Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      76760


  2. nunavilan

    nunavilan

    கருத்துக்கள நிர்வாகம்


    • Points

      7

    • Posts

      51174


  3. nedukkalapoovan

    nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      32875


  4. யாயினி

    யாயினி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      9112


Popular Content

Showing content with the highest reputation on 02/21/17 in all areas

  1. பெப்ரவரி 21 - உலக தாய்மொழி தினம் · நம் தமிழ் மொழி குறித்து பெருமிதப்பட வேண்டிய சில தகவல்கள்... • தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்-இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் -மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுலவெபில் கருதுகிறார். • உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். அதில் ஒன்று தமிழ். • இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன. • இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. • தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது. • திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந்தையது. ஆனால், அதில் உள்ள சொற்களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். உதாரணம்: ‘எப்பொருள் யார்யார்வாக் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்’ • தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன. • கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத்தில் பத்து கோடி, நூறு கோடி என்றுதான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி). • வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த-வல்லினம், மி- மெல்லினம், ழ்- இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. • இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ். • உலகில் நான்கு நாடுகளில் தமிழ் அரசின் அலுவல் மொழியாக இருக்கிறது (நன்றி - இன்று ஒரு தகவல்)
    3 points
  2. ஐந்தாம் அறிவின் ஆறாம் அறிவு...நேற்று ஒருவர் இறப்பு வீடு ஒன்றுக்கு போய் விட்டு சொல்லிக் கவலைப் பட்டார்.அந்த வீட்டில் சின்ன நாய்க்குட்டி ஒளறு நிற்கிறதாம் அந்த துக்க வீட்டுக்கு போகும் அனைவரையும் வாசல் வரை வந்து பார்த்து விட்டு ஒரு ஓரமாய் படுத்துக் கொள்கிறதாம்...காரணம் அதன் எதிர் பார்ப்பு எல்லாம் தன் எஜமானர் வருகையை எதிர் பார்த்து தானாம்.....அங்கு போய் விட்டு வந்தவருக்கும் நாய்குட்டி என்றால் ரொம்ப பிரியம் தூக்கி கொஞ்ச நேரம் மடியில் வைததிருக்கும் அதன் உடல் எங்கும் சுட்டுக் கொண்டிருந்ததாம்...ஏன் இதன் உடல் சுடுகிறது என்று கேட்ட போது அந்த சீவனுக்கும் எசமானர் போய் விட்டார் என்று விளங்கீட்டு அதனால் தான் இயக்கமற்று போகிறது என்று சொல்லி அழுதார்களாம்; ஐந்துக்குள்ளும் ஓர் ஆறாம் அறிவு இருக்கிறது..
    1 point
  3. நுணாவிலானுக்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள்
    1 point
  4. பாரதியார் அன்றைக்கே சொல்லி வைச்சுட்டு போய் இருக்கிறார்.. வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறம் ஆகும் சாம்பல் நிறத்தொரு குட்டி, கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஓரே தரம் அன்றோ இந்த நிறம் சிறிதென்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை எண்ணங்கள் செய்கைகள் யாவும் இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!
    1 point
  5. From the album: "பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.

    "பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.
    1 point
  6. பறவையினங்களில்...., நீங்கள் மட்டும் தான், எரிமலைகள துப்பும்.., கரி மேடுகளில், கூடு கட்டுகிறீர்கள்! ஒரு வேளை.., சாம்பலில் தோன்றும், அக்கினிப் பறவைகள், நீங்கள் தானோ என்றும், நினைப்பது உண்டு! உங்கள் கலப்பை அலகுகள், உழுகின்ற ஏரிக் கரைகளில்,, விளைகின்ற..., சிப்பிகளின் வயிற்றில்,, முத்துக்கள் கருக்கட்டும்! வாடைகாற்றின் ஓசையில்.., நீங்கள் நிகழ்த்துகின்ற நடனம்.., பிரபஞ்சத்தின் அசைவுகளின் துல்லியத்தை, பிரதி பலிக்கும்! பொழுது போகாத நேரங்களில், பிரமதேவன் உருவாக்கிய. படைப்புக்கள் நீங்கள்! நாணத்தில் நனைகின்ற..., பெண்களின் கன்னங்களில், வண்ணமெடுத்து.., உங்களை வடித்திருக்கிறான்!
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.