எம்மொழி பேசி எம்மிலும் பிறறாய்
எம்முணர்வு அறிவு இரண்டிலும் வேறாய்
என்ன கருத்திலோ கரிகாலன்
என்னிலும் அறிவில் குறைந்தவன் போலவும்
என்னைத் துணைக் கொண்டு என்னுடை முயற்சியால்...
என்னுடை பழகலால் எம்மொழி கேட்டலால்
மேம்பா டெய்த வேண்டினன் போலவும்
எம்முடை அறிவை என்மதி அளவை
இவற்றினைப் பெருமையிலங்கின வென்று
கருதுவான் போலவும் கரிகாலன் கண்ணன்
சீடனாக வந்தென்னை சேர்ந்தனன், தெய்வமே!
பேதை போல் நானும் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்தேன்!
கள்ள கண்ணனாம் கரிகாலன்
மெல்ல என்னை அனுகி அகிம்சையால்
வெல
பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்
செருபகையும் சேராதிருப்பது நாடு
என வள்ளுவம் காட்டும் வளம்மிகு நாடாக நாடாத, நாடாததற்க்கு நாணாத நம் தமிழர்கள் இன்று இருப்பது போலவே என்றும் இருந்திருக்கின்றனர். எல்லையற்ற புகழுக்கு சொந்தக்காரர்களை ஏளனம் செய்யவும் ஏற்பாடு செய்துவிட்டது போலும் இயற்கை.இயற்கையின் சதியோ, இதயமற்றவர்களின் சூழ்சியோ! இன்று இல்லாதிருப்பதே மேல். இருந்தால் ஈழத்தில் வேழம் இருந்தாலும் வேங்கை இருந்தாலும் கீழாகும் தமிழர் நிலை. பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் உடைத்துவிடக் கூடும் தமிழர
அவர் இருந்தால் இவர் இருந்தால், அவரெல்லாம் இருந்திருந்தால் இந்நேரம் மாற்று வாய்ப்புகள் மள மள வென்று வந்து ஐ.டியிலும் அண்டை நாட்டிற்க்கு சவால் விட்டிருப்பார். எல்லாம் குட்டி சுவராகிவிட்டது குற்றமில்லையா? குறிக்கோளை அடைய குறுக்கு வழியில் செல்கிறார்கள். அதனால்தான் அத்தனை தாமதம். குற்றம் சாட்டுகிறார்கள் சிலர். அழகான வார்த்தைகளும் வகை வகையான சான்றுகளும் வந்து விழுந்தபோது, நாமும் சற்றே சலனப் பட்டோம், சட்டென வந்து கலைஞ்சர் சொல்கிறார். அவர் இவர் வளரவில்லை என்பது அவசியமற்றது. இந்த மாற்றமே மகத்தானது அதுதான
நகைவர நாணம் கொள்வார் நம் காந்திய வழியை வழிமொழிபவர்களும் நாகரிக சமூகத்தின் விடுதலைக்கான வழி இதுவே என்று நாசூக்காக சுட்டுபவர்களும் நடந்ததை உணர்ந்தால்.
தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியேற்றி தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளில் அவர்களை சிறுபான்மையாளர்களாக மாற்றிட்ட சிங்கள நய வஞ்சக தந்திரங்களை தரணிக்குணர்த்த தன்னந்தனியனாக தமிழர்களில் ஒருவன் உண்ணா நோன்பிருந்தான். உண்மையை நேசிக்கும் உயர் குணமுள்ள உங்களிடம் கேட்கிறேன், உண்ணா நோன்பை உலகுக்குணர்திய உத்தமர் காந்தி உண்ணா நோன்பிருந்துதான் உய
ஒழுங்கா மரியாதையா அடிமையாக இருந்தா இப்படி நடக்குமா? இனவெறின்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அது கடுமை குறைய கொஞ்ச நாள் ஆகும் குறையாம கூட இருக்கும். பட்டினியும் படுகொலையும் இருக்கத்தான் செய்யும்.
பயங்கரமா இருக்குங்க, அவங்கள பார்த்தா பரிதாபமா இருக்குங்க, நெஞ்சு துடிக்குதுங்க.
இருக்கும் இருக்கும் இருக்காத பின்னே! அதுக்கு என்ன செய்யிறது, ஆனாலும் பாதகமில்லையே, ஒட்டு மொத்தமா கொல்லலியே அங்கே இங்கேன்னு 100ம் 200மாகதானே கொல்கிறாங்க. இப்போது இருக்கிற இந்த அமைப்பு மட்டும் இல்லாம வேற அமைப்பு
விடுதலை வேட்கை கொண்ட வேங்கைகளில்
ஆணும் பெண்ணும் சரிசமமாம்- அகிலம்
வியக்க ஆற்றிடும் பணிகள் பலப் பலவாம்
ஆணும் பெண்ணும் சரிசமமாம்- அதனால்
அங்கில்லை பேரணிகள் பெண்கள் நியாம் கேட்டிடவே!
கற்புக் கரசி சண்ணகியின் வழித் தோன்றல்களாம்
கயவர்களெல்லாம் கலங்கிடவே ஈன்றிடுவர் அவர் களைகளாம்
களம் சென்றால் அவர் வேங்கைகளாம்
கயவர்கள் இவர் எதிர் நின்றால் பேடிகளாம்!
வின்வெளி பயண வில்லியம்ஸ் சுனிதாவுக்கும்
வீசிடும் கரத்தால் வெற்றிகள் குவிக்கும் மிர்சாவுக்கும்
சமர்களத்தில் சாதனைகள் பலப் புரியும்
அண்டம் நடுங்கும் இராணுவமுண்டு
பிண்டத்திற்கஞ்சா கப்பல்களுமுண்டு
விண்னை கிழிக்கும் விமானமுண்டு
வேண்டிய மட்டும் திறமையுண்டு
நாட்டில் இழந்ததை மீட்டிடுவார்- அதற்கு
நாட்டில் கொடியும் அவர்கண்டார்
தபால் தலைகளும் வெளியிட்டார்
காற்றினில் ஒலி ஒளியை பரப்பிவிட்டார்
அடைந்துவிடுவார் ஈழம் தனையே
அகிலம் அறிய அறிவிப்பார் - அங்கு
யாழில் குடிபுகுந்த பேய்களை விரட்டிடுவர்
அகிலத்தின் அங்கீகாரம் வேண்டிடுவர்
அறிவுடையோர் ஆவது அறிவர்
அறிவிப்பார் அவர் தேர்தல் - எப்போது
அங்கீகாரத்திற்கு பிறகே
யாரது ஈழத்து தம்பியா? என்னப்பா இது அடையாளமே தெரியவில்லை ஒரே அடியாக மாறிவிட்டாய்?
ஆமாங்க என்ன செய்வது? இந்த பாழப்போன சண்டை வந்ததிலிருந்து ரேஷனும் கிடைக்கலை பயிரையும் விளையவிடல விளைந்த பயிரையும் அழிச்சிடுராங்க பஞ்சம் ஏற்ப்பட்டுவிட்டது, ஏற்கனவே இருந்த பிரச்சனையில இதுவும் சேர்ந்ததால் உடம்பு பாழாப் போச்சி உடம்பு இளைச்சாலே உருமாறித்தானே போகும் உடம்பு!
அடப்பாவமே முகம் கருத்துக் கிடக்கு?
நான் எப்பன்னே சிகப்பா இருந்தேன்?
மாநிறமா இருப்பியே?
கவலைதான் எல்லாத்துக்கும் காரணம்
ஆமாம் ஆமா
அன்றொரு நாள் அமர்ந்திருந்தான் ஓர் மன்னன்
அடிபட்ட புறா ஒன்று அவன் மடியில் வீழ்ந்தது
அடித்த வேடுவனும் வந்தே வேந்தனிடம் முறையிட்டான்
அடித்ததற்கு நாணாதனால் நான் என்றான் நமக்கே சொந்தம்!
அளித்திடு எமக்கே என்றான்! அகிலத்தில் அன்று அதுதான் நீதி!
அரசனவந்தான் அதனால் அதட்டி விரட்டவில்லை வேடனை!
அதற்கு பதில் தருவேன் என்றே அரிந்து கொடுத்தான் தன் சதையை!
அவன் பெயர் சிபிச் சக்ரவர்த்தி! சீரிய நீதிக்கு மறுபெயர்!
அறிஞ்சர்களை அண்டிடும் வருமையை - கான
அஞ்சி பகுத்துண்டு வாழ்ந்தவர்கள் தான் தமிழர்கள்! -
இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்த அக்கால கட்டத்தில் பின்னால் இந்திய இராணுவ அமைச்சராகவிருந்த முன்னால் இந்திய இராணுவ அமைச்சர் திரு ஜார்ஜ் பெர்னான்டஸ் எழுதியது.
இராஜிவ் காந்தியின் இராணுவ சாகசத்தால் இலங்கை இந்தியாவின் வியட்நாமாக மாறும் என்று நான் 1987 ஆகஸ்ட் ஆரம்பத்தில் சொன்னேன். அப்போது இந்திய வியட்நாமிலும் ஒரு மையாய் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. இராணுவத்தினர் எங்கும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்று நான் அறிந்திருந்தேன் மீண்டும் மீண்டும் நான் இதை வலியுறுத்தியிருக்கிறேன். அவர்களது பயிற்ச
மாடு மணியடிக்க!
மறுத்தானா! தடுத்தானா!
மனமுவந்தே! தண்டித்தான்!
மனுநீதிச் சோழன் தன் மகனை!
மானுடத்தில் அவன் பெயரே!
மாறாத நீதிக்கு மறு பெயர்!
மங்காத புகழ் அவனுக்கு அதனாலே!
மகனவனும் மனம் தெரிந்து செய்தானா!
தவறிதான் தடுமாறிய கன்றுக்குட்டி
தவறாமல் அவன் தேர்க்காலில் அது அவன் தவறோ!
தவராமல் தண்டித்தார் தமிழர்!
தமிழர் நீதியில் மாடென்ன! மனிதரென்ன! எல்லாம் உயிர்!
தவறிய நீதிக்கு தன்னுயிர் விட்டான் பாண்டியன்!
தாமும் ஓர் காரணமென்றே தயங்காமல் உயிர்விட்டால் பாண்டிமாதேவி!
காவலன் அவளென்ற
கூலிப்படை என்பவர்கள்
கூனிகுறுக சம்பவங்கள் பல பல
அவையன்றோ சரித்திரங்கள்!
உலகத்தவர் உயர்த்திக் கூறும்
மனித நேயமும் மகத்தான சுதந்திரமும்
மக்களாட்சி என்ற மான்புறு சனநாயகமும்
இமயம் போல் இருக்கிறது இங்கிலாந்தில் என்று
நம்புவார் நாநிலத்தில் பலர்!
அய்ரிஸ் மக்கள் ஆண்டாண்டாய்
ஆயுதம் ஏந்தி போராடியது அகிலம் அறியும்!
அங்கு சிறைப்பட்ட ஆறு விடுதலை வீரர்கள்
அகிம்சை வழியில் அயராமல் இருந்தனர் உண்ணாவிரதம்!
இசைய மறுத்தது இங்கிலாந்து!
இறந்தனர் வீரர்கள்! இரங்கவில்லை இங்கிலாந்து!
அசைந்து கொ
இந்த பரந்த உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளும் வல்லரசு நாடுகளும் தமது இராணுவத்துக்கு அதன் மேம்பாட்டிற்க்கு செலவிடும் பணமும் பொருளும் அளவிட முடியாததும் ஆண்டுக்கு ஆண்டு அதிகறிக்கிறது என்றால் இராணுவம் என்பதே பொருளாதரம் சார்ந்தது என்பது புலனாகிறது. ஊதியமற்ற வீரர்கள் அல்லது ஊதியம் குறைந்த விரர்கள் எதிரியின் வஞ்சக வலையில் சிக்க வாய்ப்பிருக்கிறது, சிக்கிய வரலாறும் இருக்கிறது, இன்றும் அது தொடர்கிறது. உலக வல்லரசுகள் தன் பொருளாதரத்தை வளர்ப்பதற்க்கு தம் இராணுவங்களுக்கு தாராளமாக
கலைஞ்சரின் இதயத்துடன்
கலைஞ்சரின் கவிதை பேசட்டும்
காலப் பேழையின் கவிதை சாவி
கலைஞ்சரின் கண்களை திறக்கட்டும்
இருப்பிடம் வேறானாலும்
இனம் ஒன்றேயாகும்
ஈழத்தில் சிங்களவன் சீண்டிப்பார்த்தால்
இணையற்ற சோழர் வீரம்!
இங்கிருந்து சேனை திரட்டும்!
இன்றும் சிங்களவன் சீண்டிபார்க்க
இந்தியாவின் உதவிநாடி
புது புது திட்டங்கள் வகுத்துவிட்டான்
வீதிகளை மூடிவிட்டான்!
விரும்பியே தள்ளிவிட்டான் - தமிழர்களை
பசிப்பிணியில் பாழ்கினற்றில்!
பசிப்பிணியால் பரிதவிக்கும் தமிழருக்கு
இங்கிருந்து திரட்ட
இந்திய ஒருமைப்பாட்டின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களுக்கும் அது ஏதோ ஒரு சிலரின் உடமை என்று ஆன பிறகு அதற்க்குள் போக முடியாமல் தடுக்கப்பட்டிருக்கும் ஏனைய எம் எளிய சகோதரர்களுக்கும் வணக்கம்.
சுதந்திரா அவர்களின் வினாக்களுக்கு யூகத்தின் மூலமே சரியாக பதில் தந்திருக்கும் திரு பாண்டியன் அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து விட்டு தொடர்கிறேன்.
மூர்க்கத்தனமான ஜெர்மனியின் தாக்குதல்! இத்தாலி முழுதும் இடி ஓசை கேட்கிறது, பீரங்கிகள் முழங்குகின்றன. துப்பாக்கி குண்டுகள் நெஞ்சை பிளக்கின்றன. அந்த சமரில்
நண்பர்களே வணக்கம்,
திரு பாண்டம் மற்றும் திரு பாண்டியன் அவர்களுக்கும் முதலில் என் நன்றியை அறிவித்துவிட்டு தொடர்கிறேன்.
மனிதன் தன் தேவைகளுக்காக காலம் தோறும் இடம் பெயர்ந்து வருவது வரலாற்று உண்மை அந்த வகையில் அந்த காலங்களில் ஆற்றங்கரையோர வளமான நிலங்களில் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. காலப்போக்கில் பல்வேறு காரணங்களுக்காக இடப்பெயர்வு தொடங்கியது. சிலர் வளமான வாய்ப்புகள் வசதிகள் கருதியும், வேலை வாய்ப்பு கருதியும் நடந்த இடப்பெயர்வு பொருளாதர வல்லரசுகள் தோன்றையவுடன் அந்த நாடுகளில் அடிமை வேலைய
வணக்கம் தோழர்களே,
நண்பர்கள் சிலர் இங்கு ஈழப்பிரச்சனை தொடர்பான தாங்களது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர் அவற்றில் சிலவற்றுக்கு எம்மால் ஆன சில பதில்களை தர விழைகிறேன்.
1) தமிழ் ஈழத்தை நோக்கிய போராட்டத்தில் சிலர் ஓரங்கட்டப்படுகின்றனர் அல்லது ஒழித்து கட்டப்படுகின்றனர்.
எமது கருத்து
ஆண்டாண்டு காலமாக சிங்கள பேரினவாதத்தால் சொல்லொனா கொடுமைகளுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடுமைகளுக்கு ஆளான இரு இனம் அதிலிருந்து விடுபட நிமிரும்போது பல குழுக்களாக இருப்பது அவர்களை பலவீனப்படுத்தும் என
வணக்கம் தோழர்களே,
ஒரு கதையோடு ஆரம்பிக்கிறேன்.
முடி வெட்டும் தொழிலாளி ஒருவர் வேலை தேடி வெளிநாடு சென்றார். அங்கு அரசு செய்த மன்னனிடம் வேலை செய்து கிடைக்கும் பணத்தை சிறிது சிறிதாக சேகரித்து ஒரு தங்க கட்டி செய்து அதை தன் பெட்டியில் பத்திரமாக வைத்து அவ்வப்போது எடுத்து பார்த்து மகிழ்ந்து கொள்வார். ஒருநான் மன்னனுக்கு முடிவெட்டும்போது மன்னனுக்கு மக்களை பற்றி அறிய அவால் ஏற்ப்பட்டது! உடனே நம்ம ஆளு முடிவெட்டுகிறவர்கிட்டே மக்களின் நிலை பற்றி கேட்டார். நம்ம ஆளுக்கு மகிழ்ச்சி ஒங்க அரசுல மக்கள் எல்லாம்
உதவிக்கு சென்று ஆங்கே
உரிமை பறித்து உடைமை சிதைப்பது
ஆதரவு நீக்கி அடிமை கொள்வது
அமைதிக் கான்பதின் மான்போ!
உதவிக்கு சென்றவரே உயிர் பறித்த
உண்மையை உணர்ந்ததால் தானே
திராவிட தலைவர்களி திரும்பியும் பார்க்கவில்லை
தீங்கிழைத்து திரும்பியவரை அன்று
அவனும் பொருப்பானா? தம் மனைவி
மகளை கரகரவென தான் இழுத்து
கற்பழித்த கொடுமைதனை! கமுகரின் செய்கையினை!
கனவிலும் மறப்பானா! கலங்கியது கண்கள்!
விம்மியழுதாலும் வேகம் குறைந்திடுமோ!
"என்ன கொடுமை அது" எப்படி பொருத்திருப்பான்?
மறத்துபோய் மரமாக சிலை
வணக்கம் நண்பர்களே,
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். யாரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைச்சுகிட்டிருந்தேன். இந்த பக்கத்தை பார்த்த பிறகுதான் எனக்குள் தோன்றியது இங்கிருக்கும் நண்பர்களால் என் சந்தேகத்தை போக்க முடியும்னு? என்ன செய்வீங்களா?
எங்க தாத்தாவுக்கு பல பையங்க அவங்க எல்லோரும் ஒன்னாத்தான் குடியிருந்தாங்க யார் கண்ணு பட்டுச்சோ தெரியல இயற்க்கை சீற்றத்தால எங்க ஊர் இரண்டு பகுதியாயிடுச்சு. காலம் போய்கிட்டிருந்தது. எங்க காலத்துல அந்த பக்கம் இருந்த எங்கள் சகோதரனுக்கு பக்கத்து
இட ஒதுக்கீடும் இனவெறியும் இதயமுள்ளவர்களுக்கே புரியும்.
ஒன்று போலவே தெரியும்
ஒன்றில் ஒன்று மாறுபடும்
உணர்வுள்ளோருக்கே அது புரியும்
உடன்பிறந்தோர் பிள்ளைகள்தான்
ஒன்று மனைவியாகும்!
ஒன்று மகள் ஆகும்!
ஒத்துக் கொள்ளாதவர்கள் ஒழுக்கமுடையவரா?
மகளின் பிள்ளைகள்
மறுபடியும் மனைவியாவர் மகனுக்கு
மானமுள்ளோர் வகுத்த விதி இது!
நடந்தால் மகனின் மகனுக்கு தாய்
நடக்காவிட்டால் மகனின் மகனுக்கு தாரம்!
முன்னது நடந்தால் பின்னதை நடக்கவிடார்
பின்னது நடந்தால் முன்னதை நடக்கவிடார்
மானமுள்ளோர்! நாண