இந்த செய்முறை 2005 இல் பழைய யாழ் களத்திலை எழுதினது.
ஒடியற் கூழ் செய்முறை (சைவ கூழ்)
தேவையான பொருட்கள்
ஒடியல் மா 250 கிராம்
150 கிராம் புழுங்கல் அரிசி
பலாக்காய் சுளை+பலா கொட்டை 250 கிராம்
பயற்றங்காய் 250 கிராம்
மரவள்ளி கிழங்கு 250 கிராம்
முருக்கம் காய் பிஞ்சு 2
முருக்கம் இலை, +முசுட்டை இலை,+ முல்லை இலை 250 கிராம்
மாங்காய் பெரிசா 1
செத்தல் மிளகாய் 250 கிராம் இடித்து தூள் ஆக்கியது
உப்பு அளவுக்கு
செய் முறை
புது ஒடியல் மா என்றால் கூழ் வைக்க 2 மணி நேரம் ஊற வைத்து நீரை 2 அல்லது 3 முறை மாற்றவும்
பழைய மா என்றால் 4 மணி நெரம் முதல் வைத்து பல முறை நீரை மாற்றவும்
இது மாவின் காறல் தன்மை போக உதவும்
பானையில் அரிசியை கழுவி அவிய வைக்கவும். அரிசி பதி அவிந்து வரும் போது எல்ல மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும்
மரக்கறிகள் அவிந்ததும் செத்தல் மிளகாய் தூள், உப்பு என்பவற்றை உங்கள் சுவை அளவுக்கு சேர்க்கவும்
நன்கு கலக்கி சிறிது நேரத்தின் பின் ஊற வைத்த ஒடியல் மாவை நீர் விட்டு கரைத்து சேர்க்கவும்
நன்கு கலக்கி கொதித்ததும் இறக்கவும்
கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-))
http://www.yarl.com/forum/index.php?&showtopic=3345&st=20