Jump to content

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11915
  • Joined

  • Days Won

    9

கந்தப்பு last won the day on November 18 2014

கந்தப்பு had the most liked content!

Recent Profile Visitors

12661 profile views

கந்தப்பு's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

322

Reputation

  1. 1)RR, CSK,SRH, KKR 2) 1# RR 2# CSK 3# SRH 4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
  2. Jake Fraser-McGurk இன் ஆட்டத்தினை பார்த்தபின்பு நேரமிருந்தால் கலந்து கொள்கிறேன்
  3. 19வது கேள்வி எந்த அணி . நீங்கள் வீரர் ஒருவரின் பெயரை எழுதியிருக்கிறீர்கள்
  4. சன்ரைஸ் அணியில் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் விஜயகாந்த் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
  5. இந்தியாவில் தமிழகத்தில்தான் தேசியக்கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லை. இங்கு திமுக அல்லது அதிமுகக்குதான் ஆதரவு. இதனால் தேசிய கட்சிகள் இவை இரண்டுடன் மாறி கூட்டணி வைத்திருக்கின்றன. எனினும் 2006 உட்பட பிஜேபி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டிருக்கிறது . 2006 இல் சட்டசபை தேர்தலில் 232 தொகுதியில் 226 தொகுதியில் போட்டியிட்டது. இதில் 2.1% வீத வாக்குகளை பெற்றது. விபரங்களுக்கு https://en.wikipedia.org/wiki/2006_Tamil_Nadu_Legislative_Assembly_election 2006 இனை விட இப்பொழுது பிஜேபிக்கு வாக்குவீதம் கூடியுள்ளது. திமுக 180 தொகுதிகள்,200 தொகுதிகள் போட்டியிட்டு இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்
  6. 2009 முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்தபின்பு 2010 இல் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்மாவட்டத்தில் கிடைத்த வாக்குகளில் முதலிடம் பிடித்தார் சரத் பொன்சேகா. மகிந்தாவை தோற்கடிக்க சரத் பொன்சேகாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து. அத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் சிவாஜிலிங்கம் அல்லது விக்கிரமபாகு கருணாரட்னா போன்றவர்களுக்கு வாக்களித்திருக்கலாம். ஆனால் தங்கள் இனத்தினை அழித்த சரத் பொன்சேக்காவுக்கு, மகிந்தா தோற்க வேண்டும் என்பதற்காக அங்கு மக்கள் வாக்களித்தார்கள். வட இந்தியாவில் மோடி ஆதரவு அதிகமென்றாலும், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அதிகம். இதனால்இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 6.58% ( சென்ற சட்டசபை தேர்தல்) விட அதிகளவு கூடுமா என்பது யோசனையாக இருக்கிறது. நான் நினைக்கிறேன் 5% - 8% வீத வாக்குகள் கிடைக்கும். சட்ட சபை தேர்தல் என்றால் வாக்கு வீதம் அதிகரிக்கலாம். அடுத்த சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடுகிறார். யாரின் வாக்குகளை கவரபோகிறார்?. விஜயின் திரைப்பட இரசிகர்கள் இளைஞர்கள். அவர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்களா?
  7. விஜயகாந்தின் கட்சி 2006 இல் முதலாவதாக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. முதல் தேர்தலில் 8.5% வித வாக்குகளை பெற்றது. வன்னியர் அதிகம் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி செல்வாக்குள்ள விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10.29% வாக்குகளை தேமுக பெற்றது . 2011 இல் அதிமுக அணியில் தேமுக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்ற சிலர் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஜெயாலலிதாவை சந்தித்து அவருக்கு ஆதரவை வழங்கினார்கள் . அவர்களில் சிலர் அதிமுகவில் இணைந்தார்கள். (கருணாவை விடுதலைப்புலிகளில் இருந்து ரணில் பிரித்ததினை போல) விஜயகாந்தின் மனைவி, மைத்துனரின் கட்சியில் செல்வாக்கு செலுத்த பல தொண்டர்கள் அதிமுக, திமுகவில் இணைந்தார்கள். அப்பொழுதே தேமுகவின் வீழ்ச்சி ஆரம்பித்தது. 2014 நாடாளுமன்றத்தேர்தலில் தமிழருவி மணியன் முயற்சியில் பிஜேபி கூட்டனி , 2016 இல் திமுகவுடன் பேரம் பேசி அதைவிட அதிக இடங்கள் மக்கள் நலக்கூட்டணியில்பெற்று போட்டியிட்டு தேதிமுக வாக்குவீதத்தினை இழந்து செல்வாக்கினை இழந்து விட்டது திமுக , அதிமுகவுக்கு மாற்று என்று தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜய்காந்த். இன்னும் 10 வருடத்தில் நாம் தமிழரின் நிலமை ஓரளவு தெரியும். வாக்குவீதம் எவ்வளவு அதிகரிக்கும் ? அல்லது குறையுமா?
  8. ஆம் நான் இந்த திரியில் முழுவதையும் வாசிக்கவில்லை. காதல் தோல்வியினால் இறந்து போனவர் என்று சொன்ன நபரையும் தெரியும். 3 மணித்தியாலங்கள் உண்ணாவிரதம் இருந்து எல்லோரையும் ஏமாற்றியவரையும் தெரியும். ஆனால் நீங்கள் அவரது கட்சி அல்லது அவரை மட்டும் எதிர்க்காது தொடர்ந்து அன்று தொட்டு இன்றுவரை ஆதாரவாக குரல் குடுப்பவர்களை ( அவர்கள் திராவிடக் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பதினால் அல்லது தேர்தல் கூட்டணி என்பதிலா) எதிர்ப்பது சரியா? . 1989 இல் ஈழத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவோடு ஈரோஸ் இயக்கம் பாராளுமன்றதேர்தலில் போட்டியிட்டது. இத்தேர்தலில் இவர்களை எதிர்த்து EPRLF இல் சுரேஷ் பிரேமச்சந்திரன் போட்டியிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட மண்டையன் குழுவால் பல அப்பாவி இளைஞர்கள் சித்திரவாதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். 2004 இல் விடுதலைப்புலிகளின் ஆதரவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களில் ஒருவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஒருவர். அண்ணன் திருமாவளவன், அய்யா வைகோ, அய்யா ராமதாஸ், சகோதரர் அன்புமணி ஆகியோரை பற்றி நாம் தமிழர் தம்பிகள் இனி விமர்சிக்க வேண்டாம்” என்று அன்பு கட்டளை இட்டுள்ளார் சீமான்.- அண்மையில் யாழில் வந்த செய்தி . ஆனால் நீங்கள் துரோகிகள் என்கிறீர்கள் பிற்காலத்தில் சீமான் இவர்களுடனும் கூட்டணி வைக்கலாம். அப்படி வைத்தால் அவரை துரோகி என்பீர்களா? அல்லது ராஜதந்திரம் என்பீர்களா அல்லது கூட்டணி வைத்தாலும் ஈழ ஆதரவாக இருக்கிறாரே என்று சொல்வீர்களா?
  9. திமுக ,அதிமுகவுக்கு நிரந்தர வாக்குகள் எப்பொழுதும் இருக்கும். 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. அந்த தேர்தலில் அதிமுக 37 இடங்களையும் , NDA கூட்டாணியில் பிஜேபி, பாட்டாளி மக்கள் தல ஒரு இடங்களை பெற்றது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைதான் 2 வது பெரிய கட்சி. அத்தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 27.18%. 27% வீத வாக்குகள் பெற்றிருந்தும் 39 தொகுதியிலும் ஒரு இடங்களை பெறமுடையவில்லை. 8% வீதத்துக்கும் குறைவான வாக்குகளை கொண்ட நாம் தமிழர் கட்சி எத்தனை இடங்களை பிடிக்கும். அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கொம்னியூஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகள் 5.47%. இம்முறை இவை திமுக கூட்டணியில். அத்துடன் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு இருப்பவர்கள் பெரிய கட்சிக்கே வாக்களிப்பார்கள். 2014 தேர்தல் விபரங்களை பார்க்க https://en.wikipedia.org/wiki/2014_Indian_general_election_in_Tamil_Nadu
  10. சீமானின் ஆதரவிற்காக எங்களுக்கு ஆதரவுதந்தவர்களை குறை கூறுவது அழக்கல்ல . முத்துக்குமார் தொடங்கி பலர் எமக்காக தீக்குளித்தார்களே. இவர்களில் தீராவிட கழகங்களை சேர்ந்தவர்களும் பலர். ராசீவ் கொலையில் சந்தேகப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடிய பேரறிவாளன் திராவிடக்கழக குடும்பத்தினைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி களமான சேலம் மாவட்டம் புலியூரில் இருக்கும் பொன்னம்மான் நினைவு கூடத்தில் மாவீரர் நாள் சிறப்பாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் குளத்தூர் மணி உட்பட பல திராவிட கழகத்தினை சேர்ந்தவர்களும் ஒவ்வொரு வருடங்களும் கலந்து கொள்வார்கள். இதே போல பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இவை எம்மவர்களின் ஊடங்களில் வருவதில்லை . சசிகலாவின் கணவர் நடராஜா வழங்கிய நிலத்திலேயேதான் முள்ளிவாய்க்கால் முற்றம் தஞ்சையிலே கட்டப்பட்டது . இதில் பலரது பங்களிப்பு இருக்கிறது நாங்கள் யாழில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எமக்காக தமிழகத்தில் இருந்து வந்து போராடி வீரமரணம் அடைந்தோறும் இருக்கிறார்கள். கீழே இணைத்த இணைப்பில் பாருங்கள். இதில் தமிழகத்தினை சேர்ந்த கரும்புலியும் இருக்கிறார் https://www.thaarakam.com/news/38071
  11. ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்? 😀
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.