காவியத் தூது
காவியத் தூது
கிளியினைத் தூது விட்டால்..
கிறுக்காய் ஆகுமென்றாய்!
கிள்ளை மொழியினைத் தூது விட்டால்..
கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்!
நிலவினைத் தூது விட்டால்..
களங்கம் நிறையுமென்றாய்!
நீள்கடலினைத் தூது விட்டால்..
ஆழமோ புரியாதென்றாய்!
மலரினைத் தூது விட்டால்..
மதுவினைச் சொரியுமென்றாய்!
மானினைத் தூது விட்டால்..
மருட்சியைப் பெருக்குமென்றாய்!
முகிலினைத் தூது விட்டால்..
முனகலே மிஞ்சுமென்றாய்!
சகியினைத் தூதுவிட்டால்..
சச்சரவு ஆகுமென்றாய்!
தென்றலைத் தூது விட்டால்..
திசை மாறிப் போகுமென்றாய்!
திரு மடலினைத் தூது விட்டால்..
அந்தரெக்ஸைக் காவுமென்றாய்!
தொலைபேசித் தூது விட்டால்..
தொல்லைகள் கூடுமென்றாய்!
நினைவிலே தூது விட்டால்..
நீள்கதையாய் ஆகுமென்றாய்!
கண்களில் தூது விட்டால்..
கருத்தழிந்து கருகுமென்றாய்!
அன்னத்தைத் தூது விட்டால்..
அழுக்காறு நீந்துமென்றாய்!
ஓடையைத் தூது விட்டால்..
பள்ளத்தில் ஒடுங்குமென்றாய்!
வாடையைத் தூது விட்டால்..
வர்ணனுள் மாயுமென்றாய்!
இணையத்தில் தூது விட்டால்..
இதயங்கள் நோகுமென்றாய்!
இன்தமிழைத் தூது விட்டால்..
இக கவிஞர் மேய்வரென்றாய்!
இரவியைத் தூது விட்டால்..
இனிமையைப் பொசுக்குமென்றாய்!
இளமையைத் தூது விட்டால்..
இப்பிறவியில் முடியுமென்றாய்!
காவியத் தூதிற்கெல்லாம்
காரணம் சொன்னாய் தோழி!
ஏதடி என் காதல் சொல்ல
உன் இதயம் காட்டும் வழி?
0 Comments
Recommended Comments
There are no comments to display.