-
Posts
76734 -
Joined
-
Days Won
768
தமிழ் சிறி last won the day on April 6
தமிழ் சிறி had the most liked content!
About தமிழ் சிறி
- Birthday 02/21/2008
Profile Information
-
Gender
Male
-
Location
தூணிலும்,துரும்பிலும்.
-
Interests
இலையான் அடிப்பது.
Recent Profile Visitors
தமிழ் சிறி's Achievements
-
மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!
தமிழ் சிறி replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அவரின் இறுதி உரை. 👇 //என் இறுதி பயணத்தை தயார்படுத்தி உள்ளேன், நான் இப்போது எனது கடைசி இறுதி பயணத்தை தயார் செய்துள்ளேன். இப்போது, நம் மதத்தின்படி, இறப்பதற்கு முன் மெழுகுவர்த்தியைக் கொடுக்கலாம். எனது உடலை தூக்கிக் கொண்டு செல்லும் சவப்பெட்டியை இலட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து வாங்காமல் அந்தப் பணத்தில் ஏழைப் பிள்ளைகளுக்கு புத்தகம் கொப்பி உணவு என்பனவற்றை வாங்கி தருமாறு கூறியுள்ளேன். எனது மயானத்திற்கு வருபவர்கள் யாரும் அழுது கொண்டு என் பின்னால் வர மாட்டார்கள். அதற்காக நான் ஒரு பாடலை எழுதியுள்ளேன். பழகிய பாதையில் இன்றும் செல்கின்றேன் ஆனாலும் வேறு பயணம்.அதிகமான மக்கள் என் பின்னால் வருகின்றார்கள் நான் தனியாக செல்கின்றேன் என்று நினைத்து. எப்பொழுதுமே எனது பாரத்தை உனது தோளில் இறக்கி வைக்கவில்லை மகனே. கூடுதலான பாரமாக இருந்தால் பூமியில் வைக்கவும் உனது தோல் வலிக்கும் என் மகனே. எமது தோட்டத்தின் பக்கத்தில் உள்ள குளத்தின் அருகில் எனக்கான இறுதிக் குழியை நானே அமைத்து வைத்துள்ளேன் என் சிறிய மகனே.. என்னை விட்டு செல்லும்போது உனது அம்மாவின் மருந்து பற்றுச் சீட்டை மறக்காமல் சென்று கொடுத்து விடு என் மகனே.. எனது பெரிய மகன் ஏற்கனவே இறந்து விட்டான் என் தனிமைக்கு அவன் அங்கு இருப்பான் அவன் என்னை பார்த்துக் கொள்வான் நீ என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம். எனது ஆசை சாதாரண ஏழையைப் போல் என்னை நல்லடக்கம் செய்ய வேண்டும். அதை விட்டு மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தாரை போல் மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை சீரழித்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்து இறப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. நான் தேடியது நான் உழைத்தது என் அரசியல் பயணம் இறுதி வரை ஏழை மக்களுக்காகவே இது நான் எனது சுயநினைவோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சென்று வருகின்றேன். நான் நேசிப்பது என்னை நேசிப்பது ஏழை மக்கள். எனது மூச்சிலும் பேச்சிலும் ஏழை மக்களின் நினைவோடு உயிர் பிரிவேன்.// Translation by Paul ✍️✍️ -
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
தமிழ் சிறி replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
@goshan_che ஊரில் நின்ற போது... எப்பிடி இருந்த கால் இப்பிடியாகி விட்டது @satan. 😂 🤣- 302 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!
தமிழ் சிறி replied to தமிழ் சிறி's topic in செய்தி திரட்டி
ஈழப்பிரியன்... சுகாதார அமைச்சில் இருந்து 679 வாகனங்கள் காணாமல் போயிருக்கும் போது ஆடு காணாமல் போவது சின்ன விசயம் போலுள்ளது. இனி மற்ற அமைச்சுக்களிலும் கணக்கு எடுத்தால்.... குத்து விளக்கில்தான் கனக்குப் பார்க்க வேண்டும்.ஏற்கெனவே... கோத்தா காலத்திலும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து பல வாகனங்கள் காணாமல் போனதாக செய்தி வந்திருந்தது. -
பாஞ்ச் அண்ணை சென்ற மாதம் யாழ்ப்பாணம் போய் வந்தவர். அவர் சொன்னார்... கடையில் பொருட்கள் வாங்க நின்றால், சிலர் வந்து குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கித் தரும்படி கையை பிடித்து கெஞ்சுவார்களாம். பார்க்க பெரும் பரிதாபமாக இருக்குமாம். அவர்களில் இருவகை உண்டாம். சிலர் வறுமையில் வேறு வழி இல்லாமல் கேட்பவர்கள். மற்றவர்கள் வாங்கிக் கொடுத்த பொருளை கொண்டு போய் வேறு இடங்களில் பாதி விலைக்கு விற்று விட்டு அந்தக் காசில் போதை ஏற்றுவார்கள் என்றார். இதனால்... யாருக்கு கொடுப்பது, யாரை தவிர்ப்பது என்று அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார். அதனால்.... உண்மையான வறியவர்களும் பாதிக்கப் படுகின்றார்களாம்.
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!
தமிழ் சிறி replied to தமிழ் சிறி's topic in செய்தி திரட்டி
கள்ளன்... பேராசை பிடித்து, அம்பிட்டுப் போனார். பிடிபடாமல் விட்டிருந்தால்... அவ்வளவு ஆடுகளையும் கொழும்புக்கு கொண்டு பொய்ய கொத்து ரொட்டி போட்டு விற்றிருப்பாங்கள். -
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை மிரட்டிய விவகாரம்: கைது செய்யப்பட்டவருக்குப் பிணை. வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த உணவகத்தின் உரிமையாளர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு அளுத்கடை பகுதியிலுள்ள உணவு ஒன்றிற்கு வருகை தந்திருந்த வெளிநாட்டவர் அச்சுறுத்தப்படுவதைப் போன்ற காணொளி நேற்யைதினம் சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். https://athavannews.com/2024/1378587
-
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் கடுமையாக நடந்து கொண்டவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் கடுமையாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள உணவகமொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்கு உணவக உரிமையாளர் கொத்துரொட்டியொன்றினை 1900 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்டதாகவும், இதன்போது விலை அதிகமாக இருப்பதாக சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் இதனை சுற்றுலாப் பயணி தனது கெமராவில் பதிவு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோவானது வைரலானதைத் தொடர்ந்து சந்தேகநபரான உணவு விற்பனையாளர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1378503
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் உள்ள ஆட்டு மந்தையொன்றில் இருந்து 35 ஆடுகளை கும்பலொன்று திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான நேற்று குறித்த ஆட்டு மந்தையில் பாதுகாப்புப் பணியில் இருந்த இருவரைத் தாக்கிவிட்டு கும்பலொன்று சுமார் 9 லட்சத்து முப்பத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான 35 ஆடுகளைத் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான இருவரில் ஒருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனவும், அவரிடமிருந்து 15 ஆடுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1378562
-
75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளப்பெருக்கு! 75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஓமன் மாநிலத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் பலத்த மழை பெய்து வருகிறது. இதனுடன், துபாய் உட்பட எமிரேட்டின் ஏழு பகுதிகளிலும் வெள்ளம் பதிவாகியுள்ளது. அத்துடன் புகழ்பெற்ற துபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், முழங்கால் அளவு தண்ணீரில் உள்ளதுடன் அதன் மேம்பட்ட சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் சாலைகள் கூட வெள்ளத்தில் மூழ்கின இதன் விளைவாக, அதிகாரிகள் அதன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த வேண்டியிருந்ததுடன் பல விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளை துபாய் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் துபாய்க்கான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378524
-