யாழ்.இந்துக்கல்லூரிக்கு 3மாடிக்கட்டடம் மற்றும் மலசலகூட வசதிகளைஅமைத்துக் கொடுக்க 12மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் தெரிவித்தார்.இன்று யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்.இந்துக்கல்லூரி மிகச் சிறந்த பாடசாலையாக விளங்குகின்றது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு போதிய இடவசதியில்லை. மற்றும் மலசலகூடவசதிகள் போதியளவு இல்லை போன்ற விடயங்கள் தொடர்பில் பாடசாலை சமூகத்தினர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.அவர்களின் கருத்தை உள்வாங்கி யாழ்.இந்துக்கல்லூரிக்கு 10மில்லியன் ரூபா செலவில் 3மாடிக்கட்டடமும்,2மில்லியன் ரூபா செலவில் மலசலகூடவசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கையிலே உயர்தரத்தில் கணிதத் துறையில் முதலிடம் பிடித்த பாடசாலையாக யாழ்.இந்து விளங்குவது பாராட்டத்தக்க விடயமாகும். எனது தந்தையின் வழியில் இருந்து தமிழ் மக்களின் நலன் முக்கியப்படுத்தப்பட்டு பேணப்பட்டு வந்தது.அதேபோல நானும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு காத்திரமாக நடந்து கொள்வேன். கல்வி அமைச்சின் கொள்கை வேறுபாடின்றி அனைவருக்குமே கல்வி என்ற நிலைப்பாடு,ஜனாதிபதி,பிரதமர் கூறியிருக்கின்றனர் இலங்கையில் வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியை சமமாக புகட்ட வேண்டும்.இலங்கையின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது என்பது முக்கியவிடயமாகும். எனவே தமிழ் மக்களின் நலனுக்காகவும்,அவர்களின் எதிர்கால வாழ்வுக்காகவும் அயராது பாடுபடுவேன் என்றார்.