என்றைக்கோ ஆயிரம் பச்சைகள் பெற்றிருக்க வேண்டியவர் நீங்கள்!
உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது 'தணிக்கை' செய்யப் படாத ஒரிஜினல் படமொன்றைப் பார்க்கும் உணர்வு வரும்!
அத்துடன் வாசிக்க வேண்டும் என்னும் ஆர்வமும், மற்றையவர்கள் படைப்புக்களை ஊக்குவிக்கும் பண்பும்.. உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது!
ரதியிடம் பேச்சு வாங்காத ஒரே ஒரு கள உறவு 'ஆறுமுக நாவலர்' என்று முன்பு தமிழ் சிறி எழுதிய நினைவு!
இப்போதெல்லாம் ரதி ..என்னை ஒரு முறை திட்ட மாட்டாரா என்னும் ஏங்கும் அளவுக்கு நீங்கள் ஒதுங்கிக் கொண்டது தான் எனது வருத்தம்!
வாழ்த்துக்கள் ரதி.. யாழை வளப்படுத்துங்கள்!