வணக்கம் வாத்தியார்.....!
பாலென அழுவோர்க்கு பால் தருவோம்
பசுங் கூழென துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம்
யாவும் தனக்கென நினைப்போரை
சிறையிடுவோம்.....!
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை
நீங்கி வரவேண்டும் திருநாட்டில்
பொதுவுடைமை ....!
--- எதிர்காலம்---
வணக்கம் வாத்தியார்.....!
மைப்பூசும் கண்ணோடு பேசு மேகம் என்று
அதை, பொய் பேச வைக்காதே நீ நாணம் என்று
அப்பாடி ஆகாது வேகம் நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே ஆவாரம் பூவும் நானும் ஒன்று
கண் வைத்த பின்னாலே கை வைக்க கூடாதா
கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா
என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது
என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால்தானே மாது
மார்மிதும் தோல் மீதும் சாய்ந்திருக்க
ஓ.... பாலாறும் தேனாறும் பாய்ந்திருக்க....!
--- புண்ணை வனத்து குயிலே---