ஒட்டகத்தைத் தேடி
நேரம் 15.20
பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான்.
எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால்,
ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது.
குட்டிபோட்ட பு}னைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ்
ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப்
பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன்.
நேரம் 15.27
கொஞ்சம் எட்டி நடந்தால் எப்படியும் நேரத்திற்குப் போடுவன்.
ஒட்டகத்துக்கு முதல் போட்டனென்றால் நல்லது,
இல்லையென்றால் அ
மத்தியஸ்த்தம்
மீண்டும் தமாசானதொரு கதை
திட்டின கோபம் அடங்காத ஒட்டகம் என்னுடன் சேர்ந்து பேருந்தில் ஏறினாலும்கூட
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இருந்த பேருந்தில்
எனக்குப் பக்கத்தில் உட்காராமல் நான்கு ஐந்து இருக்கைள் தள்ளி உட்கார்ந்தது.
கொஞ்ச நேரத்திலை சரிவரும் என்றால்
வராதாம்.
யன்னலுக்கு வெளியே ஓடுற காட்சியளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
எட்ட இருந்து பார்க்க வடிவாத் தெரியவில்லை கண்ணும் கலங்கியிருக்குமாப்போல கிடந்தது.
அதிகமாத் திட்டிப்போட்டனோ?
எதுக்கும் அலட்டிக்கொள்ளாத ஒட்டக
செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது
எங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கிய
அந்தக் கொடிய வைகாசி 17......
பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும்,
எமது கனவு,
எமது இலட்சியம்
எமது ஏக்கம்,
எமது கொள்கை,
எமது அமைப்பு,
எமது தலைமை என அனைத்தையுமே
அநியாயமாக் காவுகொண்ட அந்த இருரண்ட வைகாசி 17
கடந்து வாரங்கள் வாரங்கள் உருண்டோடி மாதமொன்று ஆகப்போகிறது.
இனச்சுத்திகரிப்பின் அதி உச்சமாக இருபதாயிரத்திற்கு மேற்பட்ட
நம்மவரைக் காவுகொடுத்தபின் கடந்துபோன இருபதுநாட்களில் எதைச் செய்தோம்
எதைச் செய
சுயத்தைத் தொலைத்தவர்கள்
ஒட்டகம் புகுந்த வீடு, ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்
இப்படியான பொழுதுபோக்கான வியங்களை எழுதும்போது
அதிகமான களத்துறவுகள் ஓடிவந்து படித்தீர்கள்.
நாணல் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில்
பதில் கருத்துக்களும்
மெல்ல எழுதத் தொடங்கினீர்கள்.
ஆனால் மத்தியஸ்தம்.
செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது
என யதார்த்தமாக சிந்திக்க வேண்டிய அழுத்தமான கருத்துக்களை
மீள் ஆய்வு செய்ய வேண்டிய விடயங்களை மெல்ல
உங்கள் முன் வைக்கத் தொடங்கியதும்
ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்
இரகசியமாக உங்களுக்குமட்டும்
பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்று
முற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன்.
எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும்
நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவர
கொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல
மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர் ஊற்றுவதில் தீவிரமானன்.
சில நொடி தாண்டியிருக்காது.
அண்ணை! அண்ணை!
என்ன கண்டும் காணாததுபோல நிக்கிறியள்?
எதிர் வீட்டிலிருந
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும்,
கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி
உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்......
ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும்
சந்திக்கும் சங்கதிகள் யாவும்
நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்!
இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே!
ஒட்டகம் புகுந்த வீடு
கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்.........................
ய