ஜனவரி 19......!!!!
தனது வெண்கல மணிக்குரலால் ,
இசையால் தமிழ் வளர்த்த இசைமணி
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின்
83 வது பிறந்தநாள்....
பக்தியால் நெஞ்சுருகிக் கசிந்து இறையைத் தொடும்
இவர் பாடல்களுக்கு
நான் அடிமை....!!
சினிமா உலகிலும்
ஒரு நன்மதிப்போடு ,
நல்ல இசைக்கலைஞர்,
நல்ல மனிதர் என்று
பெயர் எடுத்தவர்....!!!
குறுமுனி
மறு அவதாரம் எடுத்து வந்தது இவர் உருவில் !
தமிழ் வளர்த்தார் என்றே சொல்லலாம்....!!!
அசரீரியாக
அவர் பாடல்களோடு ,
குறிப்பாக
'நீலமயில் மீது ,
விநாயகர் அகவல் ,
அபிராமி அந்தாதி
இவற்றுடன் தான்
என் காலைப் பொழுது விடியும்....!!!
விடிந்த இந்த வேளையில் அன்னாரின்
பிறந்தநாள் நினைவுகள் உங்களோடு.....!!!