Jump to content

யாழுக்கு வயது 14 !!


Recommended Posts

அன்பான தமிழ் பேசும் உறவுகளே,

பல தடைகள், சவால்கள் எல்லாம் கடந்து அனைத்து உறவுகளினதும் அன்புடனும் ஆதரவுடனும் மார்ச் 30 ஆம் நாளாகிய இன்று (தமிழீழ நேரப்படி) யாழ் 14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.

தமிமீழப் போராட்டம் தமிழ் ஈழ மண்ணில் இராணுவ வடிவப் போராட்டமாக வீறு கொண்டு நடைபெற்று வந்த காலகட்டத்தில் அந்த மக்களின் விடுதலை அவாவையும், சுதந்திரத் தாகத்தையும், அதற்காக அவர்கள் சுமந்த வலிகளையும், விடுதலை நெருப்பில் தம்மை கொடையாக்கிய மாவீரச் செல்வங்களின் தியாகங்களையும் தமிழ் பேசும் உலகெங்கும் இணையத்தினூடாக எடுத்தியம்ப மோகன் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட யாழ் இணையம், இன்று இராணுவ ரீதியான போராட்டம் உறைநிலைக்கு வந்து அதை முன்னின்று நடத்திய மக்களின் வாழ்வில் வலி மட்டுமே மிகுதியாகி, போராளிகளில் ஆயிரக் கணக்கானோர் முகாம்களிலும், திறந்த வெளிச் சிறைகளிலும் அடைபட்டுக் கொண்டிருக்கும் துன்பமிகு காலத்தில் தன் 14 ஆவது வயதுக்குள் யாழ் இணையம் காலடி எடுத்து வைக்கின்றது.

தமிழீழ மண்ணில் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் அனைத்தும் செயலிழக்கப்பட்டு, கலாச்சார விழுமியங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டு சூனியமாக்கப்பட்ட இன்றைய நாளில் மீண்டும் மீண்டு எழுவதைத் தவிர விதி எதையும் எமக்கு விட்டு வைக்கவில்லை என்ற யதார்த்தத்துக்கு இணங்க யாழ் களமும் எதிர்காலம் பற்றிய ஒரு சிறு நம்பிக்கையின் மேல் நம்பிக்கை வைத்து தன் மிகுதிப் பயணத்தை தொடர முயல்கின்றது.

எல்லா ஆயுதங்களும், எல்லாச் சக்திகளும் ஈற்றில் மக்களை வஞ்சித்து விட்ட சூழ்நிலையில், அந்த மக்களின் விடிவு இன்னும் மிகவும் தொலை தூரத்தில் இருக்கப் போகும் யதார்த்தபூர்வ உண்மையை உள்வாங்கி, அந்த தொலை தூர விடியலுக்காக யாழ் களமும் தன்னாலான சிறிய பங்களிப்பையாவது நல்கும்; நல்க முடியும் என்ற நம்பிக்கையின் பால் தன் 14 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றது

இந்தப் பயணம் தொடர்வதற்கு என்றுமே எம்முடன் துணைவரும் உங்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடருகின்றோம்

நன்றி

யாழ் களம்

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைகள் கைகூடும். யாழ் இணையம் புதுப் பொலிவுடன் நிமிர மனமார்ந்த வாழ்த்துக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

யாழின் இனிய நாதம் புது ஆண்டில் புதுப்பொலிவுடன் இசைக்கட்டும்.

இனிய பிறந்தாள் யாழுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் நீண்ட காலம் நிலைத்து நின்று சேவையாற்ற, எனது வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உறுதுணையாய் துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம்.

நிர்வாகத்திற்கும் சக உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

நாம் பலவீனப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்தான் கூடிய உழைப்பு, கூடிய நம்பிக்கையூட்டல் தேவையாகிறது.அதனால்

அறத்தில் நம்பிக்கை வைப்போம். உண்மை வெல்லும். எமது போராட்டம் நீதிநியாயத்திற்கான போராட்டம். அது வென்றே

ஆகவேண்டும். இது வெறும் ஆசை வார்த்தைகளல்ல. ஏற்கனவே நல்ல அறிகுறிகள் தெரியத்தொடங்கிவிட்டன. புலம்பெயர்

தமிழர்கள், தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டால் வெற்றி நிச்சயம். யாழ்களம் அதற்கு தொடர்ந்து உதவட்டும்.

வாழ்க, வளர்க என வாழ்த்துகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14 வயதில் இருக்கும் யாழ் தொடர்ந்து 100 வயது வரை பயணிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14வது வயதில் காலடி எடுத்து வைக்கும், யாழ் களத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் என்னும் தாயானவள், தன் சிறகுகளை அகல விரித்துத், தப்பியோடும் குஞ்சுகளையும் மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொண்டு, இன்னும் பல்லாண்டு வாழ வேண்டுமென்று இன் நன்னாளில் வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

வயதுக்குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. முன்னைய காலங்களிலும் கூறியிருந்தேன். 1999இல் ஆரம்பிக்கப்பட்டால் எப்படி 14 வயது என்று கூறுவது? 1999இல் பிறந்த எனது ஒரு மருமகனும், மருமகளும் தமது13ம் வயது பிறந்தநாளைக்கொண்டாடினார்கள். யாழுக்கு தற்போது 14 வயதென்பது இளைஞன் மூலம் ஏற்படுத்தப்பட்ட வயசுக்கோளாறு என்று நினைக்கின்றேன். அவர் ஒழுங்காய் கணக்கில் கவனம் செலுத்தியிருப்பின் இப்படி வந்திருக்காது. அல்லது தமிழ்முறையில் இப்படித்தான் கூறுவார்களோ!

:::::::::::::::::::::::::::::::::::::::::

Whois Record For Yarl.com

Whois Record

ICANN Registrar:WILD WEST DOMAINS, LLC

Created:1999-03-30

Expired: 2014-03-30

:::::::::::::::::::::::::::::::::::::::::

என்னமோ, நான் இங்கு எழுதினாலும், எழுதாவிட்டாலும், வந்தாலும், வராவிட்டாலும் யாழ் இணையம் எனது வாழ்க்கையிலேயே பல மாற்றங்களிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக அமைந்துவிட்டது. நாளை மீண்டும் மோகன் அவர்கள் யாழின் பூங்காவனத்திருவிழாபற்றி அறிவிப்பினும், வாழ்க்கையில் இருந்துபிரிக்கப்படமுடியாத ஓர்விடயமாகிவிட்டது இங்கும், இதன்பாதிப்பின் தொடர்ச்சியாகவும் பெற்ற நல்லதும், கெட்டதுமான அனுபவங்கள்!

யாழுடன் இணைந்த, இணைந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...இன்று போல என்றும் வாழ வாழ்த்துகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அதோட இன்னொரு விடையம்.எமது கலாச்சாரங்களில் :rolleyes: மொய் எழுதும் பழக்கம் உண்டு.அது போல் ஏன் யாழுக்கும் பிறந்த நாளுக்கு மொய் எழுதக்கூடாது.மொய் எழுத அனுமதிப்பதால் யாரும் பிள்ளை வளர்ப்பில் தலையிடுவனம் என்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை.நிர்வாகம் இரு paypal கணக்கை தந்தால் மொய் எழுத உதவியாக இருக்கும். நன்றி. :)

Link to comment
Share on other sites

யாழிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் அதனை சளைக்காது தொடர்ந்து இயக்கும் மோகனுக்கும் மட்டுறுத்துனர்களிற்கும் பாராட்டுக்களும் உரித்தாகுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மென்மேலும் வளர்ந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்ற வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் புதியபொலிவுடன்,

புதுமுகங்களின் வரவுடன்,

சிறப்புற வாத்துகின்றேன்.

வாழ்க பல்லாண்டு என்று ........

best_wishes.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

birthday-cake-candles-10.gif

14 வது பிறந்த நாள் காணும் யாழ் இணையத்திற்கு நல் வாழ்த்துக்கள். இலட்சிய உறுதியோடு.. யாழும் அடைய வேண்டிய இலக்கை நோக்கி வெற்றி நடை போட வாழ்த்துகின்றேன்..! :)

Link to comment
Share on other sites

யாழிற்கு எனது பிறந்தாநாள் வாழ்த்துகள்! இந்தளவு காலமும் யாழை சிறப்பாக இயக்கிய மோகன் அவர்களுக்கு எனது நல வாழ்த்துக்கள்! யாழை தொடர்ந்து நடாத்த முடிவு எடுத்து இருக்கும் நிழலி அவர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள், சண்டை சச்சரவின்றி ஒற்றுமையுடன் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.