Jump to content

அரோஹரா சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரோஹரா அரோஹரா எண்டு சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை

ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயில்த் தேர் கட்டாயம் போக வேணும்

மனைவியும் பிள்ளைகளும் ஒரே நச்சரிப்பு. தாங்கேலாமல் சரி போவம் என்டாச்சுது.

பிள்ளைகளுக்குக் கோயிலில் ஈடுபாடு இல்லை . ஆனால் அங்கே வழங்கப்படும் அன்னதானம்

மற்றும் மோர் என்பன பிடிக்கும். எனக்கு இப்படியான சன நெரிசலில் அவதிப்பட விருப்பமில்லை.சிலவேளைகளில் பக்தி தானாக வரும்போது ஒரு திங்களோ செவ்வாயோ

சனக்கூட்டம் இல்லாத நாளாகப் பார்த்துச் செல்வது வழக்கம்.

விடிய வேளைக்கு நித்திரையால எழும்பினால் அம்மன் கோயிலுக்குப் போகலாம்

என முடிவெடுத்தாகி விட்டது. காலமை முழிச்சுப்பார்த்தால் ஒரே மழையும் குளிரும்.இந்த மழைக்குள்ள ஆர் கோயிலுக்குப் போறது எண்டு நான் புறு புறுக்க

கோயிலடியில மழை இருக்காது வாங்கோ போவம் எண்டு விட்டுக்காரர் முடிவெடுத்துவிட்டினம். இரண்டு குடையைக்கையில எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டாச்சுது.

காரை வேக வீதியில் ஏத்தினால் கெதியாகப் போகலாம்.ஊருக்குள்ளால போனால்

நேரம் அதிகம் எடுக்கும். மனைவியின் ஆலோசனைப்படி கோயில் இருக்கும் ஹம்

என்ற நகரத்திற்கு வேகமாக வந்து செர்ந்தாச்சுது.

கோயில் கிட்ட நெருங்க நெருங்க வாகன நெரிசலும் கூடிவிட்டது.

ஆமை வேகம்.ஒரு மாதிரித் தவண்டு உருண்டு வாகன நேரிசலுக்காலை தப்பி வந்துட்டோம் .

இனி வாகனம் நிப்பாட்ட கோயிலுக்கு கிட்டவாக ஒரு இடம் வேணும்.

ஐந்து வருடங்களின் முன்னர் கோயிலுக்கு மிக அண்மையாக வாகனங்களை நிப்பாட்ட அனுமதி இருந்தது. எங்கடை சனங்கள் பக்கத்தில் இருந்த தனியார் காணிகளிலும் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகளிலும்

கார்களை நிப்பாட்டி விட்டுக் கோயில் திருவிழா முடிய அந்த இடங்களை அசிங்கமாக்கி விடுவார்கள்.

உணவு எச்சங்களும் தண்ணீர்ப் போத்தல்களும் வாகனத் தரிப்பிடத்தை நிரப்பிவிடும்.

குழந்தைகளின் அவசரத்திற்கும் வாகனத் தரிப்பிடமே கழிப்பிடமானது.

மாம்பழப் பெட்டிகளும் மரக்கறி வாங்கிய பைகளும் காற்றில் பறக்கும் பட்டமாகின. உரிமையாளர்களின் கொந்தளிப்பால் கோயிலுக்கு அண்மையில் வாகனம் நிப்பாட்டுவதற்கு அனுமதிமறுக்கப்பட்டது.

கோயிலுக்கு மிக அண்மையில் இருக்கும் வீதிகள் எல்லாம் தேர்த் திருவிழா அன்று முடக்கப்பட்டு காவற்துறையினரின் கண்காணிப்பின் கீழ் வந்தது.

தற்சமயம் கோயிலின் இரண்டு மைல் சுற்றளவில் வாகனங்கள் நிறுத்துவது கடினம்.

ஒரு மாதிரி காவற்துறையின் கட்டளைப்படி ஒரு தரிப்பிடத்தில் வாகனத்தை

நிறுத்திவிட்டு கோயிலுக்கு நடந்தோம். மழை விட்டபாடாக இல்லை.குடை கொண்டு வந்ததால் தப்பினோம். ஆனாலும் குளிர் கைகள் விறைக்கும் அளவிற்கு இருந்தது. :)

ஊரிலை மார்கழித் திருவிழா எண்டால் மழை குளிர் எல்லாம் பார்ப்பதில்லை.

ஊரெல்லாம் வெள்ளம் பாய்ந்தோடினாலும் அந்த வெள்ளத்தில் நீந்தியே கோயிலடி

வரைக்கும் செல்லுவோம் :lol: .பின்னர் கோயில்க் கேணியில் ஒரு குளியல்.நனைந்த வேட்டிகளை

வடலியில் காயப்போட்டால் ஐந்து நிமிடத்தில் வேட்டி காய்ந்துவிடும். அது ஒரு கனாக்காலம். :rolleyes:

ஒரு மாதிரிக் கோயிலை அண்மித்ததும் ஒலிபெருக்கிச் சத்தம் காதைப் பிழந்தது.

" தயவு செய்து கோவிலுக்குள் ஒருவரும் தங்கி நிற்க வேண்டாம். உள்ளே இருப்பவர்கள் தயவு செய்து வெளியே வரவும்.

வெளியிலிருந்து ஒருவரும் உள்ளே செல்ல வேண்டாம்."

இப்படி ஐயரும் அறிவிப்பாளரும் மாறி மாறி அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன நடந்தது எண்டு எங்களுக்கு முதல்ல விளங்கவில்லை.

யாராவது குண்டுப் புரளியைக் கிளப்பி விட்டார்களோ என நான் விசாரிக்க

எதிரில் வந்தவர் சொன்னார்

" மழைக்குச்சனங்கள் எல்லாம் கோயிலுக்குள் ஒதுங்கி விட்டுதுகள்." :lol::D

விடுப்புப் பாக்க வந்தவர்களும் விரதம் இருந்து வந்தவர்களும்

காவடி எடுக்க வந்தவர்களும் கல்யாணப் பெண்ணைத் தேடி வந்தவர்களும்

கோயிலை விட்டு வெளி வராமல் அடம்பிடித்துக் கொண்டிருக்க மழையும் விடாமல்

தன் வேலையைச் செய்து கொண்டிருந்தது. இவ்வளவு சனத்தையும் தாண்டி அம்பாள்

எப்படி வெளியில் வந்து தேரில் ஏறி பக்த கோடிகளுக்குத் தரிசனம்

கொடுத்தாவோ தெரியவில்லை. :wub:

கோயிலுக்குள்ளபோற விசப்பரீட்சையில் பங்கெடுக்காமல் விறுக்கு விறுக்கெண்டு நேரடியாக

கடைப்பகுதிக்குள்ள போயாச்சு. வழமைபோல் எல்லாத் தொலைக்காட்சிக்காரரும்

உடுப்புக்கடைகளும் மரக்கறிக் கடைகளும் சாப்பாட்டுக்கடைகளும்

தொலைபேசி அட்டைகள் விற்பனை நிலையங்களும் என சுன்னாகச் சந்தை போலக்

காட்சியளித்தது. ஓயாது பெய்த மழைக்கும் அஞ்சாமல் பக்தகோடிகள் குடைகளின் கீழ் தஞ்சம் புகுந்து

கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இலவசத் தொலைக்காட்சியினர் வெறுமையாக இருந்தது கவலைக்குரிய விடயம்.

இன்னொரு தொலைக்காட்சியினர் கடை திறந்தும் காட்டுகள் வரவில்லையாம்.

நீயா நானா என அவர்களிடம் பக்த கோடிகள் நிறைந்திருந்தும் காட்டு வந்து சேராதது பரிதாபம்.

பகல் பதினோரு மணிவரை நான் அங்கு நின்றேன் அதுவரை கடை மட்டும் தான் திறந்து இருந்தது.

கல்லா வெறுமையாக இருந்தது.

அப்போது சற்றுத் தள்ளி ஒருவர் லேபாரா விளம்பரக் குடையின் கீழ் தன்னை மறைத்துக் கொண்டு

யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார். குனிந்து நிமிர்ந்து பார்த்து

அவரை நான் அடையாளம் கண்டு விட்டேன். இதுவரை அவரை நேரில் கண்டதில்லை.

யாழில் உள்ள படத்தின் மூலம் தான் அவரை அடையாள படுத்திக் கொண்டேன்.

அதே மெல்லிய தாடி அதே கிருதா அவர்தான்.முதன் நாள் இணையத் தளங்கள்

செய்திகளின் தலைப்புகளை இனவாதம் துண்டும் வகையில் இடக்கூடாது என வாதிட்டவர்.

நல்ல எழுத்தாளர். இப்படியொரு எழுத்தாளரை நேரில் காண வைத்த அம்மனுக்கு ஒரு வணக்கம்.

எனக்கு அவரைக் கண்டதும் ஏதாவது கதைக்கலாம் எனத் தோன்றியது . நாலு தடவை அவரைச் சுற்றிச் சுற்றி

அடுத்த அடுத்த கடைகளைக் கவனிப்பது போல உலா வந்தேன். அவரோ இன்னும் ஆரம்பத்தில் கதைத்தவருடன்

கதைத்துக் கொண்டிருந்தார். சரி ஏன் குழப்புவான் சில வேளை அது அவர் இல்லாமல் வேறு யாரோ கூட அவரமாதிரி இருக்கலாம் என நினைத்துக் கொண்டு அப்பால் நகர்ந்தேன்.

வந்தனாங்கள் கொஞ்ச மரக்கறியையாவது வாங்குவம் எண்டு மனுசி கடைக்குள்ளை போனவ

திரும்பி வந்தவுடன் வாகனத் தரிப்பிடத்தை நோக்கி நடந்தோம். எதிரே அப்போதும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

ஊரில் வயலில் வேலை செய்யும் பெண்களைப் போலவே இங்கும் மழையில் புடைவை நனைந்துவிடாமல் முழங்கால் வரை தூக்கியபடி பெண்கள் நடந்து வந்தது மீண்டும் ஊரை நினைவிற்குக் கொண்டு வந்தது. அதிகமானவர்கள் எங்களைப் போலவே அதிக துரத்தில் வாகனத்தை நிறுத்தியவர்கள்.ஆலயம் எப்போது கண்ணில் படும் என அவர்கள் நினைத்தது என் மனதில் பட்டது. ஒரு இருபது முப்பது நிமிடங்கள் நடந்ததும் வாகனத் தரிப்பிடம் வந்தது.

அப்போது சற்று வயதானவர் எங்களுக்குப் பின்னால் வந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டார்

" தம்பி கோயிலுக்கு இன்னும் கன தூரம் நடக்க வேண்டுமா?"

அதற்கு மற்றவர் சொன்னார்

"" அரோஹரா அரோஹரா எண்டு சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை""

"" அலுத்துச் சலித்து நடந்தால் அரை மணித்தியால நடை"" :lol: :lol: :lol:

அதற்கு வயதானவர் புன்னகையுடன் ஆளை விட்டால் காணும் என அந்தப் பக்கம் சென்று விட்டார்.

நாங்களும் மழையைத் திட்டிக் கொண்டு வீட்டுப்பக்கம் வாகனத்தைச் செலுத்தினோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் கட்டுரையை, வாசித்ததன் மூலம்.... ஹம் அம்மன் கோவில் தேருக்கு நேரே... போன உணர்வு ஏற்பட்டது. :rolleyes::D

Link to comment
Share on other sites

வர்ணனைக்கு நன்றிகள் வாத்தியார்.. :D அடிக்கடி இப்பிடி எழுதுங்கோ.. :wub:

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! நீங்கள் சங்கிலிகள் அறுபட்டவிசயத்தை சொல்ல மறந்து போனியள் :D

வர்ணனைக்கு நன்றிகள் வாத்தியார்.. :D அடிக்கடி இப்பிடி எழுதுங்கோ.. :wub:

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

13ம் திகதி புதன்கிழமை வரைக்கும் அடக்கி வாசிப்பம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது வாத்தியார்!

தும்பு முட்டாசும், சோனகர் விக்கிற காப்பும் தான், இல்லைப் போல!

மற்றும்படிக்கு, நம்ம சனம் அந்த மாதிரியே இருக்கினம் போல கிடக்கு!

குளிர் என்ட படியால, புலிப்பல்லும், ஓம் போட்ட சங்கிலியளும், வெளியே தலை காட்டேல்லைப் போல கிடக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

"ஊருக்குத் தான்... உபதேசம், உனக்கில்லையடி கண்ணே...." என்ற பழமொழியை நீங்க கேட்டதில்லையா இசை. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா....அம்மனுக்கு அரோகரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவரணம் அற்புதம். வாத்தியார் ஏதாவது வானொலிக்கு நேரஞ்சல் செய்திருக்கலாம்..

ஆட்டுத்தாடிக்காரர் கறுப்புச் சட்டை போட்டுவரவில்லையா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்கள் எழுத்தைப் பார்க்கும் போது ஊர்க் கோயிலுக்கு போக வேண்டும் என ஆசையாக இருக்குது :) ...சபேசன் மனைவி,மாமியாருக்காக கோயிலுக்கு வந்திருப்பார் இதை எல்லாம் நாங்கள் பெரிசாய் எடுக்கக் கூடாது :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் தம்பி

அருமையான எழுத்து

எனக்கும் இதுகள் சரிவராது

இதுவரை இந்தக்கோயிலுக்கும் போனதில்லை.

ஏன் வருடமாவருடம் இங்கு லா சப்பல் பிள்ளையார் உலாவருவார் .

ஒரு தரம் கூட போய்ப்பார்த்தில்லை.

வாத்தியார் தம்பி

நேரம் கிடைக்கும்போது இடைக்கிடை இப்படி எதையாவது கிறுக்கலாம் தானே......

தொடரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி அண்ணா

உங்களை என் எழுத்தின் மூலம் ஹம் அம்மன் கோயிலுக்குக் கூட்டிச் சென்றிருந்தால்

அது எனக்கு மகிழ்ச்சியே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணனைக்கு நன்றிகள் வாத்தியார்.. :D அடிக்கடி இப்பிடி எழுதுங்கோ.. :wub:

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

இசை உங்கள் உற்சாகத்திற்கு எனது நன்றிகள்.நேரம் உலகத்தின் மிகப்பெரிய சக்தி.அதை மீறி யாராலும் எதையும் செய்ய முடியாது.பகுத்தறிவாளனுக்கும் கோயில் குளத்தடியில் தான் ஞானம் பிறக்கும் :D

Link to comment
Share on other sites

வாத்தியாரின் விபரிப்பு நன்றாக இருக்கிறது. இடம் மாறினாலும் சனம் மாறவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர்.

சின்ன வயதில் கண்ணகி அம்மன் கோயில் போய் வந்த மாதிரி ஒரு உணர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி அண்ணா

உங்களை என் எழுத்தின் மூலம் ஹம் அம்மன் கோயிலுக்குக் கூட்டிச் சென்றிருந்தால்

அது எனக்கு மகிழ்ச்சியே :D

ஹம் நகரம், எனது சிறிய தாய் மாதிரி வாத்தியார்.

நான் அந்த, நகரத்துக்கு வந்த போது... 27 தமிழ் ஆட்கள் மட்டும் இருந்தார்கள்.

இப்போது... ஒவ்வொரு வருடமும், அந்த ஊரைப் பார்க்க வேண்டும் ஆசை... இருந்தாலும்,

அம்மாளாச்சியின், அனுக்கிரஹம் கிடைக்குதில்லையே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! நீங்கள் சங்கிலிகள் அறுபட்டவிசயத்தை சொல்ல மறந்து போனியள் :D

13ம் திகதி புதன்கிழமை வரைக்கும் அடக்கி வாசிப்பம். :D

சங்கிலி அறுபடாத எங்கள் கோயில்த் திருவிழாக்கள் அங்கே அண்ணா இருக்கின்றது.நான் அதுவரையும் அங்கே நிற்கவில்லை. அம்மன் தேரில் ஏறமுதலே நான் வெளிக்கிட்டாச்சு.கு சா அண்ணை 13 ம் திகதிவரை ஏன் ? என்ன விசயம்? :D

நன்றாக இருக்கின்றது வாத்தியார்!

தும்பு முட்டாசும், சோனகர் விக்கிற காப்பும் தான், இல்லைப் போல!

மற்றும்படிக்கு, நம்ம சனம் அந்த மாதிரியே இருக்கினம் போல கிடக்கு!

குளிர் என்ட படியால, புலிப்பல்லும், ஓம் போட்ட சங்கிலியளும், வெளியே தலை காட்டேல்லைப் போல கிடக்கு!

குளிர் இல்லாவிட்டால் தெரிந்திருக்கும் தங்கம் ஏன் இந்த விலை விக்குது என்று :D

.

வர்ணனை அபாரம் வாத்தியார். :D

ஈசனுக்கு நன்றிகள்

அரோகரா....அம்மனுக்கு அரோகரா

புத்தனுக்கு எனது சரணங்கள்

விவரணம் அற்புதம். வாத்தியார் ஏதாவது வானொலிக்கு நேரஞ்சல் செய்திருக்கலாம்..

ஆட்டுத்தாடிக்காரர் கறுப்புச் சட்டை போட்டுவரவில்லையா!

உங்கள் கருத்திற்கு நன்றிகள் கிருபன் அண்ணா கருப்பு வெள்ளை கலக்கல்

வாத்தியார் உங்கள் எழுத்தைப் பார்க்கும் போது ஊர்க் கோயிலுக்கு போக வேண்டும் என ஆசையாக இருக்குது :) ...சபேசன் மனைவி,மாமியாருக்காக கோயிலுக்கு வந்திருப்பார் இதை எல்லாம் நாங்கள் பெரிசாய் எடுக்கக் கூடாது :lol::icon_idea:

அதையெல்லாம் பெரிசாக எடுக்கவில்லை கள உறவுகளை நேரில் காண்பதில் மகிழ்ச்சியே.நானாக அறிமுகம் செய்யவில்லை அது என் தவறாக இருக்கலாம் :)அவருக்கு என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் தம்பி

அருமையான எழுத்து

எனக்கும் இதுகள் சரிவராது

இதுவரை இந்தக்கோயிலுக்கும் போனதில்லை.

ஏன் வருடமாவருடம் இங்கு லா சப்பல் பிள்ளையார் உலாவருவார் .

ஒரு தரம் கூட போய்ப்பார்த்தில்லை.

வாத்தியார் தம்பி

நேரம் கிடைக்கும்போது இடைக்கிடை இப்படி எதையாவது கிறுக்கலாம் தானே......

தொடரட்டும்

பிள்ளையார் கோயில் மட்டுமா ?

அம்மன் கோயிலும் உண்டல்லவா?

உங்கள் கருத்திற்கும் உற்சாகத்திற்கும் நன்றி அண்ணா :D

Link to comment
Share on other sites

வர்ணனை அமர்க்களம் வாத்தியார். பின்னூட்டங்களும் அட்டகாசம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் விபரிப்பு நன்றாக இருக்கிறது. இடம் மாறினாலும் சனம் மாறவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர்.

சின்ன வயதில் கண்ணகி அம்மன் கோயில் போய் வந்த மாதிரி ஒரு உணர்வு.

எங்கள் மக்கள் ஒருபோதும் மாறமாட்டார்கள்.ஒரு கணம் மாற நினைத்தாலே.....நாம் எல்லோரும் ஈழத்தில்...நன்றி தப்பிலி உங்கள் கருத்திற்கு :D

Link to comment
Share on other sites

வாத்தியார்,

என்னுடன் வந்து பேசியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு உங்களைத் தெரியாது. அடுத்த முறை எங்காவது சந்தித்தால் அறிமுகப்படுத்திப் பேசுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

என்னுடன் வந்து பேசியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு உங்களைத் தெரியாது. அடுத்த முறை எங்காவது சந்தித்தால் அறிமுகப்படுத்திப் பேசுங்கள்.

நான் உங்களைக் கண்ட நேரத்தில் நீங்கள்இன்னொருவருடன் நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்தீர்கள்.அடுத்தது நான் அங்கு அதிக நேரம் நிற்கவில்லை.வேலை காரணமாக 11 மணிக்கே வீடு திரும்பிவிட்டேன்.கட்டாயம் அடுத்தமுறை எங்காவது சந்தித்தால் உங்களுடன் அறிமுகம் செய்துகொள்கின்றேன் சபேசன் :D

இன்று தான் வாசித்தன் வர்ணனை நன்றாக இருக்கு வாத்தியார்..

உங்கள் கருத்திற்கு நன்றி அபராஜிதன் :D

ஹம் நகரம், எனது சிறிய தாய் மாதிரி வாத்தியார்.

நான் அந்த, நகரத்துக்கு வந்த போது... 27 தமிழ் ஆட்கள் மட்டும் இருந்தார்கள்.

இப்போது... ஒவ்வொரு வருடமும், அந்த ஊரைப் பார்க்க வேண்டும் ஆசை... இருந்தாலும்,

அம்மாளாச்சியின், அனுக்கிரஹம் கிடைக்குதில்லையே....

27 பேர் இருக்கும்போது நீங்கள் அங்கு இருந்தால் அம்மன் கோயில் ஆரம்பித்த காலத்தில் அங்கு இல்லையா? :D

Link to comment
Share on other sites

வாத்தியாரின் இந்தக் கட்டுரையை வாசித்த பின் அவர் மேல் மிக மோசமாக கோபம் வருகின்றது. கெட்ட வார்த்தைகள் கூடாது என்பதால் பேச முடியவில்லை அவரை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.