Jump to content

புத்திசிகாமணிகளை(Smart phones) வாங்க...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size]

கைப்பேசிக‌ளின் உபயோகங்களில் தற்பொழுது பாரிய மாற்றங்கள் சமீபத்தில் ஏற்பட்டுள்ள. இவற்றிற்கு காரணம், வன்பொருள்(Hdarware) & மென்பொருள்(Software) மின்னனுவியலில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான புரட்சியாகும்.

கைப்பேசிகள் ஒருகாலத்தில் அடுத்தவருடன் பேச‌வும், குறுஞ்செய்திகள் அனுப்பவும் மட்டுமேவென இருந்த காலம்போய், இன்று இணைய‌ வலைப்பின்னல்களுடன் இணைத்தும், அதற்குமேலும் ப‌ல்வேறு கெட்டிக்கார புத்திக‌ளையும்(Smart Features) கொடுத்து பயனாளிகளுக்கு பலவித அற்புதங்களை கையடக்கத்தில் வந்துள்ளது. ஏறக்குறைய நம்மோடு வரும் நிழல் உதவியாளன் (PA) போல மாறியமை, கைப்பேசித்துறையில் அதீத வளர்ச்சியே.

சரி, நம்மில் சிலர் புத்திசிகாமணிகளை வாங்க நினைத்திருக்கலாம். அவ்வாறு வாங்க‌ உத்தேச‌த்திலிருப்போர்க்கு கீழ்க்க‌ண்ட குறிப்புக‌ள் உதவுமென நினைக்கிறேன்.

கவனிக்க வேண்டியவை:

1. நுண் செயலி(Processor): புத்திசிகாமணிகளின் உடனடி வேலைத் திறனுக்கு இதன் செயல்வேகத்தின் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்தது 1GHz இருப்பது நல்லது.

2.இயங்குதளம்(OS) : இந்த புத்திசிகாமணிகள்,க‌ணிணிகளைப் போல‌வே ஏதாவ‌து ஒரு இயங்குதளத்தைக் கொண்டே வெளிவரும். உதாரணமாக கூகிளின் ஆன்ட்ராய்ட், ஆப்பிளின் iOS4, பிளாக்பெர்ரியின் BlackBerry OS ,மைக்ரோசாப்டின் Windows Mobile, நோக்கியாவின் Symbian OS. இந்த‌ இயங்குதளங்களில் எது உங்களுக்கு பரிச்சயமானது,உங்க‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து மற்றும் செளரிய‌மான‌து என‌ முடிவு செய்யுங்கள். ஒவ்வொன்றும் அத‌ற்கென‌ "பய‌ன்பாடு ச‌ந்தை"க‌ளை கொண்டுள்ள‌ன.‌ உதாரணமாக "AppStore or Application Marketplace". இங்கே சிலவற்றை கவனிக்க வேண்டும். நீங்கள் கணணி விளையாட்டுகளையோ அல்லது வேறு சில யுத்திகளைக் கொண்ட புத்திகளையோ(Tools or Utilities) இணையத்தில் தரவிறக்கம் செய்ய இம்மாதிரி பயன்பாடு சந்தைகளில் சில வகைகளுக்கு நீங்கள் பணம் செலுத்தி பெற வேண்டியாதாக இருக்கும். எவற்றில் அதிக இலவசங்கள் (Free) கிட்டுகின்றன என்பதை விசாரியுங்கள். எப்ப‌டியும் உங்க‌ள் புத்திசிகாமணி மேற்சொன்ன‌வைக‌ளில் எதாவ‌து ஒரு இயங்குதளத்தை கொண்டிருப்ப‌தாக‌ பார்த்துக்கொள்ளுங்க‌ள். Androidல் இலவசங்கள் த்ற்பொழுது அதிகமாக கிட்டுகிறது. வசதியானவர்களெனில் iOS4 திறம்.

மேலும் இத்தகைய இயங்குதளங்கள் தற்போதைய பதிப்பாக(Latest Version) இருத்தல் மிக மிக முக்கியம். இல்லையெனில் புதிது புதிதாக வரும் கவர்ச்சியான சில அம்சங்கள்(Features) உங்கள் இயங்குதளத்தின் பதிப்பு(Version) பழையதாக இருந்தால் சரிவர வேலை செய்யாமல் குழப்படி செய்யும்.

3. இணைய இணைப்பு வசதிகள் (Internet Facility) : உங்க‌ள் புத்திசிகாமணியில் கண்டிப்பாக 'Wi-Fi(Wireless Fidelity)' இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடவே உங்கள் நாடு, சூழலுக்கேற்ப 4G, UMTS/HSDPA அதாவது 3G,GPRS, EDGE போன்ற இணைய இணையும் வசதிகள் இருக்காவென பாருங்கள். புவி இருப்பு அறிமானி(GPS) இருந்தால் இன்னும் நலம்.

4.தொடுதிரை(Touch Screen) : இது ஒரு கவர்ச்சியான வசதியென்றே சொல்லவேண்டும்.. உங்கள் புத்திசிகாமணியில் தொடுதிரை வேண்டுமா இல்லை, வேண்டாமாவென முடிவுசெய்து கொள்ளுங்க‌ள். சில‌ வகைகளில் இர‌ண்டு வசதியுமே கொண்டுள்ளன.. அதே மாதிரி, திரைகளின் அடர்த்திபுள்ளிகள் (Pixel Resolutions). அதிக அடர்த்திபுள்ளிகள்( உதாரணமாக Full HD -1080P) கொண்ட புத்திசிகாமணியை வாங்கினால் விளையாட்டுகள், காணொளிகளை மிக மிக துல்லியமாக பார்க்க இயலும். மேலும் ஒளியூட்டப்பட்ட இத்திரையில் தோன்றும் அம்சங்கள் (icons), பகல் சூரிய வெளிச்சத்தில் தெளிவாக தெரியுமாவென பார்த்துக் கொள்வது நல்லது.

அதே மாதிரி புத்திசிகாமணியின் தொடு உண‌ர்வு. ந‌ல்ல‌ தொடு உண‌ர்வை முடிவு செய்ய, வாங்குமுன் சிலமுறை தொடுதிரையை தொட்டுப் பார்த்து, அது உங்களுக்கு சரிவருமாவென தெரிந்து கொள்ளுத‌ல் ந‌லம். உங்கள் விரல்கள் விளையாட வசதியான திரையின் அளவும் (Screen Size) வேண்டும்.

5.நினைவகம் (Internal Memory): ப‌ய‌ன்பாடுக‌ளை நிறுவ‌ அதிக‌ உள்ளார்ந்த நினைவகம் தேவைப்ப‌டும். குறைந்த பட்சம் 8 GB யாவது க‌ண‌க்கில் இருத்தல் ந‌ல்ல‌து. மேற்படி அதிகம் தேவைப்பட்டால் அதிகரிக்கும் வசதியும் இருந்தால் இன்னும் நலம்.

6.மின்கலம்(Battery) : கடைசியாக, ஆனால் மிக முக்கியமாக மின்கலத்தின் பயன்பாடு கால அளவையும்(Battery Life Span) தெரிந்து கொண்டு வாங்க வேண்டும்.

7.திருத்தும் சேவை(Service) : இவ்வளவும் பெறுமதியான பொருளை வாங்கிவிட்டு, பிந்நாளில் பழுதானால், அவற்றை திருத்த உரிய வசதியுடன் கூடிய சேவை மையங்கள்(Service Centres) இல்லையென்றால் எப்படி? இவற்றையும் நோக்க வேண்டும்.

galaxy-s3-01b.jpglumia-900-01b.jpgxperia-s-01b.jpgiphone-4s.jpg

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளுக்காக சில பாகங்களின் மாதிரி(typical) படங்களை இணைக்கிறேன்..

ambarella-ione.jpg

நுண்செயலி(Micro Processor):

இயங்குதளம்(Operation System-OS)

இது பல்வேறு கணக்கு கட்டளைக்கொண்ட மென்பொருள் மறையுள் தொகுப்பாகும். கண்களால் பார்க்க இயலாது.

47d7581b-ee17-4a06-9d4e-e1ed209293e8_17.png

நினைவகம் (Memory Module)

pc246878-fcb048_cdma_450mhz_dual_sim_wifi_touch_screen_android_smartphone.jpg

தொடுதிரை(Touch Screen)

battery-for-o2-xda-graphite-pda-smartphone-battery.jpg

மின்கலம்(Battery)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில வடிவில்.. இப்படி பல பதிவுகள் இணையவெளியில் இருந்தாலும்.. தமிழில் இடம்பெற்றுள்ள இந்தப் பதிவு தமிழ் சிமாட் போன் வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி ராஜவன்னியன்.. இவற்றை பகிர்ந்து கொள்வதற்கு..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இப்ப ஒரே தமிழ் படிக்கிற ஆர்வத்தில இருக்கிறோம் எங்கே உந்த [size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size]

என்ற சொல்லை கண்டு பிடித்தநீர்கள் என்று சொல்ல முடியுமா?. இல்லாவிட்டால் நீங்கள்தான் கண்டுபிடித்தது/ உருவாகினது அதற்குரிய விளக்கம் ஏதும் இருக்க ? ஏன் என்றால் நாங்களும் எதிகாலத்தில் புதிய பெயர்களை கண்டுபிடிக்க உதவும்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்ப ஒரே தமிழ் படிக்கிற ஆர்வத்தில இருக்கிறோம் எங்கே உந்த [size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size]

என்ற சொல்லை கண்டு பிடித்தநீர்கள் என்று சொல்ல முடியுமா?. இல்லாவிட்டால் நீங்கள்தான் கண்டுபிடித்தது/ உருவாகினது அதற்குரிய விளக்கம் ஏதும் இருக்க ? ஏன் என்றால் நாங்களும் எதிகாலத்தில் புதிய பெயர்களை கண்டுபிடிக்க உதவும்.. :)

பதிவிற்கு ஊக்கமளித்த நெடுக்ஸ், நுணா, இணையவன், அபராஜிதன் மற்றும் எரிமலை ஆகியோருக்கு மிக்க நன்றி.

http://senthamil.org/அகராதி/smart

"ஸ்மார்ட்" என்பதற்கு தமிழில் அர்த்தம் என்ன? என இணையத்தில் தேடினேன்..அதற்கு கிடைத்த பதில் "புத்திசாலி" அல்லது "கெட்டிக்காரன்" என பதில் கக்கியது இணையம்..

எங்கள் கிராமத்தில் யாரும் அறிவாளியாக, அவசியத்திற்கு தகுந்தாற்போல செயல்படுவர்களை "புத்தி சிகாமணிகள்" என அழைப்பதுண்டு.

இது சம்பந்தமாக, "இருவர் உள்ளம்" திரைப்படத்தில் ஒரு பாடல் கூட உண்டு...

"ஆராரோரர ஆராரோ...! இது புத்திசிகாமணி பெற்ற பிள்ளை" என தொடங்கும். அந்த ஞாபகம் எனக்கு வந்ததால், நம் சொல்படிகேட்கும் 'ஸ்மார்ட் கைப்பேசி'க்கு புத்திசிகாமணி என நாமம் சூட்டினேன். :icon_idea:

தப்பில்லை தானே? :lol:

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே

Link to comment
Share on other sites

பதிவிற்கு ஊக்கமளித்த நெடுக்ஸ், நுணா, இணையவன், அபராஜிதன் மற்றும் எரிமலை ஆகியோருக்கு மிக்க நன்றி.

http://senthamil.org/அகராதி/smart

"ஸ்மார்ட்" என்பதற்கு தமிழில் அர்த்தம் என்ன? என இணையத்தில் தேடினேன்..அதற்கு கிடைத்த பதில் "புத்திசாலி" அல்லது "கெட்டிக்காரன்" என பதில் கக்கியது இணையம்..

எங்கள் கிராமத்தில் யாரும் அறிவாளியாக, அவசியத்திற்கு தகுந்தாற்போல செயல்படுவர்களை "புத்தி சிகாமணிகள்" என அழைப்பதுண்டு.

இது சம்பந்தமாக, "இருவர் உள்ளம்" திரைப்படத்தில் ஒரு பாடல் கூட உண்டு...

"ஆராரோரர ஆராரோ...! இது புத்திசிகாமணி பெற்ற பிள்ளை" என தொடங்கும். அந்த ஞாபகம் எனக்கு வந்ததால், நம் சொல்படிகேட்கும் 'ஸ்மார்ட் கைப்பேசி'க்கு புத்திசிகாமணி என நாமம் சூட்டினேன். :icon_idea:

தப்பில்லை தானே? :lol:

ஆழ்ந்த கருத்து, தீர்த்தது சந்தேகம்..... :icon_mrgreen::lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, தமிழ்சூரியன், வேந்தன் மற்றும் கிஸ்ஸன்.

Android_Market.png

இன்று ஆன்ட்ராய்ட்(Android) இயங்குதளத்தில் கிட்டும் தமிழ் பயன்பாடு (Tamil Applications) மென்பொருட்களை பயனர் சந்தையில்(Application Market) துழாவினேன்...

கிட்டியவைகளின் சிறு அட்டவணை:

திருக்குறள்

கல்கியின் நாவல்கள்

தமிழ் பாடல்கள் (டிஜிட்டல் தரம்)

தமில் வானொலி

தமிழ் ஊடகங்கள்

தமிழ் தொலைக்காட்சிகள்

தமிழ் நாட்காட்டி

தமிழ் நகைச்சுவை

தமிழ் அகராதி

பாரதியார் படைப்புகள்

MTC பேருந்து வழித்தடம்

திருமணப் பொருத்தம்

பல தமிழ் நடிக, நடிகைகளின் படங்கள்

ஜாதக பொருத்தம்

....

....

....

யப்பா...! பட்டியல் இன்னும் நீள்கிறது

Link to comment
Share on other sites

.

தமிழில் தொழில்நுட்ப தகவல் முயற்சிகள் கொஞ்சம் சிக்கலானவைதான். :D

பாராட்டுக்கள் ராஜவன்னியன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.   எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.   சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.   அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.   இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.   திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.   மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.   'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.   காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.   தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.   (தொடரும்..........)    
    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.