Jump to content

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Today
  2. 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
  3. ஒருவரின் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கும் விடயம் தங்களுக்கு கேலிக்கிரியதாகிவிட்டது வருத்தத்திற்குரியது. ☹️
  4. தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள். அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.
  5. America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
  6. இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள் சிறையும். இருந்தீர்கள் ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
  7. விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  8. இது கேள்வி இது பதில் முடியாது ஏனெனில் புடின் கொல்வதில்லை இன்னொரு நபர் தான் கொல்லப்போகிறார்,....எனவே… காலம் கடந்தும் உண்மை வெளியில் வரும்
  9. “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” கேட்க்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் நாற்பது என்றால் நாற்பது பவுன்ஸ ஆ ? அங்கு பொதி வண்டி தள்ளி வருபவர்களுக்கு எவ்வ்ளவு டிப்ஸ் கொடுக்க வேண்டும். ?
  10. புட்டின். ..இரண்டு ஆண்டுகளுக்கு முன் உக்கிரேன் போர் தொடங்கும் போதும் சொன்னார் நடந்ததா ?? இல்லை இவர் சொன்ன உடனும். மூன்றாவது உலகப்போர் வரும் என்பதில்லை ஒருசில செயல்கள் நடக்கலாம் பெரும்பாலானவை நடப்பதில்லை இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் ....புட்டின்,..பைடன். மோடி,.........நினைப்பது எல்லாம் நடந்து விடவில்லை நடந்து விடப்போவதுமில்லை
  11. நான் ஜேர்மனிக்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழவில்லை. 1982 ம் ஆண்டு வந்தேன். படிக்க அனுமதியில்லை வேலை செய்ய அனுமதியில்லை அடுத்த ஊர் செல்ல அனுமதியில்லை மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு கட்டாய வேலை செய்ய வேண்டும் வீதி பெருக்குதல்,குப்பை அள்ளுதல். வேறு நாட்டுக்கு போக அனுமதி கேட்டேன் அதுவுமில்லை. வேறு நாட்டுக்கு செல்ல எத்தனித்தேன். சிறை வைத்தார்கள். ஜேர்மனி சுக போக வாழ்க்கை???? மண்ணாங்கட்டி வாழ்க்கை.😡
  12. உண்மையை சொல்லணும் உங்கள் பொதியில் 39 கிலோவா 41 கிலாவா இருந்தது?
  13. எனக்கு மேற்குலகில் நடக்கும் சில பல அரசியல் கொள்கைகள் எப்படி பிடிப்பதில்லையோ அது போல் கிரம்ளின் அரசியல் கொள்கைகளும் சில பிடிப்பதில்லை. இருந்தாலும் புட்டினுக்கு ரஷ்யாவில் பலத்த ஆதரவு இல்லை என்று சொல்வதற்கில்லை. அவர் பின் பலமான ரஷ்ய மக்கள் பின் நிற்கின்றார்கள். இதை பல ஊடகங்களே சொல்லி நிற்கின்றன. ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மேற்குலகு லிபியாவிலும் ஈராக்கிலும் எதை செய்து கிழித்தார்கள் என இன்றும் எனக்கு புரியவில்லை? மாறாக உள்நாட்டு கலவரங்களை உருவாக்கி மக்களை அகதிகளாக்கியது தான் மிச்சம். எனவே இந்த மேற்குலகு தங்களுக்கு பிடிக்காத அரசாட்சி உள்ள நாடுகளை குட்டை குப்பைகளாக்கியதுதான் மிச்சம். மேற்குலகுடைய சேட்டைகளின் பாதிப்பில் இலங்கை பிரச்சனையும் அடங்கும். மேற்குலகு எவ்வளவிற்கு தீவிரமாக நேட்டோ எனும் போர்வையில் ரஷ்யாவை ஒடுக்க நினைக்கின்றதோ அந்த அளவிற்கு ரஷ்ய தேசியவாதிகளும் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள். இருக்கின்றார்கள். ரஷ்யர்களும் தமது நாடு தமது கொள்கை என்ற வீராப்புடன் இருப்பதை நாமும் ஏற்றுக்கொண்டே ஆகும் சூழ்நிலை அல்லது கட்டாயமும் உண்டு. இன்றைய ரஷ்யா அன்று சோவியத்யூனியனாக இருந்த போது ஐரோப்பாவிடம் இருந்த பரஸ்பர பொருளாதார ஒப்பந்தங்களும் அரசியல் புரிந்துணர்வுகளும் இன்று இல்லாமல் போனதின் காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பேச்சுவார்த்தைகள் தானே பல பிரச்சனைகளை தீர்த்து வைத்தது. அந்த பேச்சுவார்த்தைகள் ஏன் இன்று நடை பெறவில்லை? ஆயுத முன்னேற்றமா அல்லது ஆயுத பரீட்சார்த்தமா? ரஷ்ய தேர்தல் நேர்மையாக நடந்ததா இல்லையா என்பதற்கப்பால் ரஷ்ய அதிபர் புட்டின் பின்னால் பெரும்பான்மை மக்கள் நிற்கின்றார்கள் என்பது கண்கூடு.தேர்தல் முடிவை விட அவர் பக்கம் மக்கள் நிற்கின்றார்கள்.இது வெளிப்படையாகவே தெரிந்த விடயம் நாம் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என புட்டின் சொல்வதும் மேற்குலகினர் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவோம் என சூளுரைப்பதும் ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகள்.
  14. எல்லோரும் எச்சரிக்கை மட்டும் தான் விடுவர், ஏனெனில் புத்தியுள்ள தலைவர்களுக்கு status quo மாறாமல் இருப்பதே முக்கியம். இடையிடையே முன் யோசனை குறைந்த தலைவர்களும் அமைப்புகளும் - புரின், ஹமாஸ், நெரன்யாகு- போன்றவை மட்டும் சும்மா சண்டையைத் துவங்கி விட்டு முடிக்கவோ, தப்பவோ முடியாமல் நெரிபடுவினம்.
  15. Yesterday
  16. உண்மை. இந்திய மீனவர்கள் இலங்கை கரைக்கு வந்துவந்து களவு எடுப்பது தான் பிரச்சனை. தேவையில்லாமல் கச்சதீவை கொண்டுவந்து தமிழ்நாட்டுமக்களை ஏமாற்றி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் பிரதமரும் அரசியல் செய்கின்றார்கள்
  17. அவர்களுடைய என்றும் மாறாத உறுதியான சொகுசான இருப்பிடத்தில் இருந்து கொண்டு இடைகிடை கிளையை வெட்ட முயற்சிக்கலாமா? கொலஸ்ட்ரரோல் கூடியதால் வந்த பிரச்சனை தானே --------------------------------------------- புதினின் தேர்தல் மோசடி நாடகத்தை மேற்குலக நாடுகள் சட்டவிரோதமானது என்று சுட்டிகாட்டியுள்ளன. யேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ரஷ்யாவின் தேர்தல் உண்மையான தேர்தல் இல்லை விரும்பியவரை தேர்வு செய்ய முடியாத தேர்தல் என்றார். சீனாவும் வடகொரியாவும் மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற யாழ்கள புதின் ஆதரவாளர்களும் புதினை வாழ்த்தியுள்ளனர் .
  18. தலைவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். புடின் மூன்றாம் உலகப் போர் மூண்டு விடும் என்று எச்சரிக்கின்றார். அமெரிக்கா சீனா டிக்டாக்கின் மூலம் உளவு பார்க்கின்றதென்றும், வேறு பல காரணங்களுக்காகவும் சீனாவை எச்சரிக்கின்றது. சீனா பதிலுக்கு அமெரிக்காவை எச்சரிக்கின்றது. மோடி அடுத்த மாதம் வரும் தேர்தலை ஒட்டி தென் இந்தியாவில் செய்யும் சூறாவளிப் பிரசாரத்தில் தினமும் விரலைக் காட்டி எச்சரிக்கை விடுகின்றார். ஸ்டாலின், உதயநிதி, டி ஆர் பாலு பதிலுக்கு எச்சரிக்கின்றார்கள். மகிந்த எச்சரிக்கின்றார். ரணில் எச்சரிக்கின்றார். அநுர குமார திசாநாயக்க, தேரர்கள்,...... டயானா கமகே கூட மக்களை எச்சரிக்கின்றார். ஒரு தலைவர் என்றால், அப்பப்ப சில எச்சரிக்கைகள் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல.........😀
  19. சோவியத் ரஷ்யா தனியாக நாசி ஜேர்மனியை எதிர்க்க முதல், ஹிற்லரோடு பங்கு பிரிப்பு ஒப்பந்தம் போட்டதை நாசூக்காக மறைத்து விட்டீர்கள் போல - நெடுக்கரின் ட்ரேட் மார்க் cherry-picking😎! பின்னர், நாசிகளே படையெடுத்த பின்னர் தான் சுதாரித்துக் கொண்டு திருப்பித் தாக்கினர். ஸ்ராலின் - இன்றைய புரினின் பழைய வடிவம்- இப்படி உள்ளடி வேலைகள் எல்லாம் செய்ததால், பிரிட்டன் தான் தீவிரமாக சோவியத் ரஷ்யாவை எட்ட வைக்க நேச அணிகளைத் தூண்டியது - அப்படி எட்ட வைத்திருந்திருக்கா விட்டால், 1948 இலேயே ஸ்ராலின் ஐரோப்பா, பிரிட்டனை நோக்கி வந்திருப்பார். இப்போது நீங்கள் சுதந்திரமான ஒரு தீவில் வாழ்ந்திருப்பீர்கள். காலக் கொடுமை இப்படி உங்களை புரின் இல்லாத இங்கிலாந்தில் கஷ்டப் பட வைத்து விட்டது😂. பின்லாந்து, சுவீடன் மட்டுமல்ல, ஆர்மேனியா கூட நேட்டோவின் சினேக பூர்வ நாடு தான், ஆனால் நேட்டோவில் உறுப்பினரல்ல. நேட்டோ உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் சலுகை ஐந்தாம் சரத்தின் பாதுகாப்பு - அது இருக்கும் நாடுகளை ரஷ்யாவும் தாக்காது, அந்த நாடுகளும் ரஷ்யாவைத் தாக்க மாட்டா. இதன் பெயர் பலச்சமநிலை பேணல்.
  20. ம்ம்..... இவர்களை கைது செய்து, விசாரித்து, தடையங்களை தேடி, நீதிமன்றத்தில் நிறுத்தினால்; அலாக்காக சட்டத்தரணிகள் என்கிற அயோக்கியர்கள் அவர்களை நிரபராதிகளென விடுவித்து விடுகிறார்கள் காசுக்காக. அப்போ, இப்படிப்பட்ட பணக்காரர்களுக்கு இப்படிப்பட்ட ஏழைகள் பலியாகி விடுகிறார்கள். என்னைப்பொறுத்தவரை இப்படிப்பட்ட காம வெறியருக்கு ஆஜராகும் சட்டத்தரணிகளே இவர்களை ஊக்குவித்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
  1. Load more activity
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.