விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ?
வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ?
மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே!
அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும் அன்னக்காவடிகளே!
விலை எங்கு போனீர்?
வலை பின்னி வாரீர் வார்த்தைகள் பொய்க்கின்றீர்
நிசம் இது இல்லை விழிகளே கூறும் மெய்நிலை உணர்கின்றேன்.
தமிழச்சாதி இவ்வளவு தூரத்திற்கு மலினப்பட்டுவிட்டதா?