இது பிரான்சில் புனிதஆத்மாக்கள் தினம். நவம்பர் 1ம் திகதி இறந்தவர்களது கல்லறைக்கு சென்று விளக்கேற்றி மலர்வைத்து வழிபட்டு அவர்கள் ஆத்மா சாந்திக்காக பிராத்தித்து விட்டு வருவது இதுதான் பல நூற்றாண்டுகளாக வழைமை எமது ஆடி அமாவாசை போன்றது. ஆனால் எந்த விடயத்தையும் பணம் பண்ணும் அமெரிக்காவும் நிறுவனங்களும் 31 திகதியை பேய்கள் தினமாக அறிவித்து அதனை வியாபாரமாக்கி குழந்தைகளை கவரும் பொருட்கள் மற்றும் வித்தியாசமான ஆடைகளை அணிந்து இரவு விடுதிகளில் குடித்து கும்மாளமடிக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இந்த கலோவின் பிரான்சிற்குள் நுளைந்து 12 வருடங்கள் தான் ஆகின்றது.மற்றும்படி கு சா சொன்னது போல சாதாரணமாய் இங்கு சந்தைகளில் யாருமே பூசணிக்காயை வாங்குவதில்லை யாராவது வயதானவர்கள் வாங்கி சூப்பு வைப்பார்கள். இண்டைக்கு மட்டும்தான் இதற்கு யாவாரம்.