Search the Community
Showing results for tags 'விடுதலை'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி சாகேல்!" -நன்னிச் சோழன் -------------------------------------------------------------------------------- கட்டு-பண்டார நாயக்காவில் கருகிய கழுகுகளும் கருக்கிய தீப்பந்தங்களும் தாக்குதல் தொடர்பான சுருக்கமான தகவல்: இத்தாக்குதல், சூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலிகளால் சிறீலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதும் அதன் அருகில் இருந்த பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் மீதும் நடத்தப்பட்டது. இத்தாக்குதலிற்குச் சென்ற 14 கரும்புலிகளுள் சிலர் தரைக் கரும்புலிகள் என்றும் ஒருசில தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு சில தகவல்கள் இவர்களில் 14 இற்கும் மேற்பட்ட கரும்புலிகள் சென்றதாகவும் சிலர் பாதுகாப்பாக தளம் திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கின்றன. 2001 சூலை 23 அன்று மாலை 8.30 மணிக்கு, 14 கரும்புலிகளும் வான்படைத்தளத்திற்கு அருகில் இருந்த ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினதாக ஒருசில தகவல்கள் தெரிவிக்கின்றன். மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது. அடுத்தநாள் 24ஆம் நாள் அதிகாலை 3:30 மணியளவில் வான்படைத்தளத்தில் தாக்குதல் தொடங்கப்பட்டு அருகில் இருந்த வானூர்தி நிலையத்திலும் நடந்தேறி காலை 8.30 மணியளவில் முற்றாக முடிவுற்றது. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் தாக்குதலிற்குச் சென்ற 14 கரும்புலிகளும் கொல்லப்பட்டதாகவும் தமது வான்படை தரப்பில் 6 வான்படை வீரர்கள், ஒரு அதிரடைப்படைஞர் உட்பட மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டு 12 வான்படை வீரர்கள் காயமுற்றதாகவும் சிங்கள அரசு செய்தி வெளியிட்டது. அத்துடன் வானூர்தி நிலையத்தில் இருந்த எந்தவொரு பொதுமக்களும் காயமடையவோ கொல்லப்படவோ இல்லையென்றும் தகவல்கள் வெளியாகின. இத்தாக்குதலின்பின் சிங்கள அரசாங்கமானது தாம் வெறும் 14 வானூர்திகளை மட்டுமே இழந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. இதே வேளை விடுதலைப் புலிகள், தாம் 18 வானூர்திகளை அழித்ததோடு 10 வானூர்திகளை சேதமாக்கிவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தனர். (மொத்தம் 28 வானூர்திகள் சரி) "28 விமானங்கள் எரியுது! நீ கட்டிய கோட்டை சரியுது!" --> 'கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் என்னாச்சு' என்ற போரிலக்கியப் பாடலிலிருந்து அழிக்கப்பட்டவை: எயர்பசு - 3 A - 340 - 300's - 2 A - 330 -200 - 1 கிபிர் குண்டுதாரிகள் - 4 கே-8 தாரை பயிற்சி வானூர்திகள் - 3 மிக்-27 சண்டைதாரிகள் - 2 எம்.ஐ.-17 உலங்குவானூர்திகள் - 2 பெல் 412 - 2 பெரும்புள்ளி 412 உலங்குவானூர்தி- 2 சேதமாக்கப்பட்டவை: எயர்பசு - 3 A 320's - 2 A -330 - 1 கிபிர் குண்டுதாரிகள் - 4 எம்.ஐ. 24 உலங்குவானூர்தி - 1 அன்ரனோவ் போக்குவரவு வானூர்தி - 1 பெல் 412 உலங்குவானூர்தி - 1 ஆனால் சார்பற்ற நிறுவனமொன்று 12 வானூர்திகள் அழிக்கப்பட்டதோடு 14 வானூர்திகள் சேதமாக்கப்பட்டதாக (மொத்தமாக 26 வானூர்திகள்) அறிக்கை வெளிட்டிருந்தது. அந்த 26 வானூர்திகளினுள் அழிக்கப்பட்டவையாக வெளியிடப்பட்டிருக்கும் 12 வானூர்திகளாவன , (சண்டைதாரி தாரை = Fighter jet) கிபிர் சண்டைதாரி தாரை - 2 மிக் - 27 சண்டைதாரி தாரை - 1 எம்.ஐ.24 தாக்குதல் உலங்குவானூர்தி - 1 எம்.ஐ.17 தாக்குதல் உலங்குவானூர்தி - 1 K- 8 தாரை பயிற்சி வானூர்தி - 3 எயர்பசு A340 - 1 (4R-ADD) எயர்பசு A330s - 2 (4R-ALE and 4R-ALF) எயர்பசு A320 - 1 (4R-ABA) அந்த 26 வானூர்திகளினுள் சேதமாக்கப்பட்டவையாக வெளியிடப்பட்டிருக்கும் 14 வானூர்திகளாவன, கிபிர் சண்டைதாரி தாரை - 5 K- 8 தாரை பயிற்சி வானூர்தி - 5 மிக் - 27 சண்டைதாரி தாரை - 1 எயர்பசு A340 - 1 (4R-ADC) எயர்பசு A320 - 1 (4R-ABB) மற்றுமொரு இனந்தெரியா படைத்துறை வானூர்தி - 1 இத்தாக்குதலின் மூலம் சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான வானூர்திகள் அழிக்கப்பட்டது. இதனால் இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் சுற்றுலாத்துறை பெரும் வீழ்ச்சியடைந்தது. 'கரிய வேங்கைகள் உட்புகுந்த வழித்தடம்' இத்தாக்குதலின் திட்டமிடல் கட்டளையாளர் 'பேரரையர்(Col.) சாள்ஸ்' → இத்தாக்குதலிற்கு பங்கேற்ற மறைமுகக்கரும்புலி மாவீரர் மேஜர் பிரசாத் → இத்தாக்குதலில் தலைமையேற்றுச் சென்ற கரும்புலி மாவீரர் லெப். கேணல் கண்ணன் 'படிமப்புரவு: எதிரி.com' இத்தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட 14 கரும்புலிகளில் 8 பேர் கட்டுநாயக்காவிலும் 6 பண்டார நாயக்காவிலும் விழிமூடினர். விழிமூடினோரில் இருவர் வெடியுடையினை இயக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது (இருவரது படமுமே கிடைத்துள்ளது). வீரச்சாவடைந்தோரின் வித்துடல்களின் படங்கள் 9 மட்டுமே சிங்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன; கிடைக்கப்பெற்றுள்ளன. இத்தாக்குதலின்போது வீரச்சாவடைந்த கரும்புலிகளின் வித்துடல்கள்:- 1) இந்த கரும்புலி அண்ணா வெடியுடையினை(சாஜர்) இயக்கியுள்ளார். எனவேதான் இவரது வித்துடல் இரண்டாக உள்ளது (தலைவேறு முண்டம் வேறாக). ஆகவே இவரது வித்துடல் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. 'கரும்புலி அண்ணாவின் தலை' 'கரும்புலி அண்ணாவின் முண்டம்' 'தலையும் முண்டமும்' 2) வெடியுடை இயக்கி வீரச்சாவடைந்த இரண்டாவது கரும்புலி அண்ணாவின் வித்துடல் 3)அடிநெஞ்சு மற்றும் பளுவில் ஏவுண்ணி வீரச்சாவைடைந்துள்ளார், இக்கரும்புலி அண்ணா. 4) 5) இந்த கரும்புலி அண்ணாவின் நெஞ்சு சிதைந்துள்ளது. 6) 7) இந்த அண்ணாவின் தாடையோடு சேர்ந்த கழுத்துப்பகுதி சிதைந்துள்ளது. 8 ) 9) (யாழ் வலைத்தளத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு படிமங்கள் யாவும் நீக்கப்பட்டுள்ளன. அவற்றைக் காண கோரா செல்லவும்: https://qr.ae/pGeTu6) ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 1 reply
-
- பண்டாரநாயக்கா
- விடுதலைப்புலி
- (and 6 more)
-