Jump to content

poet

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2116
  • Joined

  • Last visited

  • Days Won

    7

poet last won the day on January 14 2020

poet had the most liked content!

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

6991 profile views

poet's Achievements

Mentor

Mentor (12/14)

  • Dedicated Rare
  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

502

Reputation

  1. வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளை அவன் மீண்டும் முறிக்கும் போது அவனை அவர்கள் மீண்டும் அரசனாக்குவர்
  2. இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் இனவாதமும். IBC TAMIL INTERVIEW PART 1
  3. ஐ.பி.சி பேட்டி April, 6 ,2022 பகுதி 2 நான் நினைக்கிறேன் அமரிக்கா இலங்கையின் அன்னிய செலாவணி நெருக்கடியில் ரணிலை அரசுக்குள் கொண்டுவந்து சர்வதேச நிதி நிறுவனத்தினூடாக தீர்வுகாண தீர்மானித்துவிட்டது.
  4.  

    1. poet

      poet

      • nochchi
      •   வாழ்த்துக்கள். என் இறுதிமூச்சுவரை இந்திய கொள்கை வகுப்பில் இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகளை புரிதுகொண்டு உள்வாங்க ஓயாமல்  அழுத்தம் கொடுப்பேன்.
    2. nochchi

      nochchi

      நன்றி கவிஞரே, எமதினத்தின் விடியலைத் தவிர வேறுவிமோசனம் இல்லை. பாலா அண்ணாவும் தனது தனிப்பட் அறிமுகங்களை இனவிடுதலைக்கான செயற்பாட்டில் பயன்படுத்தியவர். உண்மையில் நட்புவட்டாரங்களையும் அறிமுகங்களையும் பயன்படுத்தவதே அறிவுடமை.

      மீண்டும் நன்றி. 

  5. இது கவிதை. கோடையிலே மர நிழலும்கோபத்திலே காதலியும்ஆறுதலைத் தரவில்லையேல்யார் தருவார் என்னுயிரே
  6. என்றும் நான் போற்றும் மாவீரன் பால்ராஜ் அவர்கள் நினைவை துதித்து அஞ்சலிகள்
  7. நல்வரவு. யாழில் பக்கங்கள் ஆரம்பிக்க முடியுமா? அதுபற்றி அறிய விருப்பம்
  8. அன்புக்குரிய ஜூட், புங்கைஊரான், வல்கனோ, என்மீதான உண்மையான குற்றச்சாட்டு தமிழ் முஸ்லிம்களை இணைத்து போராடும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டிருக்கிறேன் என்கிற அவர்களின் ஊகம் சார்ந்தது. இன்னொருபுறம் எங்கள் பண்ணையை அபகரிக்கும் முயற்சியில் சில பெரும் அரசாங்க புள்ளிகள் ஈடுபட்டிருப்பது கிழைக் கதை. அரசு கண்ணுக்குத் தெரியும் ஒடுக்குதலைக் கைவிட்டு கண்ணுக்கு புலனாகாத ஒடுக்குதலை அதிகரித்திருப்பது தொடர்பான என் ஆய்வுக் கருத்துக்கள். என்னை அவர்கள் உடல்ரீதியாகத் தாக்கவில்லை. ஆனால் சிறைக்குள் முடக்கி வைக்கப் பார்த்தார்கள். அதிஸ்ட்டவசமாமெரிக் சோல்கைம் அரசை எச்சரித்ததும் ரவ்கக்கீம் அரசைன் நடவடிக்கையை எதிர்த்ததும் பசீர் சேகுதாவுத் அரசிடம் என்விடுதலைக்காக பேசியதும் நோர்வீஜிய அரசின் உறுதியான நடவடிக்கைகளும் உலக தமிழர்களது எதிர்ப்பும் சிங்கள தோழர்களது எதிர்ப்பும் நான் சிறைப் படாமல் தப்பிக்க உதவியது. நல்லவேளையாக சிங்கள பத்திரீகைகள் விசம் கக்க ஆரம்பிக்கும்போது நான் வெளியேறியிருந்தேன். . தமதமாகி இருந்தால் சிறை நிரந்தரமாகி இருக்கும். எனக்காக குரல்கொடுத்த எல்லோருக்கும் எனது நன்றிகள். நான் மாறப்போவதில்லை.நான் எனக்குத் தோன்றுவதை செய்ய ஒருபோதும் அஞ்சியதில்லை. எனக்கு என்னுடைய 19 நாள் இலங்கை வாசத்தில் எனக்குத் தேவையான ஆய்வுத் தகவல்களில் சிலவற்றை கிரகிக்கக்கூடியதாக இருந்தது. மீண்டும் போய் என் ஆய்வுகளை பூர்த்தியாக்க வேண்டும் என்கிற மனநிலை தொடரும். யாழ்க்களத்தில் அதிக நேரத்தை செலவுசெய்துவிட்டேன். அன்புடன் விடை பெறுகிறேன்.
  9. தமிழ் சூரியன் உங்களுக்கு என் நன்றி. என்னை அறிந்த ஓரிருவராவது இருங்கு இருக்கிறீர்கள் என்பது நிம்மதி. புலிகளுக்கு எழுதிய கையால் இங்கு காகிதப் புலிகளுக்கு எழுத நேர்ந்ததுதான் என் தலைவிதி. துளசி நீங்களும் நாரதரும் விடப்பிடியாக திரும்ப திரும்ப வலியுறுத்துவதால் நம்முள் யாருக்கோ உளவியல் பிரச்சினை இருக்கலாம். என தெரிகிறது. நம்முள் யார் தவறோ அவர்களை தர்மம் தண்டிக்கட்டும்.
  10. நிழலி களநிலமை தெரியாமல் பேசுகிறீங்க. குடிவரவு குற்றச்சாட்டில் கைதாகும் வெளிநாட்டவர்களிடம் கைபேசியை பறிப்பதில்லை. கைபேசியை அனுமதித்து ஒட்டுக்கேட்பதன்மூலம்தான் அவர்கள் தகவல் சேகரிக்கிறார்கள். ஆனால் நாம் பேசும்போது அவர்கள் விரும்பினால் தொடர்பு இருக்கும். விரும்பாவிட்டால் துண்டிக்கப் படும். அப்படி ஒருமுறை தொடர்பு துண்டிக்கப் பட்டதால் என்னுடன் பேசிக்கொண்டிருந்த அருள் எழிலன் துடித்துப்போனதை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். நிழலி, உங்கள் அனுதாபத்தை கோருகிற அளவுக்கு நான் ஒன்றும் அத்தனை அற்பமில்லை.முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் எனக்கு அனுதாபம் இருப்பதாக அரசு நினைப்பதுதான் எனக்கு பிரச்சினையாயிற்று. உங்கள் அனுதாபத்தை பத்திரப் படுத்துங்கள். அது உங்களுக்குத் தேவைப்படலாம்..
  11. துளசி யாருக்கு உளவியல் பிரச்சினை என்கிற ஆய்வுக்குமுன்னம் நீங்கள் எனக்கெதிராக எழுதிய எல்லாவற்றையும் திரும்ப ஒருமுறை வாசித்துப் பாருங்கள். தப்பிவந்த களை ஆறுமுன்னம் என்மீது நீங்கள் சுமத்திய பழிகளுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு என் எழுத்தில் ஆதாரம் இருக்கா என்பதையும் ஆராய்ந்துபாருங்கள். நீங்கள் எழுதியவை ஆதரமுள்ள உண்மையென்றால் விசர் எனக்கு வரட்டுக்கும்.
  12. நண்பார் விசுக்கு, தூயவன் தெரிந்து சொன்னாரா தெரியாமல் சொன்னாரா என்பது தெரியவில்லை. ஆனால் என்னை விசாரித்தவர்கள் சொன்னதையே தூயவனும் சொல்கிறார்..
  13. உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன்.- நாரதர் நாரதர் நான் எங்கே பல்துறை விற்பனன் என்று சொன்னேன? ஆதாரத்தை வெட்டி ஒட்டுங்கள். இப்படி மற்றவர் நினைப்பதை சொல்லமுடியும் என நினைப்பது ஒரு உளவியல் பிரச்சினையல்லவா நண்பரே. வீடுவந்து 72 மணிதியாலங்கள்தான் ஆகிறது அதற்குள்ளேயே ஏன் இப்படி? நாரதர் இராசவன்னியன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி, நீங்கள் களத்தில் வாழும் பல்லாய்ரக்கணக்கான முஸ்லிம் தமிழ் உறவுகளை கேட்டுப்பாருங்கள். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் விரும்பும் கோரும் எனது ஆய்வுப் பணிகளிலும் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கான பணிகளிலும் நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. இலங்கை அரசு தமிழரையும் முஸ்லிம்களையும் சேர்த்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க நான் முயல்வதாக குற்றம் சாட்டுகிறது. சிங்களப் பத்திரிகைகளும் அதனையே சொல்கின்றன. நீங்கள் இப்படி சொல்கிறீங்க. அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை
  14. ஆன்புக்குரிய நிழலி, இது சிலருக்கு பூனை எலி விழையாட்டாக இருக்கு. ஆனால் எனக்கோ உயிர் மானபிரச்சினை. பிரச்சினை. பொத்தாம் பொதுவாக பேசாமல் உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை என் அறிக்கையில் இருந்து வெட்டி ஒட்டுங்கள். நிழலி, நான் அறிக்கை என எழுதாமல் முதல் அறிக்கை என்று எழுதியதன் பொருளென்ன? என் தோழர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தியபின் 2, அறிக்கை எழுதுவேன் என சொன்னதுகூட உங்களுக்கு புரியவில்லையா? நிழலி, ஜெயபாலன் ஏன் தயங்கவேண்டும் களத்தில் அவருக்கு தகவல்கள் தந்தவர்கள் அதன்பின்னர் புலம் பெயர்ந்திருப்பார்கள்தானே. தயங்க வேன்டியதில்லை என நினைதீர்களா?. ஆனால் அவர்கள் இன்னும் புலம்பெயராமல் ஊரில் இலங்கை சர்வாதிகாரத்தின் பிடிக்குள் இருக்கிறார்கள். அதனால்தான் என் அறிக்கையை பிரித்து ,முதல் அறிக்கையை மட்டும் வெளியிட்டேன். தயவு செய்து உங்கள் பக்கம் தவறிருந்தால் மனச்சாட்சியுடன் தவறை என்று ஒத்துக்கொள்ளுங்கள். தவறில்லையெனில் தொடர்ந்தும் அப்படியே எழுதுங்கள். நான் உயிரோடிருப்பது முஸ்லிம் மக்களதும் எரிக் சோல்கைமினதும் ஆதரவால் நிகழ்ந்தது. அது என் தவறல்ல என்பதையாவது நம்புங்கள் நிழலி. தன்நெஞ்சறிவது பொய்யற்க்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.