உலோக ஒலி எழுப்பும், பழங்கால தூண்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்ற ஊரில்... பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது இந்தக் கல் மண்டபம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் நம் பண்பாட்டு அதிசயங்களைப்போல தான் இந்த இடமும் எவ்வித பராமரிப்புமின்றி காணப்படுகிறது. அப்பகுதி குழந்தைகள் விளையாடும் இடமாக மட்டுமே இப்போது பயன்பட்டு வரும் இந்த கல் மண்டபத்தில் உள்ள கற்தூண்களை தட்டினால்..... வித்தியாசமாக உலோகங்களில் இருந்து வெளியாகும் சத்தம் நமக்கு கேட்கிறது. இதை இப்பகுதி மக்கள் இசை தூண்கள் என்று அழைக்கின்றனர். கற்களால் செத்துக்கப்பட்ட தூண்களில் இருந்து உலோகத்தின் ஒலி கேட்கிறதென்றால் ஆச்சரியம் தானே...!