Jump to content

முடிவில்லாத பயணங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2396791958_138219f80c.jpg

அதிகாலைப் பொழுதின்,

இருள் பிரியாத நேரத்தில்,

ஆயிரம் பயணங்களில்,

அதுவும் ஒரு பயணமாகியது!

அப்பாவின் பனித்த கண்களும்,

அம்மாவின் அன்புத் தழுவலும்,

அந்தத் தேங்காய் உடைத்தலில்,

அமிழ்ந்து போனது!

கலட்டிப் பிள்ளையாரின்,

கடவாயின் தந்தங்கள்,

கொஞ்சமாய் அசைந்த பிரமையில்,

சஞ்சலப் பட்டது மனம்!

விரியும் கனவுகளில்,

வருங்காலக் கேள்விக்குறி,

விரிந்து வளைந்து,

பெருங் கோடாகியது!

தூரத்தில் தெரிந்த நீரலைகள்,

கானல் நீரின் கோடுகளாய்,

ஈரம் காய்ந்து போயின!

கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும்,

காற்றாடியாகியது பயணம்!

புலம்பெயரும் புள்ளினங்களே!,

போன பயணம் முடித்ததும்,

போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு!

போகுமிடமெல்லாம் கூடு கட்டும்,

பயணமாகியது, எனது பயணம்!

உற்றார்கள், பெற்றார்கள்,

உடன் பிறந்த சொந்தங்கள்,

சுற்றித் திரிந்த குறுந் தெருக்கள்,

சுகம் தந்த காற்றின் வருடல்கள்,

விடிகாலை வேளையின் சிலிர்ப்புகள்!

வானத்தில் பறக்கும் பறவையின்,

விழிகளில் தெரியும் வடிவங்களாக,

விரைந்து தொடர்கிறது ,பயணம்!

தொடுகையில் கிடைக்கும் சுகங்களும்,

நுகர்தலில் கிடைக்கும் வாசனைகளும்,

படங்களில் மட்டுமே கிடைக்கும்,

பாக்கியமாகப் பயணம் தொடர்கின்றது!

இராமாயணத்தின் அஞ்ஞாத வாசமாய்,

இரவும் பகலுமில்லாத, பெருவெளியில்,

திசை மாறிய பறவையாகித்,

தொடர்ந்து செல்கின்றது, பயணம்!

முடிவில்லாத பயணமாகி,

முற்றுப் புள்ளியைத் தேடுகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு சுமைதனை

நெருப்பேற்றும் வரிகள்

காலம் போகுது

வயதும் ஓடுது

கரை தெரியல

கண்ணுக்கெட்டிய தூரம்வரை

கானல் நீர் மட்டுமே

தொலைத்தது

நட்டாற்றில் விட்டது

எம்மை மட்டுமல்ல என் பரம்பரையையும் சேர்த்து.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...ஞாபகங்கள் :o ...நல்லதொரு கவிதை தந்த புங்கையூரானுக்கும்,வி.அண்ணாவிற்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2396791958_138219f80c.jpg

அதிகாலைப் பொழுதின்,

இருள் பிரியாத நேரத்தில்,

ஆயிரம் பயணங்களில்,

அதுவும் ஒரு பயணமாகியது!

அப்பாவின் பனித்த கண்களும்,

அம்மாவின் அன்புத் தழுவலும்,

அந்தத் தேங்காய் உடைத்தலில்,

அமிழ்ந்து போனது!

கலட்டிப் பிள்ளையாரின்,

கடவாயின் தந்தங்கள்,

கொஞ்சமாய் அசைந்த பிரமையில்,

சஞ்சலப் பட்டது மனம்!

விரியும் கனவுகளில்,

வருங்காலக் கேள்விக்குறி,

விரிந்து வளைந்து,

பெருங் கோடாகியது!

தூரத்தில் தெரிந்த நீரலைகள்,

கானல் நீரின் கோடுகளாய்,

ஈரம் காய்ந்து போயின!

கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும்,

காற்றாடியாகியது பயணம்!

புலம்பெயரும் புள்ளினங்களே!,

போன பயணம் முடித்ததும்,

போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு!

போகுமிடமெல்லாம் கூடு கட்டும்,

பயணமாகியது, எனது பயணம்!

உற்றார்கள், பெற்றார்கள்,

உடன் பிறந்த சொந்தங்கள்,

சுற்றித் திரிந்த குறுந் தெருக்கள்,

சுகம் தந்த காற்றின் வருடல்கள்,

விடிகாலை வேளையின் சிலிர்ப்புகள்!

வானத்தில் பறக்கும் பறவையின்,

விழிகளில் தெரியும் வடிவங்களாக,

விரைந்து தொடர்கிறது ,பயணம்!

தொடுகையில் கிடைக்கும் சுகங்களும்,

நுகர்தலில் கிடைக்கும் வாசனைகளும்,

படங்களில் மட்டுமே கிடைக்கும்,

பாக்கியமாகப் பயணம் தொடர்கின்றது!

இராமாயணத்தின் அஞ்ஞாத வாசமாய்,

இரவும் பகலுமில்லாத, பெருவெளியில்,

திசை மாறிய பறவையாகித்,

தொடர்ந்து செல்கின்றது, பயணம்!

முடிவில்லாத பயணமாகி,

முற்றுப் புள்ளியைத் தேடுகின்றது!

வாசிக்கையில் சிலிர்த்துப் போகிறது மனது...பின்னோக்கி விரைகின்றன நினைவுகள்....என் அண்ணை மண்ணே உன்னை முத்தமிட்டுப் பிரிந்ததில் இருந்து எவ்வளவு காலங்கள் ஓடிப் பறந்துவிட்டன..உங்கள் கவிதையைப் போலவே தொலைத்து விட்டவற்றை நினைவூட்டும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலிதாங்க முடியாமல் மறந்து தொலைக்க வேணும் என்ற வேகத்தில் இன்னும் இன்னும் மோசாமாக இந்தப் புலம்பெயர் வாழ்க்கைக்குள் என்னை அமிழ்த்தி தொலைந்து போகிறேன்... :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது புங்கையூறான்

நன்றிகள் பகிர்விற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு சுமைதனை

நெருப்பேற்றும் வரிகள்

காலம் போகுது

வயதும் ஓடுது

கரை தெரியல

கண்ணுக்கெட்டிய தூரம்வரை

கானல் நீர் மட்டுமே

தொலைத்தது

நட்டாற்றில் விட்டது

எம்மை மட்டுமல்ல என் பரம்பரையையும் சேர்த்து.....

காலம் எமக்காகக் காத்திருக்கப் போவதில்லை, விசுகர்!

அதைக் கனிய வைக்கும், பொறுப்பும் எம்மிடமே!

கருத்துக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன், விசுகு மனதைத் தொட்ட கவிதைகள்.

நான் வெளிக்கிடும் போது... என்னை வழியனுப்பிய உறவுகள் பலர் இன்று உயிருடன் இல்லை என்னும் போது... மனது இன்னும் கனக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

அழவச்சிட்டீங்க பூங்கையூரன், விசுகு அண்ணா.

கருத்துக்கு நன்றிகள், ஈசன்!

இரை தேடிய பருந்தொன்று, வயிறு நிரம்பியபின் திரும்பிப் பார்க்கையில், வெறுமை மட்டுமே பெரிதாகத் தெரிவது போலத் தான், நமது நிலை!

வயிற்றை நிரப்புவது, மட்டும் தானா வாழ்க்கை?

ஊரில் சைக்கிளில் போகும் போது, ஒருவர் உங்களைப் பார்த்துத், தலையசைத்து விட்டுச் செல்லும் போது, ஒரு சின்னச் சந்தோசம் வருமே!

அதைத் தான் தேடுகின்றேன்!

Link to comment
Share on other sites

ஆயிரம் ஆயிரம் இளைஞர் யுவதிகளின் ஏக்கங்களைப் பிரதிபலித்துள்ளீர்கள் புங்கையூரான். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...ஞாபகங்கள் :o ...நல்லதொரு கவிதை தந்த புங்கையூரானுக்கும்,வி.அண்ணாவிற்கும் பாராட்டுக்கள்

கருத்துக்கு நன்றிகள், ரதி!

மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கையில் சிலிர்த்துப் போகிறது மனது...பின்னோக்கி விரைகின்றன நினைவுகள்....என் அண்ணை மண்ணே உன்னை முத்தமிட்டுப் பிரிந்ததில் இருந்து எவ்வளவு காலங்கள் ஓடிப் பறந்துவிட்டன..உங்கள் கவிதையைப் போலவே தொலைத்து விட்டவற்றை நினைவூட்டும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலிதாங்க முடியாமல் மறந்து தொலைக்க வேணும் என்ற வேகத்தில் இன்னும் இன்னும் மோசாமாக இந்தப் புலம்பெயர் வாழ்க்கைக்குள் என்னை அமிழ்த்தி தொலைந்து போகிறேன்... :( :(

உங்கள் மனநிலையில் தான், நாங்களும் காலங்களைக் கரைத்தோம்!

ஆனால், எங்களுக்கென ஒரு விடி வெள்ளியொன்று, மின்னி மின்னி நம்பிக்கை தந்து கொண்டிருந்ததது! என்றாவது விடியும் என்றொரு, வெள்ளாப்புத் தெரிந்தது!

;நம்பிக்கை; தான் வாழ்க்கை என்பதன் முழுமையான அர்த்தத்தை நான் உணர்ந்த காலம் அது! உங்கள் கடைசி வசனம் என்னை, மீண்டும் சிந்திக்க வைக்கின்றது!

ஏறத்தாள, ஒரு குடிகாரனின் நிலையில் நாங்கள்?

கவலைகளில் இருந்து விடுபடுவதற்காக,மேலும், மேலும், இந்தச் சேற்றுக்குள் எம்மை புதைத்துக் கொள்கின்றோம்!

வயதில் சிறியவனின் வாயில் இருந்து விழுந்தாலும், வார்த்தைகளின் அர்த்தம் மிகவும் ஆழமானது! கருத்துக்கு நன்றிகள், சுபேஸ்!

நன்றாக இருக்கிறது புங்கையூறான்

நன்றிகள் பகிர்விற்கு

தங்கள், கருத்துக்கு நன்றிகள், லியோ!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணத்தின் அஞ்ஞாத வாசமாய்,

இரவும் பகலுமில்லாத, பெருவெளியில்,

திசை மாறிய பறவையாகித்,

தொடர்ந்து செல்கின்றது, பயணம்!

முடிவில்லாத பயணமாகி,

முற்றுப் புள்ளியைத் தேடுகின்றது!

பாண்டவர்களுக்கும் சரி , இராமனுக்கும் சரி அஞ்ஞாதவாசத்திற்கு முடிவிருந்தது...எங்களுக்கு எங்கள் வாழ்நாட்களுக்குள் முடியும் சாத்தியம் ஏற்பட்டால் அதுவே எங்கள் பிறவிபலனாக மகிழ்வளிக்கும்..அல்லாவிட்டால் உத்தரிக்கிற தலத்து ஆத்மாக்களாக தூல உடல் நீத்தபின்னும் அலைவோம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த, தங்கை ரதிக்கும், தம்பிகள் சுபேஸ், லியோ ஆகியோருக்கும், மிக்க நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பச்சை குத்தியுள்ளேன் புங்கையூரான்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]புங்கையூரன் கவிதை அருமை [/size][size=1]

[size=4]பகிர்வுக்கு நன்றி [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டவர்களுக்கும் சரி , இராமனுக்கும் சரி அஞ்ஞாதவாசத்திற்கு முடிவிருந்தது...எங்களுக்கு எங்கள் வாழ்நாட்களுக்குள் முடியும் சாத்தியம் ஏற்பட்டால் அதுவே எங்கள் பிறவிபலனாக மகிழ்வளிக்கும்..அல்லாவிட்டால் உத்தரிக்கிற தலத்து ஆத்மாக்களாக தூல உடல் நீத்தபின்னும் அலைவோம். :(

பாண்டவர்களின் 'அஞ்ஞாதவாசம்' பற்றிய கவலையை விடவும், வல்வையின் அஞ்ஞாத வாசமே, எனக்கு அதிக வருத்தத்தைத் தருகின்றது!

ஒளிரும் காண்டீபத்தில் , நாதமெழுப்பியபடி, தன்னை வெளிக்காட்டிய அர்ச்சுனனின் அகங்கார எக்களிப்போடு, அஞ்ஞாதவாசம் முடித்து, தங்கள் வீட்டுக் கட்டுத்தறியையாவது, கவி பாட விடுங்கள், சகோதரி!

கருத்துக்கு, நன்றிகள்!

[size=4]புங்கையூரன் கவிதை அருமை [/size]

[size=1][size=4]பகிர்வுக்கு நன்றி [/size][/size]

கருத்துக்கு நாங்கள், பகீ!

கொஞ்ச நாட்களாகக் காணவில்லை?

Link to comment
Share on other sites

தொடுகையில் கிடைக்கும் சுகங்களும்,

நுகர்தலில் கிடைக்கும் வாசனைகளும்,

படங்களில் மட்டுமே கிடைக்கும்,

பாக்கியமாகப் பயணம் தொடர்கின்றது!

உணர்வு பூர்வமான வரிகள் புங்கை !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.