Jump to content

எமது வீட்டுத் தோட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு :lol: அதென்ன கொடி??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகாசி பிறந்தால் ஐப்பசி முடியும் வரை சிறிய தோட்டத்துடன் பொழுது போகும்.கத்தரி மிளகாய்(பலவகை)தக்காளி பயித்தை புடலங்காய் பாவல்காய் இப்படி 5 மாதங்கள்.வீட்டில் எல்லோரும் புறுபுறுப்புத் தான்.உதுக்கள்ள கொட்டுற காசுக்கு கடையில வாங்கிப் போடலாம் என்று.ஆனாலும் ஒவ்வொரு காய்கறியாக புடுங்கும் போது முந்தியடித்துக் கொண்டு போய் புடுங்குவினம்.

தூயா பயிற்றை புடலை பாவல் எல்லாம் கொடிகள் தானே.

Link to comment
Share on other sites

ஓ அது தானா...எனக்கு அடையாளம் சொல்ல முடியவில்லை..ஊரில் பார்த்த நினைவு..

எங்க வீட்டில் இப்ப மிளகாய் இருக்கு :lol:

Link to comment
Share on other sites

ஐரோப்பாவில் இப்போது குளிரில் எல்லாம் உறைந்துபோய் குளிர் பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது.

உங்கள் தோட்டத்திலுள்ள புடலங்காயைப் பார்த்தவுடன் நா ஊறுகின்றது.

Link to comment
Share on other sites

எந்த நாட்டில் ஈழப்பிரியன் நீங்கள் அமெரிக்காவில தானே இருகிறீங்கள் அங்க எமது காய்கறி பயிரிடக்கூடிய கால நிலை இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் நியூயோர்க்கில் இப்போது 30-40 பரனைட்.இதுவே வைகாசி வந்தால் ஐப்பசி வரை 80 வரை போகும்.இது இப்போது செய்த பயிரல்ல.சென்ற கோடை கால பயிர்.இப்போ தான் படத்தை இணைத்துள்ளென்.இதுவே புளேரிடா மானிலமாக இருந்தால் எமது நாடு மாதிரி எந்த காலமும் பயிர் செய்யலாம்.

Link to comment
Share on other sites

ஈழப்பிரியன்,

உங்கள் மரக்கறித்தோட்டம் சூப்பர். நீங்கள் யாழ் களத்தில் மட்டுமல்ல நடைமுறை வாழ்விலும் சுறுசுறுப்பான மனிதர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஊரில நாமளும் தோட்டங்கள் போட்டோம். ஆனால் வெளிநாடுகளில் நமக்கு இந்தத் தோட்டம் எல்லாம் சரிவராது. தோட்டம் போட்டால் எனக்கு பூச்சிகள், நுளம்புகள், இலையான்கள், கொசுக்கள் வீட்டுக்குள் கூடுதலாக வருவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாப்பிளை சிறிய ஒரு இடத்தில் சுறு சுறுப்பாக இயங்க என்ன இருக்கிறது.உண்டாக்குவது மட்டும் தான் எனது வேலை.இப் படங்களை இணைத்ததற்கு காரணம் புலத்தில் உள்ளவர்கள் நிறைய பேர் புடலங்காயை கண்டிருக்கமாட்டார்கள்.எனது பிள்ளைகளே புடலங்காயை புதினமாக பார்த்தார்கள்.அத்துடன் புடலங்காய்க்கு கல்லுகட்டுவதையும் மிகவும் நுணுக்கமாக ஒவ்வொரு நாளும் பார்ப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ! நியுயோர்க்கிலும் புடலங்காயிற்கு கல்லுக்கட்ட வேணுமா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் இது இலங்கையில் இருந்து கொண்டுவந்த விதை.அமெரிக்க புடலங்காய் என்றால் நீங்கள் நினைப்பது போல் நடக்கலாம்.கடை தெருவெல்லாம் தேடினேன்.இதுவரை காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டம்,மரக்கறிகள் என்பவற்றுடன் வாழ்ந்த எனக்கு ஈழப்பிரியன் இணைத்த படங்களை பார்த்ததும் கண்கலங்கி விட்டது. :D:D:( என்று திரும்பும் அந்த இனிய வாழ்க்கை?

Link to comment
Share on other sites

தோட்டம் போட்டால் எனக்கு பூச்சிகள், நுளம்புகள், இலையான்கள், கொசுக்கள் வீட்டுக்குள் கூடுதலாக வருவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது!

ஆக மொத்தத்தில மாப்பிள்ளைக்கு ஒரு வீடு இருக்கின்றது என்றும் அது தோட்டம் போடக்கூடியமாதிரி அமைந்துள்ளது எனவும் புரிகிறது.

உங்கள் தோட்டத்திலுள்ள புடலங்காயைப் பார்த்தவுடன் நா ஊறுகின்றது.

அது என்ன "தித்திக்கும்" பலாப்பழமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில மாப்பிள்ளைக்கு ஒரு வீடு இருக்கின்றது என்றும் அது தோட்டம் போடக்கூடியமாதிரி அமைந்துள்ளது எனவும் புரிகிறது.அது என்ன "தித்திக்கும்" பலாப்பழமா? :D

ஓமோம் மாப்பு வீடு வாசலோடை வசதியாய்த்தான் இருக்கிறார்.ஏன் ஏதும் ஆளை மடக்குற பிளானோ?ஒரு ஆம்பிளைய தனிய இருக்க விடமாட்டியளே.வந்துட்டாளுங்க.

................. :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில மாப்பிள்ளைக்கு ஒரு வீடு இருக்கின்றது என்றும் அது தோட்டம் போடக்கூடியமாதிரி அமைந்துள்ளது எனவும் புரிகிறது.

அது என்ன "தித்திக்கும்" பலாப்பழமா? :D

புடலங்காய்க்கு மட்டுமில்லை கத்த்த்த்த்த்தரிக்காய்க்கு

Link to comment
Share on other sites

தோட்டம் பிரமாதம். காய்கறி வகைபற்றிச் சொன்னீர்கள்.

ஆமா தோட்டத்தினருகே நிற்பது யாருடைய கார்?

யார் அந்த அம்மணி? சொல்லவில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நேர்வே என்னா கேள்வி இது.எமது வீட்டுத் தோட்டம்.எமது வண்டி.நிற்பது தோட்டக்காறி.

Link to comment
Share on other sites

ஐயா நேர்வே என்னா கேள்வி இது.எமது வீட்டுத் தோட்டம்.எமது வண்டி.நிற்பது தோட்டக்காறி.

நிற்பது தோட்டக்காறி? :)

Link to comment
Share on other sites

ஈழப்பிரியன்,

உங்கள் மரக்கறித்தோட்டம் சூப்பர். நீங்கள் யாழ் களத்தில் மட்டுமல்ல நடைமுறை வாழ்விலும் சுறுசுறுப்பான மனிதர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஊரில நாமளும் தோட்டங்கள் போட்டோம். ஆனால் வெளிநாடுகளில் நமக்கு இந்தத் தோட்டம் எல்லாம் சரிவராது. தோட்டம் போட்டால் எனக்கு பூச்சிகள், நுளம்புகள், இலையான்கள், கொசுக்கள் வீட்டுக்குள் கூடுதலாக வருவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது!

ஆக மொத்தத்தில மாப்பிள்ளைக்கு ஒரு வீடு இருக்கின்றது என்றும் அது தோட்டம் போடக்கூடியமாதிரி அமைந்துள்ளது எனவும் புரிகிறது.

அதைவிட மாப்பிளைக்கு Arthropod பூச்சியனங்களை(ஒட்டுண்ணிகள்/ஒட்டுப்படை) கண்டால் பிடிக்காது என்றும் விளங்குகின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிற்பது தோட்டக்காறி? :)

என்ன மாப்பிழை கேள்விக்குறியுடன்.ஏன் ஏதாவது எழுத்து பிழையா?

Link to comment
Share on other sites

உங்களுடைய தோட்டம் நல்லாயிருக்கு ஈழபிரியன் அவர்களே! எனக்கும் வயல், தோட்டங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்..ஆனால் கடவுள் ஏனோ எனக்கு அந்த சந்தர்பத்தை இன்னும் அளிக்கவில்லை!

தோட்டம்,மரக்கறிகள் என்பவற்றுடன் வாழ்ந்த எனக்கு ஈழப்பிரியன் இணைத்த படங்களை பார்த்ததும் கண்கலங்கி விட்டது. :icon_idea::icon_idea::D என்று திரும்பும் அந்த இனிய வாழ்க்கை?

ஓஓஓஓஓஓஓ! இப்படி வேற கதை போகுதோ? நான் நினைத்தேன் நீங்கள், பனை மரத்துடனும், தென்னமரத்துடனும் தான் வாழ்ந்தீங்கள் என்று! :P

Link to comment
Share on other sites

"ஐயா நேர்வே என்னா கேள்வி இது.எமது வீட்டுத் தோட்டம். எமது வண்டி. நிற்பது தோட்டக்காறி."

ஆமா, அப்பிடி சொல்லுங்க ஈழப்பிரியன் சார்.

அதிஸ்டசாலி நீங்க, தனியா தோட்டக்காரி வைச்சிருக்கீங்களே.

எங்க வீட்டிலையும் தோட்டமிருக்கு ஆனால் மரக்கறியுமில்லை

தோட்டக்காரியும் இல்லை, வீட்டுக்காரிதான் இருக்கா.

வண்டியுமிருக்கு(2) ஆனால் தோட்டப்பக்கம் போகாது.

Link to comment
Share on other sites

வணக்கம் ஈழப்பிரியன் நல்லாய் இருக்கு தோட்டம் அப்ப உங்கள் வீட்டில் தினம் தினம் நல்ல மரக்காறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டம், அசத்தல் ஈழபிரியன்,எங்கன்ட வீட்ட தோட்டம் இருக்குது ஆனால் மரம்

ஆ....... :icon_idea::lol::lol: வரட்டா.......

இல்லை...........................அட அட மரம் இருந்தால் தான் தோட்டம் என்று சொல்ல வேண்டும்.

:D:D:blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய தோட்டம் நல்லாயிருக்கு ஈழபிரியன் அவர்களே! எனக்கும் வயல், தோட்டங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்..ஆனால் கடவுள் ஏனோ எனக்கு அந்த சந்தர்பத்தை இன்னும் அளிக்கவில்லை!

ஓஓஓஓஓஓஓ! இப்படி வேற கதை போகுதோ? நான் நினைத்தேன் நீங்கள், பனை மரத்துடனும், தென்னமரத்துடனும் தான் வாழ்ந்தீங்கள் என்று! :P

எனக்கு பல்லெல்லாம் நெருடுது :angry: . எம் பெருமானே மூக்கியை நீதான் காப்பாத்தோனூம். :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.