“ஒரு நாற்பது எடுத்துத் தாங்க”
“எங்கே எடுப்பது?
“நான் கூட்டீற்றுப் போறன்”
கேட்க்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் நாற்பது என்றால் நாற்பது பவுன்ஸ ஆ ? அங்கு பொதி வண்டி தள்ளி வருபவர்களுக்கு எவ்வ்ளவு டிப்ஸ் கொடுக்க வேண்டும். ?
நிகழ் கால உண்மையிது . உரிய பகுதிக்கு நகர்த்த சொல்லி கேளுங்கள்.
முப்பது வருடங்களாகி போராடி கிடைத்த நிலையை (கனடா வாழ்க்கை ) விசிட் விசாவில் வந்த மூன்று நாட்களில் கிடைக்கும் என எண்ணுகிறர்கள்.
இளசுகளுக்கு பணம் தான் குறிக்கோள் என வாழ்கிறார்கள். இலகுவாக காசு கிடைக்கும் என எண்ணுகிறார்கள். அக்கரைகள் பச்சை இல்லை. இளங்கன்றுகள் துள்ளத்தான் செய்வார்கள்.
அதென்னப்பா ஆணுக்கு கை கொடுத்த பெண். அவரது அதிஷ்டம் ஒரு பெண்ணின் கை கிடைத்தது. " இழந்த கைகளை மீண்டும்பெற்ற அதிசயம்" என போடலாமே . ஒவ்வொரு ஆணுக்கும் பின்னே ஒரு பெண்ணின் ஊக்கம் இருக்கும் .தாயாய் ,சகோதரியாய் ,தாரமாய் ,மகளாய் . 😄
உண்மை தான் அன்று போல் இன்று இல்லை. இழந்ததை நினைத்து வருந்துவதை விட இனி என்ன செய்யலாம் என சிந்திப்போம். கடந்துபோன காலமும் பேசிய வார்த்தைகளும் மீள வருவதில்லை.
இருப்பினும் சில கனேடியர்களுக்கு இரண்டு இனம் என்று தெரியாது (சிங்களம் தமிழ் ) எல்லோரும் சிறீ லாங்கன் என தான் பார்ப்பார்கள். முன்பு ஒரு தாய் குழந்தைகள் கொன்ற சேதி வந்த போது தமிழ் பெண்களை கண்டதும் தங்கள் குழந்தைகளை இழுத்து கொண்டு அப்பாற் சென்றார்களாம். நம் இளையவர்கள் படித்து முன்னேறும் நாட்டில் தான் இந்த போதை ஆசாமிகளும் ஊடுருவி உள்ளர்கள்.