சொந்தப்பெயர்: சிவஞானசுந்தரமூர்த்தி ஐங்கரன்
இயக்கப்பெயர்: ஜெயம்
முகவரி: புலோலி தெற்கு , பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
சம்பவம்: முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்.
உறவுகளே!
இம் மாவீரன் பருத்தித்துறையிலுள்ள யா/புற்றளை மகாவித்தியாலயத்தில் 1995 வரை கல்வி கற்று அவ்வாண்டிலேயே விடுதலைப்புலிகளின் அமைப்பில் இணைந்து இம்ரான் பாண்டியன் படையணியில் ஜெயம் என்னும் பெயருடன் சிறந்த விடுதலைப் புலியாக முள்ளிவாய்க்கால் இறுதி வரை செயற்பட்டவர்.
ஏற்கனவே இவரது தம்பியாரான கடற்கரும்புலி மேஜர். பொதிகைத்தேவன்( சிவஞானசுந்தரமூர்த்தி. தயாபரன்)மாவீரராகியுள்ளார். இப்புகைப்படத்திலுள்ள ஐங்கரன்/ ஜெயம் என்பவருக்கு என்ன நடந்ததென்று தெரியாது உறவினர்களால் தேடப்பட்ட நிலையில் , சிங்கள ஊடகம் ஒன்றினால் பகிரப்பட்ட புகைப்படங்களிலிருந்து இனங்காணப்பட்டுள்ளார்.
இம் மாவீரனுக்கு எமது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ளுவோம்.