சரி ஏதாவது எழுதுவம்....
ஆ.... ஆராவது இந்த அடர்அவைக்கு வாறனீங்களோ?
சரி சரி பதில் போட ஏலாம ஆதி இடுக்கைகளை மூடி வச்சிருக்கன் நீங்க கண்டு பிடிச்சிருக்கீங்க அதுவரைக்கும் மகிழ்ச்சி.
இப்ப இந்த இடுகைக்குப் பதில் எழுத முடியுதோ என்று பாருங்கோ அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ பாப்பம்.
வணக்கம் அன்பர்களே! , நண்பர்களே! , வம்பர்களே! :angry:
ஆகா ஆதி மறுபடியும் குடியிருப்புக்குத் திரும்பிவிட்டேன்.
வாருங்கள் அடர் அவைக்கு இடர் தராமல் தொடர்ந்து ஆதியோடு இணைந்து அட்டகாசம் புரியுங்கள்.
(வாலை அறுக்கும் :P கனவுக்கு மட்டும் இடமளிக்காதீர்கள்)
சுகம் எதுவோ?
திங்கள் முகம் சிரிக்க
திக்கெட்டும் ஒளி பொங்க
தங்க மண் பரப்பில்
தலை சாய்ந்தால் அது சுகமா?
தென்றல் தாலாட்ட
தென்னங் கீற்றிசைக்க
தன்னந் தனியிருந்து
தான் இரசித்தால் அது சுகமா?
முல்லை முகையவிழ
முசுரங்கள் தள்ளாட - அதன்
எல்லையில் போயிருந்து
எழில் பருகில் அது சுகமா?
மெல்ல மினுக்கி - வான்
மின்மினிகள் கண்சிமிட்ட
காத்திருந்நு அவ்வனப்பில்
கரைந்திடின் அது சுகமா?
அலை வந்து தாலாட்டும்
அழகான புூமியிலே
அடி பதித்து நடை பயின்றால்
அகத்திற்கு அது சு