு கொடியேறினால் சில இளசுகளுக்கும் ,கிழசுகளுக்கும் கொடியேறினமாதிரி உற்சாகத்துடன் நிற்பார்கள்.இந்த இளசுகளும் கிழசுகளுடன் சேர்ந்து பலகாரம் சுட்டு பொலித்தீன் பைகளிலிட்டு அதை அழகுப் பைகளில் போட்டு பத்திரப்படுத்தி வைப்பார்கள்.சாதரண திருமண வைபவங்களில் கொடுப்பதற்கு எப்படி அழகு படுத்துவார்களோ அது போல அழகு படுத்தப்பட்டிருக்கும்...திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு அதை கொடுப்பார்கள்.

சிட்னியில் உள்ள தமிழ் வியாபார ஸ்தாபனங்களுக்கும் முருகனின் கொடியேற்றத்துடன் கொஞ்சம் வருமானமதிகமாகும்.அத்துடன் சிட்னி வாழ் முருகன் அடியார்கள் ஆண்கள் ,பெண்கள் எல்லோரும் பக்தி பரவசத்தில் இருப்பார்கள்.அநேக வீடுகளில் மரக்கறிதான் அந்த 10,12 நாட்களும்,அதிகமாக freshகாய்கறி தான் சமைப்பார்கள் ,frozen மரக்கறிகள் வாங்க மாட்டார்கள்.

அரச ஸ்தாபனங்களில் பணி புரிபவர்கள் 10 நாட்கள் லீவு போடுவார்கள் ,லீவுகள் எடுக்க முடியாதவர்கள் கொடியேற்றம்,தேர்,தீர்த்தம் போன்ற விசேட தினத்தின் பொழுது லீவு எடுப்பார்கள், லீவு எடுப்பது வேலைத்தளங்களில் கடினமாக இருந்தால் இந்த நாட்களில் முருக அடிகாளர் சிக்(sick) லீவில் நின்றாவது முருகனின் அருளை பெறுவார்கள்.பூங்காவனத்திருவிழா இரவில் நடப்பதால் லீவு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை...

கொடியேற்றுவதற்கு வழமையாக குருக்களை தாயகத்திலிருந்து அழைப்பார்கள்.இந்தமுறை எங்களுடைய லோக்கல் ஜயர் கொடியெற்றம் செய்தார்..ஏன் இந்த முறை இப்படி என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது வந்தார் எங்கன்ட சகலகலா வல்ல கந்தர்.

"என்ன அண்ண இந்த முறை ஊரிலிருந்து குருக்கள் வரவில்லையோ"

அக்கம பக்கம் திரும்பி பார்த்து போட்டு சொன்னார் "உங்க பெரிய புடுங்கு பாடு நடக்குது ,அவுஸ் அரசு இனிமேல் குருக்கள் மாருக்கு விசா கொடுக்கமாட்டங்கள் என்று சொல்லி போட்டாங்கள்,கோவில் திருவிழாவுக்கு என வந்தவையள் ஒருத்தரும் திரும்பி போரதில்லையாம்,அதுதான் லோக்கல் குருக்கள் கொடியேற்றினவர்.இந்த முறையும் ஒருத்தர் வந்தார் அவரை கேட்டவையளாம் சிட்னியில் இருக்கும் குருக்கள்மாருக்கு பயிற்சி அளிக்க ,ஆனால் வந்த குருக்கள் எலாது என்று போட்டு திரும்பி போயிட்டாராம்"

பெருமூச்சவிட்டுப்போட்டு"உன்னிடம் ஒன்றையும் சொல்லகூடாது நீ போய் இணையங்களில் கிறுக்கி போடுவா" என்றபடியே மெல்ல நான் இருந்த இடத்தைவிட்டு அகன்றார்.

ஓவ்வோரு திருவிழாவும் ஒரு குறிப்பிட்ட சப்பெர்ப்புக்கு (suburb)வழங்கப்பட்டிருக்கும் .அந்த சப்பெரப்பை விட நாங்கள் சிறப்பாக செய்ய வேணும் என்ற எண்ணம் ,போட்டி எல்லா சப்பெர்ப்காரருக்கும் இருந்தது. அதை சிலர் செயலில் செய்தும் காட்டியிருந்தார்கள்

.ஒருநாள் திருவிழாவில் பல பெண்கள் கிட்டதட்ட ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தார்கள்.பிறகுதான் அறிந்தேன் அன்றைய உபயகாரர் சொல்லி வைத்து நீல நிறத்தில் சேலை அனிந்து வந்தவர்களாம் தங்களுடைய திருவிழா ஸ்பேசலிட்டியை காட்டுவதற்கு.

மதியம் சாப்பிடுவதற்கு சென்றிருந்தேன் வேஜிட்டேரியன் சிக்கன்,பன்னீர்,கயூ போன்ற விலையுயர்ந்த பொருட்களில் சமையல் செய்து அசத்தியிருந்தார்கள் ஊரிலும் இந்த மனப்பாங்கு இருந்தது. அந்த குழுவினர் எத்தனை கூட்ட மேளம் பிடிக்கிறாங்கள் அதைவிட நாங்கள் அதிகம் பிடிக்கவேண்டும்,அவர்கள் எத்தனை சப்பறம் கட்டுறாங்கள் அதைவிட அதிகம் கட்ட வேண்டும்.இப்படி பல போட்டி மனப்பான்மை திருவிழா உபயகாரிடையே இருந்தது. புலத்தில் இந்த போட்டி மனப்பான்மையை கண்டவுடன் ,சந்தனம் மின்சினால் தடவுங்கோடா...... என்ற பழ மொழிதான் எனக்கு ஞாபகத்தில் வந்தது.

தேர்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது சில பக்தர்கள்.தேங்காய் உடைத்தார்,வேறு சிலர் காவடி எடுத்தார்கள் ,இன்னும் சில பக்தர்கள் அடிகளித்தார்கள்,பிரதட்டடையும் செய்தார்கள் .நீயா நானா என்று போட்டி போட்டு ஆண்கள் ஒரு பக்கமாகவும் பெண்கள் ஒரு பக்கமாகவும் தேர் வடத்தை பிடித்து அரோகரா சொல்லி இழுத்துகொண்டிருந்தார்கள்.ஊரில் முருகனுக்கு தேர் திருவிழாவில் என்ன எல்லாம் செய்து முருக அடியார்கள் முருகனை மகிழ்வித்தார்களோ அதைவிட அதிகமாகவே சிட்னியில் முருக அடியார்கள் செய்து முருகனை மகிழ்வித்தார்கள்.

திடிர் என அறிவித்தார்கள் உங்கள் உடமைகளை கவனமாக வைத்திருங்கள் திருடர்கள் ஜாக்கிரதை........

விலையுயர்ந்த காரில், விலையுயர்பட்டுச்சேலை அணிந்து, லொக்கரில் இருந்த நகைகளை போட்டு கொண்டு உன்னை தரிசிக்க வந்தால் நீ திருடர்களுக்கு அருள் கொடுகிண்றாயே.

சிட்னி முருகனுக்கு "திருடர்கள் ஜாக்கிரதை" என்ற அறிவிப்பு காதில் அதிக வருடங்களாக கேட்காத படியால் இந்த முறை திருட்டு பக்கதர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்டுத்தி போட்டார்...முருகா உன் விளையாட்டுக்கு ஒரு எல்லையே இல்லையா?என்னதான் இருந்தாலும் தி ஸ் டு மச்....this is too much lord murugaaaaaa........

வீதியில் கடலை விற்பவர்களும் ..திருடர்களும்தான் இல்லாத குறையாக இருந்தது.திருடர்கள் வந்துவிட்டார்கள் கடலைக்காரிதான் இல்லை அடுத்த வருடம் அதுவும் நடக்கலாம் .....

திருடர்கள் யார்? மக்கள் பலவித கருத்துக்களை வைக்கின்றனர்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா எழுதியுள்ளீர்கள், இங்கும் கிட்டத்தட்ட இப்படிதான், புத்தன்,நீங்க யாழில கொடி ஏத்திற மாதிரி இருக்கு, இனி திரி இறக்கும் வரை திருவிழாதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் பென்ஸ்கார் வாங்க, முருகப்பெருமான் அருள்பாலிக்க வேண்டும்.

அது என்ன வெஜிரேறியன் சிக்கன்?

உபயகாரர், எல்லோரையும்... நீல நிறத்தில் சீலை கட்டிக் கொண்டுவரச் சொன்னதை... வாசித்து, சிரிப்பை அடக்கமுடியவில்லை. :D

Link to comment
Share on other sites

.

நாதஸ்வரத்தை நிறுத்திப்போட்டு அவர் திடீர் அறிவுப்புக் கொடுத்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன நடந்தது என்று விசாரிக்கவேண்டும் என்று நினைச்சுப் போட்டு மறந்து போனன். ஏதும் கேள்விப்பட்டனியளே.. ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி சூரனை வதம் செய்த திரு முருகனை,  சிறி முருகன் என்று அழப்பைதே toooo much.

Link to comment
Share on other sites

அவுசிலை வந்து குடியேறவேணும்போல ஆசையாய் இருக்கு யாழ்கள் சுண்டலிடம் சொன்னால் ஒரு கடலைக்கடை போடுறவாரே முருகன் கோயிலடியில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி புத்தன்! வழக்கம் போல அசத்தல்! வாழ்த்துக்கள்!

முருகனுக்குத் திருமணம் செய்து வைக்கேக்கையும், மகேஸ்வரன் நாமதேய புத்திரன்/ தேவேந்திரன் நாமதேய பவுத்திரி! எல்லாம் தேவை தானா, என்று யோசித்தேன்!

வாரவருசம் திருக்கல்யாணம் முடியக் 'கேக்' குடுக்கிற பிளானும், பைப் லைனில இருக்காம்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து.. அதெப்படியோ தெரியல்ல.. எங்கட ஆக்கள்.. எங்க போனாலும்.. உதுகளில மாறவே மாட்டாங்க. பெரும்பாலான பிள்ளை குட்டிகளும் மாறாதுகள். இங்கையும் அப்படித்தான். சமர் வந்திட்டில்ல.. எனி ஒவ்வொரு வார இறுதியிலும்.. திருவிழாவிற்கும் குறைவில்லை. அதோட... கறுப்பு.. ஈஸ்ட் யூரோப்பியன்.. மற்றும் நம்ம உள்ளூர் கள்வர்களுக்கும் பஞ்சமில்ல. எல்லாம் அந்த சாமி அநுக்கிரம் தான். அவங்களுக்கு நல்ல தங்கப்பவுன் திசை அடிக்குது..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு புத்தன்........ சிட்னிமுருகனுக்கு ஏன் கோட்டுசூட்டு போட்டு அழகு பாக்கக் கூடாது? லைக் திஸ்

Link to comment
Share on other sites

அது என்ன வெஜிரேறியன் சிக்கன்?

அது வேற ஒண்டும் இல்ல. வெஜிரேறியன் மட்டும் சாப்பிட்டு வளர்ந்த கோழி! :D

சாமிக்கும் சிக்கன் ஆசை வந்திட்டு போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவு ஊரிலும் திருவிழாக்காலத்தில் மும்மரமாக நடப்பதுதானே.. இதைவிட முக்கியமானது போட்டிக்குத் திருவிழாச் செய்து suburb க்கு suburb குத்துவெட்டுப் படக்கூடிய சாத்தியங்கள் எதிர்காலத்தில் உள்ளது! அப்பத்தானே தமிழர்கள் நிரந்தரமாக தாயகத்தை புலம்பெயர்நாடுகளில் காணலாம்!

Link to comment
Share on other sites

சா,குருக்களின்ர அசைலம் அடிப்புக்கு ஆப்படிச்சுப்போட்டாங்கள் அவுசுக்காரன்.

கிறுகலுக்கு நன்றி புத்தன்.

பெண்கள் கிட்டதட்ட ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தார்கள்.பிறகுதான் அறிந்தேன் அன்றைய உபயகாரர் சொல்லி வைத்து நீல நிறத்தில் சேலை அனிந்து வந்தவர்களாம் தங்களுடைய திருவிழா ஸ்பேசலிட்டியை காட்டுவதற்கு.

தமிழேண்டா. :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

பெண்கள் கிட்டதட்ட ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தார்கள்.பிறகுதான் அறிந்தேன் அன்றைய உபயகாரர் சொல்லி வைத்து நீல நிறத்தில் சேலை அனிந்து வந்தவர்களாம் தங்களுடைய திருவிழா ஸ்பேசலிட்டியை காட்டுவதற்கு.

சே நான் உபயகாரனாயிருந்திருந்தால் வேறை மாதிரி யோசிச்சிருப்பன் செலவும் இருந்திருக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச எங்கட கோயிலில் போன வருடத் திருவிழா அன்று ஜயர்மார் எல்லாம் ஒரே மாதிரி வேட்டி,சால்வை கட்டியிருந்தார்கள்.நான் அவர்களை பார்த்து திகைச்சுப் போய் ஏனய்யா ஒரே மாதிரி வேட்டி கட்டியிருக்கிறீங்கள் எனக் கேட்டால் உபயகாரர் வேண்டிக் கொடுத்தவையாம் :D ...அது சரி புத்தன் ஏன் உங்கட முருகன் ஏப்ரலில் கொடியேறுறவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சுவையாக இருக்கிறது. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா எழுதியுள்ளீர்கள், இங்கும் கிட்டத்தட்ட இப்படிதான், புத்தன்,நீங்க யாழில கொடி ஏத்திற மாதிரி இருக்கு, இனி திரி இறக்கும் வரை திருவிழாதான்

நன்றிகள் உடையார் ..மீண்டும் கொடியேற்றியிருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் பென்ஸ்கார் வாங்க, முருகப்பெருமான் அருள்பாலிக்க வேண்டும்.

அது என்ன வெஜிரேறியன் சிக்கன்?

உபயகாரர், எல்லோரையும்... நீல நிறத்தில் சீலை கட்டிக் கொண்டுவரச் சொன்னதை... வாசித்து, சிரிப்பை அடக்கமுடியவில்லை. :D

நன்றிகள் சிறி...பென்ஸ் காரிலா   அன்னதானச்சோறு வாங்கி வீட்டுக்கு கொண்டுவர ஏலாது கார்  சீட் பழுதடைந்து விடும்

.

நாதஸ்வரத்தை நிறுத்திப்போட்டு அவர் திடீர் அறிவுப்புக் கொடுத்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன நடந்தது என்று விசாரிக்கவேண்டும் என்று நினைச்சுப் போட்டு மறந்து போனன். ஏதும் கேள்விப்பட்டனியளே.. ? :D

நன்றிகள் ஈசன்...பிறகு என்னநடந்தது? எங்கன்ட சனம் மீண்டும்....புது நகை செய்து போட்டினம்....

சிறி சூரனை வதம் செய்த திரு முருகனை,  சிறி முருகன் என்று அழப்பைதே toooo much.

நன்றிகள் குளவி ...சுப்பிரமணி என்று கூப்பிடவேண்டும்....

அவுசிலை வந்து குடியேறவேணும்போல ஆசையாய் இருக்கு   யாழ்கள் சுண்டலிடம் சொன்னால் ஒரு கடலைக்கடை போடுறவாரே  முருகன்  கோயிலடியில்

நன்றி சாத்திரி ...சுண்டல் குயின்ஸ்லாந்தில கடலை போடுகிறார் என்று கதை அடிபடுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து.. அதெப்படியோ தெரியல்ல.. எங்கட ஆக்கள்.. எங்க போனாலும்.. உதுகளில மாறவே மாட்டாங்க. பெரும்பாலான பிள்ளை குட்டிகளும் மாறாதுகள். இங்கையும் அப்படித்தான். சமர் வந்திட்டில்ல.. எனி ஒவ்வொரு வார இறுதியிலும்.. திருவிழாவிற்கும் குறைவில்லை. அதோட... கறுப்பு.. ஈஸ்ட் யூரோப்பியன்.. மற்றும் நம்ம உள்ளூர் கள்வர்களுக்கும் பஞ்சமில்ல. எல்லாம் அந்த சாமி அநுக்கிரம் தான். அவங்களுக்கு நல்ல தங்கப்பவுன் திசை அடிக்குது..! :lol::D

நன்றி நெடுக்ஸ் ..மாற்றங்கள் இந்த யென்மத்தில் நடக்காது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு புத்தன்........  சிட்னிமுருகனுக்கு ஏன் கோட்டுசூட்டு போட்டு அழகு பாக்கக் கூடாது? லைக் திஸ்

வெகுவிரைவில் சிட்னி யூத்ஸ் அதையும் செய்து காட்டுவார்கள்.. Wedding Reception அப்படி ஒரு திருவிழாவை அறிமுகப்படுத்தி

அது வேற ஒண்டும் இல்ல. வெஜிரேறியன் மட்டும் சாப்பிட்டு வளர்ந்த கோழி! :D

சாமிக்கும் சிக்கன் ஆசை வந்திட்டு போல...

தமிழ் கடைகளில் விற்பனைக்குண்டு...சோயாவில் செய்தது என்று நினைக்கிறேன் ஆசை யாரைத்தான் விட்டு வைச்சுது ...நன்றிகள் க.கந்தசாமி

களவு ஊரிலும் திருவிழாக்காலத்தில் மும்மரமாக நடப்பதுதானே.. இதைவிட முக்கியமானது போட்டிக்குத் திருவிழாச் செய்து suburb க்கு suburb குத்துவெட்டுப் படக்கூடிய சாத்தியங்கள் எதிர்காலத்தில் உள்ளது! அப்பத்தானே தமிழர்கள் நிரந்தரமாக தாயகத்தை புலம்பெயர்நாடுகளில் காணலாம்!

போர போக்கை பார்த்தால் வெகுவிரைவில் அதுவும் நடக்கும் ..நன்றிகள் கிருபன்

மறுபடியும் ஒரு அழகான கிறுக்கல். நன்றி புத்தன் உங்கள் பதிவிற்கு.

நன்றிகள் அபிராம்...

Kandathukal ellam boat eduthu Australia ku vara velikida ithu thaan nadakkum...., ivlavu naalum illatha kalavu.....ippa eppidi?

நன்றிகள் சுண்டல் ...இப்படி பல கருத்துகள் உலாவுகின்றது அதை வைத்தே ஒரு கிறுக்கள் கிறுக்கலாம்

சா,குருக்களின்ர அசைலம் அடிப்புக்கு ஆப்படிச்சுப்போட்டாங்கள் அவுசுக்காரன்.

கிறுகலுக்கு நன்றி புத்தன்.

தமிழேண்டா. :icon_mrgreen: :icon_mrgreen:

நன்றிகள் நுனாவிலன்....

.அது சரி புத்தன் ஏன் உங்கட முருகன் ஏப்ரலில் கொடியேறுறவர்?

அந்த முருகனுக்குத்தான் வெளிச்சம்.... பிறகு குளிர் தொடங்கிவிடும் ஐயர்மாருக்கு கஸ்டமாய்யிருக்கும்.....என்றபடியால் இருக்கும் என நினைக்கிறேன்...

கதை சுவையாக  இருக்கிறது. பாராட்டுக்கள்

நன்றிகள் நிலாமதி

Link to comment
Share on other sites

நன்றாக எழுதியுள்ளீர்கள். உண்மையிலேயே ஒரு திருவிழா பார்த்த மாதிரி இருக்கு.

தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் திருடர்களும் இருப்பார்கள். இவ்வளவு நாள் இல்லாதது தான் ஆச்சர்யம்..... :D

பெருமூச்சவிட்டுப்போட்டு"உன்னிடம் ஒன்றையும் சொல்லகூடாது நீ போய் இணையங்களில் கிறுக்கி போடுவா" என்றபடியே மெல்ல நான் இருந்த இடத்தைவிட்டு அகன்றார்.

:lol::D

Link to comment
Share on other sites

புத்தன் கதை நல்லாக இருக்கு. எல்லாவற்றையும் தொகுத்து வையுங்கோ

இங்கும் சந்திக்கு சந்தி எக்கச்சக்கமான கோயில்கள். திருவிழாக்கள் போட்டிகள் என்று மலிந்து கிடக்கு..ஒருக்கால் இங்கு வந்து பார்த்து விட்டு இன்னும் கிறுக்குங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதியுள்ளீர்கள். உண்மையிலேயே ஒரு திருவிழா பார்த்த மாதிரி இருக்கு.

தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் திருடர்களும் இருப்பார்கள். இவ்வளவு நாள் இல்லாதது தான் ஆச்சர்யம்..... :D

:lol::D

நன்றிகள் காதல் கருத்து பகிர்ந்தமைக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.