Jump to content

முள்ளிவாய்க்கால் அவலம்.



முள்ளிவாய்க்கால் ஓரத்திலே

 

விடிவு முடிவான காலத்திலே

அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள்

முதுமையான பசுமை நினைவை

சுமக்கும் வாய்க்கால்

இப்போது பயங்கரமாய்

இரத்தம் கலந்த சிவப்பாய்

மனிதரை அல்ல

சடலங்களை சுமக்கிறது

 

கந்தகப்புகையை

சுவாசித்து வாழ்ந்த மக்கள்

கையில்லாமலும் காலில்லாமலும்

சிறைப்பிடிக்கப்பட்டார்கள்

 

- ஓவியா-

 

முற்காலத்தில்

மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர்

நேற்று

அழுகுரல் எழுந்து

ஊழித் தாண்டவமாடி

இன்று

சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது

 

தொடர் வேவுவிமான இரைச்சலில்

மழையாயிற்று எறிகணை

இழந்த உறவுகள் போக

எஞ்சியவர் சித்தம் இழந்தனர்

எல்லாம் சூன்யமாயிற்று

அழுகுரல் நிரம்பிய மண்

அதிர்விலிருந்து மீளவில்லை

முள்ளிவாய்க்கால்

முள்ளாய் தொண்டையில் சிக்கிற்று

 

-சுருதி(junior)_

 

இரு சிறுமிகள் எழுதிய கவிதைகளை

உங்களுடன் பகிர்கிறேன்

 

அன்புடன் லியோ.

 

 

From the category:

விம்பகம்

· 8165 images
  • 8165 images

Photo Information

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.