ஜோசப் பரராஜசிங்கம்!
ஜோசப் பரராஜசிங்கம்!
--------------------
சிங்கம் அவர் பெயருள் உண்டென்று உலகம் சொல்லும்....
அவர் உடல் முழுக்க ஓடியது புலி இரத்தம்!
எங்களுக்கு மட்டுமே அது புரியும்!!
எத்தனையோ இரவுகளில் எமக்கு துணை நின்ற ஒளி விளக்கு...
விடிகிறது என்று எம்முள் சிலர் நினைக்கையில் ..
எப்படி விடை பெற்று போயிற்று
தன் மானத்துடன் வாழ்பவனுக்கு...
சாவுதான் பரிசென்ற சாபகேடா எம் வாழ்வு?
யுத்தம் அழித்தது...
மேகம் அழித்தது...
கடலும் வந்து கொன்று எமை கரை மணலுள் புதைத்து போனது!
இன்று எம் கூட நின்றவரையும் கொன்று - கர்த்தரே
உன் காலடியில் அவர் ரத்தம் தெளித்து போகிறார்!
அழிவென்றால் தமிழன் - என்று அகராதி
ஒன்று ஆகிடுமோ?
உம்மை அழிவு கொடுத்து எம்மை காத்தவரே - கர்த்தரே
இப்போ நாமழிகிறோம்... வந்து
எப்போது .............
எமை காப்பீர்????
0 Comments
Recommended Comments
There are no comments to display.