யாயினி
-
Posts
9112 -
Joined
-
Days Won
14
யாயினி's Achievements
-
-
ஒரு பெரிய மனிதரும் பிக்பாக்கெட்டும் - சிறுகதை - எஸ். ரங்கராஜன்
(எப்படி எழுதக் கூடாது - 4ம் அத்தியாயத்தில் சுஜாதா குறிப்பிட்ட / சுஜாதா எழுதிய இரண்டாவது சிறுகதை - '60'களில் எழுதியது.)கும்பல் கூடும் மாலை வேளை. சத்யன் மெதுவாக அந்த ஆளைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். அவர் உயரமான நடுத்தர வயது ஆசாமி. கண்ணாடி ஜன்னல்களுக்கு பின்னால் வைத்திருந்த அழகான சட்டைகளை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் நடுவே அவர் செல்கையில் சத்யன் சற்று வேகமாக நடந்து அவர்மேல் உராய்ந்து அவர் பாண்ட் பைக்குள் வைத்திருந்த பர்ஸை விரல்களின் லாகவத்தால் வெளியேற்றினான்.சரேலென்று அவன் கையை இரும்பு பிடியாக பிடித்து, பிடுங்கிக் கொண்டார். “ உன் மாதிரி எத்தனையோ பேர்களை பார்த்திருக்கிறேன். நீ என்னை தொடர்ந்து வரும்போதே தெரியும். முட்டாள். தொழில் தெரியாதவன்.” தன் பையிலிருந்து ஒரு கார்டை எடுத்து அவனிடம் கொடுத்து, “ உன்னை நான் போலீசுக்கு புகார் செய்யப்போவது இல்லை. இந்த முகவரியில் வந்து என்னைப்பார்” என்று சொல்லிவிட்டு, வேகமாக நடந்து ஒரு டாக்ஸியில் ஏறி போய்விட்டார்.சத்யன் அதிர்ச்சியில் மலைத்து நின்று விட்டான். அரை நிமிட நிகழ்ச்சி ஒருவரும் கவனிக்கவில்லை.அந்த முகவரிக்கு சத்தியன் சென்றான். அழகான சிறிய வீடு. நாய் குறைத்தது. மெதுவாக மேற்கத்திய இசை ரேடியோவில் கேட்டது. அவர் வெளியே வந்தார். வாயில் சிகரெட் தொங்கியது.“ நீயா?” என்றார்சத்யன் பேசாமல் அசட்டுத்தனமாக என்றான்.சிகரெட்டை வாயில் இருந்து எடுக்காமல் அவர் கேட்டார்.“ உன் பெயர் என்ன?”“ சத்யராஜ்”“ எதுவரை படித்திருக்கிறாய்?”“ ஒன்பதாவது வரை”“ இதற்கு முன் ஏதாவது உருப்படியாக வேலை செய்து இருக்கிறாயா? பிக் பாக்கெட் அடிப்பதை தவிர !”“ என் அம்மா என் ஏழாவது வயதிலேயே செத்துப் போய்விட்டாள். அதற்கு முன்னாலே அப்பாவும் செத்துப் போய்விட்டார்""சரி, சரி, உள்ளே வா"தயங்கிக் கொண்டே உள்ளே போனான். அங்கே உட்கார்ந்திருந்த பெண் இவர்களைக் கண்டதும் எழுத்துப்போனாள்.அழகான அறை. கீழே விரிப்புகள். ரேடியோ. சில ஓவியங்கள். டிஸ்டம்பர் நீலம்."எதனை தடவை ஜெயிலுக்குப் போயிருக்கிறாய்?" சத்யனைக் கேட்டார்."ஒரே ஒரு தடவை சார். அதுவும் அக்கிரமாகத் தள்ளிவிட்டார்கள். அப்புறம் நானில்லை என்று விட்டுவிட்டார்கள்.""ஏரோப்ளேனில் போயிருக்கிறாயா?"இது என்ன கேள்வி என்கிற மாதிரி பயத்துடன் சிரித்தான் சத்யன்."ஓ, ஏரோப்ளேன் டிக்கெட் இல்லாமல் விடமாட்டார்களோ?" என்று சொல்லி அவரே சிரித்துக் கொண்டார். பிறகு, "ஆளைப் பார். பரதேசி மாதிரி. சிறுவயது. தலையை வாரிக் கொள்வதுதானே ?" உன் முகத்தைப் பார்த்தாலே கேள்வி கேட்காமல் கைது பண்ணுவார்கள் போலீஸில்?"சத்யன் தலைகுனிந்து இருந்தான்.“ உட்கார்”கீழே உட்கார்ந்தான்.“ சீ, அந்த நாற்காலியில் உட்கார்”"சரியாக உட்கார். நான் சொல்வதை கவனமாகக் கேளு. நான் உனக்கு ஒரு நல்ல நல்ல பேண்டும் சட்டையும் தருகிறேன். நாளை காலை நன்றாக டிரஸ் செய்து கொண்டு, தலைவாரி இங்கே வர வேண்டும். வந்ததும் உன்னிடம் ஒரு ஏரோப்ளேன் டிக்கெட் கொடுப்பேன். ரிட்டர்ன் டிக்கெட். விஷயம் ஒன்றும் இல்லை. மீனம்பாக்கம் போய் இருக்கிறாயா?”“ ஓ போயிருக்கிறேன்”"மத்தியானம் மூன்றரை மணிக்கு ஹைதராபாத் போகும் விமானத்தில் நீ போக வேண்டும். அங்கே போய் சேர்ந்தவுடன் ஒரு ஹோட்டலில் தங்க வேண்டும். நான் ஒரு முகவரி தருகிறேன். அந்த இடத்துக்குச் சென்று கடிதத்தை கொடுத்தால் ஒரு பெட்டி தருவார்கள். அந்தப் பெட்டியை வாங்கிக் கொண்டு மறுநாள் காலை பத்தரை மணிக்கு திரும்பி வரும் விமானத்தில் சென்னை வந்து விடு. என் கார் டிரைவர் காத்திருப்பான். அவனிடம் அந்த பெட்டியைக் கொடுத்துவிட வேண்டியது. உனக்கு நூறு ரூபாய் கொடுப்பான். நீ எங்கே இறங்க வேண்டுமோ அங்கே உன்னை இறக்கி விடுவான். அவ்வளவுதான். என்ன?”“ செய்கிறேன் சார், அந்தப் பெட்டியில் என்ன இருக்கும்?” சத்யனால் கேட்காமல் இருக்க முடியவில்லை.“ உன் தாத்தா! மடையா. அது என்ன இருந்தால் உனக்கென்ன? ஒரு பூட்டின பெட்டி, அதை கொண்டு வர வேண்டியது தான்.”“ அதற்கில்லை சார், நடுவில் சோதனை, கீதனை செய்தார்கள் என்றால்?”“ ஹைதராபாத் விமானத்திற்கு ஒரு செக்கிங்கும் கிடையாது. போகிறபோது நேரே போய் ஏறிக் கொள்ளலாம். திரும்பி வருகிறபோது அந்தப் பெட்டியை பேக்கேஜ் கௌண்டரில் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு ஒரு சீட்டு தருவார்கள். அதை மீனம்பாக்கம் வந்ததும் திரும்பி கொடுத்தால் பெட்டியைக் கொடுத்து விடுவார்கள்.”“ புரிகிறது சார்” என்றான் சத்யன்.“ரொம்ப சுலபமான வேலை. பயப்படவே வேண்டாம். 100 ரூபாய் சுலபமாக கிடைக்கும். இந்த நூறு ரூபாய்க்கு நீ எத்தனை தடவை பிக்பாக்கெட் அடிக்க வேண்டும்? இந்த வேலையை ஒழுங்காக செய்தால் அப்புறம் மாதாமாதம் கவனித்துக் கொள்வேன்” என்று சத்யனுக்கு விளக்கியவர், “ சற்று இரு” என்று உள்ளே சென்றார்.அவர் உள்ளே சென்றதும் மேசை மீதிருந்த சிறிய வெள்ளி கிண்ணங்கள் சத்யனின் கண்ணை உறுத்தின. அழகான கிண்ணங்கள். மின்னல் வேகத்தில் அவற்றில் ஒன்றை எடுத்து பைக்குள்ளே போட்டுக் கொண்டான்.உள்ளே போனவர் சற்று நேரத்தில் கையில் அழகிய கருப்பு வெள்ளை சட்டையும் கொண்டு வந்தார். அவன் அருகில் வந்து, “ இந்த ட்ரஸ் உனக்கு….” பேச்சை நிறுத்தி விட்டார். அவன் அருகில் வந்து பளீரென்று புறங்கையால் அடித்தார். நாக்குக்குள்ளே ரத்தம் புளித்தது சத்யனுக்கு.“ நாயே, உன் புத்தியை காட்டுகிறாய்! எடுடா அந்தக் கிண்ணத்தை” என்றார்.பையிலிருந்து அதை எடுத்துக் கொடுத்துவிட்டு சத்யன் அழுதான். “ மன்னித்துக் கொள்ளுங்கள் சார் ! ஏழை! தெரியாமல் செய்துவிட்டேன்”திரும்ப அதே மாதிரி அடித்தார். திரும்ப அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை 100 ரூபாய் ஞாபகம் வந்ததால் ஒத்திப் போட்டுவிட்டு, சத்யன் தன் பலமான கைகளை மூடிக்கொண்டு, “ மன்னித்துக் கொள்ளுங்கள் சார். நீங்கள் சாதாரணமான மனிதர் இல்லை. உங்களை ஏமாற்ற முடியாது. ஹைதராபாத் இல்லை, பாகிஸ்தான் வேண்டுமானாலும் போகிறேன்.” என்றான்.“ ஜாக்கிரதை! என்னை ஒருக்காலும் ஏமாற்ற முடியாது. ஓடு நாளைக்கு வா” என்றார்உப்புக் கரித்த உதட்டைத் துடைத்துக் கொண்டு சத்யன் கிளம்பினான்.மறுநாள் வைகௌண்ட் விமானத்தில் சலனமற்ற பிரயாணம். நீலப் புடவை அணிந்த ஏர் ஹோஸ்டஸ். வயதான வெள்ளைக்கார தம்பதிகள். சாக்லேட். சத்யனுக்கு விமானப்பயணம் மிகவும் பிடித்திருந்தது.'இந்த மாதிரி சந்தர்ப்பம் எப்போது எனக்கு கிடைக்கும். பறக்கும் விமானத்தில், சி எல் ராமச்சந்திரன் என்கிற பெயரில்!' தனக்குள் சத்யன் சிரித்துக்கொண்டான்.வயிற்றில் மிருதுவான பயமும் விளையாடியது.ஏர்ஹோஸ்டஸ் கொடுத்த மிருதுவான சாக்லெட்டை கடித்தான். பல் வலித்தது.பாவி! என்ன அடி அடித்தான். நான் செய்தது தப்புதான். அவன்தான் நூறு ரூபாய் கொடுக்கப் போகிறானே? அதற்குள் ஒரு பத்து ரூபாய் கிண்ணத்தையா திருடுவது? என் புத்தி அப்படி! ஆனாலும் என்ன அடி அடித்தான்?எதிரே சிவப்பு விளக்கு எரிய, ஏர்ஹோஸ்டஸ் பெல்ட் அணியுமாறு சொன்னாள். விமானம் இறங்கி ரன்வேயில் தொட்டு….. சத்யன் இறங்கினான்.க்ளாரிட்ஜஸ் என்ற ஹோட்டலில் இருந்தது அந்த முகவரி. ஒரு ஆசாமி உயரமாக கருப்பு கோட் அணிந்து, வாயில் சுருட்டுடன் அவனைப் பார்த்து” செக் கொடுத்தாரா?” என்று கேட்டார்.“ பெட்டி வந்தபிறகு அனுப்புகிறேன் என்று சொன்னார்” என்றான் சத்யன்.“ பெரிய ரோக் அவன். சட், இந்தா இந்த பெட்டிதான்!”அவன் எதிர்பார்த்ததை விட பெட்டி பெரிதாக இருந்தது. தூக்குவதற்கு மிகுந்த கனமாக இருந்தது. இரண்டு கைகளையும் சேர்த்துத் தூக்க வேண்டி இருந்தது.“ டாக்ஸியில் போ” என்றார் கருப்புக் கோட்டு.டாக்ஸி வைத்துக்கொண்டு ஹோட்டலை அடைந்தான் சத்யன். முக்கி முனகி பெட்டியைக் கொண்டுபோய்..... அப்பாடா என்று படுக்கையில் சாய்ந்தான்.பொழுது போகாமல் சிகரெட்டை தேடினான். பெரிய பெட்டி. ‘ இதில் என்ன இருக்கும்? இவ்வளவு கனமாக இருக்கிறதே?’ என்று யோசித்தான்.பெட்டியின் பூட்டை தடவினான். எதிரே படம் மாட்டியிருந்த ஆணியை பெயர்த்து எடுத்து அரை மணி நேரம் திண்டாடிய பின் பூட்டைத் திறந்தான். வியர்வையைத் துடைத்துக்கொண்டு பெட்டியைத் திறந்தான்.சிவப்பான துணி போட்டு மூடி இருந்தது. துணியை விலக்கினான்.பெட்டி நிறைய பாட்டில்கள் ஒழுங்காகப் புரளாமல் துணி சுற்றி அடுக்கப்பட்டிருந்தன. விஸ்கி பாட்டில்கள். மஞ்சளான திரவங்கள் மென்மையாக சலசலத்தன.‘ அடப்பாவி! இதுதானா? விஸ்கி கடத்தலா?’ என்று எண்ணியவன் கீழே சென்று வேறு பூட்டு வாங்கிவந்து அதை பூட்டிவிட்டு, 'நமக்கு எதற்கு? பெட்டியை கொடுத்துவிட்டு பணத்தை வாங்க வேண்டியது. அவ்வளவுதானே?’ என்று எண்ணிக்கொண்டான்.மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டிரைவர் தயாராக காருடன் காத்திருந்தான். சத்யன் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வருவதை பார்த்து, விரைந்து வந்து அதை வாங்கிக் காரின் பின்சீட்டில் வைத்தான்.“ உங்கள் எஜமானர் வரவில்லையா?” என்று சத்யன் கேட்டதற்கு, டிரைவர் பதில் சொல்லாமல், “ நீ எங்கே இறங்க வேண்டும்?” என்று கேட்டான்.“மௌண்ட் ரோடில். ஆயிரம் விளக்கு அருகில்” என்று சொல்லி காரில் ஏறி அமர்ந்தான்.கார் கிளம்பியதும் “ இந்தா” என்று டிரைவர் ஒரு கவரை அவனிடம் கொடுத்தான். அதில் புதிய 100 ரூபாய் நோட்டு ஒன்று இருந்தது. அதை வாங்கிக் கொண்டு சத்யன் டிரைவரின் பக்கவாட்டுப் பையில் இருந்த கருப்பு பர்சை எடுத்து விட்டான்.மவுண்ட் ரோடில் இறங்கிக் கொண்டான். சத்யன் அந்தக் கருப்புப் பர்சில் இருந்த ரூபாயை எண்ணினான். 15 ரூபாய் இருந்தது.அதை எடுத்துக்கொண்டு, பர்சை விசிறி எறிந்துவிட்டு ‘ ஆக மொத்தம் 115’ என்று சொல்லிக்கொண்டு கன்னத்தைத் தடவிப் பார்த்தான்.விரைவாக நடந்து எதிரே இருந்த ஒரு போலீஸ் ஸ்டேஷனை அடைந்தான். இன்ஸ்பெக்டருக்கு மரியாதையாக சலாம் போட்டுவிட்டு என்றான்.“ என்ன?” என்றார் இன்ஸ்பெக்டர்.சத்யன் பணிவாக, “ சார் ஒரு ஆள் அக்கிரமம் பண்ணுகிறார். அதை ரிப்போர்ட் செய்ய வந்தேன். யாரிடம் சொல்ல வேண்டும்?” என்றான்“ என்ன அக்கிரமம்?” என்று நிமிர்ந்து பார்த்தார் கண்டிப்பு நிறைந்த அந்த இன்ஸ்பெக்டர்.“ நிறைய விஸ்கி பாட்டில்களை ஒருவர் கள்ளத்தனமாக விற்கிறார். வீட்டில் பாட்டில் பாட்டிலாக அடுக்கி வைத்திருக்கிறார்”“ என்னது?”“ ஆமாம் சார் என் கண்ணாலே பார்த்தேன். முகவரி கூட சொல்லுகிறேன்”இன்ஸ்பெக்டர் டெலிபோன் எடுத்து நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனை அழைத்தார்.“ மஜீத், குட் மார்னிங்! ராஜேந்திரன் பேசுகிறேன். ஒரு ப்ரொஹிபிஷன் கேஸ். உங்கள் ஏரியாவில்”ஒரு முக்கியமான மதுவிலக்கு கேசில் போலீசுக்கு உதவி செய்ததற்காக சர்க்கார் அவனுக்கு 100 ரூபாய் வெகுமதி அழைத்தார்கள். சத்யன் சிரித்துக் கொண்டான். ‘ ஒரு அறை விட்டாலும் விட்டான். அதிகப்படியாக 100 ரூபாய் கிடைத்தது’.
-
-
-
இந்த சூரியனும் சநதிரனும் சந்திக்கின்;ற நிகழ்வை பார்ப்பதற்காக நயாகரா மற்றும் berribeach என்று சொல்லப் படும் இடத்திலும் மக்கள் கூட்டம் கூட தொடங்கியிருக்கிறார்கள் என்று தொலைக்காட்சி செய்திகள் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கிறது.நயாகரா பக்கம் போனவர்கள் தங்கள் இறுதி நேர கொள்வனவுகளை முடித்தவண்ணம் இருக்கிறாராகளாம்..நீண்ட கால இடை வெளிக்குப் பின் சந்திக்கின்ற இருவரையும் பார்ப்பதற்காக...இப்பொழுதே கனடா பக்கம் இருட்டாகத் தான் இருக்கிறது..பெரிதாக இன்று வெளிச்சம் என்று இலலை..அனேகமாக மழைத்தூறல் ஏற்படலாம் என்று நினைக்கிறேன்.எது எப்படி இருபபினும் இருவரது சந்திப்புக்களும் சுமுகமாக முடியட்டும் என்று வாழ்த்துவோம்.✍️😀
-
சூரிய கிரகணம்: துல்லியமாகப் பார்க்க 50,000 அடி உயரத்தில் பறக்கப்போகும் விஞ்ஞானிகள் - என்ன செய்வார்கள்?சுமார் 50,000 அடி (15 கிமீ) உயரத்தில் பல உபகரணங்களுடன் அவர்கள் கிரகணத்தின் பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்படும்அடுத்த வாரம் நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் நிலத்தில் இருந்து பார்ப்பார்கள். ஆனால் ஒரு சில அதிர்ஷ்டசாலி நாசா விமானக் குழுவினர் அதை மிக நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.ஏப்ரல் 8 (திங்கட்கிழமை) அன்று வட அமெரிக்கா முழுவதும் முழு சூரிய கிரகணம் நிகழும். சுமார் 3.1 கோடி மக்களால் அதை கண்டுகளிக்க முடியும். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவின் பெரும்பகுதியிலும் இதை பார்க்க முடியும். மேலும் இந்த நிகழ்வை கண்டுகளிப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் அங்கு பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும் இவை அனைத்தும் மோசமான வானிலை காரணமாக நிறைவேறாமல் போகலாம். கடந்த 1999-ஆம் ஆகஸ்ட் மாதம் பிரிட்டனில் நிகழ்ந்த கிரகணத்தை பார்க்க முடியாமல் மேக கூட்டங்கள் மறைத்துவிட்டன என்பது நினைவுகூரத்தக்கது. எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சராசரியாக 375 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் முழு சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான சிறந்த வழி என்ன?வானத்தில் மேகங்களுக்கு மேலே பறப்பது.நான்கு நாசா விமானிகள் இதைத்தான் செய்ய இருக்கின்றனர்.கிரகணத்தை ஆய்வு செய்யவிருக்கும் விமானங்கள்நாசாவின் இரண்டு பிரத்யேக WB-57 விமானங்களில் மெக்சிகோ கடற்கரையில் இருந்து அக்குழுவினர் பறக்க உள்ளனர். தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வரை கிரகணத்தின் முழுமையான பாதையை அவர்கள் பின்தொடர்வார்கள். சந்திரன் சூரியனைக் கடக்கும்போது ஏழு நிமிடங்கள் அவர்கள் அதன் நிழலில் இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் தரையில் இருந்தால் அவர்கள் நான்கு நிமிடங்கள் மட்டுமே அதன் நிழலில் இருந்திருக்கமுடியும். சுமார் 50,000 அடி (15 கிமீ) உயரத்தில் பல உபகரணங்களுடன் அவர்கள் கிரகணத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வார்கள்.“இது மிகுந்த உற்சாகம் தருகிறது" என்று இரண்டு விமானங்களில் ஒன்றின் சென்சார் உபகரண ஆபரேட்டரான நாசா விமானி டோனி கேசி கூறுகிறார். "நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இந்தப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கிரகணத்தின் நிழல் உங்களுக்கு முன்னே செல்லும் அந்தத் தருணத்தின் அனுபவத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்," என்றார் அவர்.விமானத்தில் கேசி இயக்கும் ஒரு கேமரா மற்றும் தொலைநோக்கி அமைப்பு, சூரியனை அகச்சிவப்பு மற்றும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியில் புகைப்படம் எடுக்கும். சூரியன் சந்திரனை சுற்றிச்செல்லும்போது அதன் வளிமண்டலத்தையும் அதன் ஒளிமண்டலத்தையும் ஆராய இது உதவும். சூரியனுக்கு அருகில் உள்ள தூசி வளையம் மற்றும் சிறுகோள்களையும் இது ஆய்வு செய்யும்."இரண்டு விமானங்களின் மூக்கிலும் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அது அங்கு ஒரு தொலைநோக்கியை வைக்க உங்களை அனுமதிக்கிறது" என்று கொலராடோவில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் சூரிய இயற்பியலாளர் ரிச் காஸ்பி கூறுகிறார். அவர் கேசி இயக்கும் கருவிகள் மூலம் ஆய்வுகளை நடத்துகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முழு சூரிய கிரகணம் நடந்தபோதும் இதேபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.“இந்த விலையுயர்ந்த அறிவியல் கேமரா மற்றும் கருவியை நான் பயன்படுத்துவதற்கு முன்பு முழு கிரகண நிலை வந்துவிட்டதா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்,” என்கிறார் டோனி கேசி.740 கி.மீ வேகத்தில் பறக்கும் விமானங்கள்கிரகணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு விமானங்களும் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அருகிலிருந்து புறப்பட்டு மெக்சிகோவை நோக்கிச் செல்லும். ஒவ்வொரு விமானமும் கிரகணத்தின் போது ‘சுமார் ஐந்து அல்லது ஆறு மைல்கள் இடைவெளியில்’ இருக்கும். மேலும் மணிக்கு 740 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும்,” என்று கேசி கூறுகிறார்.இது கிரகண நிழலின் வேகத்தினும் குறைவானது. அது மணிக்கு சுமார் 2,500கி.மீ. வேகத்தில் செல்லும். ஆனால் விமானங்கள் நிழலுடன் சேர்ந்து பயணிக்கும்போது, தரையில் இருப்பதைக்காட்டிலும் அதிக நேரம் ‘முழு இருட்டில்’ இருக்க முடியும்."கிரகண நிழலின் வேகத்துடன் எங்களால் நிச்சயமாக போட்டிபோட முடியாது," என்கிறார் கேசி. "எனவே நாங்கள் சரியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே இருக்க விரும்புகிறோம். அது முற்றிலும் மறைக்கப்பட்டவுடன் நாங்கள் அதே பாதையை பின்பற்றி மீண்டும் அமெரிக்க வான்வெளிக்குள் செல்வோம்,” என்றார் அவர்.ஆராய்ச்சி செய்கையில் கிரகணத்தைப் பார்க்க நேரம் கிடைக்குமா?விமானங்கள் வானத்தில் நகரும்போது கிரகணம் அவற்றின் வலதுபுறத்தில் இருக்கும். கேசி கேமராவை இயக்கி, சூரியனின் வெவ்வேறு பகுதிகளில் அதை ஜூம் செய்து தரையில் இருக்கும் குழுவுடன் பேசுவார். காட்சிப் புலம் சூரியனின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கும். எனவே அவர் கிரகணத்தின் போது மொத்தக் காட்சியையும் பதிவுசெய்ய சூரியனின் ஒவ்வொரு பக்கத்திற்கும் இடையே கேமராவை நகர்த்துவார். சூரிய தீச்சுடர் போன்ற முக்கியமான அம்சங்களை அவர் பதிவு செய்வார்.உபகரணங்களை இயக்குவது மிக முக்கியமானது என்றாலும், கிரகணத்தை தனது சொந்தக் கண்களால் பார்க்க தனக்கு நேரம் கிடைக்கும் என்று கேசி நம்புகிறார். “இந்த மிக விலையுயர்ந்த அறிவியல் கேமரா மற்றும் கருவியை நான் பயன்படுத்துவதற்கு முன்பு முழு கிரகண நிலை வந்துவிட்டதா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். "அவசரமாக கிரகணத்தைப் பார்க்க நேரம் இருக்குமே தவிர, கருவிகள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்த நான் திரையையே பார்க்க வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.இவ்வளவு உயரத்தில் இருப்பதால், வளிமண்டலம் மிக மெல்லியதாக இருக்கும். அதனால் தரையில் இருந்து பார்ப்பதைவிட கிரகணத்தை மிக நன்றாகப் பார்க்கமுடியும். "நீங்கள் மேகங்களுக்கு மேலே இருப்பதால் இது மிகவும் தெளிவாகத் தெரியும்," என்கிறார் கேசி.தரையில் இருந்து ஆய்வுசெய்வதைவிட மிக அதிக அளவு அறிவியல் ரீதியிலான பலன் இதன்மூலம் கிடைக்கும்.4,000கி.மீ. பயணிக்கும் திறன் இருப்பதால் கிரகணங்களை ஆய்வு செய்ய WB-57 விமானங்கள் மிகவும் பொருத்தமானவை. அவை காற்றில் அதிக நேரம் -- அதாவது சுமார் 6.5 மணி நேரம் - செலவிட முடியும். ஆனால் அவை கிரகணங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. ராக்கெட் ஏவுதல்களை கவனிப்பது போன்ற பிற ஆராய்ச்சி அல்லது புகைப்படம் எடுக்கும் பணிகளுக்கும் நாசா இந்த விமானங்களை பயன்படுத்துகிறது.மிகவும் சுவாரசியமான வேலைகடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேசி இந்த விமானத்தில் பறந்து நிலவுக்கு நாசா அனுப்பிய ஆர்ட்டெமிஸ்-1 விண்கலத்தின் ஏவுதலை புகைப்படம் எடுத்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்பேஸ்-X இன் மாபெரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் முதல் ஏவுதலின் படத்தையும் அவர் எடுத்துள்ளார்.அனைவரும் மிகவும் சுவாரசியமான வேலை என்று கருதும் பணியை கேசி செய்கிறார். ஆனால் அவர் அதுபற்றி அலட்டிக்கொள்வதில்லை. "நான் வடமேற்கு அலபாமாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவன்," என்று அவர் கூறுகிறார்."எப்படியோ நான் இந்த நிலைக்கு வந்துவிட்டேன். நான் இந்த தனித்துவமான விமானத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் பறந்து ராக்கெட் ஏவுதல்களை பார்த்தேன். இப்போது கிரகணத்தை பார்க்க இருக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை கூடிய அளவு சிறப்பாக நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன்," என்கிறார் கேசி.
-
“A professor gave a balloon to every student, who had to inflate it, write their name on it and throw it in the hallway. After the professor mixed all the balloons up, the students were given 5 minutes to find their own balloon. Despite a hectic search, no one found their balloon.At that point, the professor told the students to pick up a balloon and hand it to the person whose name was written on it. Within 5 minutes, everyone had their own balloon.The professor said to the students: "These balloons are like happiness. We will never find it if everyone is just looking for their own. But if we care about other people's happiness, we'll find ours too."- Unknown
-
இன்று உலக சுகாதார தினம்.07/04/2024உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. 1950-ம் ஆண்டு முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இயற்கை முறை வேளாண்மை, சுத்தமாக சமைப்பது, முழுமையாக சமைப்பது, உணவு கெட்டுப்போகாமல் சரியான வெப்பநிலையில் பாதுகாப்பது, சுத்தமான நீரை பயன்படுத்துவதே இந்தாண்டு உலக சுகாதார தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.