Jump to content

ஒவ்வொரு புல்லையும்....


Recommended Posts

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

பறவைகளோடு எல்லை கடப்பேன்

பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்

எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்

ஒவ்வொரு புல்லையும்...

நீளும் கைகளில் தோழமை தொடரும்

நீளாத கையிலும் நெஞ்சம் படரும்

எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்

உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்

விரியும் எனது கிளைகளில் அடையும்

போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்

பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!

ஒவ்வொரு புல்லையும்...

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்

என் செவிகளிலே எதிரொலி கேட்கும்

கூண்டில் மோதும் சிறகுகளோடு

எனது சிறகிலும் குருதியின் கோடு!

ஒவ்வொரு புல்லையும்...

சமயம் கடந்து மானுடம் கூடும்

சுவரில்லாத சமவெளி தோறும்

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!

ஒவ்வொரு புல்லையும்...

கவிஞர் இன்குலாப்

http://yazhinimunusa...og-post_27.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி, சொப்னா.

கவிஞர் இன்குலாப் ஆழமான கவி வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

பறவைகளோடு எல்லை கடப்பேன்

பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்

எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்

நீளும் கைகளில் தோழமை தொடரும்

நீளாத கையிலும் நெஞ்சம் படரும்

எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்

உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

கவிஞர்கள் வரிசையில் இன்குலாப் எனது றோல் மொடல்களில் ஒருவர் . இணைப்பிற்கு மிக்க நன்றிகள் சொப்னா .

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி, சொப்னா.

கவிஞர் இன்குலாப் ஆழமான கவி வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நன்றீங்க தமிழரசு அண்ணா உங்க கருத்துக்கு .

Link to comment
Share on other sites

பறவைகளோடு எல்லை கடப்பேன்

பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்

எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்

நீளும் கைகளில் தோழமை தொடரும்

நீளாத கையிலும் நெஞ்சம் படரும்

எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்

உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

கவிஞர்கள் வரிசையில் இன்குலாப் எனது றோல் மொடல்களில் ஒருவர் . இணைப்பிற்கு மிக்க நன்றிகள் சொப்னா .

ஐச்சோ............... ரெம்ப வெலாவாரிய அனுபவிச்சு கருத்து போட்டிருகீங்க கோமகன் அண்ணா . உங்க கதைங்கள் எல்லாம் உங்க வலைப்பூவில வாசிச்சுக்குவேன் .ரெம்பவே நன்னாயிருக்குமுங்க . ரெம்ப நன்றீங்க .

Link to comment
Share on other sites

எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்

உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்

விரியும் எனது கிளைகளில் அடையும்

எனக்கும் பிடித்த கவிதை சொப்னா. எழுதிய தோழர் இன்குலப்புக்கும் இணைத்த உங்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்

உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்

விரியும் எனது கிளைகளில் அடையும்

எனக்கும் பிடித்த கவிதை சொப்னா. எழுதிய தோழர் இன்குலப்புக்கும் இணைத்த உங்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்

மிக்க நன்றீங்க பொயட் அண்ணா .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.