ஈழத்தில் SC/ST, MBC ,BC இப்படி பிரிவுகளும் சாதிச்சான்றிதழ்களும் கிடையாது.
ஈரோடு வெங்கடப்பா நாயுடு முதல் எத்தனை ஈ வே ரா இயக்கங்களும் கருஞ்சட்டை படைகளும் குத்திமுறிந்து இன்றுவரை பெரிதாக எதையும் கிழித்ததில்லை. வேண்டுமென்றால் சில சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி பப்லிக் ஸ்டண்ட் அடிக்கலாம். இந்த இயக்கங்களை அடியொற்றிவந்த அரசியல் கட்சிகளும் இன்றுவரை சாதியரசியல் நடத்திதான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை.
சாதியை ஒழிக்க வக்கற்ற இந்த கூட்டம் கையில் சிக்கிய சிறுபான்மை பார்ப்பானை தூக்கி தூக்கி அடித்து இன்னுமொருவகை சாதிவன்ம அரசியலைதான் செய்துகொண்டிருக்கின்றன.
பொருண்மிய, கல்வி, சமுதாய விழிப்புணர்வு போன்றவைகளால் சாதாரண மனிதப்பரிமாணம் மூலமாக மெதுவாக காணாமல் போகும் சாதியத்தை வெங்கடப்பா இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ஆண்கள் யட்டி அணிந்திருக்க மாட்டார்கள் பெண்கள் பாவாடை கட்டியிருக்கமாட்டார்கள் என்று புருடாவிட்டு அரசியல் அறுவடை நடத்துகிறது இந்த திருட்டுக்கூட்டம்
இந்த அடித்தட்டு சாதிக்கட்டமைப்பு நிலையை அப்படியே ஈழத்தில் பொருத்தினால் ஈழம் சுமார் 200 வருடங்கள் முன்னே சென்றுவிட்டது. இங்கே ஈழ தமிழர்களுக்கு யட்டி, பாவாடை அணிவிக்க எந்த வெங்கடப்பாவும் தேவைப்படவில்லை. இங்கு பட்டியல்இனங்களும் இல்லை சாதிச்சான்றிதழ்களும் இல்லை
ஈழத்தில் தற்போது காணப்படும் மிகக்குறைந்த சாத்தியக்கட்டமைப்புகள் தானாகவே சமுதாய, கல்வி ,பொருண்மிய முன்னேற்ற பரிமாணங்களால் காணாமல் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. இது எவர் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடக்கும் மாற்றம் காலத்தின் கட்டாயம்
சமீபகாலமாக ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் அந்நியமான பதங்களான தலித், அம்பேத்கார், ஈ வே ரா, திராவிடம் போன்றவை திட்டமிட்டு இந்திய அடிவருடிகளால் திணிக்கப்படுவதை பார்க்கலாம். இவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் இருக்கும் குழாயடி சாதிக்கட்டமைப்பை தமிழர்களிடம் திணித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நடத்தும் உத்தியே இது.
தமிழ் நாட்டில் எதையுமே சாதிக்காத கொள்கையை அங்கே இருக்கும் சாதிக்கட்டமைப்பை விட அதிக பரிணாமமடைந்த இனக்கூட்டம் தூக்கி சுமக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இருக்கும் சாதியம் தானாகவே காணாமல் போய்விடும், சமூக, கல்வி பொருளாதார முன்னேற்றங்களால் அப்படி காணாமல் போய்க்கொண்டுதான் இருக்கிறது