Jump to content

Kavallur Kanmani

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1057
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Kavallur Kanmani last won the day on May 16 2018

Kavallur Kanmani had the most liked content!

2 Followers

Recent Profile Visitors

Kavallur Kanmani's Achievements

Rising Star

Rising Star (9/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

826

Reputation

  1. உண்மையில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். நீண்ட நாட்களின் பின் தனியின் சுய ஆக்கம் அதிலும் அனுபவப் பதிவு படகுப்பயணம் அருமையாக தந்துள்ளீர்கள். முடிவு தெரியும் வரை இப்படியான எத்தனைபேர் தம் உயிரையே இழந்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்க வேதனையாக உள்ளது. கடவுள் துணையால் தப்பி விட்டீர்கள். எழுத்தோட்டமும் மிக நன்றாக உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கும் எம் வாழ்த்துக்கள்.
  2. நிழலியின் மழைக் கவிதை மிக அருமை. கவிதை அவரவர் தேடலில் பதில் தருவதாய் அமைந்துள்ளது . இக் கவிதையைப் படித்தபோது நான் சில காலத்தின்முன் எழுதிய மழைக்கவிதை ஞாபகம் வந்தது. தேடி எடுத்தேன் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக.. அந்த மழைநாளுக்காய் காத்திருந்தேன் கடைசிவரை அந்த மழை எனக்காகப் பொழிய மறுத்து விட்டது மழை பொழியும் மனம் குளிரும் என்று காத்திருந்த ஒவ்வொரு வினாடியும் ஏமாற்றம்தான் எனக்காகக் காத்திருந்தது வானம் கருக்கொண்டு மேகம் கறுத்துக் கிடந்தது இடி இடித்தது மின்னல் மின்னியது காற்றும் பலமாகத்தான் வீசியது ஆனாலும் அந்த மழை மட்டும் வரவேயில்லை வானம் வசப்படுமென்று காத்துக் காத்து மனம் காய்த்துப் போனது வானம் வெளுத்து மேகம் கலைந்து பூமி காய்ந்து கிடந்தது கடைசி வரை அந்த மழை எனக்காக மண்ணில் பொழிய மறுத்து விட்டது
  3. தமிழ்சிறி குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள். மைத்துனரின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்
  4. நீண்டநாட்களின் பின் இன்றுதான் இத் திரி கண்ணில் பட்டது. தமிழ்சிறி குணமாகி மீண்டும் வேலைக்கு போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. உறவுகள் அனைவரும் உங்கள் நலனுக்காகப் பிராத்தித்தார்கள். உங்கள் உடல் நலனில் கவனமுடன் தொடர்ந்து வேலை செய்யுங்கள்.
  5. சுவி இன்றுதான் நீண்டநாட்களின்பின் யாழை எட்டிப் பார்க்க நேரம் கிடைத்தது. தையல் கடையை முழுவதுமாக ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நானும்தான் வீட்டில் தைத்துக் கிழிக்கிறேன். நாம் எவ்வளவுதான் தைத்துக் கிழித்தாலும் எழுதிக்கிழித்தாலும் உங்களுக்கே உரிய தனித்துவமான நகைச்சுவையுடன் கூடிய எழுத்தாற்றல் எமக்கு வராது. எம்மைச் சுற்றி நடப்பனவற்றை மிகவும் கூர்ந்து அவதானித்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து ஆக்கங்களை தாருங்கள் பாராட்டுக்கள்.
  6. மோகன் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள். அப்பாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.
  7. அன்னையின் இழப்பின் துயரில் நாமும் பங்கேற்கிறோம் .ஆழ்ந்த இரங்கல்கள்
  8. யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகிடவும் நலமாக வளமாக மனநிறைவாக வாழ்ந்திடவும் இறையருள் வேண்டி வாழ்த்துகின்றேன்.
  9. யாழ்கள உறவுகள்' அனைவருக்கும் இனிய நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்கள். காற்றும் குளிரும் கோரத் தாண்டவமாடினும் ஆலயத்துக்கு சென்று திருப்பலியில் பங்கேற்று வந்து விட்டோம். கிறீஸ்து பிறப்பு அனைவர் வாழ்விலும் சாந்தியும் சாமாதானமும் அன்பும் நிறைவாக தர வேண்டி வாழ்த்துகின்றோம். நன்றிகள் நிலாமதி
  10. ஆரூரனின் முயற்சிக்கும் திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் தலை வணங்குகின்றோம். பாராட்டுக்கள்
  11. ஆடலுடன் பாடல் அருமையான இசைநிகழ்ச்சி பகிர்வுக்கு நன்றிகள்
  12. நேற்றைய தினம் இத் துயரச் செய்தியை அறிந்ததிலிருந்து மனம் மிகவும் வேதனையாக உள்ளது. என்ன சொல்லி குடும்ப உறப்பினர்களைத் தேற்றுவது வாழ்நாள் முழுவதும் வலியுடன் வாழ்வதே விதியாகிப் போனபின் இறைவன்தான் அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்க வேண்டும். இன்றைய நாட்களில் வாலிபப் பிள்ளைகள் (எனது பிள்ளைகள் உட்பட) வாகனம் ஓட்டும் பொழுது கவனச் சிதறலுடன்தான் ஓட்டுகிறார்கள். நான் வாகனத்துள் இருந்தால் பலமுறை எச்சரித்தபடிதான் இருப்பேன். இளம் கன்று பயமறியாது. இந்த விபத்தில் பாரவூர்தி ஓட்டினரின் பிழைதான். என்றாலும் பிள்ளைகள் ஒருகணம் இருபுறமும் கவனித்து எடுத்திருந்தால் என்று என் மனம் ஏக்கத்துடன் நினைக்கிறது. இனி என்ன சொல்லி என்ன? அந்த இளம் குருத்துக்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.
  13. அழகான அர்த்தமுள்ள கவிதை வாழ்த்துக்கள் உதயன்
  14. நிலாமதி நீங்கள் மருத்துவமனையில் இருந்து வீடு வந்ததை அறிந்து சந்தோசம். பூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.