Jump to content

கருத்துக்களக் குழுமங்கள்


Recommended Posts

அடிப்படைக் குழுமங்கள்

[கருத்துகள நோக்கர்கள்]

இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணையாது, பார்வையாளர் மட்டத்தில் மட்டும் இருப்பவர்கள் - கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்களை வாசிப்பவர்கள்.

இவர்களுக்கு "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் செயலரங்கம், யாழ் நாற்சந்தி" ஆகிய பிரிவுகளைப் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை.

மற்றும் "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் தரவிறக்கம்" பிரிவினைப் பார்ப்பதற்கான அனுமதி உள்ளது - ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை.

அதேபோல் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும் அனுமதி உள்ளது - ஆனால் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி இல்லை.

[விண்ணப்பித்தோர்]

இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் இணைவதற்கு விண்ணப்பித்தவர்கள். கருத்துக்களத்தில் பதிவு செய்தபின் இவர்களுக்கு - இவர்கள் பதிவு செய்யும்போது கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த மின்னஞ்சலில் உள்ள தொடுப்பை அழுத்துவதன் மூலம், தாம் கருத்துக்களத்தில் பதிவு செய்தமையை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அதன் பின்னர் கருத்துக்கள நிர்வாகத்தால் அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டு, யாழ் கருத்துக்கள உறுப்பினர்களாக அனுமதிக்கப்படுவர்.

[புதிய உறுப்பினர்கள்]

இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்கள். அதாவது, பதிவு செய்தவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள்.

இவர்களுக்கு "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் அரிச்சுவடி, யாழ் உறவோசை" ஆகிய பிரிவுகளில் மட்டுமே புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி உள்ளது.

அது தவிர "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் செயலரங்கம், யாழ் நாற்சந்தி, யாழ் தரவிறக்கம்" ஆகிய பிரிவுகளைப் பார்ப்பதற்கான அனுமதி உள்ளது - ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை.

அத்தோடு, ஏனைய அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும் அனுமதி உள்ளது. ஆனால் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி இல்லை.

[கருத்துக்கள உறவுகள்]

யாழ் கருத்துக்களத்தில் புதிதாக இணைந்து, "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் அரிச்சுவடி" பிரிவில் தமது அறிமுகத்தையும் (கட்டாயம்), "யாழ் உறவோசை" பிரிவில் யாழ் இணையம் பற்றிய கருத்துக்களையும் (விரும்பின்) எழுதிய பின்னர், கருத்துக்கள நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டு வழங்கப்படும் அங்கத்துவ நிலை.

இவர்களுக்கு ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான முழுமையான அனுமதி உள்ளது. "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் முரசம்" பிரிவில் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கான அனுமதி இவர்களுக்கு இல்லை. அப் பிரிவில் கருத்துக்கள நிர்வாகத்தினர் மட்டுமே புதிய தலைப்பினைத் தொடங்க முடியும்.

கருத்துக்கள உறவுகள் நிலையில் இருப்பவர்கள் தாங்கள் எழுதும் கருத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதி உள்ளது. ஒருவர் தான் எழுதிய கருத்தில் உள்ள இலக்கணப் பிழைகளை (எழுத்துப்பிழை, சொற்பிழை, வசன அமைப்புப் பிழை) திருத்துவதற்கும், தான் எழுதிய கருத்தில் மேலதிக ஆவணங்களை இணைப்பதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் தனது கருத்தை எழுதியதன் பின் - மற்றவர்கள் அவரின் கருத்துக்களுக்கு பதிலளிக்காத வரை - அவர் தன் கருத்தில் திருத்தம் செய்வதற்கான அனுமதி உள்ளது. ஆனால், எழுதப்பட்ட கருத்துக்கு ஏனையவர்கள் பதிலெழுதிய பின்னர் - அந்தக் கருத்தை முற்றாக நீக்குவதற்கோ, அந்தக் கருத்தின் உள்ளடக்கப் பொருளை மாற்றுவதற்கோ அனுமதியில்லை. (எனவே, ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் சிந்தித்து எழுதவும்.)

[கருத்துக்கள நிர்வாகம்]

யாழ் இணைய பொறுப்பாளர்களால் கருத்துக்களத்தை மட்டுறுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இவர்கள். கருத்துக்களத்தின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய தலைப்பைத் தொடங்கவும், பதில் கருத்தெழுதவும், அனைத்து உறுப்பினர்களதும் கருத்துக்களை மட்டுறுத்தவும் முடியும்.

கருத்துக்கள உறவுகள் குழுமத்துள் இணைக்கப்படுவதற்கான நிபந்தனைகள்:

புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் அரிச்சுவடி" பகுதியில் தம்மைப் பற்றிய அறிமுகத்தை விளக்கமாக முன்வைக்கவேண்டும். அதாவது "யாழ் அரிச்சுவடி" பகுதியில் புதிய தலைப்பு ஒன்றினை தொடங்கவேண்டும். தமிழில் தட்டச்சு செய்து எழுதத் தெரியாதவர்கள், தமது அறிமுகத் தலைப்பில் எழுதிப் பழகலாம்.

அறிமுகம் என்றதும் உங்கள் பற்றிய தனிப்பட்ட விபரங்களைத் தரவேண்டும் என்று கட்டாயமல்ல. ஆனால், ஓரு வரி அறிமுகமாக அல்லாமல் விரிவான அறிமுகமாக அது அமைதல் வேண்டும். உதாரணமாக: நீங்கள் யாழ் இணையத்தை எப்படி, எப்போது அறிந்துகொண்டீர்கள், யாழ் இணையத்தில் உறுப்பினராக இணைந்தமைக்கான காரணம், உங்கள் ஆர்வங்கள், யாழ் கருத்துக்களத்தில் உங்களுக்கு பிடித்த பிரிவுகள் போன்றவை பற்றி எழுதலாம்.

"யாழ் அரிச்சுவடி" பகுதியில் அறிமுகத்தை எழுதுவதும், அத்தலைப்பில் சக கருத்துக்கள உறுப்பினர்களுடன் கருத்தாடல் செய்வதுவும், ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்ளவும் உதவும்.

அதேபோல், கருத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்த நிலை அங்கத்துவம் வழங்கப்படமாட்டாது. எழுதப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே "கருத்துக்கள உறவுகள்" என்ற குழுமத்தில் சேர்த்துக்கொள்வது பற்றி "கருத்துக்கள நிர்வாகத்தால்" தீர்மானிக்கப்படும். குறிப்பாக, தமது அறிமுகத் தலைப்பில் தமிழில் எழுதுகிறார்களா, ஏனைய கருத்துக்கள உறவுகளோடு பண்போடும், நட்போடும் பழகுகிறார்களா போன்ற விடயங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படுகின்றன.

கருத்துக்கள உறவுகள் குழுமத்துள் இணைக்கப்படுவதற்கு பரிந்துரைத்தல்:

அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்சு செய்து எழுத முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாராவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் - அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதில் எதுவித சிக்கலும் இல்லை என்றால் - உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

அப்படி உங்கள் நண்பர்களைப் பரிந்துரைக்க விரும்புவோர் எமக்கு (கருத்துக்கள நிர்வாகத்தினருக்கு) தனிமடலில் தெரிவித்தால், நாம் அதனை பரீசீலனை செய்து "கருத்துக்கள உறவுகள்" குழுமத்துள் இணைத்துவிடுவோம்.

Link to comment
Share on other sites

செயல்நிலைக் குழுமங்கள்

[செய்திக் குழுமம்]

யாழ் இணைய பொறுப்பாளர்களால் யாழ் இணையத்தின் செய்திப்பிரிவை ஒருங்கமைப்பதற்காகவும், ஒழுங்கமைப்பதற்காகவும், செய்தி தொடர்பான ஆக்கங்களை உருவாக்குவதற்காகவும், அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட குழுமம். இவர்களின் முயற்சியின் பயனாய் வாரம் ஒரு கருத்துப்படமும், வாரம் ஒரு செய்தி அலசலும் யாழ் இணையத்தில் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: கறுப்பி

[ஒஸ்ரேலிய குழுமம்]

நாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் யாழ் இணையக் குழுமம் இது. ஒஸ்ரேலியாவிலிருந்து கருத்தெழுதும் உறுப்பினர்கள் இக் குழுமத்தில் இடம்பெற்றுள்ளார்கள். யாழ் இணையம் சார்பாக ஒஸ்ரேலியாவில் சில முயற்சிகளை மேற்கொள்வதும், ஒஸ்ரேலியாவில் இருந்து புதிய உறுப்பினர்களை கருத்துக்களத்தில் இணைப்பதுவும், யாழ் இணையத்தை விளம்பரப்படுத்துவதும் இக்குழுமத்தின் செயற்பாடுகளில் சிலவாகும்.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: தூயா

* ஒஸ்ரேலியாவில் இருக்கும் உறுப்பினர்கள் இக் குழுமத்தில் இணைவதில் ஆர்வமிருப்பின், தூயாவுடன் தனிமடலூடாகத் தொடர்புகொள்ளவும்.

[ஒரு பேப்பர் குழுமம்]

ஒரு பேப்பருடன் ஊடகத் தொடர்பைப் பேணவும், ஒரு பேப்பர் இதழில் யாழ் இணையத்தில் இடம்பெறும் ஆக்கங்களை பிரசுரிப்பது தொடர்பாக ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ளவும், யாழ் இணையத்தின் செய்திக் குழுமம் சார்பில் ஒரு பேப்பரில் செய்யப்படவிருக்கும் சிறப்புப் பக்கமான "விரியம்" தொடர்பான கருத்தாடலை நடாத்தவும் இந்தக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: குறுக்காலபோவான் ("விரியம்" தொடர்பான), வலைஞன்

[நேசக்கர அமைப்பு]

கருத்துக்கள உறவு Danklas ஆல் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் அடிப்படையில் உருவானதே இந்த நேசக்கர அமைப்பு. தாயக மக்களுக்கான தெரிந்தெடுக்கப்பட்ட சில சிறு உதவித் திட்டங்களை ஒருங்கமைப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்குமான குழுமம் இது. இத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்வோரோ இக் குழுமத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: டங்கிளஸ், சாத்திரி

* நேசக்கர அமைப்பின் செயற்திட்டங்களில் இணைந்து பங்களிக்க விரும்புவோர் Danklas அல்லது sathiri உடன் தனிமடலூடாகத் தொடர்புகொள்ளவும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு குழுமங்களும், யாழ் இணையத்தில் இடம்பெறும் சில செயற்திட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுமங்கள் ஆகும். இந்தக் குழுமங்களுக்கான சிறப்புப் பிரிவுகள் யாழ் இணையக் குழுமம் என்கிற பிரிவின் கீழ் தனித் தனியாக உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுமங்களுக்கான சிறப்புப் பிரிவுகளை கருத்துக்கள உறவுகள் அனைவரும் பார்க்கமுடியும். ஆனால், அதற்குள் இருக்கும் ஆக்கங்களை வாசிக்க முடியாது. அந்தந்தக் குழுமங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த சிறப்புப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், கருத்துக்களை எழுதவும் அனுமதி உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.