Jump to content

ஆவணப்படுத்தலை ஊக்குவித்தல்


Recommended Posts

Bookcover_01_99640_200.jpg

[size=4]முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு ஈழத்தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற மிகச்சோகமான நிகழ்வாகும்.

அந்த நிகழ்விலிருந்து நாமும், நமது பிற்சந்ததியினரும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் பலவாகும்.

அதற்கு புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள கற்றறிந்த, புலமைமிக்க தமிழர்களின் பங்களிப்பு, ஈடுபாடு என்பவை

மிகமிகமுக்கியமாகும். எம்மவர்களின் எதிர்காலநல்வாழ்வு, விடுதலை, விமோசனம் என்பன அத்தகைய

செயற்பாடுகளை வேண்டிநிற்கிறது.

நாமும் நமது பிற்சந்ததியினரும், உள்ஊக்கமும் விழிப்புணர்வும்கொண்ட சமூகமாக உருவெடுக்க நமது

வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான இந்தநிகழ்வை உரியமுறையில் ஆவணப்படுத்திப் பேணுவது நம்

தலையாய கடமையாகும்.புலம்பெயர்தமிழர்கள் தாம் வாழ்ந்துவரும் மேலைநாட்டின்மக்கள், எப்படித் தம்

வரலாற்றுநிகழ்வுகள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் பேணிப்பாதுகாக்கின்றனர், அவற்றைக் கொண்டாடு-

வதின்மூலம் நினைவுகளைப் புதிப்பித்து தம் பிற்சந்ததியினரிடம் ஒப்படைக்கின்றனர் என்பதை நாம் கவனிக்கலாம்.

நாம் அந்தப்பண்புகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். நம் இளம்தலைமுறையினருக்கும் கற்றுக்

கொடுக்கவேண்டும். அந்தவகையில் நமது முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பை நாம் பல்வேறுவழிகளிலும்

ஆவணப்படுத்திப் பதிவுசெய்தல் வேண்டும். அந்தவகையில் இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சியின்

"கொலைக்களங்கள்" , ஐ.நா.பணியாளராகிய Gordon Weiss அவர்களின் "The Cage " என்ற நூல், அண்மையில்

வெளியிடப்பட்ட பிபிசி நிருபர் Frances Harrison அவர்களின் " Still Counting the Dead "

என்பன குறிப்பிடத்தக்கன. எனினும் இவர்கள் எல்லோரும் வெளியாட்கள். தாம் பல்வேறு வழிகளில் பெற்ற

தகவல்கள், சில நேரடிஅனுபவங்களைக்கொண்ட அவர்களின் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டவை அவை.

எனினும் இந்த இனஅழிப்பினால் நேரடியாகப்பாதிக்கப்பட்ட, அந்த இறுதிக்கால அவலவாழ்வில் பங்குகொண்டு,

துன்பப்பட்ட ஈழத்தமிழ்மக்களின் சாட்சியங்கள், அவர்களின் பார்வையில், கன்ணோட்டத்தில், பதிவுசெய்யப்படல்

முக்கியமானது. அந்தவகையில் முதல் ஆவணப்படுத்தலாக வெளிவந்திருப்பது கலாநிதி N மாலதி அவர்களின்

" A Fleeting Moment in My Country: The Last Years of the LTTE De-Facto State" என்ற நூலாகும்.

"Can the readers who did not experience this imagine

what it is like to watch the complete destruction of one’s

country: the physical destruction, the destruction of the

governance structures, the complete dispersal of its

people, and massacres on a massive scale? Has there

ever been such complete destruction of a country in

history? The only reason why it is not seen as such is

because my country was only in the minds of its people,

but was not recognized by the global system of

states." [ N. Malathy ]

இதனை அனுபவித்து அறியாத வாசகர்களினால் அதனைக் கற்பனை செய்யமுடியுமா? அதாவது ஒருவருடைய

நாட்டினை முற்றாக அழித்தலைப் பார்த்தல். அதனை ஆள்வதற்கான கட்டுமானங்களை அழித்தல்; அதன் மக்களை

முற்றாகச் சிதறடித்தல்; மிகப்பெரிய அளவிலான மக்கள்கொலைகள்; -- வரலாற்றில் எப்போதாவது ஒருநாடு

இத்தகைய முற்றான அழித்தலுக்கு உட்பட்டிருக்கிறதா? எமது நாடு அதன் மக்களின் மனத்தில் மட்டும்தான்

இருந்திருக்கிறது. ஆனால் அது பூகோள அரசுகளின் அமைப்பினால் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால்தான்

அதன் அழிவு பெரிதாகக் கொள்ளப்படவில்லை.

நம்மவர் என்பதினால் அவர் அந்த உணர்வுகளோடு மேலேயுள்ள வினாக்களை எழுப்புகிறார். எனவே அவர் சொல்ல

விரும்பும் செய்திகளை, ஊட்டவிரும்பும் உணர்வுகளை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். ஏனைய மக்களிடமும்

அவை சென்றடையவேண்டும். அதற்கு அவர் எழுதிய இந்த நூலை நாமும் வாங்கி வாசிப்பதுடன் ஏனையோரையும்

வாங்கி வாசிக்கும்படி தூண்டவேண்டும். நூலாசிரியரின் இந்த முன்மாதிரிமுயற்சிக்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது

நம் கடன். அவரே குறிப்பிடுவதுபோன்று " ஒருமக்கள் கூட்டம் செழுமையுடன் தொடர்ந்து வாழ்வதற்கு அதன்

வரலாற்றைப் பதிவுசெய்தல் முக்கியமான அம்சமாகும்" [ Recording history is an important aspect of the survival

of a people ]. மாவீரர்களுக்கு வணக்கமும் அஞ்சலியும் செலுத்தும் இந்தக் காலப்பகுதியில்

இந்த நூலும் அதன் கருத்துகளும் நம்மவர்களிடையே பரவலாகச் சென்றடைதல் சிறப்பானது. கீழே தரப்பட்டுள்ள

இணைப்புகளில் நூலைப்பெறுவதற்கான உதவிக்குறிப்புகள் -- விபரங்கள் -- தரப்பட்டுள்ளன.

இந்த நூலின் தமிழ்வடிவத்தை இந்த ஆண்டு முடிவில், தமிழ்நாட்டில் கோயமுத்தூர் 'விடியல் பதிப்பகம்'

வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Review #2: “A Fleeting Moment in My Country by Gogol G, Sept.24, 2012

Review of “A Fleeting Moment in My Country” September 21, 2012

Malathy’s ‘Fleeting Moment’ a testimonial to earne.. 20- 08- 12

Tamils de-facto state chronicled in new book 04-08-2012

A Fleeting Moment in My Country: The Last Years of the LTTE De-Facto State / 12 July 2012 [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.