அறிந்த நாளில் இருந்து சொல்லவும் எழுதவும் வார்த்தைகள் இல்லாமல் பேரதிர்ச்சியாக இருக்கிறது.. எழுத ஆயிரம் நினைவுகள் இருக்கிறது.. தனிமையையும் வெறுமையையும் போக்க அவருக்கு நண்பர்கள் எல்லாம் எழுத்தின் மூலம் கிடைத்தவர்களே.. அந்த எழுத்து உலகும் யாழின் மூலமே அவருக்கு அறிமுகமானது.. யாழ் ஒவ்வொரு காலப்பகுதியில் ஒவ்வொரு விதமானதாக கருத்தாளர்களின் மனநிலையை பிரதிபலிக்கும்.. நெடுக்ஸ் கூறியதுபோல் அவர் யாழில் எழுதிய காலங்கள் சுய ஆக்கங்களின் பொற்காலம்.. அவருக்கு முன்னாடியே சென்றுவிட்ட தமிழ் இலக்கிய உறவுகளிடம் சென்று சேர்ந்து நிம்மதியாக இருப்பார் என்று நம்புகிறேன்..