கரும்புலிகள்
கரும்புலிகள்
சென்றார்கள்
திரும்பி வந்ததில்லை
இவர்கள் தேகம் சிதறிய நாளில் எல்லாம்
எங்கள் தேசம் விழித்ததே
உங்களுக்கு நினைவிருக்கா??????
பூ என்று ஒரு பொழுது வாழ்ந்தார்கள்...
சருகென்று மறு பொழுதில் உதிர்ந்தார்கள்
விடியலின் ஒளி வேண்டி திசைக்கொரு பறவையாய் தீ குளித்து
தேசமே பெரிதென்று செத்தே போனார்கள்
உங்களுக்கு உணர்விருக்கா????????
அந்த சந்தன மரங்கள் சரிந்த பின்பும்
இந்த செம்மண் பூமி எப்போதும்
சிலிர்த்தே நிக்கும்
எங்கள் நிலத்தை எவன் வந்து தொட்டாலும்
உங்கள் சுவாசமதை உள்வாங்கி ஒவ்வொரு நொடியும் எதிர்த்து நிக்கும்!!!!!
0 Comments
Recommended Comments
There are no comments to display.