Jump to content

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .


Recommended Posts

வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே !

ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எமது வாழ்வில் பாதியை புலத்தில் துலைத்து நிற்கின்ற நாங்கள் , எமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து தாயகத்து வான்வெளிகளில் சுதந்திரமாகப் பறந்த பல குருவிகளது பெயர்கள் பலதை எமது ஞாபகத்தில் தொலைத்து நிற்கின்றோம் . போனவருடம் நான் தாயகம் சென்ற பொழுது எனது அண்ணையின் உதவியுடன் ஒரு சில குருவிகளை அடையாளம் காணமுடிந்தது . ஆயினும் பல குருவிகளைக் காண முடியவில்லை என அறிந்து வேதனையடைந்தேன் . மேலும் இந்தக் குருவிகளுக்கு சங்க இலக்கியங்களில் சுத்தமான தூய தமிழ் பெயர்கள் இருந்ததையும் அண்ணை தந்த புத்தகம் மூலம் அறிந்து கொண்டேன் .எனது சிற்றறிவின் தேடல்களை உங்களுக்குத் தருகின்றேன் . இந்தக் குருவிகள் பல ஊர்களில் பலவகையான பெயர்களில் அழைக்கப்படுகின்றன .

போட்டி விபரம்:

நான் ஒரு குருவியின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்தக் குருவிக்கன தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட குருவிப் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே மறந்த குருவிகள் என் கையில் , பறந்த பெயர்கள் உங்கள் கையில் ..............

நேசமுடன் கோமகன்

**********************************************************************************

01 செம்பூழ் ( செம்பகம் , செம்போத்து )

coucal.jpg

Link to comment
Share on other sites

  • Replies 445
  • Created
  • Last Reply

செண்பகம் :rolleyes:

மிக்க நன்றிகள் தமிழினி . மற்றவர்களது பதிலையும் பார்து ஒரு முடிவிற்கு வருவோம் . எதுவும் 48 மணித்தியாலும் சென்றுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகம் :rolleyes:

** Reason for edit: எழுத்துப்பிழை

ஏன் "செண்பகம்" என்று எழுதக்கூடாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் செம்பகம் தான் சரியென்று :) கண பேர் பதிலை சரியாகச் சொன்னால் பரிசை யாருக்கு கொடுப்பீர்கள் கோ :lol::D

Link to comment
Share on other sites

கிருபன் அண்ணா, செண்பகம் என்றால் கூகிள் ஆண்டவரின் தரவுப்படி பூ என்று வருகின்றது. :)

என்னைப்பொறுத்தவரை செண்பகம் தான் சரி என நினைக்கின்றேன்.

செண்பகம் தான் தமிழீழ தேசியப்பறவை என்பதை இன்று தான் அறிந்துகொண்டேன்.

நன்றி கோ அண்ணா.

Link to comment
Share on other sites

செண்பகம்

மயிர்க்கொட்டியை (மசுக்குட்டி) தேடித் தேடிச் சாப்பிட்டு ஒருவிதமான அடைத்த குரலில் கத்தும் பறவை. ஊரில் மட்டுமே கண்டு இருக்கின்றேன்

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் செம்பகம் தான் சரியென்று :) கண பேர் பதிலை சரியாகச் சொன்னால் பரிசை யாருக்கு கொடுப்பீர்கள் கோ :lol::D

ஏன் அவதிப்படுகிறியள் அங்கை ? ஜஸ்ற் 48 அவேர்ஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா, செண்பகம் என்றால் கூகிள் ஆண்டவரின் தரவுப்படி பூ என்று வருகின்றது. :)

என்னைப்பொறுத்தவரை செண்பகம் தான் சரி என நினைக்கின்றேன்.

செண்பகம் தான் தமிழீழ தேசியப்பறவை என்பதை இன்று தான் அறிந்துகொண்டேன்.

நன்றி கோ அண்ணா.

ஊரில் செம்பகம் எனத் தான் கூப்பிட கேள்விப்பட்டு உள்ளேன்...இந்தப் பறவை வீட்டுக்கு வந்தால் காசு வருமாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா, செண்பகம் என்றால் கூகிள் ஆண்டவரின் தரவுப்படி பூ என்று வருகின்றது. :)

சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதியில் இப்படி உள்ளது!

செண்பகம் 1 ceṇpakam,

n. <campaka.

Champak, 1. tr., Michelia champaca;

வண்டுணாமலர். பெருஞ் செண்பகமும் பிண்டியும் பிரம்பும் பெருங்.உஞ்சைக்.50, 25).

செண்பகம் 2 ceṇpakam,

n. Crow pheasant.

See செம்போத்து.

செம்பகம் cempakam,

n. <campaka.

See செண்பகம்1. Colloq.

.

செம்போத்து cem-pōttu,

n. <id. +. [K. cempōta, M. cempōttu.]

Crow pheasant, Centropus rufipennis ;

ஒருவகைப் பறவை. (பிங்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகம்

Link to comment
Share on other sites

செம்பகம்.

தோட்டங்களுக்கு கண்டகண்ட மருந்துகள் அடிக்க தொடங்க செண்பகமும் புழுணியும் எம்மண்ணில் இருந்து அருகி விட்டது .

Link to comment
Share on other sites

செண்பகம்

மயிர்க்கொட்டியை (மசுக்குட்டி) தேடித் தேடிச் சாப்பிட்டு ஒருவிதமான அடைத்த குரலில் கத்தும் பறவை. ஊரில் மட்டுமே கண்டு இருக்கின்றேன்

மிக்க நன்றிகள் நிழலி உங்கள் கருத்திற்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செண்பகம் _ பூ

செம்பகம் _ பறவை

http://www.youtube.com/watch?v=S6RuNwsRJEU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகம் இப்போ ஊரில் இல்லாது போய்டா...இப்படித் தான் தம்பளப் பூச்சி பற்றி அறிய ஆவலில் தேடினால் அதுவும் சுனாமிக்கு பின் இல்லாமல் போய்ட்டாம்.

Link to comment
Share on other sites

குருவிக் கூட்டிற்கு வந்து கருத்துக்களை எழுதிய கிருபன் , புத்தன் , அர்ஜுன் , புத்தன் , குளக்காட்டான் , சுபேஸ் நுணாவிலான் , யாயினி ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பளப்பூச்சி சிகப்பாக மிருதுவாக குட்டியாய் மினுக் மினுக்கென இருக்கும் கடந்த தை மாதம் தாயகம் சென்றிருந்தபோது பனங்கிழங்கு கிண்டினேன் அப்போது அம்பிட்டுது. இப்போது தாயக மண்ணில் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்நிற .........காகம் ..............>...........செங் காகம் .........மருவி ........நாளடைவில் .....செம்பகம் ..ஆனது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பளப்பூச்சி சிகப்பாக மிருதுவாக குட்டியாய் மினுக் மினுக்கென இருக்கும் கடந்த தை மாதம் தாயகம் சென்றிருந்தபோது பனங்கிழங்கு கிண்டினேன் அப்போது அம்பிட்டுது. இப்போது தாயக மண்ணில் இருக்கு.

ஓ இப்பவும் தம்பளப் பூச்சி இருக்கா..ஒரு படமாவது கண்டு பிடிச்சு எடுத்துடனும் என்று தேடிய இடத்தில் தான் அந்த பூச்சி இனம் அருகி விட்டது என்ற தகவலை ஒரு வலைப்பகுதியில் போட்டு இருந்தார்கள்....உங்கள் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றிகள் எழுஞாயிறு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
post-6449-0-31144800-1338710983_thumb.jp
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூச்சிவகைகள், மழைக்காலத்தில் வரும்போது, இதைச் சிவபெருமானின் வெத்திலைத் துப்பல், என வயதானவர்கள் கூறுவதுண்டு, எழு ஞாயிறு!

நீங்கள் சொல்வது, இதைத் தானே?

Velvet-Mite-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் இணைத்தமக்கு மிக்க நன்றிகள் எழுஞாயிறு மற்றும் புங்கையூரன் அண்ணா..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூச்சிவகைகள், மழைக்காலத்தில் வரும்போது, இதைச் சிவபெருமானின் வெத்திலைத் துப்பல், என வயதானவர்கள் கூறுவதுண்டு,

நானும்... கம்பளிப் பூச்சியை, சிவபெருமானின் வெத்திலைத் துப்பல் எனச் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.