பறவையினங்களில்....,
நீங்கள் மட்டும் தான்,
எரிமலைகள துப்பும்..,
கரி மேடுகளில்,
கூடு கட்டுகிறீர்கள்!
ஒரு வேளை..,
சாம்பலில் தோன்றும்,
அக்கினிப் பறவைகள்,
நீங்கள் தானோ என்றும்,
நினைப்பது உண்டு!
உங்கள் கலப்பை அலகுகள்,
உழுகின்ற ஏரிக் கரைகளில்,,
விளைகின்ற...,
சிப்பிகளின் வயிற்றில்,,
முத்துக்கள் கருக்கட்டும்!
வாடைகாற்றின் ஓசையில்..,
நீங்கள் நிகழ்த்துகின்ற நடனம்..,
பிரபஞ்சத்தின் அசைவுகளின் துல்லியத்தை,
பிரதி பலிக்கும்!
பொழுது போகாத நேரங்களில்,
பிரமதேவன் உருவாக்கிய.
படைப்புக்கள் நீங்கள்!
நாணத்தில் நனைகின்ற...,
பெண்களின் கன்னங்களில்,
வண்ணமெடுத்து..,
உங்களை வடித்திருக்கிறான்!