Jump to content

Recommended Posts

மாவிட்டபுர தேவதாசி மீது நட்டுவச்சுப்பையனார் படிய படல்

கனகி புராணம்

எழுதியவர்: நட்டுவச் சுப்பையனார்

பிள்ளையார் காப்பு

1.

சித்திர மறையோர் வீதி சிறந்திடும் வண்ணையூர்க்குக்
கத்தனாம் வைத்தீசர்க்குக் கனத்ததோர் நடனஞ்செய்யும்
குத்திர மனத்தளாகுங், கொடியிடை, கனகி நூற்குப்
பித்தனாயுலா மராலிப் பிள்ளையான் காப்பதாமே

நாட்டுப் படலம்

2.

தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத்,
தளதளத் தொன்றோ டொன்றமையா(து)
அடர்த்திமையாத கறுத்த கணதனால்
அருந்தவத் தவருயிர் குடித்து,
வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து,
மதகரிக் கோட்டினுங்கதித்துப்,
படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து,
பருமித்த துணைக் கன தனத்தாள்

3.

நடந்தா ளொரு கன்னி மாராச
கேசரி, நாட்டிற் கொங்கைக்
குடந்தா நசைய, வொயிலா
யது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார்; சந்யாசிகள் யோகம்
விட்டார்; சுத்தசைவரெல்லாம்
மடந்தானடைத்துச் சிவ
பூசையும் கட்டிவைத்தனரே.

சுயம்வரப் படலம்

4.

ஈட்டுந் தனத்தையே விரும்பி,
யிரண்டு தனமுந் தான் கொடுத்து,
மூட்டுங் காமக் கனலெழுப்பும்,
முகில்போலளகக் கனக மின்னே!
நாட்டுப் புறத்திலிருப்போரில்,
நல்லவுடையும், பொய்ம் மொழியும்,
காட்டும் மானிப்பாயாரைக்
கண்ணாற் பாரும், பெண்ணாரே.

பிரதி பேதம்

ஈட்டுந் தனத்தைத் தான் விரும்பி,
இரண்டு தனமுந் தானீந்து,
மூட்டுங் காமக் கனலெழுப்பு
மொழிசே ரழகே கனக மின்னே!
நாட்டுப் புறத்தி லிருப்போரில்
நல்லுடையும், பொய் மொழியுங்
காட்டும் மானிப்பாயாரைக்
கண்ணாற் பாருங் கோதையரே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

5.

காட்டுக் குயிலைக் குடியோட்டிக்,
கனத்த நாவி னெய் தடவி,
மாட்டு மினிய சொல்லுடைய
மானே, கனக மரகதமே!
ஓட்டைக் காதினுடனிருப்போன்
ஒளி சேர் புடவை விற்கின்ற,
நாட்டுக் கோட்டையார் தமக்குள்,
நல்லாண்டப்ப னல்லாளே.

பிரதி பேதம்

காட்டுக் குயிலைக் கடி தோட்டிக்
கனத்த நாவி னெய் தடவி
மாட்டு மினிய சொல்லாளே
மானே தேனே கனக மின்னே!
ஓட்டைக் காதி னுடனிருந்
தங்குவந்தே புடவை விற்கின்ற
நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள்
நல்லாண்டப்ப னிவன் காணே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

6.

சொல்லால் மயக்கி, யாடவர் தஞ்
சூழ்ச்சி யறிந்து, காம நிலை
எல்லார் தமக்கு மூட்டுவிக்கும்
இருள் போலளகக் கனக மின்னே!
பொல்லாதவர்க்குப் பொல்லாப்புப்
பூட்டுந் திறலினுடனிருப்போர்
மல்லாகத்தில் வீரரிவர்;
மற்றோர் நவாலி யூராரே.

பிரதி பேதம்

சொல்லால் மயக்கி ஆடவர்தஞ்
சூழ்ச்சி யறிந்து காம நிலை
யில்லாதவர்க்கு மெழுப்புவிக்கு(ம்)
இருள்சே ரளகக் கனக மின்னே!
பொல்லா மனமும் அழுக்காறும்
பொய்யும் புரட்டுமே மலிந்த
மல்லாகத்து வீரரிவர்
மற்றோர் நவாலி யூராரே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

7.

நத்தே பெற்ற முத்தனையாய்,
நவிலும் திருப்பாற் கடல் கடைந்த
மத்தேயனைய தனக் கனகே!
மாரன் கணையை வளர்ப்பவளே!
பத்தோடொன்றிங் கவரென்னப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்தூர் மணியம் சின்னையன் (சண்முகங் காண்)
புறத்தோன் தம்பியுடையானே.

பிரதி பேதம்

நத்தே யின்ற முத்தனையாய்
நவிலுந் திருப் பாற் கடல் கடைந்த
மத்தே யனைய ஸ்தனக் கனகே!
மாரன் கணையை வளர்ப்பவளே!
பத்தோ டொன்றிங் கிவரெனப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்தூர் மணியம் சின்னையன்
புறத்தோன் தம்பி யுடையானே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

8.

தாமரை முகையுங், கோங்கின தரும்பும்,
தந்தியின் கொம்புடன் சிமிழுங்,
காமரு சூதின் கருவியுங், குடமும்,
காமனார் மகுடமுங் கடிந்தே,
சேமமாய் வென்று, கூவிளம் பழத்தைச்
சேர்ந்திடு தனமுடைக் கனகே!
நாம மிங்கிவர்க்குக் களஞ்சியக்
குருக்கள், நங்கை நீ காணுதியென்றாள்.

பிரதி பேதம்

தாமரை முகையுங் கோங்கின தரும்பும்
தந்தியின் கொம்புடன் சிமிளுங்
காமர் சூதாடு கருவியு மெழில் சேர்
காமனார் மகுடமுந் தடிந்தே
ஏமமாகிய கூவிளங் கனி நிகராய்
எழில் சேர் அழகே கன மின்னே
நாமமிங்கிவர்க்கே களஞ்சியக்
குருக்கள் நங்கை நீ காணுதியென்றாள்.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

9.

அரிபாற் கடலைக் கடைந்த தினத்
ததிலே யெழுந்த மலர்த்திருவும்
உருவுக் கிலை நிகரென்றுரைக்கும்
ஒளி சேரழகே, கனக மின்னே!
தெருவிற் சனி போலிருந்து நினைத்
தேடித் தேடித் தியங்கு சிவப்
பிரகாசப் பேர் படைத்தவன் காண்;
பின்னோன் தம்பி இவனாமே.

பிரதி பேதம்

அரிபாற் கடலைக் கடைந்த தினத்திலே
யெழுந்த மலர்த் திருவும்
உருவுக் கிலை நிகரென்ன வுரைக்கு
மொழிசே சேரழகே கனக மின்னே!
தெருவிற் சனி போலிருந்து நினைத்
தேடித் தேடித் தியங்கு சிவப்
பிரகாசப் பேர் படைத்தவன் காண்
பின்னோன் தம்பி இவனாமே
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

10.

தாலக் கனி யொன்றினுக்காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு,
வேல் கத்திகள் கொண்டெறிந்து, மிக
விசயம் பொருதும் வள நாடன்,
மால் பற்றிய நெஞ்சினனாகி,
வந்தான், கனகே, மன்றலுக்கு,
நீலக் கருங் கார்மேக நிற
நியூற்றனிவன் காண், நேரிழையே!

பிரதி பேதம்

தாலக் கனி யொன்றினுக் காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு,
வேல் கத்திகள் கொண்டெறிந்து, மிக
விசயம் பொருதும் வள நாடன்
மால்பற்றிய நெஞ்சினனாகி வந்தான்
கனகே நின் மன்றலுக்கு
நீலக் கருங் கார் மேக நிற
நியூற்ற னிவன் காண், நேரிழையே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

11

ஊரார் சுணங்கு தோற்றாமல்
உயர் சாந்தணிந்து, வடம் பூட்டி,
வாரான் மறைக்குந் தனக் கனகே!
வரி வண்டூத முகை யவிழும்
நீராற் பொலிந்த சரவை வளர்
நெய்த நிலத்தான், வங்க நிறை
ஊராத்துறைக்கு மணிய மிவன்,
உடையா ரருணாசலத்தின் மகன்.

பிரதி பேதம்

ஊராற் சுணங்கு தொடராம லுயர்
சாந்தணிந்து வடம் பூட்டி
வாரால் மறைக்குந் ஸ்தனக் கனகே!
வரிவண் குமுத முகை யவிழும்
நீராற் பொலிந்த சரவைவளர்
நெய்த நிலத்துக் கிறையாகும்
ஊராத்துறையின் மணியம் மற்றிவன்
காணென்ற னொண்ணுதலே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

12

தொட்டுப் பிடிக்கத் தனமேனும்
தோளே யெனினுந் தான் கொடுக்கும்
மட்டுப் புரண்ட குழலாளே!
மாரன் வில்லைக் குனிப்பவளே!
எட்டுத் திக்கு முழு தாளு
மிதயத்துடனே யிங்கிருப்போன்
வட்டுக்கோட்டை நெற் கணக்கில்
வாழுஞ் சுப்பு காணு மென்றாள்.

பிரதி பேதம்

தொட்டுப் பிடிக்கத் தனத்தோடு
தோளை யீகுந் திறமுடைய
மட்டுக் கடங்காத் திறம் படைத்த
மானே தேனே கனக மின்னே!
பட்டுப் புடவை தனிற் கொணர்ந்து
பரிவாகப் பணத்தை யீகின்ற
வட்டுக்கோட்டை நெற் கணக்கன்
வாழுஞ் சுப்பு காணு மென்றாள்.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

13

பூப் பாயலின்மே லாடவரைப்
பொலிவோ டிருத்திப் பொருள் கவரக்
காப்பாங் கச்சுதனை நீக்கும்
கனகே! நடக்கு மனப் பெடையே!
பாப்பார் மிகவுந் தனைச் சூழப்
பங்கே ருகம்போல் வைகு மிவன்
கோப்பாய் முத்துக்குமாருவென்று
சொல்லுங் குமரர் போரேறே.

பிரதி பேதம்

பூப் பாயலி லாடவரைப் பொலிவோ
டிருத்திப் பொருள் கவரக்
காப்பாய கச்சுதனை நீக்குக்
கன்றே கனக மின்னே!
பாப்பார் மிகவுந் தமைச் சூழப்
பங்கேருகம் போல் வீற்றிருக்கும்
கோப்பாய் மணிய மிவர் தம்மைக்
கண்ணாற் பாருங் கோதையரே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

14

மறுவற் றிலங்கு மதிமுகத்தில்
வாள்சேர்ந் தனைய வுண்கண்ணாய்
நிறையச் சொருகும் பூங்குழற்கு
நிகர்வே றில்லாக் கனகமின்னே!
அறிவுக் கினியான் அவனிதனில்
யார்க்கு முதவி செயவிரும்புங்
கறுவற்றம்பி யெனும் பெயரோன்
கண்ணன் றனக்குச் சரிவந்தோன்.

15

பொன்னைப் பொருவு மருமத்திற்
புடைகொண் டெழுந்த வனமுலையாய்,
மின்னைச் சிரிக்கு நுண்ணிடையாய்,
வேய்த்தோட் கனகே யிவணிருப்போன்
தன்னைப் போல வேறொருவர்
தரணி தலத்தி லுள்ளாரோ?
வென்னப் பேசும் நன்னியிவன்
இடறுப் பூச்சு மெய்யானே.

16

மானினைக் கயலை வனத்தினிற் றுரத்தி,
மறலிக்குக் கொலைத் தொழில் காட்டிப்
பானலை யோட்டி வடுவினை வாட்டிப்
பருத்த செவ்வேலையும் பழித்துக்
கூனல்வாள் நஞ்சி னமுதினோடுறவு
கொண்டிடும் விழியுடைக் கனகே!
தேனின நீங்கா மலரணி புயத்துச்
செல்வநாயக மிவன் தேவே.

17

மானைக் கயலை வேல் வாளை
மறுநீர்க் கடலைக் குவளையை நற்
கானிற் கமலந் தனைவெல்லும்
கண்ணாய் கனகே யிவணிருப்போன்,
ஞானக் குணமும் நல்லறிவும்
நலஞ்சேர் புகழு மிகவுடையோன்,
ஆனைக்கோட்டை வேளாளன்
ஆறுமுகன்கா ணென்பாரே.

18

கொஞ்சிக் கடிக்கத் தனங் கொடுத்துக்
கொடுத்த தனத்தைத் தான் வாங்கும்,
மஞ்சட் புரண்ட முகத்தாளே!
மாரன் கரும்பை வளைப்பவளே!
கிஞ்சிற் றனமும் குத்திரமுங்
கேடு நிறைந்த மனமுடையோன்
வஞ்சக் கொடியோன் பெரியதம்பி
வரத்தால் வந்த வைத்தியனே.

19

வண்டார் மாலைக் குழலாளே!
மதிசேர்ந்தனைய முகத்தாளே!
கண்டார் வணங்குங் கண்ணாளே!
கனகென் றுரைக்குங் காரிகையே!
உண்டார் போக மிவனைப்போ
லுளரோ விந்த வூர்தனிலே,
தண்டார் புனையும் பண்டார
மென்றா ரந்தத் தாதியரே.

20

செப்பைப் பழித்துக் கலசத்தைச்
சிரித்துத் தெங்கி னிளநீரை
யொப்பப் புடைத்த தனக் கனகே!
யுன்னைப் புணரு மவாவுடையோன்
எப்போதெனினு முனதேவ
லெங்கே யென்று திரியுமிவன்
சுப்பிரமணியன் பெற்றெடுத்த
சூன னிவன்காண் சுரிகுழலே.

21

மானினைப் பழித்த கண்ணும்
வடிவினுக் குவமை யில்லாத்
தேனினு மினிய செஞ்சொற் றெரி
வையே கனகே கேண்மோ
ஊனுணும் பரிதி வேல் வாளொளி
பெற வீங்கிருப்போன்
தானை சூழுடுவில் வாழும் தன் கை
யொன்றில்லா வேந்தே.

22

கனத்துப் புடைத்துப் பருத்து விம்முங்
கதிர்ப் பூண் முலையாய், கனக மின்னே!
மனத்துக் கிசைந்த மணவாள
னிவன்றா(ன்) இந்த மகிதலத்தில்
தனத்துக் கிவனே; சரச மொழி
தனக்குமிவனே; தான் கொள்ளுஞ்
சினத்துக் கிவனே! திருமலைச்சின்
னையனிவன் காண் சேயிழையே.

வெட்டை காண் படலம்

23

வெட்டை யென்னும் வியாதி தலைப்பட்டுத்
தட்டுக் கெட்டுத் தனித்தனி யாடவர்
பொட்டுக் கட்டிய பூவையினா லென்று
முட்டுப்பட்டனர் (மூத்திரம்) பெய்யவே.

24

செட்டித் தேர்தெருத் தேவடியார்களுள்
மெட்டுக்காரி கனகியை மேவியோர்
தட்டுப் பட்டுத் தலைவிரிகோலமாய்
முட்டுப் பட்டனர் (மூத்திரம்) பெய்யவே.

25

மேகங்கள் யாவு முயர் விண்ணீங்கி வேசையர்தந்
தேகங்களில் வாசஞ் செய்கையான் - மாகமிசை
யாசைக்குங் கார்காணோ மவ்வேசையார் கொடுப்பர்
காசைக் கொடுப்பார்க்குக் காண்.
Link to comment
Share on other sites

கீழ்கண்ட பதிவை படித்த போது கனகி புராணம் குறித்த அறிமுகம் கிடைத்தது.

யாழ்ப்பாண கலாச்சாரம் சீரழிகிறதா ?? - தேவகெளரி

6609_119568311413_722131413_2940858_4355743_n.jpg

யாழ்ப்பாண கலாசாரம் சீரழிகிறது!

தடம் மாறும் யாழ்ப்பாண கலாசாரம்!

இத்தகைய தலைப்புகளில் பல்லேறு கட்டுரைகளை இணையங்களில் காணமுடிகிறது.அதை பல்வேறு பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் மீள் பிரசுரம் செய்தும் வருகின்றன.யாழ்ப்பாணம் பற்றிய இன்றைய முக்கிய செய்தியாக பாரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

பலரும் படித்து கேலியும் கிண்டலுமாக அபிப்பிராயம் முன்வைப்பதும் நடக்கிறது.போரினால் அடைபட்டுக்கிடந்தவர்களுக்கு சுதந்திரம் வந்ததும் இப்படி தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.இதில் முக்கியமாக எடுத்தாளப்பட்டவை இளைஞர்களின் காதல் விவகாரம்ääகருக்கலைப்புääபெண்களின் ஆடைகள்ääஇளைஞர்களின் களியாட்டங்கள் என்பனவே.

இதெல்லாம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. அதனால் இது ஒன்றும் புதிதில்லை.யாழ்ப்பாணம் ஒன்றும் புனித பூமியில்லை என்று சொல்வோரின் கருத்துக்களையும் நாம் இங்கு கவனத்தில் எடுக்கிறோம். ’கனகி புராணம்’; (மாவிட்டபுர தேவதாசி மீது நட்டுவச்சுப்பையனார் படிய படல்) கலாசாரமும் யாழ்ப்பாணத்திற்கே உரியது.

அதேநேரம் இன்றைய நவீன ஊடகங்களின் வருகையும் இதை பூதாகரமாக்கியுள்ளது என்பதும் உண்மைதான். யாழ்ப்பாண கலாசாரம் மீது ஆழ்ந்த கரிசனை கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளாக இவை தெரியவில்லை. போரின் கோரக்கைகள் சிதைத்து தள்ளிய மனிதர்கள் வாழும் யாழ்ப்பாணமும் வன்னியும் உங்கள் ‘யாழ்ப்பாண கலாசாரத்துக்குள் அடங்கியிருக்கிறது.

ஒரு நீண்ட யுத்தத்திற்கு பின்னால் உருக்குலைந்துள்ள சமூகத்தை எப்படி நோக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியுடன் நாம் நடக்கிறோமா?ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் இத்தகைய கட்டுரைகளுக்க பின்னால் எமக்கு இருக்கக்கூடிய நோக்கு என்ன?இந்த விடயங்களை சிந்திக்காமல் யார்மீது வன்மம் தீர்க இத்தகைய கட்டுரைகள்?

காதலர்களின் சல்லாபம்ääஇளம் பெண்களின் கருக்கலைப்புääகுடி கும்மாளம்ääபெண்களின் ஆடை இவைகள் பற்றித்தான் அதிகமாகப் பேசப்படுகின்றன.

காதலர்களின் சல்லாபமும் இளம்பெண்களின் கருக்கலைப்புபற்றியும் எழுதும் போது பெருமளவில் பெண்கள் மீதான கோபமும் கீழ்தரமான பார்வையும்தான் கட்டுரைகளில் விஞ்சிநிற்கிறது.ஆண் பெண் வீதியில்நின்று கதைத்தாலே கலாசார சீரழிவு என்று பேசிய சமூகம் பின்னாளில் ஆணும் பெண்ணும் பொதுதளத்தில் வேலை செய்ய இறங்கியபோது வாய் மூடி மௌனமானது மட்டுமல்லாமல் ஆண் பெண் சேர்ந்து பேச சமூகத்தில் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன என ஒத்துக்கொண்டது.இன்று ஆண் பெண்ணை ஒரு இடத்தில் பார்த்தால் ஐயோ..ஐயோ….கலாசாரம் சீரழியுது..என்ற கூச்சல்.

இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பெண்களை அங்கு சுதந்திரம் கிடைத்தபின் ‘சரி இனி நீங்கள் உங்கள் வீடுகளில் போய் வேலைபாருங்கள்’ என்றனராம்.பொது வேலைக்காக தங்கள் வாழ்க்கையை 10 ää20 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக அர்ப்பணித்த அவர்கள் பொது தளத்தில் ஊடாடிய அவர்களுக்கு அந்த பொது தளத்தில் வாழ்வாற்கான அனுமதி மறுக்கப்பட்டது. வீடுகளில் குடும்ப அலகையும் அமைக்க முடியாத அந்த பெண்களுக் பொது தளத்தில் வேலைகளை உருவாக்கி கொடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தினுடையது.இந்த அனுபவம எங்களுக்கும் இருத்ககிறது.சிறைகளிலும் விடுதலையானோரும் அங்கஙகளை இழந்தோரும் தங்கள் வாழ்வாதாரங்களைத் தேடி கையறு நிலையில் நிற்கின்றனர்.அவர்களுக்கான ஆற்றுப்படுத்தலை எப்படி நாம் முன்வைக்க போகிறோம்?

இவர்கள் ஒரு புறம் இருக்க இந்த போருக்குள் பிறந்து சிறுபராயத்தை தெலைத்து மொட்டவிழும் காலத்தினுள் இருக்கும் நம் இளைஞர் கூட்டம் இப்போது கொஞ்சம் பயமின்றி நடமாட தலைப்பட்டுள்ளனர்.

அவர்களின் அந்த மனத்தளவிலான சுதந்திரத்தில் முக்கியமாக இருப்பது வீட்டுக்கு வெளியில் நண்பர்களுடன் அளவளாவுதல் இதில் காதல் ஒன்றும் புதிதல்ல.தனிநபர் உணர்வுகளை சமூகத்தில் வெளிப்படுத்துவது பற்றிய அறிதலை முழுமையாக இழந்தவர்கள் அவர்கள்.சமூகத்தின் ஒரு அங்கமாக தம்மை நினைப்பதை விட தனிநபர்களாகவே தம்மை காத்துக்கொண்டவர்கள்.அவர்களின் செயற்பாடுகள் மிகச்சுதந்திரமானதாக இரு;க்கும்.ஆனால் காலம் இடம் அறிந்த இங்கிதங்களை அவர்கள் முற்றாக இழந்தவர்களல்ல.கோயில்களை அசிக்கப்படுத்தும் காம ஜோடிகள் என்ற ஒரு கட்டுரையும் பார்த்தேன்.அது புதுமைப்பித்தனின் பொன்னகரமாக கூட இருக்கலாம்.

புhலியல் தொழில் அதிகரித்திருப்பதாகவும் சில கட்டுரைகள் கூறின.இதை எல்லாவற்றையும் ஒட்டுமொத்த யுhழ்ப்பாண கலாசார சீரழிவுக்கான அசிங்கங்களாக பார்க்காமல் இந்த நிலைகளுக்கான பின்புலம் பற்றிய அறிதலில் இருந்து புதிய நிலைகளை எதிர்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே தமிழ் சமூகத்தில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை விகிதாசாரப்படி மிக அதிகமாக உள்ள நிலையை ஆய்வொன்றின் மூலம் முன்வைத்திருந்தேன்இஅதில் குறிப்பிட்டது போல் தமிழ் சமூகத்தில் கலாசார மீள் கட்டுமானம் அவசியம் என்பதை மீண்டும் முன்வைக் விரும்புகிறேன்.2000 ஆண்டு சுமைகளுடன் இன்னும் ஓட முனைந்தால் அழிவுதான் மிஞ்சும்.மீட்டெடுத்தல் என்பது கூட கலாசாரத்திற்கு பொருந்தாது.காலசாரம் என்பது - அதன் எல்லா கூறுகளும ;- ஒடாத குட்டை நீரல்ல.

எம்.எஸ்.ரி.கௌரி

(24.07.2011 அன்று தினக்குரலில் வெளியானது .)

http://www.penniyam....og-post_11.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் நன்றி பகிர்வுக்கு, இன்றுதான் தெரியும் இப்படி கனகி புராணமே இருக்கென்று.கண்ணகி புராணங்களை சொல்லியே கனகி புராணத்தை மறைத்துவிட்டார்கள்

கம்பனின் இராமாயனம் என்றால் எல்லோரும் ஆகா என்ன ஒரு கவி.............நட்டுவச்சுப்பையனார் பாடினா ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை. கலாச்சாரக் காவலர்கள் கட்டாயம் கனகி புராணத்தையும் படிக்கவேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.